Jump to content

மாதவிடாய் காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் பெண்கள்


Recommended Posts

மாதவிடாய் காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் பெண்கள்

 

நடுத்தர செங்குத்து குன்றுகள் வழியாக, பனிமூடிய இமயமலைத் தொடரில் இருந்து இறங்கும் புவியியல் படிக்கட்டு போன்ற நேபாளத்தின்நேபாளத்தின் நிலவமைப்பு தெற்கிலுள்ள பசுமையான சமவெளிக்கு இட்டுசெல்கிறது. அந்நாட்டின் தொலைதூர மேற்கு பகுதியில், அதன் மத்திய பகுதியில் பல தசாப்தங்களாக மக்களின் வாழ்க்கை சிறிதளவே மாறியுள்ளது.

ஈஸ்வரி ஜோசியும், லக்ஷிமியும் Image captionஈஸ்வரி ஜோசியும், லஷ்மியும்

18 வயதான ஈஸ்வரி ஜோசிக்கு தன்னுடைய தாய் மற்றும் பாட்டி செய்ததையே தானும் கடைபிடித்து வருகின்ற எண்ணம் தான் வருகிறது. அது தான் மாதவிடாய் காலத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று தங்கும் வழக்கம்.

இந்த வழக்கம் "சஹௌபாடி" என்று அழைக்கப்படுகிறது. பெண்களின் மாதவிடாயை குறிக்கும் இந்த சொல், அத்தகைய காலத்தில் இவர் சுத்தமற்றவர் என்ற பொருளையும் தருகிறது.

ஈஸ்வரி ஜோசிக் 15 வயதானபோது தான் முதல்முறையாக மாதவிடாய் வந்தது. அப்போது 9 நாட்கள் வீட்டுக்கு வெளியே தங்கியதாக அவர் தெரிவிக்கிறார்.

"வீட்டுக்கு வெளியே தூங்க வேண்டும்"

ஈஸ்வரி வாழும் தாமிலெக் கிராமம் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக, குறுக்கும் நெடுக்குமாக ஓடும் இரு ஆறுகளால் தாழ்வான, பசுமையான பள்ளதாக்காக காணப்படுகிறது.

ஏறக்குறை 100 குடும்பங்கள் அங்கு வாழ்கின்றன. மண்ணால் பூசப்பட்ட மூன்று அடுக்குமாடி கட்டடத்தில் இந்த மக்கள் வாழ்கின்றனர். தரை தளத்தில் கால்நடைகள் அடைக்கப்படுகின்றன. குடும்பத்தினர் நடுத்தளத்தில் தங்க, மேல்தளம் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

 

இங்குள்ள பெண்கள், தங்களின் மாதவிடாய் காலத்தின்போது, வீட்டை விட்டு வெளியேறி தனிப்பட்ட வகையில் கட்டப்பட்டுள்ள குடிசைகளில் தங்கியிருக்க வேண்டும்.

சரியான படுக்கை வசதி இல்லாமல் இருக்கின்ற இந்த சிறிய பகுதி பல குடும்பத்தினால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

அவ்வாறு தனியாக தங்கியிருக்கும் பெண்கள் சமைக்க முடியாது, ஊட்டச்சத்து மிக்க உணவு சாப்பிட முடியாது. கிராம நீர் ஆதரங்களில் இருந்து நீர் அருத்த மற்றும் குளிக்க கூடாது.

வரைபடம்

தாவரங்களை, கால்நடைகள் அல்லது ஆண்களை தொட கூடாது என்றும் தடை இருக்கிறது.

"நாங்கள் பசுவை தொட்டுவிட்டால், அவை பால் கொடுக்காது என்று கூறப்பட்டது" என்கிறார் ஈஸ்வரியின் தோழி நிர்மலா

 

இதுபோல நடந்ததை நாங்கள் பார்த்ததில்லை. ஆனால் எங்களுடைய மூத்தோர் நாங்கள் பசுவை தொடக்கூடாது என்கின்றனர்"

நான்கு நாட்கள் இந்த குடிசையில் தங்கியிருந்த பின்னர், ஒரு மணி நேரம் நடந்து சென்று நீரூற்றில் நீராடுவர். பின்னர் லஷ்மிபசுவின் சிறுநீரால் சுத்தமாக்கப்படுவர்.

இவ்வளவுக்கும் பின்னர், தான் அவர்கள் சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

_95850527_5932b4a6-afdd-4a0e-9836-0d45ea Image caption"நான் அந்த இடத்திற்கு போகமாட்டேன். ஏன் போக வேண்டும்?" - லஷ்மி

மாதவிடாய் காலத்தில் வெளியேற எதிர்ப்பு

இதற்கு எதிராக எழும் பெண்களும் இல்லாமல் இல்லை.

45 வயதாகும் கல்பனா ஜோசி மாதவிடாய் காலத்தில், தன்னுடைய கடைக்கு அடியில் இருக்கும், இந்த சஹௌ குடிசைக்கு செல்வதில்லை.

அவ்வாறு செய்தால் விலங்குகள் மற்றும் குடிகார ஆண்களால் தாக்கப்படலாம் என்று அச்சமுறும் இளம் பெண்களுக்கு "அப்படி எதுவும் நடக்காது" என்கிறார் கல்பனா.

"நான் அந்த இடத்திற்கு போகமாட்டேன். ஏன் போக வேண்டும்? நான் என்னுடைய பெற்றோரிடம் சொல்லிவிட்டேன்" என்கிறார் 22 வயதான லஷ்மி.

 

"பெற்றோர் கோபப்பட்டனர். என்னுடைய சகோதரர்கள் புரிந்து கொண்டனர். நான் வீட்டில் இருப்பதை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துகொள்வதில்லை" என்று லஷ்மி கூறுகிறார்.

ஆனால், திருமணமாகி கணவன் வீட்டுக்கு சென்ற பின்னர் இந்த நிலை நீடிக்குமா? என்பதில்லஷ்மிக்கே சற்று சந்தேகம்தான்.

அவர்கள் இப்படி தான் நடக்க வேண்டும் என்று சொன்னால், நான் வீட்டிற்கு வெளியே தூங்க வேண்டியது தான் என்று அவர் கூறுகிறார்.

யோக்யா ஜோசி, Image caption"பாரம்பரியம் தொடர வேண்டும். ஆனால் வேறுபட்ட காரணத்திற்காக" - யோக்யா ஜோசி

மாதவிடாய் ரத்தம் ஒரு விஷம்

தாமிலெக் கிராமத்திற்கு சாலை வசதி போடப்பட்டு, போக்குவரத்து சீரானபோது, மூட்டை தூக்கி வாழ்க்கையை கழித்து வந்தோர் வெளியூர், வெளிநாடுகள் சென்று செல்வம் ஈட்ட தொடங்கினர்.

எனவே, முந்தைய அதே பரப்பிலான விவசாயத்தை கவனித்து, அறுவடை செய்ய வேண்டிய பொறுப்பு பெரும்பாலும் பெண்களையே சேர்ந்தது.

 

அத்தகைய நிலைமையிலும், ஆண்கள் சஹௌபாடியின் அவசியத்திலும், சக்தியிலும் நம்பிக்கை கொண்டு தான் இருக்கின்றனர்.

"என்னுடைய மனைவி மாதவிடாய் காலத்தில் என்னை தொட்டால் நான் சுகவீனம் அடைந்துவிடுவேன்" என்று 74 வயதான ஷங்கர் ஜோசி கூறுகிறார்.

இளைஞரான யோக்யா ஜோசி, "பாரம்பரியம் தொடர வேண்டும். ஆனால் வேறுபட்ட காரணத்திற்காக" என்கிறார்.

நாரணயள் பிராசாத் போக்ஹாரெல் Image captionநாரணயள் பிரசாத் போக்ஹாரெல் குரு

"முற்காலத்தில், கடவுள்கள் கோபம் அடைவதாக எண்ணி இந்த வழக்கம் பின்பற்றப்பட்டது" என்று அவர் கூறுகிறார்.

ஆனால், மாதவிடாய் ரத்தத்தை தோய்த்து எடுக்க துண்டு துணிகளையே கிராம பெண்கள் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டி, சுத்தமான சுற்றுச்சூழலை மற்றும் சுகாதாரத்தை பராமரிக்கவும், வீட்டில் பாதுகாப்பு நிலவவுமே இந்த வழக்கம் என்றும் நம்புவதாக அவர் தெரிவிக்கிறார்.

"மாதவிடாய் ரத்தம் ஒரு விஷம்" என்று அவர் கூறுகிறார்.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் அசுத்தமானவர்களா?

மாதவிடாய் காலம் பெண்கள் அசுத்தமாக இருக்கும் காலம் என்கிற கருத்து எப்படி தோன்றியது? என்று யாரும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால், இந்து மத புனித நூற்களே பெரும்பாலும் காரணமாக கூறப்படுகிறது.

நாரணயள் பிரசாத் போக்ஹாரெல் போன்ற குருக்களின் வழிகாட்டுதல்களையும் மக்கள் பெறுகின்றனர். அவர் மாதவிடாய் புனிதமானது. ஆனால் ஆபத்தானதும் கூட என்கிறார்..

"பெண் தன்னை கட்டுப்படுத்தி கொள்ளாவிட்டால், அவருடைய உடலில் இருக்கும் அசுத்தங்கள் உடலுறவின்போது ஆணுக்கும் பரவி கெடிய நோய்கள் ஏற்படலாம்" என்று அவர் எச்சரிக்கிறார்.

பிமா லாக்கி Image captionபிமா லாக்கி

தவறுதலாக ஒரு ஆண் மகனை தொட்டுவிட்டதற்கும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்கும் வருந்துகிற மத சடங்குகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.

ரிஷி பஞ்சமியின்போது, பெண்கள் உண்ணாநோன்பிருந்து, புனித நீரில் நீராடுகிறார்கள்.

சமூக வழக்கமாக...

மதத்தின் புனித நூற்களில் சஹௌபாடி அதன் வேர்களை கொண்டிருக்கலாம். ஆனால், பரவலாக கடைபிடிக்கப்படும் சமூக நடைமுறையாக அது ஆகியிருக்கிறது

"மதத்தின் காரணமாக இந்த வழக்கத்தை பலர் கடைபிடிக்கின்றனர். பிறர், தாங்கள் வாழும் பகுதியிலுள்ள மக்கள் கடைபிடிப்பதால் கடைபிடிக்கின்றனர். அனைவரும் கடைபிடிப்பதால், பௌத்தர்கள் கூட இதனை கடைபிடிக்கும் வழக்கமும் உள்ளது" என்கிறார் சிறப்பு இனப்பெருக்க சுகாதரா வளர்ச்சி பணியாளர் பிமா லாக்கி.

2005 ஆம் ஆண்டு நேபாள உச்ச நீதிமன்றம் சஹௌபாடியை சட்டத்திற்கு புறம்பான வழக்கமாக அறிவித்தது. ஆனால் அந்த நாட்டின் தொலைதூர பகுதிகளில் மாற்றங்கள் மிகவும் மெதுவாகவே நடைபெறுகிறது.

நகர பெண்கள்

தாமிலெக் கிராமத்தின் செங்குத்து குன்று பக்கத்தில் இருந்து மக்கள் அதிகமாக வாழும் தலைநகரான காட்மண்டுவுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் உள்ளன.

அங்கு குழந்தைகள் மாதவிடாய் பற்றி கற்றுகொள்கின்றனர். சுகாதார பாதுகாப்பு பட்டையை எளிதாக வாங்கிகொள்ள முடிகிறது.

ஆனால், மாதவிடாய் பற்றிய எதிர்மறை கருத்துக்கள் இங்கும் முழுமையாக அகன்றுவிடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நிர்மலா லிம்பு மற்றும் திவ்யா ஷாரெஸ்தா இருவரும் 20 வயதுகளில் இருக்கின்ற பட்டதாரிகள்.

நிர்மலா லிம்பு மற்றும் திவ்யா ஷாரெஸ்தா Image captionநிர்மலா லிம்பு மற்றும் திவ்யா ஷாரெஸ்தா

"இந்த விதிகள் எனக்கு எந்த பொருளையும் தரவில்லை. எனது தாய் நான் தாவரங்களை குறிப்பாக பழங்கள் காய்க்கும் மரங்களை தொடக்கூடாது என்பார். நான் அவற்றை தொடர்ந்து தொட்டு வருகிறேன். அவை பட்டுவிடவில்லையே" என்று நிர்மலா கூறுகிறார்.

ஆனால், திவ்யாவுக்கோ, மாதவிடாய் என்பது, மத பண்டிகையில் கலந்து கொள்வதை தடுப்பதாக பொருள்படுகிறது.

நாள் முழுவதும் வழிபாட்டிற்கு தயாரித்து கொண்டிருக்கையில், எனக்கு மாதவிடாய் என்று சொல்லிவிட்டால் போதும், நான் தொடுகிற எல்லாவற்றையும் சுத்தம் செய்தாக வேண்டும் என்று கூறிவிடுவர்" என்று வருத்தத்தோடு கூறுகிறார் திவ்யா.

நேபாள சமூகம் மாறிக்கொண்டிருக்கிறது. நிர்மலாவும், திவ்யாவும் சில கட்டுப்பாடுகளை சந்தித்தாலும், அவர்களின் தாய்மார் சந்தித்ததை விட இவை மிகவும் லேசானவைதான்

"எங்களுக்கு மாதவிடாய் என்றால் இழிவாக பார்த்தார்கள். தனியாக ஒதுக்கி வைத்துவிடுவார்கள். தனி தட்டு, வேறுபட்ட ஆடைகள். யாரும் தொடமாட்டார்கள்" என்று திவ்யாவின் தாய் சுதா ஆதங்கத்தை தெரிவிக்கிறார்.

சுதா, திவ்யாவை பெற்றெடுத்தபோது, தான் அனுபவித்த கொடுமையை தன்னுடைய மகள் அனுபவிக்க கூடாது என்று பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லாமல் வளர்த்தார்.

அதுவே தன்னுடைய தன்னம்பிக்கையை வளர்த்தாக தெரிவிக்கிறார் திவ்யா.

லக்ஷிமி மாலா Image captionலக்ஷிமி மாலா

திவ்யாவை போல மாதவிடாய் பற்றிய எதிர்மறை கருத்துக்களை ஊட்டி வளர்க்கப்படாத பல பெண்கள் அந்த சமூகத்தில் உள்ளனர்.

ஆனால், பழைய நடைமுறைகள் நகரங்களிலும் மாறுவது என்பது மிகவும் கடினமாக உள்ளது என்கிறார் இனபெருக்க சுகாதார திட்டத்தை நடத்தி வரும் பிமா லாக்கி.

சில படித்த பெண்களே மறைமுகமாக எதிர்மறை கருத்துக்களை வளர்த்து வருவதாக அவர் கூறுகிறார்.

மாறுகின்ற மனங்கள்

நேபாளத்தின் தெற்கில் சுகாதரா பணியாளர் லஷ்மி மாலா சஹௌபாடியை முடிவுக்கு கொண்டுவர உறுதியான பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.

தெராய் என்ற பகுதியில் இருக்கும் இதற்கான சிறிய குடிசைகள் மேலே திறந்தே இருப்பவை அல்லது வைக்கோல், பதரால் கூரை அமைக்கப்பட்டவை. பழைய துணிகளை பயன்படுத்தி பல பெண்கள் ஒரேநேரம் தூங்கும் நிலைமையும் அங்குள்ளது.

பருவ மழையின்போது பாதுகாப்பு இல்லை. புற்களுக்கு மத்தியில் வாழும் பாம்புகளால் ஆபத்து அதிகம்.

தாங்காடி என்ற இடத்தில் வக்ஸிமி பணிபுரிகிறார். சுகாதரா துண்டுகள் விற்கப்பட்டாலும், அவை விலை உயர்ந்தவை. ஆனால், பழைய துணிகளை பெண்கள் பயன்படுத்துகின்றனர்.

மாஜ்ஹிகாகௌன் கிராம வீடு Image captionமாஜ்ஹிகாகௌன் கிராம வீடு

அவற்றை சுகாதாரமான முறையில் துவைத்து, பாக்டீரியாவை கொல்லும் அளவுக்கு சூரிய ஒளியில் நன்றாக காயவைத்து, மறுபடியும் பயன்படுத்துவதை அவர் அனைவருக்கும் சொல்லிகொடுக்கிறார்.

இந்த முயற்சி மிகவும் கடினம் தான். மக்கள் சண்டையிட்டனர். சபிக்கவும் செய்தனர். காவல்துறையினரோடு கிராங்களுக்குள் சென்ற நாட்களும் உண்டு.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல மக்கள் மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டிற்கு வெளியே சென்றுதூங்கச் சொல்வதில்லை.

இன்னும் ஓராண்டில் இந்த வழக்கம் முற்றிலும் நின்றுவிடும் என்கிறார் லஷ்மி நம்பிக்கையுடன்.

குடிசைகள் உடைப்பு

நேபாளின் மேற்கில் வெகுதொலைவில் இந்த சஹௌபாடி வழக்கத்தை முடிவுக்கு கொண்டுவர இன்னொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, உள்ளூர் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியால், மாஜ்ஹிகாகௌன் கிராமத்தின் இத்தகைய குடிசைகளை எல்லாம் உடைக்கும் பரப்புரை தொடங்கியது.

இதற்கான ஒருங்கிணைப்பு குழுவில் இருப்பவர் தான் தேவகி ஜோசி.

முற்காலத்தில் மக்கள் குளிப்பது குறைவு. ஆடைகளை துவைப்பது குறைவு. அதனால் இத்தகைய வழங்கங்கள் தொடங்கியிருக்கலாம்.

ஆனால், இப்போது அவை மாறிவிட்டன. பள்ளியில் கூட சுகாதார துண்டுகளை வழங்க தொடங்கியுள்ளனர் என்று அவர் கூறுகிறார்.

மாமியாருடன் சியுதாரி சுனார். Image captionமாமியாருடன் சியுதாரி சுனார்.

ஆனாலும், எல்லோருமே இதனை ஏற்று கொண்டார்களா?

எருமைகள் இருக்கின்ற புதியதொரு இடத்தை சுட்டிக்காட்டி "இன்னும் அதே வழக்கத்தை நாங்கள் தொடர்வோம்" என்கிறார் சியுதாரி சுனார்.

பழைய சஹௌதாடி வீடுகள் இடிக்கப்பட்டதும் புதியதொரு இடத்தை அதற்கு அவர்கள் ஒதுக்கியுள்ளனர்.

தேவகி இந்த பணித்திட்டத்தின் வெற்றியில் ஆர்வத்துடன் இருந்தாலும் பெரியோர் சிலர் மனங்களை மாற்றிக் கொள்வதற்கு தயங்குவதை ஒப்புக் கொள்கிறார்,

சஹௌபாடி வழக்கம் முற்றிலும் அழிந்து போவதற்கு இன்னொரு தலைமுறை காலம் பிடிக்கும் என்கிறார். அரசின் உள்ளூர் தலைவர் லீலா காலெ. அதற்காக ஆண்கள், பெண்கள், மாந்திரீகர்கள் என அனைவரோடும் சோந்து உழைத்து வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார்,

நேபாள பெண்கள் தங்களுடைய மாதவிடாயை கொண்டாட வேண்டும் என்கிறார் லீலா காலெ.

"நம்முடைய ரத்தத்தில் சக்தி இருக்கிறது என்று அவர்களுக்கு கூறுவோம்" என்கிறார் லிவா காலெ.

http://www.bbc.com/tamil/global-39766573

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
    • பிந்தி கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி பெரிய‌ப்ப‌ட்ட‌ ம‌ணிக்கூடு நீண்ட‌ நாளாய் வேலை செய்யுது இல்லையாம்  ஆன‌ ப‌டியால் புல‌வ‌ர் அண்ணாவின் போட்டி ப‌திவு ஏற்றுக் கொள்ள‌ப் ப‌டும் லொல்😂😁🤣...........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.