Jump to content

சொத்து ஆவணங்கள் - தீ வைப்பு - ஆடி கார் மர்மம்! - கொடநாடு அச்சத்தில் சிறுதாவூர் காவலர்கள்


Recommended Posts

சொத்து ஆவணங்கள் - தீ வைப்பு - ஆடி கார் மர்மம்! - கொடநாடு அச்சத்தில் சிறுதாவூர் காவலர்கள்

 
 
 

சிறுதாவூர் பங்களா

கொடநாடு எஸ்டேட்டைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் நடக்கும் மர்மக் காட்சிகளால் அதிர்ந்து போய் இருக்கின்றனர் அ.தி.மு.கவினர். ‘பங்களாவுக்கு ஆடி காரில் பலர் வந்து செல்கிறார்கள். சசிகலா, இளவரசி பெயரில் இருந்த நிலங்களை ரகசியமாக வேறு பெயர்களுக்கு மாற்றி வருகின்றனர். ‘எங்களுக்கு எதாவது நடந்துவிடுமோ?’ என தினம் தினம் அச்சத்தில் வேலை பார்த்து வருகிறோம்’ என்கின்றனர் ஆயுதப்படைக் காவலர்கள். 


சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா சர்ச்சையில் அடிபட்டது. ‘வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கான பணத்தைக் கண்டெய்னரில் எடுத்துச் செல்கின்றனர்’ என தேர்தல் ஆணையத்துக்குப் புகார் மனுவை அனுப்பினர் எதிர்க்கட்சித் தலைவர்கள். அடுத்து வந்த சில நாள்களில் திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் பணத்துடன் மூன்று கண்டெய்னர்கள் பிடிபட்டன. 'அதில் இருந்தது 570 கோடி மட்டும்தானா?' என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கான விடையும் இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார் சசிகலா. “பெங்களுரூ சிறைக்கு அவர் சென்ற நாளில் இருந்து தினகரன் கட்டுப்பாட்டில்தான் கொடநாடு எஸ்டேட்டும் சிறுதாவூர் பங்களாவும் இருந்தன. இதனால், சசிகலா குடும்பத்தில் உள்ள மற்ற உறவினர்கள் கொந்தளித்தனர்.

‘தினகரன் எங்களை எல்லாம் ஒதுக்குகிறார். அவர் மட்டுமே அனைத்துக்கும் உரிமை கொண்டாடுகிறார்’ என ஆதங்கப்பட்டபோதும், ‘உங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துவிட்டேன். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என சசிகலா வேண்டுகோள் வைத்தபோதும், உறவினர்கள் கேட்கவில்லை. இந்நிலையில், இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் சிறையில் அடைக்கப்பட்ட அதேநாளில், கொடநாடு மற்றும் சிறுதாவூர் பங்களாக்களில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. "கொடநாடு எஸ்டேட் கொள்ளை முயற்சியில் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்ட நாளில், சிறுதாவூர் பங்களாவுக்கு வெளியில், சில பொருள்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. தீ ஜூவாலையோடு புகை மூட்டம் அதிகமானதைக் கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் விசாரித்தபோது, ‘குப்பையைப் போட்டுக் கொளுத்தினோம்' என கூறியுள்ளனர். ஆனால், ‘சம்பவ இடத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பொருட்களைப் பார்த்தால், குப்பையைக் கொளுத்தியது போலத் தெரியவில்லை' என்கின்றனர் பங்களாவைச் சுற்றியுள்ள பொதுமக்கள். 

 
Advertisement
 
 
 

திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம்

திருப்போரூர் பத்திரப் பதிவு அலுவலக ஊழியர் ஒருவரிடம் பேசினோம். “புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற நாளில் இருந்து, சசிகலா-இளவரசி ஆகியோர் பெயர்களில் இருந்த ஆவணங்களை வேறு பெயருக்கு மாற்றும் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. சிறுதாவூர் பங்களா 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதைத் தவிர, சுற்றுவட்டாரப் பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலத்தை வாங்கியிருக்கிறார் சசிகலா. தற்போது ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் வரையில் விலை போகிறது. இதை மையமாக வைத்துக் கொண்டு அவரது உறவினர்கள் ஆட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அண்மையில், மிகப் பெரிய சொத்து ஒன்றை பெயர் மாற்றம் செய்வதற்காக, திருப்போரூர் சார் பதிவாளர் ரவிக்குமாரிடம் கேட்டுள்ளனர். ' இப்படியொரு செயலை என்னால் செய்ய முடியாது' என அவர் மறுக்கவும், ' பேப்பரில் சில மாற்றங்கள்தான் செய்ய வேண்டும் என்கிறோம். முடியாவிட்டால், நீங்கள் லீவில் சென்றுவிடுங்கள்' என சத்தம் போட்டுள்ளனர். அவரும் மூன்று நாட்கள் விடுப்பில் சென்றுவிட்டார். இந்த நேரத்தில், வேறு ஒரு சார் பதிவாளரை வைத்து காரியத்தை சாதித்துக் கொண்டார்கள். அலுவலக ஊழியர்களில் டைப்பிஸ்ட் பெண்மணியைத் தவிர, வேறு யாரும் அலுவலகத்தில் இருக்கவில்லை. அந்தப் பெண்மணியிடம் விசாரித்தபோது, ' எனக்கு எதுவும் தெரியாது. அவர்கள் சொன்னதை டைப் செய்தேன்' என்றதோடு முடித்துக் கொண்டார். என்ன சொத்துக்களை மாற்றினார்கள் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர். ரவிக்குமாருக்கு முன்னதாக ஓம்பிரகாஷ் என்ற அதிகாரி பணியில் இருந்தார். அவர் காலத்தில்தான் ஏகப்பட்ட சொத்துக்களை சசிகலா வாங்கிக் குவித்தார். தற்போது நடக்கும் பத்திரப்பதிவுகளுக்கு ஆட்சியில் உள்ளவர்களும் துணை போகின்றனர்" என்றார் விரிவாக. 

சிறுதாவூர்

இது ஒருபுறம் இருக்க, கடந்த சில நாட்களாக பங்களாவைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் கலவர முகத்துடன் காட்சி அளிக்கின்றனர் ஆயுதப்படைக் காவலர்கள். “தினமும் ஆடி காரில் யார் யாரோ வருகிறார்கள். அவர்களிடம் விசாரிக்கக்கூட முடிவதில்லை. பாதுகாப்புப் பணியில் 150 பேர் இருக்கிறோம். அங்காங்கே நான்கு சேர்களைப் போட்டு அமர்ந்திருக்கிறோம். ஒரு டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்புப் பணி என்றாலும், உயர் அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வருவதில்லை. தினமும் காலையில் நான்கு இட்லி கொடுக்கிறார்கள். சில நேரங்களில் குடிக்கத் தண்ணீர் கூட கிடைப்பது இல்லை. இரவு நேரத்தில் பயன்படுத்த டார்ச் லைட் கேட்கிறோம். அதையும் கொடுக்க மறுக்கிறார்கள். மழை பெய்தால் ஒதுங்குவதற்கும் இடம் இல்லை. யாராவது நுழைந்தால், செல்போன் மூலமாகவே கேட்டில் இருப்பவர்களுக்குத் தகவல் தருகிறோம். அவர்களும் என்ன ஏது என்று விசாரிக்காமல் உள்ளே அனுமதிக்கிறார்கள். ஆடி காரில் வருகின்றவர்கள் எல்லாம், இளவயதுடையவர்கள். பங்களாவுக்குள் நுழைந்துவிட்டால், என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியவில்லை. கொடநாட்டைப் போல, எங்களுக்கும் ஏதாவது நடந்துவிடுமோ? என பயத்தில் இருக்கிறோம். 'எங்களை வேறு எங்காவது மாத்துங்க சார்'னு அதிகாரிகளிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். போலீஸ் வேலைக்குப் புதிதாக சேர்ந்திருப்பதால், எங்களை யாரும் கண்டுகொள்வதில்லை. உயிருக்குப் பயந்துதான் பங்களா பாதுகாப்புப் பணியில் இருக்கிறோம்" என்கின்றனர் அச்சத்துடன். 

‘ஆள் அரவமற்ற சொத்துக்களுக்கு யார் வாரிசு என்ற போட்டி நடக்கிறதா? யார் பெயரில் சொத்துக்கள் மடை மாற்றப்படுகின்றன? பங்களா வாசலில் என்ன கொளுத்தப்பட்டது? சுற்றிலும் ரியல் எஸ்டேட் வேலைகள் துரிதமாக யார் காரணம்?' என்ற கேள்விகளுக்கு எல்லாம், விடை தெரியாமல் கடந்து போகிறார்கள் காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.கவினர். 

http://www.vikatan.com/news/tamilnadu/88566-siruthavur-security-persons-in-fear-what-happened-to-asset-documents-and-an-audi-car.html

Link to comment
Share on other sites

2 hours ago, நவீனன் said:

சொத்து ஆவணங்கள் - தீ வைப்பு - ஆடி கார் மர்மம்! - கொடநாடு அச்சத்தில் சிறுதாவூர் காவலர்கள்

இது நிச்சயமா உந்த பேயின் வேலைதான். சொன்னா நம்பமாட்டாங்கள் - பேய் இல்லையெண்டு சும்மா என்னை வம்புக்கு இழுப்பாங்கள் :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.