Jump to content

கோயில்களில் என்ன நடக்கிறது?


Recommended Posts

கோப்பு படம்
கோப்பு படம்
 
 

திரிபுரா சென்றிருந்தபோது, அகர்தலாவிலுள்ள ‘சதுர்தசா தேவதா - 14 தேவதைகள் - கோயிலுக்குச் சென்றிருந்தேன். மன்னர் கிருஷ்ண மாணிக்க தேவ வர்மா காலத்தில் கட்டப்பட்ட கோயிலான இது, திரிபுராவின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று. நண்பர் வீ.பா.கணேசனுடன் உள்ளூர் நண்பர் அதுல் பானிக் உடன் வந்திருந்தார்.

நாங்கள் சென்றிருந்த நாள் அந்த நேரம் ஆச்சரியமாகக் கூட்டம் குறைவு என்று சொல்லிக்கொண்டே கோயிலினுள் அழைத்துச் சென்றார் பானிக். எனக்கு அதைக் காட்டிலும் பெரிய ஆச்சரியம் வேறொன்று அங்கு காத்திருந்தது. கடவுளின் சந்நிதிக்கு முன்னே உட்கார்ந்து சாவகாசமாக சிகரெட் குடித்துக்கொண்டிருந்தார் புரோகிதர். எங்களைப் பார்த்ததும் “இன்னும் நாலு இழுப்புதான்; முடித்துவிட்டு வந்துவிடலாமா?’’ என்று பானிக்கிடம் கேட்டார். “ஒன்றும் அவசரம் இல்லை, நாங்கள் காத்திருக்கிறோம்’’ என்றார் பானிக். அப்புறம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, புரோகிதர் சிகரெட்டைப் புகையவிட்டபடியே பூஜைக்கு வந்தார். பூஜையை முடித்தார். பிரசாதம் கொடுத்தார். நானும் கணேசனும் எங்கிருந்து வருகிறோம் என்று விசாரித்துவிட்டு, கை குலுக்கினார். நான் அவரிடம் சிகரெட்டைக் காட்டிச் சொன்னேன், “இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.” அவர் விசேஷமாக எதையும் விளக்க முற்படவில்லை, “இதிலென்ன ஆச்சரியம்! கடவுள் வேறு, நாம் வேறா?” - இப்படிச் சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு அடுத்த வேலையைப் பார்க்கப் புறப்பட்டார்.

பின்னர், பானிக் என்னிடம் சொன்னார், “இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை, நாம் எதையெல்லாம் சாப்பிடுகிறோமோ, அதையெல்லாம் கடவுளுக்குப் படைக்கிறோம். அதேபோல கடவுளுக்குப் படைப்பதையெல்லாம் சாப்பிடவும் செய்கிறோம். அவருக்கு சிகரெட் பிடிக்கிறது, அதையே படைத்தாலும்கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை!”

எனக்கு அஸாம் பயணத்தின்போது, காமாக்யா கோயிலுக்குச் சென்று வந்த ஞாபகம் வந்தது. குவாஹாட்டியின் நீலாஞ்சல் மலைக்குன்றுகள் மேல் அமைக்கப்பட்டிருக்கும் காமாக்யா கோயில் மிக முக்கியமான தாந்த்ரீக வழிபாட்டு மையம். மந்திர, தந்திர நிலம். அந்தி சாயும் வேளையில் அங்கு சென்றிருந்தேன். நாளெல்லாம் பலி கொடுக்கப்படும் தளம் என்பதால், தரை நெடுகிலும் ரத்தம். கவுச்சி வாடை காற்றை நிறைத்திருந்தது. கோயில் படிக்கட்டுகளில் மிரட்டும் தாடியோடு உட்கார்ந்திருந்தவர்களில் ஏராளமான தாந்த்ரீகர்களும் அடக்கம் என்பதை காரோட்டி வந்த ராஜ் சொன்னார். யாரேனும் ஒரு தாந்த்ரீகரைச் சந்தித்துவிடுவது என்று பிரயத்தனப்பட்டு, கடைசியாக ஒரு சாமியைச் சந்தித்தோம்.

அஸாமில் தாந்த்ரீகத்தின் செல்வாக்கைத் தெரிந்துகொண்ட அந்தத் தருணம், இன்னொரு பெரிய புரிதலையும் தந்தது. கச்சார் மன்னர்களும் தாய்வழிச் சமூகமான காரோ பழங்குடிகளும் இந்தக் கோயிலை எவ்வாறு கையாண்டார்கள், எல்லாவற்றையும் குறியீடாகப் பார்க்கும் நுட்பமான தாந்த்ரீக மரபு புத்தத் துறவிகள் வழி எப்படி நாடெங்கிலும் அங்கிருந்து பரவியது, பல நூற்றாண்டு ஆதிகுடிகள் பாரம்பரியம் இன்று நவீன காலத்தில் எப்படி மாறிவந்திருக்கிறது என்று அவர் முழுமையாகச் சொல்லி முடித்தபோது, கடைசியாக ஒரு வாசகத்தைச் சொன்னார்: “பன்றி கோயிலாக இருந்தது, ஆட்டு கோயிலாக இருக்கிறது!”

எனக்கு இது புரியவில்லை. பின்னர் சொல்கிறேன் என்பதுபோல சைகை செய்த ராஜ், கோயிலிலிருந்து விடுதிக்குத் திரும்புகையில் விவரித்தார். “சாமி என்ன சொன்னார் என்றால், ‘முன்பு பழங்குடிகள் பன்றிகளைப் பலியிடும் கோயிலாக இது இருந்தது, இன்று எல்லோரும் ஆடுகளைப் பலியிடும் கோயிலாக மாறிவிட்டது’ என்று சொன்னார். இதில் ஒரு குறியீடு உண்டு. ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான கோயில் இது. காமாக்யா அன்றிருந்த அதே இடத்தில் இன்றும் இருக்கிறாள். நம்முடைய முன்னோர் வழிபட்ட அதே இடத்தில் நாமும் நின்று வழிபடுகிறோம். ஆனால், இன்றைய கோயிலின் கலாச்சாரம் ஆயிரம் வருஷ கலாச்சாரம் அல்ல. இது பொதுமயமாக்கப்பட்ட கலாச்சாரம். ஆனால், நாம் நமக்குத் தென்படும் கலாச்சாரமே உண்மையெனக் கருதி, அதைப் பாதுகாப்பதாகக் கருதிக்கொண்டு, உண்மையான கலாச்சாரத்தை அழிக்க முற்படுகிறோம்!’’

நீலாஞ்சல் மலையடிவாரத்தில் கார் இறங்கியபோது சாமி சொன்ன குறியீட்டின் இன்னொரு அர்த்தமும் எனக்குப் புரிபடலாயிற்று. காமாக்யா கோயிலுக்குச் சொல்லப்பட்ட நீதி இப்போது இந்து மதத்துக்கு என்றாயிற்று!

இந்துத்துவம் இன்று நடத்திக்கொண்டிருக்கும் முக்கியமான போர் இஸ்லாமுக்கோ, கிறிஸ்தவத்துக்கோ எதிரானது அல்ல; மாறாக அது இந்து மதத்தின் மீதானது. நாடு முழுக்க ராமனுக்கும் தர்மனுக்கும் கோயில் உள்ள இதே நாட்டில்தான் ராவணனுக்கும் துரியோதனுக்கும் கோயில்கள் இருக்கின்றன (கதாநாயகனுக்கும் கோயில், வில்லனுக்கும் கோயில் கதாநாயகனையும் வழிபடலாம், வில்லனையும் வழிபடலாம்). மத்திய பிரதேசத்தில் ராவண்கிராம் என்று ஒரு ஊரே உண்டு. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தப் பன்மைத்துவ மரபு நீடிக்கும்? தெரியாது!

நாடு முழுக்க இன்று கோயில்களில் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் கலாச்சார மாற்றங்கள் இன்னும் பொதுத்தளத்தில் உரிய கவனத்தைப் பெறவில்லை. கும்பகோணம் கோயில்களின் நகரம். நகரிலும் நகரைச் சுற்றிலும் கோயில்கள் உறைந்து கிடக்கும் ஊர் அது. பல நூற்றாண்டுகள் பழமையான கோயில்களே பல சீந்துவாரின்றிக் கிடக்க, புதிய கோயில்களுக்கு அங்கு எந்தத் தேவையும் இல்லை. வடக்கத்தி பாணி கோயில் கட்டுமானங்கள் அடுத்தடுத்து இப்போது அங்கு புதிது புதிதாக முளைக்கின்றன. தமிழகம் மட்டும் அல்ல; நாடெங்கிலும் வெவ்வேறு ஊர்களுக்குச் செல்ல நேரும்போது அங்கெல்லாமும் இப்படிப் பார்க்கிறேன். எல்லாம் கச்சிதமாக கார்ப்பரேட் தன்மையுடன் நடக்கும் இந்தப் புதிய கோயில்களில் முன்னெடுக்கப்படும் கலாச்சாரச் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஏனைய கோயில்களுக்கும் பரவுகின்றன. முந்தைய கலாச்சாரம் - நாட்டார் வழக்காறு, பன்மைத்துவம் - அழிகிறது. பார்க்கப் பொலிவானதாகவும் தூய்மையானதாகவும் மேலோட்டத்தில் சமத்துவத்தைப் பேணுவதாகவும் தெரியும் புதிய கலாச்சாரம் - அதன் உள்ளடக்கத்தில் ஒற்றைத் தன்மையுடன் - ஏனைய கோயில்களுக்கும் பரவுகிறது.

பல ஆண்டுகளாக நான் அறிந்த சிவன் கோயிலுக்கு நெடுநாளைக்குப் பின் சமீபத்தில் சென்றபோது ஒரு அம்மா சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார், “ஒரு பாரதப் பெண்ணுக்கான பண்பாட்டு லட்சணங்கள் என்னவென்றால்...”

இந்த வார்த்தைகள் யாருடையவை?

கோயில்கள் மட்டும் அல்ல; மசூதிகளின் அடையாளங்களும் வேகமாக மாறுகின்றன. இந்த மண்ணோடு இணக்கமான பழைய பாணி பள்ளிவாசல்களுக்கு மாற்றாகத் தூய்மைவாதத்தைப் பேணும் புதிய பள்ளிவாசல்கள் பிரத்யேகமாகவே உருவாக்கப்படுகின்றன. சவுதி பாணி வஹாபிய கலாச்சாரம். தஞ்சாவூரில் ‘தவ்ஹீது பள்ளிவாசல் செல்லும் வழி’ என்று ஆரம்பத்தில் பெயர்ப் பதாகை வைக்கப்பட்ட இடத்தில், அடுத்த சில நாட்களிலேயே ‘தவ்ஹீது மார்கஸ் செல்லும் வழி’ என்று அது மாற்றப்பட்டதை எழுத்தாளரும் நண்பருமான கீரனூர் ஜாஹீர் ராஜா கூப்பிட்டுச் சொன்னார்.

ஒருகாலத்தில் நாச்சியார், நைனார், முத்துக்கனி, செல்லம்மாள், ராசாத்தி என்றெல்லாம் பெயரிட்டு அழைத்த தமிழ் முஸ்லிம் சமூகத்தை அங்குள்ள அடிப்படைவாதிகள் இன்றைக்குப் பள்ளிவாசல் என்றுகூடத் தமிழில் எழுதத் தயங்கும் அளவுக்கு உருமாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் ஒப்பீட்டளவில் புராட்டஸ்டண்டு களைக் காட்டிலும் நெகிழ்வுத்தன்மை மிக்கவர் களான கத்தோலிக்கர்களின் முந்தைய கலாச் சாரத்தின் மீது அடி விழுந்து கொண்டிருக்கிறது. புராட்டஸ்டண்டுகளை நெகிழ்வுத்தன்மை மிக்கவர் கள் என்று சொல்லும் அளவுக்குத் தீவிரப் போக்கை நோக்கி கிறிஸ்தவர்களைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் பெந்தகொஸ்தேக்கள்.

எல்லோருமே அடிப்படையில் ஏதோ ஒருவகையில் தூய்மைவாதத்தை நோக்கி மக்களை வேகவேகமாகத் தள்ளிக்கொண் டிருக்கிறார்கள். தூய்மைவாதம் எங்கே இட்டுச் செல்லும்? ஒற்றைக் கலாச்சாரத்துக்கு இட்டுச் செல்லும். ஒற்றைக் கலாச்சாரம் எங்கே இட்டுச் செல்லும்? பன்மைத்துவத்தின் மீதான வெறுப்புக்கு இட்டுச் செல்லும். வெறுப்பு எங்கே இட்டுச் செல்லும்? வெறுப்பைக் கக்குபவர்களையே தங்கள் பிரதிநிதி களாக்க இட்டுச் செல்லும். தாராளர்கள் வழிபாட் டிடங்களுக்கு வெளியே நின்று மதச்சார்பின்மை அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்; அரசியல் அறுவடைக்கான கலாச்சாரச் சாகுபடியோ உள்ளே தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது!

- சமஸ், தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/opinion/columns/கோயில்களில்-என்ன-நடக்கிறது/article9677589.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Athavan CH said:

நாம் எதையெல்லாம் சாப்பிடுகிறோமோ, அதையெல்லாம் கடவுளுக்குப் படைக்கிறோம். அதேபோல கடவுளுக்குப் படைப்பதையெல்லாம் சாப்பிடவும் செய்கிறோம். அவருக்கு சிகரெட் பிடிக்கிறது, அதையே படைத்தாலும்கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை!”

எனக்கு உந்த வசனம் பிடிச்சிருக்கு....:grin:

வாற வெள்ளிக்கிழமை சிவாஸ் போத்திலோடை பிள்ளையார் கோயில் வாசல்லை போய் இறங்கப்போறன்....

நோ அர்ச்சனைத்தட்டு.....

நோ வாழைப்பழம்.....

நோ வெத்திலை பாக்கு...

Link to comment
Share on other sites

47 minutes ago, குமாரசாமி said:

எனக்கு உந்த வசனம் பிடிச்சிருக்கு....:grin:

வாற வெள்ளிக்கிழமை சிவாஸ் போத்திலோடை பிள்ளையார் கோயில் வாசல்லை போய் இறங்கப்போறன்....

நோ அர்ச்சனைத்தட்டு.....

நோ வாழைப்பழம்.....

நோ வெத்திலை பாக்கு...

கரிபியன் தீவுகளிலுள்ள சில சைவக் கோயில்களில் சாராயம் படைக்கிறார்கள். ஒரு கோயிலின் நுளைவாயில் நின்ற ஒருவர் உள்ளே சப்பாத்துடன் வரக் கூடாது, மச்சம் சாப்பிட்டவர்கள் கோயில் மண்டபத்துக்கு வெளியே நிற்க வேண்டும் என்றெல்லாம் கெடுபிடி செய்தார். உள்ளே சென்று பார்த்தபோது மூலஸ்தானம் சாராயப் போத்தல்களால் நிறைந்து காணப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, இணையவன் said:

 உள்ளே சென்று பார்த்தபோது மூலஸ்தானம் சாராயப் போத்தல்களால் நிறைந்து காணப்பட்டது.

அவர் தண்ணிச்சாமி....அந்த தண்ணிச்சாமிக்கு அரோ...

1 hour ago, குமாரசாமி said:

எனக்கு உந்த வசனம் பிடிச்சிருக்கு....:grin:

வாற வெள்ளிக்கிழமை சிவாஸ் போத்திலோடை பிள்ளையார் கோயில் வாசல்லை போய் இறங்கப்போறன்....

நோ அர்ச்சனைத்தட்டு.....

நோ வாழைப்பழம்.....

நோ வெத்திலை பாக்கு...

நோ நோனாமார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

அவர் தண்ணிச்சாமி....அந்த தண்ணிச்சாமிக்கு அரோ...

நோ நோனாமார்..

சும்மா நேரகாலம் தெரியாமல் பகிடி விட்டுக்கொண்டு....:grin:
அவையள் இல்லாமல் என்னெண்டு பூஜை களைகட்டும்? tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

சும்மா நேரகாலம் தெரியாமல் பகிடி விட்டுக்கொண்டு....:grin:
அவையள் இல்லாமல் என்னெண்டு பூஜை களைகட்டும்? tw_blush:

பூஜை கலைகட்டட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவா உங்கள் இளமை கால‌த்தில் சொப்பன சுந்தரியாக‌ திகழ்ந்தவளா புத்தன்?

Link to comment
Share on other sites

4 hours ago, Athavan CH said:

எல்லோருமே அடிப்படையில் ஏதோ ஒருவகையில் தூய்மைவாதத்தை நோக்கி மக்களை வேகவேகமாகத் தள்ளிக்கொண் டிருக்கிறார்கள். தூய்மைவாதம் எங்கே இட்டுச் செல்லும்? ஒற்றைக் கலாச்சாரத்துக்கு இட்டுச் செல்லும். ஒற்றைக் கலாச்சாரம் எங்கே இட்டுச் செல்லும்? பன்மைத்துவத்தின் மீதான வெறுப்புக்கு இட்டுச் செல்லும். வெறுப்பு எங்கே இட்டுச் செல்லும்? வெறுப்பைக் கக்குபவர்களையே தங்கள் பிரதிநிதிகளாக்க இட்டுச் செல்லும்.

எனக்கு இந்த விடயம் ரொம்ப பிடித்திருக்கு + உண்மையும்கூட 

Link to comment
Share on other sites

இது இந்தியாவில் மட்டுமல்ல எங்கள் ஊர்களிலும் வேகமாக நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது.
20 வருடங்களுக்கு முன்னர் வரைக்கும் கோவில்களில் இருந்த வழிபாட்டு முறைகள், சிலைகள், கோவில்களின் உள் தோற்றம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வட இந்திய முறையில் மாறிக் கொண்டு இருக்கின்றன. தமிழகத்தில் இருந்து பார்ப்பன சொற்பொழிவாளர்களின் உரைகள் / கலாட்சேபங்கள் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் நடக்கின்றன. 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.