Jump to content

சரவணபவன் ராஜகோபாலாலின் 700 மில்லியன் டாலர் வெற்றிக்கதை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'சரவணபவன்'..!

குழந்தைப்பருவம்

ஒருவர் ராஜகோபாலிடம் மதிய உணவைச் சாப்பிட டி. நகருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது ஏனென்றால் கே.கே நகரில் ஒரு ஹோட்டல் கூட இல்லை என்று வருத்தப்பட்ட போது திரு. P.ராஜகோபால் ஒரு ஹோட்டலை தொடங்கினார். இப்போது அது தென்னிந்தியாவிலிருந்து உலகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய ஹோட்டல்களின் சங்கிலித் தொடராக வளர்ந்துள்ளது. வெற்றிக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளதால் P. ராஜகோபாலின் கதையைக் கேட்கும் போது ஒரு திரைப்படத்தில் இருந்து நேரடியாக வெளியில் வந்ததைப் போன்ற உணர்வு வருகிறது. அடிமட்டத்திலிருந்து பிரமிக்கத்தக்க வளர்ச்சி, ஒரு தனி மனித சாம்ராஜ்யம், குற்றம், கட்டுக்கடங்கா உணர்ச்சி, அதிகாரம் என மற்றும் பல முழுமையான விஷயங்களைக் கொண்டது இவரது வாழ்க்கை.

சரவணப் பவன்

சரவணப் பவன்

தற்போது சரவணப் பவனுக்கு இந்தியாவில் 33 க்கும் அதிகமான கிளைகளும் மற்றும் கடல் கடந்து வெளிநாடுகளில் 47 கிளைகளும் உள்ளன. அவர் தனது சுயசரிதையில் "நான் எனது இதயத்தை வெற்றியின் மீது பொருத்திவிட்டேன்" என்று கூறுகிறார்.

குழந்தைப்பருவம் 1947 - ஆம் ஆண்டு ஒரு மண் குடிசையில் பிறந்த ராஜகோபால் தமிழ்நாட்டிலுள்ள புன்னையாடி என்ற கிராமத்திலிருந்து வந்தவர். அவருடைய கிராமத்தில் ஒரு பேருந்து நிறுத்தம் கூட இல்லை. ஏழாம் வகுப்போடு அவர் பள்ளிப் படிப்பிலிருந்து நின்று விட்டார். வயிற்றுப் பிழைப்புக்கு சம்பாதிப்பதற்காக ஒரு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தார். மேசைகளைத் துடைக்கும் வேலையைச் செய்து அங்கேயே தரையில் தூங்குவாராம் ராஜகோபால்.

டீ -

சாமானியர்களின் ரத்தம் மெதுவாக டீ போட கற்றுக் கொண்டார். விரைவில் ராஜகோபால் ஒரு மளிகைக் கடையில் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கு வேலையில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு ராஜகோபால் அவருடைய அப்பா மற்றும் மைத்துனரின் உதவியோடு சொந்தமாக ஒரு மளிகைக் கடையைத் திறந்தார். வியாபாரத்தில் அதுவே அவரது முதல் அனுபவம்.

முதல் அனுபவம்.

கடையை நடத்த அவர் நிறையச் சவால்களைச் சந்தித்தார். திட்டமிட்டபடி வேலைகள் நடக்கவில்லை, இளைஞரான ராஜகோபாலுக்கு ஒரு கடையை நடத்துவதென்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும் அவர் தனது மனோதிடத்தால் எல்லாச் சவால்களையும் ஜெயித்தார். பிறகு அவரது நிலைமை மேம்பட ஆரம்பித்தது.

மளிகைக் கடை

1979 ஆம் ஆண்டு அவரது மளிகைக் கடையில் ஒரு விற்பனையாளருடன் மேலே சொல்லப்பட்ட உரையாடல் நடந்தது. இந்த உரையாடல் தான் 1981 ஆம் ஆண்டுச் சரவணபவன் பிறப்பதற்குக் காரணமானது. அந்தக் காலத்தில் வெளியே சாப்பிடுவது நாகரிகம் என்பதை விட அத்தியாவசியமாக இருந்தது. வெளியிடங்களில் சாப்பாட்டிற்கு இருந்த தேவையை உணர்ந்த ராஜகோபால் அந்த வியாபாரத்தில் குதித்தார்.

தரம் மற்றும் வாடிக்கையாளரின் திருப்தி

ஆரம்பகாலம் முதலே ராஜகோபால் உணவின் சிறந்த தரம் மற்றும் வாடிக்கையாளரின் திருப்தி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தினார். இப்போது இருப்பது போல இந்த வார்த்தைகளெல்லாம் முக்கிய நடைமுறையாக ஹோட்டல்களில் இல்லாத ஒரு காலத்திலேயே அவர் அதையெல்லாம் கடைபிடித்தார்.

நஷ்டம்

அவரிடம் மட்டமான சமையல் பொருட்களைப் பயன்படுத்தும்படியும் மற்றும் பணியாளர்களுக்குக் குறைந்த சம்பளத்தைக் கொடுக்கும்படியும் ஆலோசனை கூறிய ஒருவரை ராஜகோபால் திட்டி அனுப்பி விட்டார். தொடக்கக் காலத்தில் சிறந்த தரமான உணவை கொடுப்பதற்காக ஹோட்டலை நஷ்டத்திற்கு நடத்த வேண்டி வந்தது. ஒவ்வொரு மாதமும் சுமார் ரூபாய் 10,000 நஷ்டமடைந்தார். ஆனால் காலப்போக்கில் அவருடைய நற்பெயர் வளர்ந்து நஷ்டங்கள் லாபங்களாக மாறின.

நெறிமுறைகள்

மற்றும் பணியாளர்கள் சரவணபவனின் வெற்றியின் ரகசியம் நல்ல தரமான உணவை பரிமாறுவதில் மட்டுமில்லை. அங்கு வேலை செய்யும் பணியாளர்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்வதிலும் மற்றும் பணியிடத்தின் உயர் தரத்திலும் உள்ளது.

வாழை இலை

ராஜகோபால் தட்டின் மீது வாழையிலையைப் பரப்பி அதன் மீது உணவு பரிமாறும் பழக்கத்தைத் தொடங்கினார். அது ஏற்கனவே வேறொருவர் சாப்பிட்ட தட்டில் சாப்பிடுகிறோமே என்கிற வாடிக்கையாளர்களின் சஞ்சலத்தைப் போக்கியதோடு பணியாளர்களுக்குத் தட்டுக்களைக் கழுவும் வேலையையும் சுலபமாக்கியது.

பணியாளர்கள் மீது கவனம்

ராஜகோபால் உணவில் முடி விழுந்திருக்கிறது என்கிற புகார்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வராமலிருக்கப் பணியாளர்களுக்கு மாதம் ஒருமுறை தலைமுடியை வெட்டச் செய்தார். மேலும் அது பணியாளர்களுக்குக் கண்ணியமான தோற்றத்தையும் அளித்தது. அடுத்த நாள் காலையில் வேலையைப் பாதிக்கும் என்பதால் பணியாளர்களில் யாரும் பின்னிரவு நேரங்களில் சினிமா பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

நல்ல மனிதர்

ராஜகோபால் செய்த முதல் விஷயம் அவரது பணியாளர்களுக்கு அளித்த வேலை பாதுகாப்பு. அவர் தனது பணியாளர்களுக்குத் தங்குமிட வசதியை அளித்தார் மற்றும் அவர்களின் சம்பளத்தையும் உயர்த்தினார். மேலும் அவர் கிராமத்தில் குடும்பங்களை உடைய பணியாளர்கள் அவர்களின் குடும்பங்களைப் பார்த்து வருவதற்காக வருடாந்திர ஊக்கத் தொகையையும் கொடுத்தார். ஒவ்வொரு திருமணமான பணியாளருக்கும் இரண்டு குழந்தைகள் வரை கல்வி உதவியை அளித்தார். ஒரு பணியாளருக்கு உடம்பு சரியில்லை என்றால் அவரைக் கவனித்துக் கொள்ள இரண்டு பேரை அனுப்பினார்.

உற்பத்தி திறன்

ஒரு பணியாளரின் நலன் அவருடைய குடும்ப நலத்தில் உள்ளது. உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காகப் பணியாளர்களையும் அவரது குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

படிப்படியான உயர்வு

இப்படித் தொடர்ந்து சிறப்பான முயற்சி மற்றும் திட்டங்களுடன் சென்னை கேகே நகரில் 14-12-1981ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட சரவணபவன் இன்று உலகின் பல இடங்களிலும் விரிவடைந்து தற்போது 91 கிளைகளுடன் வெற்றிச் சாம்ராஜியமாக உள்ளது. கடைசியாகச் சரவணபவன் 04-03-2016ஆம் ஆண்டு நெதர்லாந்து, ஆம்ஸ்டரடேம் பகுதியல் தனது 9வது கிளையைத் திறந்ததுள்ளது.

700 மில்லியன் டாலர்

தூத்துக்குடியில் இருந்து வந்த இளைஞன் சென்னையில் துவங்கிய முதல் ஹோட்டல் வெற்றியின் மூலம் இன்று சரவணபவன் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 700 மில்லியன் டாலர்.

ஆயுள் தண்டனை

2009 ஆம் ஆண்டுச் சாந்தாராம் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

காதல் கதை

சாந்தாராம் என்பவர் ராஜகோபாலின் உதவி மேலாளர்களில் ஒருவருடைய மகளான ஜீவஜோதி என்பவருடைய நெருங்கிய நண்பர். ராஜகோபால் ஜீவஜோதியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் ஜீவஜோதியோ சாந்தாராம் மீது ஆர்வமாக இருந்தார். பலமுறை எச்சரித்த பின்பும் அவர்கள் சந்திப்பதை நிறுத்தவில்லை. இந்நிலையில் சாந்தாராம் கடத்தப்பட்டார். சில நாட்களுக்குப் பின்னர்ச் சாந்தாராமின் உடல் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. ராஜகோபால் தான் கொலை செய்தார் என்பதற்குச் சாட்சியம் இல்லாததால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Read more at: http://tamil.goodreturns.in/news/2017/05/05/the-saravana-bhavan-story/slider-pf33499-007753.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை இடையில் நிறுத்திவிட்டீர்கள்போல் தோன்றுகிறது. சரவணபவனில் போய் சாப்பிட்டால் தெரியும் அங்குள்ள அசிங்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழாம் வகுப்பு வரை மட்டுமே... படித்த ஒருவர்,
எழுநூறு மில்லியன் டொலருக்கு.... வியாபாரத்தை பெருக்கியது என்பது, சாதாரண  விடயமல்ல.
சரவணபவன் ராஜகோபால்...  தனது சுயசரிதையில்.... 
"நான்.... எனது, இதயத்தை... "வெற்றியின்  மீது"   பொருத்திவிட்டேன்"  என்று நினைத்ததால் தான், இவ்வளவும் சாத்தியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இரண்டு மூண்டுதரம் ஜேர்மனியிலை இருக்கிற சரவணபவனுக்கு போய் சாப்பிட்டிருக்கிறன்......
கோப்பையிலை சோத்தை போட்டு பாத்திகட்டி அமுக்கிற எனக்கு ஜேர்மனி சரவணபவன் பெரிசாய் எடுபடேல்லை......பத்தியப்படேல்லை......சும்மா ஸ்ரையிலுக்கு போய் சாப்பிடலாம்.......எக்ஸ்ராவாய் கறி கேட்டன்.....  குங்குமம் போடுற கிண்ணியை விட கொஞ்சம் பெரிய கிண்ணியிலை கறிகொண்டுவந்து வைச்சினம்....அது எங்கை எனக்கு தொட்டு நக்கவே காணாது.:mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

நானும் இரண்டு மூண்டுதரம் ஜேர்மனியிலை இருக்கிற சரவணபவனுக்கு போய் சாப்பிட்டிருக்கிறன்......
கோப்பையிலை சோத்தை போட்டு பாத்திகட்டி அமுக்கிற எனக்கு ஜேர்மனி சரவணபவன் பெரிசாய் எடுபடேல்லை......பத்தியப்படேல்லை......சும்மா ஸ்ரையிலுக்கு போய் சாப்பிடலாம்.......எக்ஸ்ராவாய் கறி கேட்டன்.....  குங்குமம் போடுற கிண்ணியை விட கொஞ்சம் பெரிய கிண்ணியிலை கறிகொண்டுவந்து வைச்சினம்....அது எங்கை எனக்கு தொட்டு நக்கவே காணாது.:mellow:

இட்லி, வடை, தோசை, ஊத்தப்பம், பொங்கல், பூரி வகையறாக்கு தான் சரவணபவன்.

நம்ம சோறு கறி, குழம்பு, பிரட்டல், வறை, சொதி, சம்பல் வேற லெவல். 

சரவணபவன், சாம்பாரு, காரக்குழம்பு, கூட்டு, பொரியல் வேற லெவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

நானும் இரண்டு மூண்டுதரம் ஜேர்மனியிலை இருக்கிற சரவணபவனுக்கு போய் சாப்பிட்டிருக்கிறன்......
கோப்பையிலை சோத்தை போட்டு பாத்திகட்டி அமுக்கிற எனக்கு ஜேர்மனி சரவணபவன் பெரிசாய் எடுபடேல்லை......பத்தியப்படேல்லை......சும்மா ஸ்ரையிலுக்கு போய் சாப்பிடலாம்.......எக்ஸ்ராவாய் கறி கேட்டன்.....  குங்குமம் போடுற கிண்ணியை விட கொஞ்சம் பெரிய கிண்ணியிலை கறிகொண்டுவந்து வைச்சினம்....அது எங்கை எனக்கு தொட்டு நக்கவே காணாது.:mellow:

ஜேர்மனியிலும்....  "சரவணபவன் உணவு விடுதி   இருக்கின்றதா?
புதிய செய்தி... குமாரசாமி அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

இட்லி, வடை, தோசை, ஊத்தப்பம், பொங்கல், பூரி வகையறாக்கு தான் சரவணபவன்.

நம்ம சோறு கறி, குழம்பு, பிரட்டல், வறை, சொதி, சம்பல் வேற லெவல். 

சரவணபவன், சாம்பாரு, காரக்குழம்பு, கூட்டு, பொரியல் வேற லெவல்.

அதுக்குத்தான்....  கலியாணம் கட்டி இருக்கிறம், 
எண்டு... சொல்ல வாறிங்க, போல கிடக்கு... முனி. 
:D: :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நானும் இரண்டு மூண்டுதரம் ஜேர்மனியிலை இருக்கிற சரவணபவனுக்கு போய் சாப்பிட்டிருக்கிறன்......
கோப்பையிலை சோத்தை போட்டு பாத்திகட்டி அமுக்கிற எனக்கு ஜேர்மனி சரவணபவன் பெரிசாய் எடுபடேல்லை......பத்தியப்படேல்லை......சும்மா ஸ்ரையிலுக்கு போய் சாப்பிடலாம்.......எக்ஸ்ராவாய் கறி கேட்டன்.....  குங்குமம் போடுற கிண்ணியை விட கொஞ்சம் பெரிய கிண்ணியிலை கறிகொண்டுவந்து வைச்சினம்....அது எங்கை எனக்கு தொட்டு நக்கவே காணாது.:mellow:

நானும் பார்த்திருக்கிறேன் அதே கிண்ணங்கள் ஊரில் சீனி கடன் கொடுக்கிற கிண்ணங்கள் போல்   குழைச்சு சாப்பிட கறி போதாது ஆனால் காசு மட்டும் கரட்டா கொடுக்கணும் முள் மீல்ஸ்சுக்கு :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

ஜேர்மனியிலும்....  "சரவணபவன் உணவு விடுதி   இருக்கின்றதா?
புதிய செய்தி... குமாரசாமி அண்ணா. :)

ஓம் சிறித்தம்பி! பெரிசாய் எழுப்பமில்லை.அதிலை வேலைசெய்யுற பொம்புளை நல்லவடிவு.நான் நிமிர்ந்தும் பார்க்கேல்லை எண்டது முக்கிய விசயம்:cool:

http://www.saravanaabhavan.de/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இலண்டனில் ஒருகாலத்தில் இரண்டு பவுனுக்கு மசாலா தோசை என்று கடை பரப்பின சென்னை தோசா போன்றவை இப்போது ஈயோட்டுகின்றன சரவணபவன் விலைகூட ஆனாலும் பின்னேரங்களில் போனால் வரிசையில் நின்றுதான் இடம் எடுக்கணும் குசா சொன்னது போல் சாப்பாட்டின் அளவு குறைவு தான் ஆனாலும் சுத்தம் தரம் என்பதில் அடிக்க ஏலாது  இதில் இருந்து நம்ம லண்டன் ஒரு பவுனுக்கு நான்கு ரோல் வடை விற்பவர்களுக்கு செய்தி அடங்கியுள்ளது இனி இப்படி தொடந்து விற்று வந்தால் காணாமல் போவது உறுதி  லண்டனை விட்டு வெளியில் இருப்பவர்கள் விளங்கி கொள்ள

இங்கு கிழமையில் ஒருக்கா ரோலை சுத்தி ரோலின் இருபக்கமும் இரண்டு இறைச்சி துண்டை வைத்து மிகுதி முழுவதும் சந்தையில கழிக்கப்படும் பச்சை மேவின உருளைகிழங்கை வினிகர் சொட்டு விட நன்றாக அவியும்  அதில் பச்சை செத்தல் மிளகாய்த்தூள் போட்டு கறி என்று சுத்தி பிரீசரில் வைத்து விடுவார்கள் அந்த வாரம் முழுக்க அப்படி வைக்கபட்ட ரோல் தான் பொரித்து தருவார்கள் .

 

அடுத்து வடை இங்கு உளுந்து விலை கூடின பொருள் கிலோ ஐந்து பவுன் அதற்கு மேலும் உள்ளது வடையில் உளுந்துக்கு பதில் அரிசி யும் அப்ப சோடாவும் அதிகம் வடை சும்மா பெருத்து காணப்படும் அதே வடை இரவு போனால் மூன்றில் ஒரு பங்குக்கு சிறுத்து காணப்படும் காரணம் மூன்று முறை சுடு எண்ணையில் குளித்து இருக்கும் இப்படியான கேசுகள் கூட இங்குதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சரபணபவானுக்கு தோசை,பூரி,சாம்பார் வடை சாப்பிடப் போறது...செம ருசி:101_point_up:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஓம் சிறித்தம்பி! பெரிசாய் எழுப்பமில்லை.அதிலை வேலைசெய்யுற பொம்புளை நல்லவடிவு.நான் நிமிர்ந்தும் பார்க்கேல்லை எண்டது முக்கிய விசயம்:cool:

http://www.saravanaabhavan.de/

ஒரு போட்டோவாவது தம்பிக்கு கண்ணில காட்டுனியளா நீங்கள் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

ஒரு போட்டோவாவது தம்பிக்கு கண்ணில காட்டுனியளா நீங்கள் :unsure:

வடிவான பொம்பிள்ளையாம், என்று யாரோ சொல்லக் கேட்டு, நம்ம முனியரை கரை சேர்ப்போம் எண்டு தான் போனவர். சோத்துக்குள்ள பாத்தியைக் கட்டுறதிலேயே மினக்கெட்டு கடுப்பில் இருந்து இருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

இங்கு இலண்டனில் ஒருகாலத்தில் இரண்டு பவுனுக்கு மசாலா தோசை என்று கடை பரப்பின சென்னை தோசா போன்றவை இப்போது ஈயோட்டுகின்றன சரவணபவன் விலைகூட ஆனாலும் பின்னேரங்களில் போனால் வரிசையில் நின்றுதான் இடம் எடுக்கணும் குசா சொன்னது போல் சாப்பாட்டின் அளவு குறைவு தான் ஆனாலும் சுத்தம் தரம் என்பதில் அடிக்க ஏலாது  இதில் இருந்து நம்ம லண்டன் ஒரு பவுனுக்கு நான்கு ரோல் வடை விற்பவர்களுக்கு செய்தி அடங்கியுள்ளது இனி இப்படி தொடந்து விற்று வந்தால் காணாமல் போவது உறுதி  லண்டனை விட்டு வெளியில் இருப்பவர்கள் விளங்கி கொள்ள

இங்கு கிழமையில் ஒருக்கா ரோலை சுத்தி ரோலின் இருபக்கமும் இரண்டு இறைச்சி துண்டை வைத்து மிகுதி முழுவதும் சந்தையில கழிக்கப்படும் பச்சை மேவின உருளைகிழங்கை வினிகர் சொட்டு விட நன்றாக அவியும்  அதில் பச்சை செத்தல் மிளகாய்த்தூள் போட்டு கறி என்று சுத்தி பிரீசரில் வைத்து விடுவார்கள் அந்த வாரம் முழுக்க அப்படி வைக்கபட்ட ரோல் தான் பொரித்து தருவார்கள் .

 

அடுத்து வடை இங்கு உளுந்து விலை கூடின பொருள் கிலோ ஐந்து பவுன் அதற்கு மேலும் உள்ளது வடையில் உளுந்துக்கு பதில் அரிசி யும் அப்ப சோடாவும் அதிகம் வடை சும்மா பெருத்து காணப்படும் அதே வடை இரவு போனால் மூன்றில் ஒரு பங்குக்கு சிறுத்து காணப்படும் காரணம் மூன்று முறை சுடு எண்ணையில் குளித்து இருக்கும் இப்படியான கேசுகள் கூட இங்குதான் .

அப்படி பட சிலுவாரித்தனம் செய்யும் கடைகள் பல காணாமல் இறுதியில் போகின்றன. அதுமட்டுமல்ல, கவுன்சில்காரர்கள் வாடிக்கைகையாளர்கள் போல செக் பண்ணுகிறார்கள். இவ்வகையில், கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து பல சரக்கு கடையில வடை வியாபாரம் செய்வது தடை செய்யப் பட்டுள்ளது.
  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

வடிவான பொம்பிள்ளையாம், என்று யாரோ சொல்லக் கேட்டு, நம்ம முனியரை கரை சேர்ப்போம் எண்டு தான் போனவர். சோத்துக்குள்ள பாத்தியைக் கட்டுறதிலேயே மினக்கெட்டு கடுப்பில் இருந்து இருப்பார்.

சேத்துல விழுந்ததை விட சோத்துல விழுந்தவர்கள் அதிகம் நாதா நம்ம கும்மாரசாமியாரையும் சேர்த்து  போல்  சோத்தடிமைகள் நாங்கள் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெருடும் ஒரே விடயம்....

இந்தியா, இலங்கை எங்குமே சமையலறை சுத்தமாக இருப்பதில்லை.

ஒரு முறை பின்னால் போய்ப் பார்த்தால், ஜன்மத்துக்கும் போகமாட்டீர்கள் அங்கு சாப்பிட...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

நெருடும் ஒரே விடயம்....

இந்தியா, இலங்கை எங்குமே சமையலறை சுத்தமாக இருப்பதில்லை.

ஒரு முறை பின்னால் போய்ப் பார்த்தால், ஜன்மத்துக்கும் போகமாட்டீர்கள் அங்கு சாப்பிட...

இத நான் லைக்கு  பண்ரன் வீட்டிலும் அதே நிலை தானே  tw_blush:

Link to comment
Share on other sites

1 hour ago, முனிவர் ஜீ said:

இத நான் லைக்கு  பண்ரன் வீட்டிலும் அதே நிலை தானே  tw_blush:

வெளிநாட்டில இருக்கிறவையின் குசினிக்குள்ள ஸ்டோவை கொஞ்சம் முன்னால இழுத்துப் பாத்தால் தெரியும் எது திறம் எண்டு. :grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, முனிவர் ஜீ said:

சேத்துல விழுந்ததை விட சோத்துல விழுந்தவர்கள் அதிகம் நாதா நம்ம கும்மாரசாமியாரையும் சேர்த்து  போல்  சோத்தடிமைகள் நாங்கள் tw_blush:

சோத்தடிமைகள் என்று நக்கலாக சொல்லப்படாது கண்டியளோ.

சோத்தை சாப்பிட்ட எங்கடை மூதாதையர் ஒருத்தரும் சுகர் வருத்தத்தாலை அவதிப்படேல்லை..

குளிசை போடேல்லை....

வயித்திலை ஊசி போடேல்லை.

விடிஞ்சால் பொழுதுபட்டால் தேங்காய் / தேங்காய்ப்பால் எண்டு மினைக்கெட்ட எங்கடை சனத்துக்கு கொலஸ்ரோல் பிரச்சனை வரேல்லை.
இப்ப என்னடாவெண்டால் கண்டறியாத டாக்குத்தர்மார் சொல்லீனம்...
சோறு சாப்பிட்டால் சுகர்வருத்தம் வருமாம்...
தேங்காய் தேங்காய்ப்பாலிலை சாப்பாடு சமைச்சால் கொலஸ்ரோல் பிரச்சனை வருமாம்...

அடிங்......:grin:

இந்த தம்பி! என்னதொரு அழகாய் சொல்லுறார் பாருங்கோ...tw_thumbsup:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2017 at 9:06 AM, Nathamuni said:

 

குழந்தைப்பருவம்
 


700 மில்லியன் டாலர்

தூத்துக்குடியில் இருந்து வந்த இளைஞன் சென்னையில் துவங்கிய முதல் ஹோட்டல் வெற்றியின் மூலம் இன்று சரவணபவன் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 700 மில்லியன் டாலர்.

ஆயுள் தண்டனை

2009 ஆம் ஆண்டுச் சாந்தாராம் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

காதல் கதை

சாந்தாராம் என்பவர் ராஜகோபாலின் உதவி மேலாளர்களில் ஒருவருடைய மகளான ஜீவஜோதி என்பவருடைய நெருங்கிய நண்பர். ராஜகோபால் ஜீவஜோதியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் ஜீவஜோதியோ சாந்தாராம் மீது ஆர்வமாக இருந்தார். பலமுறை எச்சரித்த பின்பும் அவர்கள் சந்திப்பதை நிறுத்தவில்லை. இந்நிலையில் சாந்தாராம் கடத்தப்பட்டார். சில நாட்களுக்குப் பின்னர்ச் சாந்தாராமின் உடல் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. ராஜகோபால் தான் கொலை செய்தார் என்பதற்குச் சாட்சியம் இல்லாததால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Read more at: http://tamil.goodreturns.in/news/2017/05/05/the-saravana-bhavan-story/slider-pf33499-007753.html

நான் அதிகம் சினிமா படங்கள் பார்ப்பது இல்லை 
அதலாலோ என்னவோ பார்க்கும் படங்கள் பொதுவாக 
எல்லா கட்டமும் கவனமாக பார்ப்பது உண்டு.
எனக்கு படைப்புக்களில் உள்ள கவனத்தை விட 
படைப்புக்களில் உள்ள படைப்பாளியின் திறமையே கவனத்தை ஈர்க்கும்.
ஆதலால் தமிழ் படங்கள் பொதுவாக பிடிப்பத்தில்லை 
யாரும் இங்கு வித்தியாசமாக ஏதும் எழுதி ... நல்ல கிளியாராக எங்காவது 
பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் பார்ப்பேன். 
அப்படி பார்த்த படங்களில் ......... ஆசை படத்தின் திரைக்கதை நகர்வு பிடித்து இருந்தது 

அதில் ஒரு வசனம் நிழல்கள் ரவி  அவர்கள் பிரகாஷ்ராஜிற்கு சொல்லுவார் 
இந்த உலகில் ராவணனைப்போல் அதி உச்ச திறமையாளி ஒருவனும் இருக்கவில்லை 
பெண் ஆசையால் ராவணைப்போல் மண் ஆகியவனும் இல்லை என்று 
(பார்த்து 15 வருடம் வரலாம் வார்த்தைகள் மாறலாம் கரு பொருள் இதுதுதான்) 

எனக்கு ரொம்ப பிடித்த வசனவும் ..... பல நேரங்களில் எனது சொந்த வாழ்க்கையில் 
நேரான பாதையில் செல்ல எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் வசனமாகவும் அது 
அமைந்துவிட்ட்து .

ராஜகோபாலுக்கும் ரொம்ப பொருந்திவிட்ட்து ..... 700 மில்லியன் டாலர் பணம் இருந்தும் 
சிறையில் களிதான் வாழ்வுக்கு உணவாகி இருக்கு உலகம் பூரா உணவாக கிளைகள். 

தப்பு எப்போதும் ... ஒரு தப்பையே உருவாக்கி கொடுக்கிறது.
இங்கிருக்கும் எமது உறவுகளும் ....... தயவு செய்து ஆசையால் மோசம் போய்விடாதீர்கள்.
அவன் அவுடி ஓடுறான் ....... மெர்சிடஸ் ஓடுறான் என்று .... மட்டை போடுற ... சட்டை போடுற 
வேலைகளில் இறங்கி விடாதீர்கள்.  
விரலுக்கு ஏற்றால்போல் நாமும் வாழ்ந்து ... வீக்கத்திட்கு ஏற்றால்போல் இன்னும் சிலரையும் 
வாழ வைத்தாலே போதும் .... நல்ல சந்தோசமா மகிழ்ச்சியாக வாழலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

நான் அதிகம் சினிமா படங்கள் பார்ப்பது இல்லை 
அதலாலோ என்னவோ பார்க்கும் படங்கள் பொதுவாக 
எல்லா கட்டமும் கவனமாக பார்ப்பது உண்டு.
எனக்கு படைப்புக்களில் உள்ள கவனத்தை விட 
படைப்புக்களில் உள்ள படைப்பாளியின் திறமையே கவனத்தை ஈர்க்கும்.
ஆதலால் தமிழ் படங்கள் பொதுவாக பிடிப்பத்தில்லை 
யாரும் இங்கு வித்தியாசமாக ஏதும் எழுதி ... நல்ல கிளியாராக எங்காவது 
பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் பார்ப்பேன். 
அப்படி பார்த்த படங்களில் ......... ஆசை படத்தின் திரைக்கதை நகர்வு பிடித்து இருந்தது 

அதில் ஒரு வசனம் நிழல்கள் ரவி  அவர்கள் பிரகாஷ்ராஜிற்கு சொல்லுவார் 
இந்த உலகில் ராவணனைப்போல் அதி உச்ச திறமையாளி ஒருவனும் இருக்கவில்லை 
பெண் ஆசையால் ராவணைப்போல் மண் ஆகியவனும் இல்லை என்று 
(பார்த்து 15 வருடம் வரலாம் வார்த்தைகள் மாறலாம் கரு பொருள் இதுதுதான்) 

எனக்கு ரொம்ப பிடித்த வசனவும் ..... பல நேரங்களில் எனது சொந்த வாழ்க்கையில் 
நேரான பாதையில் செல்ல எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் வசனமாகவும் அது 
அமைந்துவிட்ட்து .

ராஜகோபாலுக்கும் ரொம்ப பொருந்திவிட்ட்து ..... 700 மில்லியன் டாலர் பணம் இருந்தும் 
சிறையில் களிதான் வாழ்வுக்கு உணவாகி இருக்கு உலகம் பூரா உணவாக கிளைகள். 

தப்பு எப்போதும் ... ஒரு தப்பையே உருவாக்கி கொடுக்கிறது.
இங்கிருக்கும் எமது உறவுகளும் ....... தயவு செய்து ஆசையால் மோசம் போய்விடாதீர்கள்.
அவன் அவுடி ஓடுறான் ....... மெர்சிடஸ் ஓடுறான் என்று .... மட்டை போடுற ... சட்டை போடுற 
வேலைகளில் இறங்கி விடாதீர்கள்.  
விரலுக்கு ஏற்றால்போல் நாமும் வாழ்ந்து ... வீக்கத்திட்கு ஏற்றால்போல் இன்னும் சிலரையும் 
வாழ வைத்தாலே போதும் .... நல்ல சந்தோசமா மகிழ்ச்சியாக வாழலாம். 

தப்பு செய்தாலும், தப்பில்லாமல் செய்யணும்.

அந்தாளிடம் உள்ள பணத்துக்கு ஒன்று அல்ல பத்து பெண்களை ஊருக்கே சொல்லி கட்டி இருக்கலாம். (பதிவுத் திருமணம் செய்தால் தான் சடடப் பிரச்னை) 

ஆனாலும் உதவாக்கரை கணவர்களினால் அவலப்படும் பெண்களுக்கு உதவுவதாக நினைத்து சிக்கலில் மாட்டிக் கொண்டார்.

எவ்வளவு தான் கடின உழைப்பு இருந்தாலும், விவேகம் வேண்டும். அந்த விவேகம் ( தமிழில் உள்ள இந்த வார்த்தைக்கு சமமான விளக்கம்  ஆங்கிலத்தில் cleverness with common sense ) என்பது கல்வியறிவினால் மட்டும் வருவதல்ல.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

சோத்தடிமைகள் என்று நக்கலாக சொல்லப்படாது கண்டியளோ.

சோத்தை சாப்பிட்ட எங்கடை மூதாதையர் ஒருத்தரும் சுகர் வருத்தத்தாலை அவதிப்படேல்லை..

குளிசை போடேல்லை....

வயித்திலை ஊசி போடேல்லை.

விடிஞ்சால் பொழுதுபட்டால் தேங்காய் / தேங்காய்ப்பால் எண்டு மினைக்கெட்ட எங்கடை சனத்துக்கு கொலஸ்ரோல் பிரச்சனை வரேல்லை.
இப்ப என்னடாவெண்டால் கண்டறியாத டாக்குத்தர்மார் சொல்லீனம்...
சோறு சாப்பிட்டால் சுகர்வருத்தம் வருமாம்...
தேங்காய் தேங்காய்ப்பாலிலை சாப்பாடு சமைச்சால் கொலஸ்ரோல் பிரச்சனை வருமாம்...

அடிங்......:grin:

இந்த தம்பி! என்னதொரு அழகாய் சொல்லுறார் பாருங்கோ...tw_thumbsup:

 

சோறு சாப்பிடுவது பிரச்சனை இல்லை அண்ணா...ஊரிலை என்டால் சாப்பிட்டு விட்டு வயல்,வரப்பிலை குனிஞ்சு,நிமிர்ந்து வேலை செய்வீங்கள்.இங்கே சோத்தை பாத்தி கட்டி அடிச்சு விட்டு கும்பிறப்படுத்தால் வருத்தம் வராமல் என்ன செய்யும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சோறு சாப்பிடுவது பிரச்சனை இல்லை அண்ணா...ஊரிலை என்டால் சாப்பிட்டு விட்டு வயல்,வரப்பிலை குனிஞ்சு,நிமிர்ந்து வேலை செய்வீங்கள்.இங்கே சோத்தை பாத்தி கட்டி அடிச்சு விட்டு கும்பிறப்படுத்தால் வருத்தம் வராமல் என்ன செய்யும்?

மொட்டைக்கறுப்பன்/மற்ற புழுங்கல் அரிசி சாப்பிட்டால் பரவாயில்லை தங்கச்சி....உவங்கள் இடையிலை புதிசாய் கண்டுபிடிச்ச வெள்ளை அரிசியளாலைதான் ஊரிப்பட்ட பிரச்சனையள்.அதோடை சோறு அவிச்சால் கட்டாயம் கஞ்சிவடிக்கவேணும்.இது அப்பிடியில்லை...சுகத்துக்காக றைஸ்குக்கரிலை சோத்தை உமியவிட்டால் வருத்தங்கள் வரத்தான் செய்யும்.

Link to comment
Share on other sites

On ‎5‎/‎8‎/‎2017 at 2:50 AM, Nathamuni said:

தப்பு செய்தாலும், தப்பில்லாமல் செய்யணும்.

அந்தாளிடம் உள்ள பணத்துக்கு ஒன்று அல்ல பத்து பெண்களை ஊருக்கே சொல்லி கட்டி இருக்கலாம். (பதிவுத் திருமணம் செய்தால் தான் சடடப் பிரச்னை) 

ஆனாலும் உதவாக்கரை கணவர்களினால் அவலப்படும் பெண்களுக்கு உதவுவதாக நினைத்து சிக்கலில் மாட்டிக் கொண்டார்.

எவ்வளவு தான் கடின உழைப்பு இருந்தாலும், விவேகம் வேண்டும். அந்த விவேகம் ( தமிழில் உள்ள இந்த வார்த்தைக்கு சமமான விளக்கம்  ஆங்கிலத்தில் cleverness with common sense ) என்பது கல்வியறிவினால் மட்டும் வருவதல்ல.
 

நாதம்,

உதவாக்கரை கணவர்களினால் அவலப்படும் பெண்களுக்கு உதவ நினைத்து சிக்கலில் ஆள் மாட்டவில்லை. இணக்கமாக போன பெண்ணை தொடர்ந்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்க நினைத்து அவர் கணவனை கொன்றதால் தான் ஆள் மாட்டப்பட்டு போனார். அந்தப் பெண் தன்னை காட்டிக் கொடுக்காது என நினைத்து விட்டார். வழக்கு நடக்கும் போது அந்த பெண்ணுக்கு கொடுத்த சிரமங்கள் எக்கசக்கம்.

அண்மையில் சென்னையில்  இருக்கும் இவ் உணவு விடுதிகளில் ஒன்று  விதிகளை மீறி நடத்தப்படுவதாக சொல்லி சீல்  வைத்தார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.