Jump to content

மது அருந்தும் கணவரை அடிக்க மணமகளுக்கு "பேட்' பரிசளித்து அசத்திய அமைச்சர்!


Recommended Posts

மது அருந்தும் கணவரை அடிக்க மணமகளுக்கு "பேட்' பரிசளித்து அசத்திய அமைச்சர்!

 

 
Gopal-Bhargava1

போபால்: கணவன்(மணமகன்) மது அருந்தினால், அவரை அடிப்பதற்காக, மனைவிகளுக்கு (மணமகள்) கிரிக்கெட் மட்டையை பரிசளித்திருக்கிறார் மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் கோபால் பார்கவா.

இந்த ருசிகர சம்பவம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் சனிக்கிழமை அம்மாநில அரசின் சார்பில் கர்ஹகோடா நகரில் சுமார் 700 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. 700 ஜோடிகளுக்கு மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கோபால் பார்கவா தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையில், ” குடிப்பவர்களை அடிப்பதற்காக, போலீஸ் தலையிடக்கூடாது” என எழுதப்பட்ட கிரிக்கெட் மட்டையை மணப்பெண்களுக்கு கிரிக்கெட் மட்டையை அவர் பரிசளித்தார்.

Gopal-Bhargava.jpg

மது அருந்திவிட்டு கணவன் வீட்டுக்கு வரும் போது இந்த மட்டைதான் பேச வேண்டும். குடும்பத் தலைவன் மது குடித்தால் அவன் வன்முறையாளனாக மாற வாய்ப்புள்ளது. எனவே, மனைவிகள் இந்த மட்டையைக் கொண்டு அவனைத் தடுக்க வேண்டும்; இந்த விவகாரத்தில் காவல் துறை தலையிடாது என்று மணப்பெண்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மேலும், கிராமப்புறங்களுக்கு நான் செல்லும்போது, அங்கு வசிக்கும் பெண்கள், தங்கள் கணவரின் குடிப் பழக்கத்தைக் கூறி புலம்பியிருக்கிறார்கள். மேலும், தாங்கள் சம்பாதிக்கும் சொற்பத் தொகையையும், குடிப்பதற்காக கணவர் பறித்துச் சென்றுவிடுவதாகவும் அவர்கள் கண்ணீர் விட்டிருக்கிறார்கள். கணவரால் அவர்கள் தாக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், என்னை சந்தித்த பெண் ஒருவர், தனது கணவர் மது அருந்துவதைத் தடுத்து நிறுத்த அவரை அடிக்கலாமா? என்று கேட்டார். அப்போதுதான், மணப்பெண்களுக்கு கிரிக்கெட் மட்டையை பரிசளிக்கும் எண்ணம் எனக்கு உதித்தது. எனவே, மதுப் பழக்கத்துக்கு அடிமையான கணவர்களின் பிடியில் பெண்களைக் காப்பாற்றுவதற்காக, உடனடியாக, 10,000 கிரிக்கெட் மட்டைகளுக்கு ஆர்டர் கொடுத்தேன். சமூக மாற்றத்துக்கான முதல் படி இதுவாகும்.

மதுபானம் பற்றிய அச்சுறுத்தலை சமாளிக்கத் தேவைப்படும் சமூக மாற்றத்தை கொண்டு வருவது குறித்த செயல்களுக்கு பாராட்டுகள் தெரிவித்த பார்கவா, மதுகுடிக்கும் பழக்கத்தால் உருவாகும் பிரச்னைகளை அரசோ, காவல் துறையோ தீர்க்க முடியாது. எனவே, இந்தப் பிரச்னைகளுக்கு முடிவுகட்டுவதற்கு மக்கள் முன்வர வேண்டும் என்று கூறினார்.

மதுகுடிப்பதால் ஏற்படும் தீமை குறித்து முதலில் தங்கள் கணவருடன் மனைவிகள் பேச வேண்டும். அப்படி பேசியும் பலன் கிடைக்கவில்லை என்றால், கிரிக்கெட் மட்டையை 'மோக்ரி' பேசுவதை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சட்டவிரோத மது விற்பனையானது மத்தியப் பிரதேசத்தில் ஒரு பெரிய பிரச்சினை. "மதுபானத்திற்கு எதிராக மாநிலம் ஒரு எழுச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது, ஆனால், இந்த விஷயத்தில் மக்கள் படித்திருக்க வேண்டும், தடை விதிக்கப்படுவதற்கு முன் இது அவசியம்" என்று கூறிய அமைச்சர் புதிய கிராமத்தை உருவாக்கி, கிராமங்களில் உள்ள அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் தடுக்கவும், குழந்தைகளுக்கு சரியான கல்வி கிடைக்கச் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்தியாவில் குஜராத், பீகார், மிசோரம் மாநிலங்களில் முழுமையான மதுவிலக்கும், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் படிப்படியான மதுவிலக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamani.com/india/2017/may/01/ministers-special-gift-for-700-brides-bats-to-beat-drunk-husbands-with-2694198.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுசு புதுசா கொண்டு வாராங்களே  சபா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கிய மட்டைகளில் ஒன்றிரண்டு அவரின் வீட்டிலும் மிஞ்சிக் கிடைக்கலாம்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.