Jump to content

நீங்கள் விமானத்தில் பறக்கத் தடை விதிக்கப்படுமா? தெரிந்துகொள்ளுங்கள் 10 புதிய தகவல்களை!


Recommended Posts

நீங்கள் விமானத்தில் பறக்கத் தடை விதிக்கப்படுமா? தெரிந்துகொள்ளுங்கள் 10 புதிய தகவல்களை!

 
 
காத்திருக்கும் பயணிகள்படத்தின் காப்புரிமைGOOGLE

இந்தியாவில் விமான பயணத்தின் போது தவறாக நடந்துகொள்பவர்கள் குறித்த புதிய விதிகளை மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த 10 முக்கியத் தகவல்களை பார்ப்போம் :

1. உடல் சைகைகள், வாய்மொழி துன்புறுத்தல் மற்றும் நிதானமில்லாத போதை ஆகியன சீர்குலைக்கும் நடத்தையில் முதல் நிலையாகும்.

2. பிடித்து தள்ளுவது, எட்டி உதைத்தல் மற்றும் பொருத்தமற்ற முறையில் தொடுவது அல்லது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட உடல் ரீதியான தவறான நடத்தைகள் இரண்டாம் நிலையாகும்.

சைகை காட்டுகிறாரா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

3. உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடத்தை, விமான இயக்க அமைப்புமுறைக்கு சேதம் விளைவிப்பது, கழுத்தை நெரிப்பது, கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, விமானியின் அறைக்குள் அத்துமீறி செல்வது அல்லது அத்துமீற முயற்சிப்பது ஆகியன மிக உயர் நிலையாகும்.

 

4. முதல் நிலையின் கீழ் குற்றஞ்சாட்டப்படும் பயணிகளுக்கு விமானத்தில் பறக்க மூன்று மாதங்கள் வரை தடைவிதிக்கப்படும்.

5. இரண்டாம் அல்லது மூன்றாம் நிலையின் கீழ் குற்றஞ்சாட்டப்படும் பயணிகள் 6 மாதங்கள் வரை விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படலாம்.

ஏர் இந்தியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

6. இந்த தடையானது இரண்டு ஆண்டுகள் வரை உயர்த்தப்பட்டு அதிகபட்சமாக வாழ்நாள் தடை கூட விதிக்கப்படலாம்.

 

7. மீண்டும் மீண்டும் குற்றமிழைக்கும் பயணிகளுக்கு இந்த தடை உத்தரவுகள் இரட்டிப்பாகும்.

8. அனைத்து விமான போக்குவரத்து நிறுவனங்களும், ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் மற்றும் மற்றொரு விமான நிறுவனத்தின் மூத்த அதிகாரி, நுகர்வோர் அல்லது பயணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்திருக்க வேண்டும்.

விமானத்தில் சேவைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

9. விமான பணியாளர்கள் பதிவு செய்யும் புகாரை 10 தினங்களுக்குள் இந்த குழு விசாரித்து, சம்பந்தப்பட்ட பயணி குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா என்பதை தீர்மானித்து மூன்று நிலைகளில் அவர் எந்த நிலை என்பதை அறிவிக்க வேண்டும்.

10. விசாரணைக்கு உட்படுத்தப்படும் அந்த பயணி 10 தினங்களுக்கு புகார் தெரிவித்த விமான நிறுவனத்தின் விமானத்தில் பறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/india-39828637

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.