Jump to content

ஃபிரான்ஸ் அதிபர் தேர்தல் : வெற்றி பெறப்போவது யார் ?


Recommended Posts

ஃபிரான்ஸ் அதிபர் தேர்தல் : வெற்றி பெறப்போவது யார் ?

 
ஃபிரான்ஸ் அதிபர் தேர்தல் : வெற்றி பெறப்போவது யார் ?படத்தின் காப்புரிமைREUTERS Image captionமுன்னாள் முதலீட்டாளர் இமானுவேல் மக்ரோங் மற்றும் தீவிர வலதுசாரி தேசியவாதி மரைன் லெ பென்

ஃபிரான்ஸில் முன்னெப்போதுமில்லாத வகையில் நடைபெற்ற பிரசாரங்கள் நாட்டை பிரித்திருக்கும் நிலையில், அங்குள்ள வாக்காளர்கள் தங்களுடைய அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

இரண்டாம் சுற்று போட்டியின் மையமாக, 39 வயதான முன்னாள் முதலீட்டாளரான இமானுவேல் மக்ரோங், தீவிர வலதுசாரி தேசியவாதியான 48 வயதான மரைன் லெ பென் எதிர்த்து களம் காண்கிறார்.

வெளிநாடுகளில் வாழக்கூடிய ஃபிரெஞ்சு குடிமக்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழக்கூடியவர்கள் வாக்களிக்க தொடங்கிவிட்டனர்.

ஃபிரான்ஸ் அதிபர் தேர்தல் : வெற்றி பெறப்போவது யார் ?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பெருநகர ஃபிரான்ஸில் இன்று (ஞாயிறு) உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. 19.00 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும்.

ஆனால், சில பெரிய நகரங்களில் இரவு 8 மணி வரை உள்ளூர் நேரப்படி வாக்குப்பதிவு மையங்கள் திறந்திருக்கும். அதனைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையின் முன்னணி நிலவரங்கள் வெளியிடப்படப்பட உள்ளன.

ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில், போட்டியிட்ட 11 போரில் இந்த இரு வேட்பாளர்களும் முன்னணி பெற்றனர்.

இருவரும் ஃபிரான்ஸ் குறித்த முற்றிலும் மாறுபட்ட உத்தரவாதங்களை வாக்காளர்களுக்கு வழங்கியுள்ளனர்.

 

தாராளவாத மையமாக விளங்கும் மக்ரோங் ஐரோப்பிய ஒன்றியத்தின் வலுவான ஆதரவாளர் மற்றும் வணிக சார்பு கொண்டவர். ஆனால், முதன்முதலாக பிரசாரத்தை மேற்கொண்ட லெ பென் குடியேற்ற எதிர்ப்பு திட்டம் குறித்து பேசினார்.

உள்நாட்டு பொருளாதாரத்தில் யூரோவை தடை செய்ய வேண்டும் என்று லெ பென் விரும்புகிறார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவும் விரும்புகிறார்.

வாக்கெடுப்பில் மக்ரோங் வெற்றி பெறுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வாக்களிப்பு சதவீதம் குறைந்தால், அவர் வெற்றி பெறும் வாய்ப்புகளை சேதப்படுத்தும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/global-39834537

Link to comment
Share on other sites

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மேக்ரன் வெற்றி

 

பாரீஸ்: பிரான்ஸின் புதிய அதிபராக இமானுவேல் மேக்ரன்(39) தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் பிரான்ஸின் இளம் அதிபர் எனும் பெயர் பெற்றார்.
 

அதிபர் தேர்தல்:


பிரான்ஸ் நாட்டின் அதிபர் பிரான்கொய்ஸ் ஹோலண்டேவின் பதிவிக்காலம் நிறைவடைவதையொட்டி, அங்கு தேர்தல் நடைபெற்றது. பிரான்ஸின் புதிய அதிபரை தேர்வு செய்ய நடைபெற்ற தேர்தலில் ‛என் மார்சே' அணியின் இமானுவேல் மேக்ரன் மற்றும் ‛தேசிய முன்னணிக் கட்சி'யின்ல் மெரைன் லி பென் இருவரிடையே கடும் போட்டி நிலவியது.
 

இளம் அதிபர்:

 

ஏப்.,23ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் மேக்ரன் 23.9% ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தார். லி பென் 21.4% ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார். இந்நிலையில் நேற்று(மே 7) நடந்த இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவில் 65.3 சதவீத ஓட்டுகள் பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். மெரைன் லி பென்னுக்கு 34.7 சதவீத ஓட்டுகளே கிடைத்தது. வெற்றி பெற்றதன் மூலம் பிரான்ஸின் இளம் அதிபர் எனும் பெயர் மேக்ரனுக்கு கிடைத்துள்ளத.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1766436

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für WAHLSIEGER MACRON

இன்று Macron  வெற்றியடைந்ததில் பலருக்கு மகிழ்சியாக இருந்தாலும்...அடுத்த தேர்தலில் Perrine Le Pen  வெற்றியடையமாட்டார் என்பதில் என்ன நிச்சயம்?

ஏனெனில்   பிரான்ஸ் மக்கள் மத்தியில்  Perrine Le Pen னும் முன்னணியில் நிற்கிறார்.

பல ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு இனிவரும் வருடங்களுக்கு ஒரு சிறிய நிம்மதி பெருமூச்சு மட்டுமே.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

Bildergebnis für WAHLSIEGER MACRON

 

ஏனெனில்   பிரான்ஸ் மக்கள் மத்தியில்  Perrine Le Pen னும் முன்னணியில் நிற்கிறார்.

 

முன்னணியில் இருந்தால் வெண்டல்லோ இருக்கோணும். லாஜிக் உதைக்குது.

உது மகிந்தர் கூட்ட்ங்கள் மாதிரி. சனம் அள்ளுப்படும். வாக்களிக்காது.

தவிர வாயால அவல் மெல்லுற, ஹிட்லர், நெப்போலியன், முசோலினி மூலம் வந்தது பேரழிவு தான் என்பது மக்களுக்கு தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

முன்னணியில் இருந்தால் வேண்டல்லோ இருக்கோணும். லாஜிக் உதைக்குது.

உது மகிந்தர் கூட்ட்ங்கள் மாதிரி. சனம் அள்ளுப்படும். வாக்களிக்காது.

தவிர வாயால அவல் மெல்லுற, ஹிட்லர், நெப்போலியன், முசோலினி மூலம் வந்தது பேரழிவு தான் என்பது மக்களுக்கு தெரியும்.

நான் மற்றவர்களைப்பற்றி அதிகம் புலம்ப விரும்பவில்லை.:cool:
ஹிட்லர் பற்றி குறிப்பிட்டமையால் சொல்கிறேன்.

ஹிட்லர் வாயால் ஏரொப்பிளேன் ஓட்டவில்லை.

அணுகுண்டு/அதிவேக வீதி அமைப்புகள்/ ஒவ்வொரு மனிதனுக்குமான வேலை வாய்ப்புகள்/சோம்பேறிகளுக்கான சட்டங்கள் அமைப்பது முதல் கணணி கண்டுபிடிப்பு என ஆரம்பித்து வைத்ததைத்தான் மிச்சம் மீதியாக இருப்பவர்கள்...

சட்டபூர்வ அரசியல்வாதிகள் எனும் பெயரில் அமுல்படுத்துகின்றார்கள்.
ஹிட்லர் செய்த குற்றம் அயல் நாடுகளை ஆட்கொள்ள நினைத்தது/கொண்டது.


அதையே பிரிட்டிஸ்காரன்/பிரான்ஸ்காரன்/ஒல்லாந்தன்/போர்த்துக்கீசன் என்ன செய்தான் என்று திருப்பி கேட்டால் குற்றமாக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:


அதையே பிரிட்டிஸ்காரன்/பிரான்ஸ்காரன்/ஒல்லாந்தன்/போர்த்துக்கீசன் என்ன செய்தான் என்று திருப்பி கேட்டால் குற்றமாக்கும்

அவையள் 15 முதல் 19ம்  நூறாண்டுகளில் செய்த வேலைகளை, 20 ம் நூறாண்டில், நோகாமல் நொங்கு எடுக்க, இத்தாலி, உடன் சேர்ந்து பிரிட்டனை உள்ளிடட காலனிகள் வைத்திருக்கும் நாடுகளை  மடக்கினால் அவையளோட கொலணியோட சேர்ந்து எல்லாம் கையிக்க வரும் எண்டு பிளான் போட்டது தான் ஹிட்லர் விட்ட பிழை பாருங்கோ.

ஆனாலும் ஹிட்லரால் தான் நம்ம பக்கம் சுதந்திரம் கிடைத்தது என்பது மறுக்க முடியாது.

இதே போன்று, எங்கோ நடக்கும் ஒரு விடையத்தால், எங்கோ இருக்கும் ஈழத்துக்கும் ஒரு விடிவு வரும்.

போர்த்துகேயனை துரத்த ஒல்லாந்தனும், அவனைத் துரத்த பிரிட்டிஷ் காரனும், அவனையும் ஓட வைக்க ஹிட்லரும், 1987ல் வந்த இந்தியனை ஓட வைக்க பிரபாகரனும் வந்தது போல, எதோ ஒன்று ஒரு நாள் நடக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.