Jump to content

வாழ்க்கையில் சிங்கிளாக வாழ்வது பலமா, பலவீனமா?


Recommended Posts

வாழ்க்கையில் சிங்கிளாக வாழ்வது பலமா, பலவீனமா?

 
உறவுமுறையில் இல்லாமல் சிங்கிளாக இருப்பதால் என்ன பயன் ?படத்தின் காப்புரிமைJUSTIN SETTERFIELD

ஓர் உறவுமுறையில் இல்லாமல் தனித்து இருப்பதால் அதிக நன்மைகள் இருப்பதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெல்லா டிபோலோ என்ற ஆராய்ச்சியாளர் கண்டறிந்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில், நாம் நினைப்பதைவிட ஓர் உறவுமுறையில் இல்லாமல் தனியாக இருப்பதால் பல நன்மைகள் இருப்பதாகவும், அது அந்த நபருக்கு மட்டுமின்றி அவர் சார்ந்த சமூகத்திற்கும் நன்மைகள் இருப்பதாகவும் அதில் அவர் கூறியுள்ளார்.

வாழ்க்கையில் சிங்கிளாக இருப்பதால் என்ன பயன் ?படத்தின் காப்புரிமைDAVID SILVERMAN

பெல்லா டிபோலோ ஆராய்ச்சியின் முக்கிய வெளிப்பாடுகள் சிலவற்றைப் பார்க்கலாம்.ள்

  • தனித்து இருப்பதால் பிறருடைய வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.
  • அமெரிக்காவில் தனித்து (சிங்கிளாக) வாழ்பவர்கள் திருமணமானவர்களை காட்டிலும் நண்பர்கள் மற்றும் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு அதிகளவில் பாரபட்சமின்றி உதவுவது, சரிசமமாக பழகுவது மற்றும் ஊக்கப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.
வாழ்க்கையில் சிங்கிளாக இருப்பதால் என்ன பயன் ?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
  • சகோதர, சகோதரி மற்றும் பெற்றோர்களுடன், திருமணமானவர்களை காட்டிலும் அதிக நெருக்கமாகவும், ஆதரவாகவும் தனித்து வாழும் நபர்கள் இருப்பார்கள்.
  • தனியாக அல்லது பிறருடன் சேர்ந்து வாழும் தனி நபர்கள் திருமாணமானவர்கள் காட்டிலும் சமூக சேவை நிறுவனங்கள், கல்வி குழுக்கள், மருத்துவமனைகள் மற்றும் கலை சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றில் அதிகம் தன்னார்வ தொண்டு பணியில் ஈடுபடுவார்கள்.
வாழ்க்கையில் சிங்கிளாக இருப்பதால் என்ன பயன் ?படத்தின் காப்புரிமைSEAN GALLUP
  • நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிடுவதில் தனித்து இருக்கும் நபர்கள் விரும்புவார்கள் என்றும், இவர்களுடைய வாழ்வு அதிக திருப்திகரமாக இருக்கும் என்றும் பெல்லா டிபோலோ கூறுகிறார்.
  • திருமணமானவர்களுடன் ஒப்பிடும் போது சிங்கிளாக இருப்பவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி என்பதும் சிறப்பானதாக இருக்கும்.
  • தனித்து வாழ்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டது போன்று உணர மாட்டார்கள், சோகமாகவோ அல்லது தனிமையாகவோ இருக்க மாட்டார்கள் என்று டிபோலோ கூறுகிறார்.

 

http://www.bbc.com/tamil/arts-and-culture-39827986

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.