Jump to content

சிங்காரச் சென்னை – ருசி எப்படி?


Recommended Posts

சிங்காரச் சென்னை – ருசி எப்படி?

சென்னை எப்படி தமிழ்நாட்டின் தலைநகராய், பல்வேறு வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளதோ அதற்க்கு நிகராக, உணவு வகைகளிலும் பல்வகைமை கொண்டதாகவே கொண்டதாகவே இருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்பதைப்போல, பல்வேறு மொழி பேசும் இந்தியர்களைக்கொண்ட ஒரு நகரமாக இருப்பதால் என்னவோ, இந்தியாவின் அனைத்து பிரதேசங்களிலும் பிரசித்திபெற்ற அனைத்துவகை உணவுகளையும் சென்னைக்கு போனாலே ருசி பார்த்துவிடலாம்.

ஒருமுறை இந்தியாவுக்கும், அதிலும் சென்னைக்கு பயணிக்கும் ஒருவராக நீங்கள் இருந்தால், அதிலும் உணவுப்பிரியராக இருந்தால் கீழே உள்ள உணவுகளையும், பிரத்தியேக வீதியோர உணவுகளையும் ஒருமுறையேனும் சுவைக்கத்தவறாதீர்கள்.

பிரியாணி (Briyani)

சென்னையில் பிரியாணி வகைகளை கேட்டாலே தலைசுற்றி கீழே விழுந்துவிடுவோம். ஊர்களின் பெயரிலும் ( திண்டுக்கல் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, மும்பை பிரியாணி,……) அவற்றினுள் சேர்க்கப்படும் மாமிசங்களின் அடிபடையிலும், வர்த்தக நாமங்களின் அடிப்படையிலும் பல்வேறு வகையான பிரியாணி வகைகள் சென்னையில் கிடைக்கும். அதிலும் குறிப்பாக, சென்னையில் மிகச்சிறந்த, சுவையான , தரமிக்க பிரியாணி வகைகளை கீழ்வரும் உணவகங்கள் வழங்குகின்றன.

அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம் 

ஆட்டிறைச்சி பிரியாணிக்கு மிகப்பிரபலமான உணவகம். இந்திய மதிப்பில் 190/-க்கு (LKR 418/-) பெற்றுக்கொள்ள முடியும். இதுதவிர்த்து ஏனைய பிரியாணி வகைகள் மற்றும்  இந்தியாவுக்கே உரித்தான ஏனைய உணவுகளையும் இங்கே பெற்றுக்கொள்ள முடியும்.

(flickr.com)

(flickr.com)

தலைப்பாக்கட்டி உணவகம்

தமிழ்நாட்டு பிரயாணிகளில் பெயரும், புகழும் கூடவே அதிக விலையும் கொண்ட பிரயாணிகளில் இந்த உணவகத்தின் பிரியாணிக்கும் இடமுண்டு. கோழியிறைச்சி பிரியாணியில் இந்த உணவகத்திற்கென்று தனியான இடமுண்டு.

(4.bp.blogspot.com)

(4.bp.blogspot.com)

இந்திய மதிப்பில் 198/-க்கு ( LKR 400/-) இங்கு பெற்றுக்கொள்ள முடியும். தனித்துவமான சுவையினால் 1957ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்ற இவ்வுணவகத்தில் ஏனைய, இந்திய பாரம்பரிய உணவுகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்பது மேலதிக சிறப்பு. சென்னையின் ஒவ்வரு இடங்கள் தோறும், இவர்களுக்கு கிளைகள் உண்டு.

ஆசிப் பிரியாணி உணவகம் 

மேற்கூறிய கடைகளைப்போல, நீண்டகால வரலாற்றினைக் கொண்டிராதபோதும், 2000ம் ஆண்டளவின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கபட்டு வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது இந்த பிரியாணி உணவகம்.

(chennaicitynews.net)

(chennaicitynews.net)

குறைந்தது முட்டை பிரியாணி 120/- ( LKR 264/-) வில் ஆரம்பித்து, அதிகப்படியாக இறால் பிரியாணி 230/- (LKR 506/-) வரை விதவிதமான பிரயாணிகளை பெற்றுக்கொள்ள முடியும். ஆசிப் பிரியாணியை சுவைக்க இந்தியாவுக்குத்தான் செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. இலங்கையிலும் இவர்கள் தனக்கான கிளையை திறந்திருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். (https://www.facebook.com/Aasife-Biriyani-Colombo-1607473236219171/)

சுக்குபாய் பிரியாணி உணவகம்

மாட்டிறைச்சி பிரியாணி பிரியர்களையும் நாம் தவறவிடக்கூடாது அல்லவா! சென்னையில், இவ்வகை பிரியாணியை கண்டறிவது சிறிது சிரமம்தான் என்றாலும், அங்குள்ள உள்ளூர்வாசிகளிடம் அதிகம் பிரபல்யமான கடை இந்த கடை ஆகும். இந்திய ரூபாயில் 100/- (LKR 220/-) க்கு இங்கே சுவையான மாட்டிறைச்சி பிரியாணியை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

(https://www.zomato.com/chennai/sukkubhai-biriyani-alandur/info)

இவற்றைத் தவிர, சென்னையில் தெருவுக்கு தெரு பிரியாணி உணவகங்களும், வீதியோர பிரியாணி பாய் கடைகளும் கொட்டிக் கிடக்கின்றன. நாளொன்றுக்கு ஒரு கடையென சுவை பார்க்க தொடங்கினாலும், ஒட்டுமொத்த வாழ்நாளும் கூட போதாமல் போகக்கூடும். விசேடம் என்னவெனில், இந்தியாவின் சாதாரண மக்கள் உண்ணக்கூடியவகையில் குறைந்தது 40/- (LKR 88/-) முதல் பிரயாணிகள் கிடைக்கிறது. எனவே, நான் ருசித்த இடங்களை விட சுவையான பிரியாணி சென்னையில் எங்கேனும் இருந்தால், முகநூல் வழியாக அல்லது ஆக்கத்தின் கருத்துரை (Comment) வழியாக ஏனையவர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இந்திய சாட் உணவுகள் (Chaat Food Items)

சென்னையில் பிரியாணிக்கு போட்டியாக எல்லா உணவுக்கடைகளிலும் கிடைக்கக்கூடிய சிற்றுண்டி உணவுவகைகளே இந்த சாட் வகை உணவுகள். தற்போது, இலங்கையிலும் கூட பிரபல இந்திய உணவகங்களில் இவ்வகை உணவுகள் பிரபல்யமாகிக்கொண்டு வருகின்றன. சாட் உணவுவைகளில் நிறையவே பல்வகைமைகள் உள்ளன.

பாணி பூரி (Paani Puri)

பாணி பூரி

பாணி பூரி

குட்டி குட்டியான பூரி வகைகளுக்குள் கொஞ்சம் அவித்த கடலை, சின்னதாக வெட்டிய வெங்காயம் உட்பட சிலவகை மரக்கறிகள், மிக்சர் முறுக்கு எல்லாவற்றையும் உள்ளடக்கி, பிரத்தியேகமாக பாணி பூரிக்கு என தயாரிக்கபட்ட இனிப்பு மற்றும் கசப்பான இருவகை மசாலா நீரையும் ஒருங்கே கொண்டது இந்த உணவுவகை. இந்தியாவின் எந்த தெருவிலும் நிச்சயம் பாணி பூரிக்கென ஒரு கடையாவது இருக்கும். இந்திய விலையில் 20/- விற்கு (LKR 44/-) குறைந்தது 5 பாணி பூரியையாவது சுவைக்க முடியும்.

பேல் பூரி (Bhel puri)

பேல் பூரி (lekhafoods.com)

பேல் பூரி (lekhafoods.com)

பொரி அரிசிவகையையும், மரக்கறிகளையும் கொண்டது. இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்படும் sauceஐயும் சேர்த்து உருவாக்கப்படும் இவ்வகை உணவுகளும் சென்னையின் உணவகங்களில் பிரபலமானது. பாணி பூரியின் விலைக்கே ஒரு தட்டு பேல் பூரியை சுவைக்கலாம்.

பாவ் பாஜி (Paav Bhaji)

பாவ் பாஜி (a.ctimg.net)

பாவ் பாஜி (a.ctimg.net)

மஹாராஷ்டிரா பிரதேசத்தின் பிரசித்தமான இவ்வகை உணவுக்கும் சென்னையில் பிரத்தியேகமான இடமுண்டு. குட்டியான பாண்துண்டுகளை பட்டர் தடவி சூடாக்கி, அதனுடன் பாவ் பாஜிக்கென பிரத்தியேக மசாலாக்களை கொண்டு சமைக்கபட்ட கடலை அல்லது பருப்பு கலவையுடன் இந்த உணவு பரிமாறப்படுகிறது. வீதியோர உணவகங்களில் இதனை குறைந்தது 40/- ரூபாவுக்கு (LKR 88/-) பெற்றுக்கொள்ள முடியும்.

வடை பாவ் (Vada Paav)

வாட பாவ் (ungree.com)

வாட பாவ் (ungree.com)

கிட்டத்தட்ட இந்தியாவின் buger வடிவமாக இதனை சொல்லலாம். பாவ் பாஜிக்கு பயன்படுத்தப்படும் அதே குட்டிவகை பாண்துண்டுகளை வெட்டி, கிழங்கினை கொண்டு செய்த patty வகையினையோ அல்லது சிறிய மசாலா வடையினையும் உள்ளடக்க்கி, இதரபல உணவுகளையும் கொண்டதாக அமைந்தது இது. பாவ் பாஜியின் விலைக்கே இதனையும் சுவைக்க முடியும்.

சமோசா சாட் (Samosa Chaat) 

சமோசா சாட் (esmartschools.in)

சமோசா சாட் (esmartschools.in)

சமோசா என்றதுமே, இலங்கை உணவகங்களில் உள்ள விதவிதமான சமோசாக்களை நினைத்து விடாதீர்கள். இந்தியாவில் பெரும்பாலான சமோசாக்கள் கிழங்குவகைகளை மட்டுமே கொண்டதாக உருவாகின்றன. இவற்றில், சிறிய சமோசா இரண்டு அல்லது மூன்றை மசித்து அவற்றுக்கு மேல், பாவ் பாஜிக்கான கலவையை ஊற்றி வழங்கப்படும் சிற்றுண்டியாக உள்ளது. இதன் விலையும், பாவ் பாஜிக்கான விலையே!

சானா மசாலா (Chaana masaala) 

சானா மசாலா (kwalitybakeryudaipur.com)

சானா மசாலா (kwalitybakeryudaipur.com)

அவித்த கடலையை மையபடுத்தியதாக உருவாக்கப்படும் இன்னுமொரு சிற்றுண்டி வகைகளுள் இதுவும் ஒன்று. இதற்கென பிரத்தியேகமான மசாலா கறி சமைக்கப்பட்டு, அதனுடன் அவித்தகடலையும் பரிமாறப்படுகிறது. இதனையும் 40/- (LKR 88/-) வுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

பஜ்ஜி வகைகள் (Bhajji Varieties)

பஜ்ஜி (revisfoodography.netdna-cdn.com)

பஜ்ஜி (revisfoodography.netdna-cdn.com)

சென்னையில் சாட் வகைகளுக்கு நிகராக, மாலையில் அதிகம் விற்பனையாகும் மற்றுமொரு சிற்றுண்டி வகை பஜ்ஜி ஆகும். இந்தியாவில் பிரத்தியேகமாக உள்ள மைதா மா கலவையுள் வெவ்வேறு வகை (வாழைக்காய்,வெங்காயம், கறி மிளகாய், கிழங்கு, கோவா) மரக்கறிகளை வைத்து பொரிப்பதன் மூலம் இவை தயாரிக்கபடுகிறன. இந்திய விலையில் 20/- முதல் 40/- வரை (LKR 44/- – 88/-) ஒரு தட்டு பஜ்ஜி விற்பனை செய்யப்படுகிறது.

ஏனைய உணவு வகைகள்

சென்னையின் வீதியோரத்தில் இவற்றுக்கு மேலதிகமாக, நமக்கு வித்தியாசமான உணவை தரக்கூடிய உணவுவகைகள் நிறையவே உள்ளன. குறிப்பாக, முறுக்கை சனியாக சாப்பிட்டு இருப்போம். ஆனால், அந்த முறுக்கை கூட சான்வீட்ச் (Muruku Sandwich) செய்து ஒரு தட்டு 55/- (LKR 120/-) க்கு விற்பனை செய்கிறார்கள். இதை விடவும், இளஞ் சோளனையும், சீஸ் வகையினையும் உள்ளடக்கி Corn Canapes என்கிற புதிய உணவையும் பரிமாறுகிறார்கள். இதனையும் ஒரு தட்டு 55/- (LKR 120/-) பெற்றுக்கொள்ளலாம். இதைவிடவும், சென்னையில் சேட்டுகள் வாழும் பகுதியான சவுக்கார்பேட்டையை கடக்கும்போது, கச்சோரி (INR 20/- , LKR 44/-) , மிர்ச்சி பாதா (INR 20/- , LKR 44/-) போன்ற உணவுகளையும், சென்னை கடற்கரை சாலையை கடக்கும்போது அதனை அண்டிவாழும் பர்மாக்காரர்களின் அத்தோ (INR 50/- , LKR 110/-), கவ்சே (INR 50/- , LKR 110/-), மொய்ங்கா (INR 50/- , LKR 110/-), மசாலா முட்டை (INR 20/- , LKR 44/-) என்ற புதுவகை உணவுகளை வாழைதண்டு சூப்புடன் இணைத்து சுவைக்க முடியும்.

குடிபான வகைகள்

இப்படி வயிறுக்கு நிறைவாக சிற்றுண்டிகளை உண்ணும்போது, அதற்க்கு நிகரான குடிபானங்களும் அவசியம்தானே! அவற்றையும் சூடாக மற்றும் குளிராக தருவதற்கு என, நிறையவே வீதியோர கடைகள் சென்னையெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. குடிபான வகைகளைப்பற்றி பேச, இன்னுமொரு ஆக்கம் தனியாக வேண்டுமென்பதால் அதனை தனியாகவே பார்க்கலாம்.
தனியே, இந்திய பயணத்தில் சென்னையில் கடந்துவந்த வீதியோர உணவுகளை மாத்திரமே, இந்த ஆக்கத்திற்குள் கொண்டுவர முடிந்தது. இவற்றுக்கு மேலாக, நாம் தவறவிட்ட ஏதேனும் சுவாரசியமான உணவுவகைகள் இருப்பின், சென்னைவாசிகளும் சரி, அதனை கடந்து வந்தவர்களும் சரி முகநூல் வழியாக அல்லது கருத்துரை வழியாக ஏனையவர்களுக்கு தெரியபடுத்தலாம்.

 

https://roartamil.com/travel/chennai-food/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஜ்ஜி என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.... பஜ்ஜியும் சானா மசாலாவும் சூப்பர் ஜீ .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

பஜ்ஜி என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.... பஜ்ஜியும் சானா மசாலாவும் சூப்பர் ஜீ .....!  tw_blush:

இது சைவமெல்லோ.

எங்கண்ட புஞ்சி மெனிக்கா ரெசிபி பார்த்தனான்.

அவோ, இந்த மாலுபன் உள்உடனை வைச்சு செய்யிறா.

நல்லா இருக்கும் எண்டு நினைக்கிறன். செய்து பார்க்க வேணும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.