Jump to content

கனடாவிலிருந்து யாழில் தொழிற்சாலை அமைத்த ஒருவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தொழிலதிபர் எமது மக்களுக்கு எது அவசியம் என்பதை அழகாக சொல்லியுளார்.. சந்தோசமாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுங்கள், பணத்தை அனுப்பாதீர்கள்.... உண்மையான வார்த்தை......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

தொழில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுங்கள், பணத்தை அனுப்பாதீர்கள்.... உண்மையான வார்த்தை......!  tw_blush:

விடியப்பறம் மிஸ்கோல் போட்டு தட்டியெழுப்பி  மோட்டச்சைக்கிள் வாங்கிறதுக்கும்....பல்லுக்கு கிழிப்பு போடுறதுக்கும் காசுவேணுமெண்டு திருப்பள்ளி எழுச்சி பாடுற சனத்துக்கு என்ன செய்யலாம் சுவியர்? :grin:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இதை தான்  நான் கன காலம் சொல்லி வருகிறேன் நிட்சயம் குடும்ப பெண்களுக்கான நல்ல தொழில் இன்னும் பல ர் முன் வரவேண்டும்  இதே மாதிரி சிறிய  தொழில் சாலைகள் அமைக்க 

Link to comment
Share on other sites

  • 7 months later...

"உங்கள் ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினையுங்கள். நான் எனது ஊர் உடுப்பிட்டிக்குச் செய்வது போல நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஊருக்குச் செய்யுங்கள். தமிழர் தாயகங்கள் தன்னிறைவு அடையும்" என்று சொன்ன வைரமுத்து சொர்னலிங்கம் என்கின்ற உடுப்பிட்டியின் மண்ணின் மைந்தனுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். இப்படியான முன்னெடுப்புகளே இன்று எமக்குத் தேவை. இருப்பினும் தம்பியன் சில விடயங்களை ஐயாவுக்கு நினைவுபடுத்த வேண்டும். போராட்ட காலத்தில் புலம்பெயர்ந்து தமது பொருண்மியத்தைச் சிறப்புற வளப்படுத்தியோரில் பெருமளவானோர் யாழ் மாவட்டத்தவர். 1990 களில் தொடர்ச்சியான இனப்படுகொலைகளைச் சந்தித்து போராட்டக் களங்களில் தம்மை ஆகுதியாக்கி போராட்டப் பங்களிப்பில் பெரிதாய் நிற்கும் தென் தமிழீழத்தின் குக்கிராமங்களுக்கும் இதே அறிவுரையைச் சொல்லி விட முடியாது. தென் தமிழீழ மக்களுக்கும் வன்னி மக்களுக்கும் இப்படி அறிவுரை சொல்லேலாது..(நான் எனது ஊரிற்குச் செய்வது போல உங்கட உங்கட ஊரிற்குச் செய்யுங்க??) போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் தமிழீழ எல்லைக் கிராமங்களிலும் எங்களது பொருண்மியத் திட்டங்களைச் செய்ய வேண்டும். தற்சார்பை வளர்ப்பதுடன் சில பொருட்களில் மிகை உற்பத்தி செய்து வெளிநாட்டுச் சந்தைகளில் வணிகமாற்ற ஏற்பாடு செய்யும் வகையில் பொருண்மியத் திட்டங்களைச் செய்ய வேண்டும். தனி மரம் தோப்பாகாது. இது பற்றிச் சிந்தனைக் குழாங்கள் அமைத்து கட்டமைப்பு ரீதியில் வேலை செய்யப் பழகினாலே எமது தாயகத்திற்கானதாயிருக்கும். ஐயா போன்றவர்கள் இவற்றை உள்வாங்கி மேன்மேலும் சிறப்புற இனக் கடமையாற்ற வேண்டும்.

மீன்பிடிக்கக் கற்றுக் கொடுங்கள். மீனைப் பிடித்துக் கொடுக்காதீர்கள் என்பது மட்டும் எமது வலுவிழந்த நிலையில் போதுமானதல்ல. மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதோடு மீன் பிடிக்கும் படகு மற்றும் கருவினையும் கொடுங்கள். இல்லையென்றால் கிறீஸ் கம்பத்தில் ஏறச் சொல்லி கம்பெடுத்து அடிப்பது போன்றதே....வெறுங் கையால முழம் போடேல்லாது பாருங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/22/2018 at 3:07 AM, தம்பியன் said:

" போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் தமிழீழ எல்லைக் கிராமங்களிலும் எங்களது பொருண்மியத் திட்டங்களைச் செய்ய வேண்டும். தற்சார்பை வளர்ப்பதுடன் சில பொருட்களில் மிகை உற்பத்தி செய்து வெளிநாட்டுச் சந்தைகளில் வணிகமாற்ற ஏற்பாடு செய்யும் வகையில் பொருண்மியத் திட்டங்களைச் செய்ய வேண்டும். தனி மரம் தோப்பாகாது. இது பற்றிச் சிந்தனைக் குழாங்கள் அமைத்து கட்டமைப்பு ரீதியில் வேலை செய்யப் பழகினாலே எமது தாயகத்திற்கானதாயிருக்கும். ஐயா போன்றவர்கள் இவற்றை உள்வாங்கி மேன்மேலும் சிறப்புற இனக் கடமையாற்ற வேண்டும்.

மீன்பிடிக்கக் கற்றுக் கொடுங்கள். மீனைப் பிடித்துக் கொடுக்காதீர்கள் என்பது மட்டும் எமது வலுவிழந்த நிலையில் போதுமானதல்ல. மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதோடு மீன் பிடிக்கும் படகு மற்றும் கருவினையும் கொடுங்கள். இல்லையென்றால் கிறீஸ் கம்பத்தில் ஏறச் சொல்லி கம்பெடுத்து அடிப்பது போன்றதே....வெறுங் கையால முழம் போடேல்லாது பாருங்க

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 5/4/2017 at 3:42 AM, குமாரசாமி said:

விடியப்பறம் மிஸ்கோல் போட்டு தட்டியெழுப்பி  மோட்டச்சைக்கிள் வாங்கிறதுக்கும்....பல்லுக்கு கிழிப்பு போடுறதுக்கும் காசுவேணுமெண்டு திருப்பள்ளி எழுச்சி பாடுற சனத்துக்கு என்ன செய்யலாம் சுவியர்? :grin:

எதையும் சொந்தமாக உழைத்து வாங்கினால் தான் கவுரவம் என்று சொல்லிவிடுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2018 at 3:09 AM, போல் said:

எதையும் சொந்தமாக உழைத்து வாங்கினால் தான் கவுரவம் என்று சொல்லிவிடுங்கள்!

ஒரு உன்மை ஒன்றையும் சொல்ல வேண்டும் எவ்வளவு சம்பாதித்தாலும் செலவு என்பது அதிகமாக தான் இருக்கிறது இலங்கையில் உலக அளவில் ஏற்படும் பொருளாதார தளம்பலா என்று தெரியவில்லை தேங்காய் 100 ரூபா கிழக்கில்  உப்பு பை 50 ரூபா 

On 5/4/2017 at 3:42 AM, குமாரசாமி said:

விடியப்பறம் மிஸ்கோல் போட்டு தட்டியெழுப்பி  மோட்டச்சைக்கிள் வாங்கிறதுக்கும்....பல்லுக்கு கிழிப்பு போடுறதுக்கும் காசுவேணுமெண்டு திருப்பள்ளி எழுச்சி பாடுற சனத்துக்கு என்ன செய்யலாம் சுவியர்? :grin:

பணக்கார பிள்ளைகள் போல் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பணக்கார பிள்ளைகள் போல் இருக்கு 

100 ஈரோ அனுப்பினால் தெரிஞ்ச ஆள் எண்டுவினம்......
200 ஈரோ அனுப்பினால் கலோ எண்டுவினம்........
300 ஈரோ அனுப்பினால் சொந்தம் எண்டுவினம்........
400 ஈரோ அனுப்பினால் முறை சொல்லி கூப்பிடுவினம்......
500 ஈரோ அனுப்பினால் அன்புமழை பொழிவினம்.......
600 ஈரோவுக்கு மேலை அனுப்பினால் தெய்வத்துக்கு சமன் எண்டுவினம்..
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

100 ஈரோ அனுப்பினால் தெரிஞ்ச ஆள் எண்டுவினம்......
200 ஈரோ அனுப்பினால் கலோ எண்டுவினம்........
300 ஈரோ அனுப்பினால் சொந்தம் எண்டுவினம்........
400 ஈரோ அனுப்பினால் முறை சொல்லி கூப்பிடுவினம்......
500 ஈரோ அனுப்பினால் அன்புமழை பொழிவினம்.......
600 ஈரோவுக்கு மேலை அனுப்பினால் தெய்வத்துக்கு சமன் எண்டுவினம்..
 

காசுக்கான கூட்டம் போல் இவையள்  

Link to comment
Share on other sites

On 3/12/2018 at 6:51 PM, தனிக்காட்டு ராஜா said:

ஒரு உன்மை ஒன்றையும் சொல்ல வேண்டும் எவ்வளவு சம்பாதித்தாலும் செலவு என்பது அதிகமாக தான் இருக்கிறது இலங்கையில் உலக அளவில் ஏற்படும் பொருளாதார தளம்பலா என்று தெரியவில்லை தேங்காய் 100 ரூபா கிழக்கில்  உப்பு பை 50 ரூபா

மறுக்கவில்லை ராஜா!

இதற்கொரு நீண்டகால தீர்வாக நாம் வீட்டு தோட்டங்களை உருவாக்குவது நல்லதென நினைக்கிறேன்!

வீட்டில் 5-6 தென்னை, 2-3 முருங்கை, 1-2 எலுமிச்சை, 1-2 தோடை, 1 கறிவேப்பிலை, 2-3 பப்பாசி, 1-2 மாதுளை மரங்கள் போன்றவற்றையும்,  மற்றும் சில பச்சைமிளகாய், தக்காளி, அவரை, வல்லாரை, கத்தரி, வெண்டிக்காய், ..... போன்றவற்றையும், மற்றும் தூதுவளை, பசளி, கற்பூரவள்ளி, துளசி, இஞ்சி போன்றவற்றையும் பயிரிடுவது ஒன்றும் கடினமானது அல்ல.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/18/2018 at 8:17 PM, போல் said:

மறுக்கவில்லை ராஜா!

இதற்கொரு நீண்டகால தீர்வாக நாம் வீட்டு தோட்டங்களை உருவாக்குவது நல்லதென நினைக்கிறேன்!

வீட்டில் 5-6 தென்னை, 2-3 முருங்கை, 1-2 எலுமிச்சை, 1-2 தோடை, 1 கறிவேப்பிலை, 2-3 பப்பாசி, 1-2 மாதுளை மரங்கள் போன்றவற்றையும்,  மற்றும் சில பச்சைமிளகாய், தக்காளி, அவரை, வல்லாரை, கத்தரி, வெண்டிக்காய், ..... போன்றவற்றையும், மற்றும் தூதுவளை, பசளி, கற்பூரவள்ளி, துளசி, இஞ்சி போன்றவற்றையும் பயிரிடுவது ஒன்றும் கடினமானது அல்ல.   

ம் உன்மைதான் இருந்தாலும் எங்கள் ஊரில் நிலப்பற்றாக்குறை . நிலம்   இருக்கும் இடங்களில் பயிர்கள் செய்வது குறைவாக இருக்கிறது  இன்று நாங்கள் வளர்த்த அனைத்து தென்னை மரங்களிலும்  கடற்படை தேங்காய் பறிக்கிறது பல்லு குத்த கூட ஈர்க்கில் இல்லை எங்களுக்கு  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.