Jump to content

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேர்தல் கமிஷன் தயக்கம் ஏன்?


Recommended Posts

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
தேர்தல் கமிஷன் தயக்கம் ஏன்?
 
 
 

இம்மாதம் இரண்டு மாநிலங்களில், இடைத் தேர்தலை அறிவித்த, தலைமை தேர்தல் கமிஷன், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியை கண்டுகொள்ளவில்லை.

 

Tamil_News_large_176563920170507001951_318_219.jpg

ஜெ., மறைவு காரணமாக, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. ஆறு மாதங்களுக்குள், இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதால், மார்ச்சில் தேர்தலை அறிவித்தது. தேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில் போட்டி யிட்ட தினகரன், பணத்தை வாரி இறைத்தார். ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்பட்டது. சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரி துறையினர் நடத்திய சோதனையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கின.

அதன் தொடர்ச்சியாக, இடைத்தேர்தலை ஒத்திவைத்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

வேறு மாநிலங்களில், ஏதேனும் சட்டசபை தொகுதி களுக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் போது, ஆர்.கே.நகருக்கும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.

மணிப்பூர் மற்றும் ஒடிசா மாநிலத்தில், தலா, ஒரு சட்டசபைதொகுதிகள் காலியாக உள்ளன.இத் தொகுதிகளுக்கு, வரும், 25ம் தேதி தேர்தல் நடை பெறும் என, 3ம் தேதி, தேர்தல் கமிஷன் அறிவித் தது. ஆனால், ஆர்.கே.நகர் தொகுதிக்கு, தேர்தல் அறிவிக் கப்படவில்லை. இதன் மூலம், ஆர்.கே. நகர் தொகுதிக்கு, தற்போதைக்கு தேர்தல் நடத்த, தேர் தல் கமிஷன் விரும்பவில்லை என்பது தெளிவாகி உள்ளது.
 

இது குறித்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பணம்பட்டு வாடாவை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டது; ஐந்து பார்வை யாளர்களைநியமித்தது. பறக்கும் படையில், வெளி மாநில அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இரவு ரோந்து பணியில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரி கள் ஈடுபடுத்தப்பட்டனர்.இரு சக்கர வாகனங்களில், வெளிமாநில அதிகாரிகள், ரோந்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முக்கிய வீதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

 

இவை அனைத்தையும் மீறி, சசிகலா அணியி னர் பணம் பட்டுவாடா செய்தனர். இது, தேர்தல் கமிஷனுக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பணம் வினியோகத்தை தடுக்க முடியாததால், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தினகரன் ஆதரவாளர்கள் பணம் கொடுத்ததற்கு, பல் வேறு ஆதாரங்கள் சிக்கி உள்ளன. அதன் அடிப் படையில், அவரை தகுதி நீக்கம் செய்ய முடியுமா என, தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது. எனவே, தற்போதைக்கு ஆர்.கே.நகர் தொகுதிக்கு, தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1765639

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.