Jump to content

வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜராக சசிக்கு அனுமதி


Recommended Posts

வீடியோ கான்பரன்சிங்கில்
ஆஜராக சசிக்கு அனுமதி
 
 
 

சென்னை:அன்னிய செலாவணி மோசடி வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய, சசிகலா, 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக ஆஜராகலாம் என, எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

 

Tamil_News_large_1764441_318_219.jpg

ஜெஜெ, 'டிவி'க்கு, 'அப்லிங்க்' வசதிகளை ஏற்படுத்தியதிலும், கருவிகளை வாடகைக்கு எடுத்தல் மற்றும் வெளிநாடுகளில், சட்ட விரோதமாக பணம் முதலீடு செய்ததிலும், அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக, சசிகலா, அவரது அக்கா மகன்கள் தினகரன் மற்றும் பாஸ்கரன் மீது1990 ல், அமலாக்கப்பிரிவு வழக்குகளை தொடர்ந்தது.

இந்த வழக்குகள், சென்னை பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் - 1 மற்றும், 2ல் நடந்து வருகிறது. இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில், தினகரன், திகார் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன், அன்னிய செலாவணி மோசடி வழக்கில், மாஜிஸ்திரேட், மலர்மதி முன் ஆஜரானார்.

அப்போது, குற்றச்சாட்டுகள் பதிவு

செய்யப்பட்டன. இதேபோன்று, மற்றொரு வழக்கில், அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டி உள்ளது.சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மீதும், மூன்று வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டும். இதற்காக, அவர் நேரில் ஆஜராக வேண்டும் என, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் - 1, மாஜிஸ்திரேட்,ஜாகீர் உசேன் உத்தரவிட்டு இருந்தார்.

சில தினங்களுக்கு முன், இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, சசிகலா சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் குமார், 'பெங்களூரு சிறையில் உள்ள, சசிகலாவுக்கு முதுகுவலி உள்ளது; அவரால் நீண்ட துாரம் பயணிக்க இயலாது. 'அவர், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும்' என, கோரினார்.

இந்த வழக்குகள், நேற்று விசாரணைக்கு வந்தபோது, சசிகலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'சசிகலா, வீடியோ கான்பரன்சிங் வாயிலாக, ஆஜராக அனுமதிக்க வேண்டும்' என, மனு அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட, மாஜிஸ்திரேட், ஜாகீர் உசேன் பிறப்பித்த உத்தரவு:

* பெங்களூரு சிறையில் உள்ள, சசிகலா, 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக ஆஜராகும் போது, அவர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய, எந்த மொழியை தேர்வுசெய்துள்ளார் என, இரு வாரத்திற் குள், தெரிவிக்க வேண்டும்
* 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக குற்றச்சாட்டு கள் பதிவு செய்யப்பட்ட பின், 'திருப்தி இல்லை' என, கூறக்கூடாது
* 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக ஆஜராவது பற்றி, பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகள்

 

மற்றும் அம்மாநில உள்துறை செயலர் அனுமதி அளித்ததற்கான சான்றிதழ்களை தாக் கல் செய்ய வேண்டும்; ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு, காலத்தை வீணடிக்க கூடாது
* இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை, மே 18க்கு தள்ளிவைக் கப்படுகிறது. அன்று, சசிகலா, 'வீடியோ கான்பரன்சிங்'கில் ஆஜரா கும் தேதி இறுதி செய்யப்படும்.இவ்வாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
 

பாஸ்கரன் நேரில் ஆஜர்


அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர் பாக, மாஜிஸ்திரேட், ஜாகீர் உசேன் முன், பாஸ்கரன் நேற்று, நேரில் ஆஜரானார். அப்போது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், அவர் குற்றச்சாட்டு களை மறுத்தார். மேலும், அரசு தரப்பு சாட்சி களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரினார். இந்த வழக்கு விசாரணை, மே 10க்கு தள்ளி வைக்கப் பட்டது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1764441

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:
வீடியோ கான்பரன்சிங்கில்
ஆஜராக சசிக்கு அனுமதி

இனியென்ன....செல்லம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியிலை வரும்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.