Jump to content

“ஜார்ஜ் தூக்கி அடிக்கப்பட்ட மர்மம்... கூவத்தூர் கதை... ஜெயித்த சத்தியமூர்த்தி... தோற்ற தாமரைக்கண்ணன்!” #NewsChat


Recommended Posts

“ஜார்ஜ் தூக்கி அடிக்கப்பட்ட மர்மம்... கூவத்தூர் கதை... ஜெயித்த சத்தியமூர்த்தி... தோற்ற தாமரைக்கண்ணன்!” #NewsChat

 
 

ஜார்ஜ்

ஜார்ஜ் தூக்கி அடிக்கப்பட்ட மர்மம்!

* ஆர்.கே.நகர் தேர்தல் சமயத்தில் சென்னைப் போலீஸ் கமிஷனர் மற்றும் டி.ஜி.பி அந்தஸ்தில் இருந்த ஜார்ஜ், வட சென்னை கூடுதல் கமிஷனர் சாரங்கன், வட சென்னை இணை கமிஷனர் நிர்மல் குமார் ஜோஷி, புதுவண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஜெயக்குமார் உள்ளிட்ட 22 அதிகாரிகள் மீது எதிர்க்கட்சியினர் புகார் கிளப்பினர். அதையடுத்து, அவர்களைக் கூண்டோடு மாற்றியது தேர்தல் கமிஷன். கடந்த இரண்டு வாரங்களாகக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் நின்றுபோன மறுநாளே இவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கியிருக்கவேண்டும். ஆனால், எடப்பாடி அரசு அவர்களைக் கண்டுகொள்ளவேயில்லை. இந்த நிலையில், தமிழக அளவில் போலீஸ் அதிகாரிகள் மாறுதல் லிஸ்ட் தற்போது வெளியாகியிருக்கிறது. இதில், ஜார்ஜை டம்மியான தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநராக நியமித்துள்ளனர். அவர் ஓய்வுபெற நான்கு மாதங்களே உள்ளன. தமிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. பதவியைப் பிடிக்க தீவிர முயற்சி செய்துவந்தார். இந்தப் பதவியில் அமர்ந்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பதவி நீடிப்பு பெறலாம் என்பது அவரின் திட்டம்.

இதற்குமுன்பு, ராமானுஜம் மற்றும் அசோக்குமார் அந்தப் பாணியில் பதவிபெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஜார்ஜுக்கு இனி அதற்கு சான்ஸே இல்லை. சென்னை மாநகர கமிஷனராக ஜார்ஜ் இருந்தபோது, அவருக்கும் தற்போதைய சட்டம் - ஒழுங்குப் பிரிவு (பொறுப்பு) டி.ஜி.பி-யான ராஜேந்திரனுக்கும் பனிப்போர் நிலவியது. இவரும்கூட அடுத்த மாதம் ஓய்வுபெறுகிறார். தற்போதுள்ள பொறுப்பு பதவியில் அப்படியே ரெகுலர் ஆக இரண்டு ஆண்டுகள் தொடர, முயற்சி செயது வருகிறார். ஜார்ஜுக்கும் ராஜேந்திரனுக்கும் நடந்துவந்த இந்த அதிகாரப் போட்டியில் ஜார்ஜுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், ஓய்வு பெறுகிற நிலையில் உள்ள அதிகாரிகள் யாருக்கும் இரண்டு ஆண்டுகள் பதவி நீடிப்பு வழங்கக்கூடாது என்று மத்திய அரசு கண்டிப்பாகச் சொல்லியிருப்பதால் ராஜேந்திரனுக்கும் சந்தேகம்தான். இருந்தாலும், முதல்வர் எடப்பாடி மூலம் மத்திய அரசை அணுகி மீண்டும் பதவியைப் பெற்றுவிடலாம் என்பது ராஜேந்திரனின் எதிர்பார்ப்பு.

செந்தாமரைக்கண்ணனுக்கு செக்!

* எடப்பாடி கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள் 122 பேரைக் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கவைத்திருந்தபோது, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அவர் சொன்னபடி, அங்கிருந்த எம்.எல்.ஏ-க்களுக்கு போலீஸ் டார்ச்சர் கொடுத்ததாகக் குற்றம்சாட்டினர். அந்தநேரத்தில், கூவத்தூரை உள்ளடக்கிய வடக்கு மண்டல ஐ.ஜி-யாக இருந்தவர்தான் செந்தாமரைக்கண்ணன். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி-யாக இருந்தவர் முத்தரசி. இந்த இருவரையும் அமைச்சர் விஜயபாஸ்கர் கடுமையான வார்த்தைகளால் திட்டியது பற்றியெல்லாம் எடப்பாடியாரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் சொல்லியும் அவர் கேட்கவில்லை. அமைச்சர்கள் சொன்னதைக்கேட்டு, இரண்டு போலீஸ் அதிகாரிகளையும் எடப்பாடியார் முதல்வர் பதவியில் அமர்ந்ததும் மாற்றி உத்தரவு போட்டார். இதுநாள் வரை அவர்களுக்குப் பதவி எதுவும் வழங்காமல் விட்டிருந்தார். தற்போது செந்தாமரைக்கண்ணனை டம்மியான தொழில்நுட்பப் பிரிவு ஐ.ஜி-யாக நியமித்துள்ளனர். மாவட்ட எஸ்.பி பதவியில் இருந்த முத்தரசியை டி.ஜி.பி ஆபீஸில் நிர்வாகப் பிரிவில் ஃபைல் பார்க்கும் வேலையில் உட்காரவைத்துவிட்டனர்.

சசிகலா

ஜெயித்த சத்தியமூர்த்தி... தோற்ற தாமரைக்கண்ணன்!

சென்னை மாநகர போலீஸில் பவர்ஃபுல் பதவி - உளவுத்துறை ஐ.ஜி. அந்தப் பதவியில் இருந்தவர் தாமரைக்கண்ணன். 'சசிகலா, தினகரனின் உறவுக்காரர் என்பதால், கொங்கு மண்டலத்து கவுண்டர் சமூகப் பிரமுகர்கள், அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடியாரிடம் கோள்மூட்டி மாற்றிவிட்டனர்' என்றே போலீஸ் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். உளவுத்துறையின் ஐ.ஜி-யாக இருக்கும் சத்தியமூர்த்தி, கவுண்டர் சமூகத்தவர். அவர் கன்ட்ரோலில் சென்னை மாநகர போலீஸின் உளவுப்பிரிவு வரவேண்டும் என்பதற்காகவே, இந்த மாறுதல் போட்டிருக்கிறார்கள். சத்தியமூர்த்தியைப் போலவே, ஐ.ஜி. அந்தஸ்தில் இருப்பவர் தாமரைக்கண்ணன். எனவே, சத்தியமூர்த்தியால் தாமரைக்கண்ணனிடம் ரகசிய உத்தரவுகளைப் பிறப்பிக்கமுடியாது. எனவே, தாமரைக்கண்ணனை மாற்றிவிட்டு, எஸ்.பி அந்தஸ்தில் துணை கமிஷனர் பதவியில் திருநாவுக்கரசு என்பவரைப் புதிதாக நியமித்திருக்கிறார்கள். உளவுத்துறையைப் பொறுத்தவரை, இனி திருநாவுக்கரசு, சத்தியமூர்த்தியின் உத்தரவுகளைச் செயல்படுத்துவார். 

சென்னை போலீஸின் உளவுப்பிரிவின் ஐ.ஜி. பதவியை எஸ்.பி. லெவலுக்குப் பதவி இறக்கம் செய்துள்ளது மிகப்பெரிய தவறு. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசின் பேட்ஜை சேர்ந்த விமலா என்பவர் ஏற்கெனவே மாநகர உளவுப்பிரிவு துணை கமிஷனராக இருக்கிறார். இந்த இருவருக்கும் உளவுப்பணியில் என்ன வேலை என்பதை இனிமேல்தான் பிரித்துக்கொடுக்கப் போகிறார்களாம். 

"ஏற்கெனவே சென்னை போலீஸ், மாநகர போலீஸாக இருந்தது. புறநகர் ஏரியாக்களைக் கூடுதலாகச் சேர்த்து பெருநகர போலீஸாக மாற்றினர். அந்த நேரத்தில், உளவுத்துறைக்கு டி.ஐ.ஜி. அந்தஸ்தில் இணை கமிஷனர் பேனரில் அதிகாரியை நியமித்தார்கள். காரணம், 134 காவல் நிலையங்கள், 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களைக் கொண்டது பெருநகர போலீஸ் ஏரியா. இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு உளவுப்பிரிவுக்கு உண்டு. இந்த நிலையில், ''தற்போது நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு, உளவுப்பிரிவுக்குப் புதியவர். அவரால், பெருநகர சென்னை போலீஸ் ஏரியாவை எப்படிக் கண்காணிக்க முடியும்?" என்று சந்தேகம் எழுப்புகிறார்கள் மாநகர போலீஸ் அதிகாரிகள். 

* கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காலியாக இருந்தது மாநில உளவுப்பிரிவின் டி.ஜ.ஜி பதவி. தற்போது அந்தப் பதவியில் நிர்மல் குமார் ஜோஷி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரும் உளவுப்பிரிவுக்குப் புதியவர். இவருக்கு டி.ஜி.பி. ஆபீஸில் அறையே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அட்வைஸர் பதவியில் இருந்த ராமானுஜம் அமர்ந்திருந்த ஓர் அறை தற்போது காலியாக உள்ளது. அதேபோல், உளவுத்துறையின் கூடுதல் டி.ஜி.பி பதவியில் யாரும் நியமிக்கப்படாததால், அந்த அறையும் காலியாக இருக்கிறது. இந்த இரண்டு அறைகளில் ஒன்றை நிர்மல் குமார் ஜோஷிக்கு ஒதுக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், டி.ஜ.ஜி பதவியில் இருப்பவருக்கு உயர் அதிகாரிகளின் அறைகளை வழங்கமாட்டார்கள். எனவே, கூடுதல் டி.ஜி.பி அறைக்குத் தற்போதைய ஐ.ஜி சத்தியமூர்த்தி மாறுவார். இவர் அமர்ந்திருக்கும் அறையை நிர்மல் குமார் ஜோஷிக்கு ஒதுக்குவார்கள் என்று தெரிகிறது. 

யார் இந்த திருநாவுக்கரசு?

 

கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் கிருஷ்ணகிரி எஸ்.பி-யாக இருந்தவர் திருநாவுக்கரசு. அ.தி.மு.க சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கவேண்டிய பலகோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்துவிட்டார். தற்போது எடப்பாடி கோஷ்டியில் உள்ள தம்பிதுரை, அந்தச் சமயத்தில் திருநாவுக்கரசிடம் பிரஸர் கொடுத்தும் மறுத்துவிட்டார். அதனால், ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்றதும் அவரிடம் சொல்லி திருநாவுக்கரசை சென்னை டி.ஜி.பி ஆபீஸில் டம்மி பதவிக்குத் தூக்கியடித்தார்கள். அவருக்குத் தற்போது சென்னை மாநகர போலீஸின் உளவுப்பிரிவு துணை கமிஷனர் பதவி கிடைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வருகிற சூழ்நிலையில், திருநாவுக்கரசு நியமனம் தம்பிதுரைக்கு இந்த மாறுதல் எரிச்சலை உண்டுபண்ணியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/88254-tamil-nadu-today-happening-in-and-around-tn-newschat.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.