Jump to content

எங்கே இருக்கிறாய் கேத்தரின்? 


Recommended Posts

*****************மானசீகன்****************

 

 நான் முதன்முதலாக சர்ச்சுக்குப் போனது ஒரு காதல் விவகாரமாகத்தான்.என்னுடைய நண்பன் மணிகண்டன் ஒரு கிறிஸ்டியன் பெண்ணைக் காதலித்தான். அவள் பெயர் கேத்தரின். பேரழகி, தேவதை என்பதெல்லாம் அவளைப் பொறுத்தவரை குறைப்பிரசவ வார்த்தைகள்.  அவள் முகபாவனைகளும், உடலசைவும், உடைகளின் சரசரப்பும் யாரும் அறியாத  ஒரு மலரின் வாசனையை இந்த மண்ணில் பரப்பிக் கொண்டிருந்தன.. எல்லாவற்றையும் விட  அவள் அழகாகப் பாடுவாள். மைக் முன்பாக அவளைப் பார்க்கையில் , ஒரு நீர்வீழ்ச்சி காலத்தின் கட்டளையால் உறைந்து நிற்பதைப் போலிருக்கும். பெரும்பாலும் எஸ். ஜானகியின் பாடல்கள்.அவள் குரலில் எப்போதும்  ஒரு மென்சோகம் இழையோடும். எதிர்பாராத தருணங்களில்  அதுவே ஒரு சிறுத்தையாக உருமாறி நம்மைத் தாக்க வரும். அவள் பாடலைக் கேட்க நேர்கிற  எவருக்கும் கண்களைத் துடைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. படு கெத்தாக  இளையராஜாவையே கிண்டலடிக்கும் மிலிட்டரி ரிடர்ன் நவநீதன் அண்ணன் கூட ஒரு தடவை கண்கலங்கி விட்டு 'தாயோழி மக,  இவளக் கொல்லனும்டா'என்றார்.குளம் முழுவதும் சலனங்களைப் பரப்பி விட்டு அமைதியாக  அமிழும் கருங்கல்லைப் போல் அவள் எந்த முகபாவமும் காட்டாமல் அத்தனை கண்ணீரையும் கடந்து போவாள். 

 

மணிகண்டனுக்கு அப்பா இல்லை. அம்மாதான் எல்லாம் .அவன் வீட்டுக்கு நாங்கள் சென்ற போதெல்லாம் ஊட்டி விடப்படுகின்ற வாயுடனோ, மடியில் கிடந்து கதை பேசும் கோலத்துடனோதான் எங்களை வரவேற்றிருக்கிறான். அவனுக்கு நன்றாக சமைக்க வரும். ஒரு நாள் கோழிக்குழம்பு சமைத்து எடுத்து வந்திருந்தான். அந்த வாசத்தில் வர்கீஸ் வாத்தியாரே உள்ளே வந்து விட்டார். சற்றுக் கூச்சத்தோடு டிபன் பாக்ஸ் மூடியில் வாங்கிச் சாப்பிட்டு விட்டு 'கொள்ளாம்டே! எனக்க பொண்ணு மக்க கிடையாது பாத்துக்கோ. இல்லன்னா உன்ன வீட்டோட மருமனாக்கிடுவேன், கேட்டியா 'எச்சில் கையோடு அவன் தலை தடவிச் சென்றார். அவனுக்கு சமையல் தெரியாமல் இருந்திருந்தால்தான் அது ஆச்சர்யம்.நாங்கள் Nss கேம்ப் போயிருந்த போது அவன் போர்வைக்குப் பதிலாக  ஒரு சேலையைக் கொண்டு வந்திருந்தான். அம்மா சேலயாம். ரவுன்டஸ் வந்த பால்சாமி வாத்தியார் 'பால்குடி மறந்துட்டியா? இல்லையாடா? 'என்று சொல்ல  ஒரே சிரிப்பு. அவர் நகர்ந்தவுடன் மாரிச்சாமி அவன் காதில் போய் கிசுகிசுத்தான். 'மாப்ள,  இந்தாளு ஒரு காமக்கொடூரன்.நீ சேலைய போட்டு படுத்திருக்க, எதுக்கும் சூதானமா இரு '.அந்த  இரவில் பால்சாமி சார் தொந்தரவு செய்தாரோ இல்லையோ, அவனை அம்மாவின் நினைவுகள் தொந்தரவு செய்திருக்க வேண்டும். இடையில் எனக்கு விழிப்பு வந்து பார்த்த போது அவன் ஒரு போட்டாவை கையில் வைத்தபடி அமர்ந்திருந்தான். 

 

மணிகண்டனுக்குள் காதல் உருவான நிமிடத்தில், நான் பக்கத்தில்தான் இருந்தேன். நியாயமாகப் பார்த்தால் அது காதல் மலர்வதற்கு எவ்வித சாத்தியங்களுமற்ற ஓர் தருணம். ஒரு வாரத்திற்கு முன்புதான் மணிகண்டனின் அம்மா செத்துப் போயிருந்தார். சாதாரண தெருச்சண்டை கொஞ்சம் நீண்ட போது, யாரோ ஒருத்தி அவன் சித்தப்பாவோடு இணைத்துப் பேசியிருக்கிறாள்.அந்த வார்த்தை காதில் விழுந்த  அடுத்த நிமிடம் வாயைப் பொத்தி அழுதபடி உள்ளே ஓடியிருக்கிறார். கதவை உடைத்து எல்லோரும் உள்ளே போன போது நாக்கு வெளியே தள்ளியபடி வேறு யாரோவாகி தொங்கிக் கொண்டிருந்தாராம்.எல்லோரும் மணிகண்டனை பார்த்துக் கொண்டும், கட்டிக் கொண்டும் சற்று மிகையாகவே அழுதார்கள். அவன் மீண்டும், மீண்டும் ஒரே வார்த்தையை மந்திரம் போல் சொல்லிக் கொண்டிருந்தான். 'சொல்லாம போயிட்டியே சுமிம்மா 'என்பதை மட்டுமே அவன் சுடுகாட்டை விட்டு வந்த பிறகும் சொல்லிக் கொண்டிருந்தான். ஊரே அவனுக்காக பரிதாபப்பட்டு விட்டு நல்லபடியாய் சாப்பிட்டுத் தூங்கியது

 

ஒரு வாரம் கழித்து  வந்த போது,காலம் ஒரு மிஷினாக  உருமாறி சாறெடுத்துத் துப்பிய சக்கை போல  இருந்தான் .பெரும்பாலும் வெறித்த பார்வை, சில தலையாட்டல்கள். அவ்வளவுதான். அவன் மீண்டு வந்த மறுநாள் கல்லூரியில் inter college  meet. பேச்சுப் போட்டியில் எனக்கு முதல் பரிசு. பாட்டுப் போட்டியில் கேத்தரின் கடைசியாகத்தான் பாடினாள். 'உன்னை நானறிவேன், என்னையன்றி யாரறிவார் 'என்ற பல்லவிக்கு முன்னால் அவள் இழுத்த  ஹம்மிங்கிலேயே ஒட்டு மொத்தக் கூட்டமும் ஒரு நாய்க்குட்டியாகச் சுருண்டு அவள் காலடியில் படுத்து விட்டது. 'தேவனென்றால்

தேவனல்ல தரை மேல் உந்தன் ஜனனம் ' என்ற வரியில் அவள் பிரபஞ்சத்தையே தன் குரலில் வைத்துத் தூறிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் மணிகண்டனைப் பார்த்தேன். அடக்க முடியாமல் அவன் குமுறிக் கொண்டிருந்தான்.கேத்தரினை ,அவள் பாடலை அவன் இதுவரை பெரிதாகக் கண்டு கொண்டதில்லை.சில்லறைகளை மீதம் வைக்காமல் உதிர்க்கும் உண்டியலென  அவன் முதுகு குலுங்கிக் கொண்டிருந்தது. பாடல் முடிந்ததும் உறைந்து கிடந்த சபை நடுவே ஒரு பித்தனைப் போல் 'சுமிம்மா சுமிம்மா 'என்று புலம்பியபடி அவளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான். ஆசிரியர்கள் சிலரும் அவனை கவனிக்க  ஆரம்பித்தனர். விபரீதத்தை உணர்ந்து மேடை வரை சென்று விட்ட வனை கிட்டதட்ட  இழுத்து வந்தோம். 

 

மறுநாளே கேத்தரின் என்னைத் தேடி வந்தாள்.  எந்தத் தனித்திறனும் இல்லாமல் தன் அம்மாவின் மரணம் வழியாக மணிகண்டன் பிரபலமடைந்திருந்தான். நேற்றைய சம்பவத்தை யாரோ அவள் காதில் ஓதியிருக்க வேண்டும். மணியை விட  அவன் அம்மா குறித்தே அதிகம் விசாரித்தாள். 'நாளைக்குச் சாயங்காலம்  அவனை ஒங்க வீட்டு மொட்டை மாடிக்கு கூட்டிட்டு வந்துரு, எனக்கு.  அவன்ட்ட பேசனும் 'என்றாள். கேத்தரின் எனக்குப் பக்கத்து வீடு.இரண்டு வீட்டு மொட்டை மாடிகளும் நட்பு நாடுகளின் நேசத்தோடு கட்டப்பட்டிருந்தன.  அந்தச் சுவரைத் தாண்டுவதென்பது எந்த சாகசப் பட்டியலிலும் இடம் பிடிக்க முடியாத சிறு செயல் அவ்வளவே. இருந்தும், கேத்தரினை நான் மாடியில் பார்த்ததில்லை. எப்போதாவது போட்டிகளில் பார்த்தால் சிரிப்பாள். பக்கத்து வீட்டிலேயே ஒரு தேவதை இருந்தும் என் நாட்கள் கருப்பு, வெள்ளையாக நகர்ந்தது கண்டிப்பாக முன்ஜென்மப் பாவமாகவே இருக்கக் கூடும். 

 

அன்று மாலை வெள்ளை கவுனில் துடைத்து விட்ட நிலா போல் மேலேறி வந்தாள். மணிகண்டனை மன்றாடி அழைத்து வந்திருந்தேன். அவளைப் பார்த்த  உடனே 'ஸாரி, தெரியாம ...'தலை குனிந்து கொண்டான். அதற்குப் பிறகு அவள் மட்டும்தான் பேசினாள். பேசிக் கொண்டேயிருந்தாள்.ஒரு நீண்ட சாரலின் சாட்சியாக நாங்கள் இருவரும் எஞ்சியிருந்தோம். 'ஆமா, எதுக்கு சுமிம்மா சுமிம்மான்னு பினாத்திக்கிட்டு என்கிட்ட வந்த? சாருக்கு கிஸ் மூடோ? 'பளீரெனக் கேட்டாள். மணிகண்டன் வெட்கத்தைக் கையில் பிடித்தபடி ஓடி விட்டான். இப்படித்தான் அவர்களிருவரும் 'ஐ லவ் யூ 'சொல்லிக் கொள்ளாமலே காதலர்களானார்கள். 

 

எப்போது சந்தித்தாலும் அவள்தான் பேசுவாள். அவர்கள் எதிர்காலம் பற்றி, அதிகாலை வந்த கனவு, நேற்று விழுந்த பல்லி, பாத்ரூம் குழாய் உடைந்தது, பத்து வருஷத்துக்கு முன்னால் தலையில் அடிபட்டது, மூன்று வயசில் போட்ட கவுன் ,அந்த மூன்று நாட்கள், முதலிரவு பிளான் இப்படி சகலமும். நான்  என் காதுகளை அங்கே விட்டு விட்டு தள்ளி நின்றிருப்பேன். காதல் பெருக்கெடுத்து விட்டால் பாட  ஆரம்பித்து விடுவாள். டூயட் என்றால் நானும் சேர்ந்து பாடுவேன். மணிக்குப் பாட வராது.அவன் மனதிலிருப்பதை நாங்களிருவரும் எழுத்துக் கூட்டிப் படிப்பதான தொனியில் பரபிரம்மம் போல் எங்களையே பார்த்துக் கொண்டிருப்பான்.  அவள் ,கொஞ்சலில், முத்தத்தில் என்று எதிலுமே குறை வைக்க மாட்டாள். நம்மாள் எப்போதாவது 'சுமிம்மா 'என்று நெகிழ்வதோடு சரி.தனியாக  இருக்கும் போது' சுமிம்மா =கேத்தரின் 'என்று ஸ்ரீராம ஜெயம் போல் தீவிரமாக  எழுதிக் கொண்டிருப்பான். ஆனால்,  அதைக்கூட அவளிடம் காட்ட மாட்டான். ஒரே ஒருதடவை கோழிக்குழம்பு சமைத்து எடுத்து வந்தான். அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை ஒரு புகைப்படக்காரனைப் போல் விதவிதமான கோணங்களில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். 

 

விதி அவன் வாழ்க்கையில்  இரண்டாவது தடவையாகவும் மூர்க்கமாக விளையாடியது. ஒரு நாள் ரமேஷ்  அவனிடம் விளையாட்டாக ' ஒங்க மேட்டர் தெரிஞ்சு கேத்ரினுக்கு மாப்ளை பாத்துட்டாங்க,  அடுத்த வாரம் கல்யாணம் 'என்று திரி கொளுத்திப் போட்டிருக்கிறான்.அப்படியே நேராய் சர்ச்சுக்குள் போனவன் மெழுகுவர்த்திகளோடு தானும் ஒன்றாய் மாறி கரைந்திருக்கிறான். யாரோ உள்ளுக்குள் வந்தவுடன் அவசரமாய் வெளியேறியவன் 'சுமிம்மா கேத்தரினும் போயிட்டா 'என்று புலம்பியபடி ரோட்டில் ஓடியிருக்கிறான். அவனை  அடித்துப் போட்ட பேருந்திலும் உள்ளே மேரி மாதா படம் இருந்திருக்கிறது. நாங்கள் போன போது எல்லாம் முடிந்திருந்தது. அவன் உதடுகள் அசைவது போலவும், 'சுமிம்மா 'என்று சொல்வது போலவும் எனக்குள் ஒரு பிரமை ஓடியது. மணிகண்டன் என்பவன் வெறும் சாம்பல்தானா? என்பதை நம்ப முடியாமல் சுருளியிலிருந்து திரும்பி வந்தேன். வாசலில் கேத்தரின், அதற்குப் பிறகு இன்றுதான் பார்க்கிறேன். முகம் அதிகாலை வானம் போல் சலனமில்லாமல் இருந்தது. அழுததற்கான  எந்தத் தடயங்களும் அதில் இல்லை. எனக்குள் கோபமோ, அல்லது வேறு ஒன்றோ எட்டிப் பார்த்தது. 'சாயங்காலம் மொட்டை மாடிக்கு வந்துடு '-உள்ளே போய் விட்டாள். 

 

அதே வெள்ளை கவுன். நான் ஏதோ சொல்ல வாயெடுத்தேன். என்னைக் கையமர்த்தி விட்டுப் பாட  ஆரம்பித்து விட்டாள். 'மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் '.சத்தியமாகச் சொல்கிறேன். உலகம் தோன்றிய அல்லது அழியப் போகிற நிமிடம் இப்படித்தான் இருக்கும்.  அந்த நிமிடத்தில் நான் அழுதேன்  என்று கூடச் சொல்ல முடியாது. முலை மறுக்கப்பட்ட சிசுவைப் போல் கேவினேன். அவள் பாட பாடத்தான் எனக்குப் புரிந்தது. இது என் கையில் திணிக்கப்பட்ட பொறுப்பு என்று. உன்னளவுக்கு பாட முடியாத நான் எப்படி இதை மணியிடம் சேர்ப்பேன்?.அநாதை சிசுவொன்றைக் கண்டெடுத்த பதட்டத்தோடு கண்ணீர் வழிந்தது.  இரண்டாவது சரணத்தின் இறுதியில் அவள் குரல் உடைந்து அழத் தொடங்கினாள். ஆம், முதன்முறையாக பாடும் போது அவள் அழுகிறாள். எல்லோரையும் இளக வைத்த ராகம் முதன்முறையாக மனம் கசிந்து நிர்வாணமாக நிற்கிறது. கிரீச்செனறு அணில் கத்துவது போல் கதற  ஆரம்பித்தாள். நான் பல்லவியைப் பாட  ஆரம்பித்தேன். யாரோ முட்டுக் கொடுத்த சக்கரம் போல் என் குரல் நகரத் தொடங்கியது. இதுவரை நானே கேட்காத  என் குரல். இளையராஜாவை அந்த மொட்டை மாடிக்கு தரதரவென்று இழுத்து வந்து நாங்கள் ரெண்டு பேருமாய் மாறி மாறி அறைய வேண்டுமென்று தோன்றியது. முகத்தை துடைத்து விட்டு எழுந்து 'தேங்க்ஸ் 'என்றாள். மீண்டும் அந்த நிச்சலனமான முகம். அதுதான் நான் அவளிடமிருந்து கடைசியாகக் கேட்ட வார்த்தை. இரவே காலி செய்து போய் விட்டதாக மறுநாள் வீட்டில் பேசிக்கொண்டார்கள்.

 

அதற்குப் பிறகு  அந்தப் பாடலை ஆயிரம் தடவையாவது கேட்டிருப்பேன் ஒவ்வொரு தடவையும் கடும் பிரயத்தனத்தோடு பாடிப் பார்க்கிறேன். அந்தக் குரலும், குழைவும் அதற்குப் பிறகு கை கூடவே இல்லை. 

 

வேறு  எதற்காக இல்லாவிட்டாலும்,  இந்தப் பாடலுக்காக கேட்கிறேன். 

எங்கே இருக்கிறாய் கேத்தரின்? 

 

(மீள் பதிவு)

source -Facebook 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.