Jump to content

தந்தை - மகள் பாசத்துக்கு ஒரு கிரிக்கெட் ஸ்கோர்கார்டின் மரியாதை! #MustRead


Recommended Posts

தந்தை - மகள் பாசத்துக்கு ஒரு கிரிக்கெட் ஸ்கோர்கார்டின் மரியாதை! #MustRead

 
 

கிரிக்கெட் போட்டிகளில், விளையாடிக்கொண்டிருக்கும்போது ஒரு பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்பட்டாலோ, உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ, அவர் ஓய்வு பெறுவது வழக்கம். அதை,மேட்ச்சின் ஸ்கோர் கார்டில் Retired Hurt என்று குறிப்பிடுவார்கள். காயம் சரியான உடனேயோ,அல்லது நிலைமை சீரான பிறகோ, அந்த ஆட்டக்காரர்  மறுபடியும் வந்து ஆடலாம். அப்படி ஆடவில்லையென்றால், மேட்ச்சின் அதிகாரப்பூர்வ ஸ்கோர் கார்டில், அது Retired Hurt என்றே இருக்கும்.

1877ஆம் ஆண்டுமுதல் டெஸ்ட் மேட்ச் போட்டிகள் நடந்து வருகின்றன. பல விந்தையான,வியக்கத்தக்க சம்பவங்கள் இந்த 140 ஆண்டுகளில் நடந்துள்ளன. ஆனால், சில பல ஆச்சரியத்தக்க விஷயங்கள் நம்மை வியக்க வைக்கத் தவறுவதே இல்லை. அப்படி ஒரு சம்பவம் ஏப்ரல் 30ம் தேதி நடந்தது.   இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால், 140 ஆண்டுகளில், 2260டெஸ்ட் மேட்ச் போட்டிகளில், இதுவரையில் ஒரே ஒரு முறை மட்டுமே  நடந்துள்ள   ஒரு  விஷயம், சரியாக 34 ஆண்டுகளுக்கு முன்பாக, நேற்றைய தேதியில்  நடந்தது.

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் – 5ஆவது டெஸ்ட் மேட்ச்:

கிரிக்கெட் ஸ்கோர்கார்டு

1983ஆம் ஆண்டு 28 ஏப்ரல் முதல், மே மூன்றாம் தேதி வரையில் நடந்த ஒரு டெஸ்ட் மேட்ச்சின் ஸ்கோர் கார்ட் இது. ‘நாட்களை கணக்கு பார்த்தால், 6 நாட்கள் வருகிறதே?’ என்று கேள்வி கேட்க வேண்டாம். ஏனென்றால், அப்போதெல்லாம் டெஸ்ட் மேட்ச் போட்டிகளில் ஒரு நாள் ரெஸ்ட் டே என்று ஓய்வு நாள் இருக்கும். அப்படி, இந்தப் போட்டியில், மே 2ஆம் தேதி ரெஸ்ட் டே ஆகும்.இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையே நடந்த 5ஆவது டெஸ்ட் மேட்ச் போட்டி இது. ஏற்கெனவே நடந்த 4 போட்டிகளில், இரண்டை டிரா செய்து, மீதமிருந்த இரண்டில் இந்தியா தோற்றிருந்தது.

இதில் மேற்கிந்தியத் தீவின் பேட்டிங் ஸ்கோர் கார்டைப் பார்த்தால், அதில்

Gordon Greenidge (Retired, Not Out) 154 என்று இருக்கும். டெஸ்ட் மேட்ச் வரலாற்றில், இது 956ஆவது போட்டி. அதுவரையில் நடந்த 955 போட்டிகளில் இப்படி ஒரு சிறப்பு குறியீடு கொண்ட ஸ்கோர் கார்ட் இருந்ததே இல்லை. என்ன, இது, மிகவும் ஆச்சரியமான ஸ்கோர் கார்டாக இருக்கிறதே என்று பார்த்தால், அதன் பின்னர் ஒரு சோகமான விஷயம் இருக்கிறது. 

மேட்ச் விவரம்: முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. முதல் நாள், டீ டைமுக்கு முன்பே வெளிச்சக் குறைவு காரணமாக ஆட்டம் முடிவடைந்தது. இரண்டாம் நாளும் தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 457 ரன்கள் குவித்து, ஆல அவுட் ஆனது. கவாஸ்கர், அமர்நாத் ஆகியோர் அரை சதம் அடிக்க, ரவி சாஸ்திரி 102 ரன்கள் குவித்தார். கேப்டன் கபில் தேவ் 98 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் மேற்கிந்திய அணி ஆட ஆரம்பித்தது.

கார்டன் கிரீனிட்ஜ்இந்தப் போட்டிக்கு முன்பாக, மேற்கிந்தியத் தீவின் துவக்க ஆட்டக்காரர்களான கோர்டன் கிரீனிட்ஜும், டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ்சும் சதமடித்தே ஆகவேண்டுமென்ற அழுத்தத்தில் இருந்தார்கள். ஏனென்றால், கிரீனிட்ஜ் கடைசியாக டெஸ்ட் மேட்ச் போட்டிகளில் சதமடித்தது, 1977ல். ஹெய்ன்ஸ்சும் சதமடித்து 4 ஆண்டுகள் ஆகி இருந்தது. இந்தியாவின் 457 ரன்கள் அவர்களின் முன்னே ஒரு மலையாகக் காட்சி அளித்திருக்கலாம். ஆனால், டெஸ்ட் போட்டிகளின் மிகச்சிறந்த துவக்க ஆட்டக்காரர்கள் என்று பெயர் எடுத்திருந்த இந்த இணை, தங்களது வழக்கமான பாணியில் ஆடத்துவங்கினார்கள்.

இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளரான கேப்டன் கபில்தேவ், மூன்றாவது நாள் ஆட்டம் முழுவதிலுமே கழுத்துப் பிடிப்பு காரணமாக, 4 ஓவர்கள் மட்டுமே பந்து வீசியிருந்தார். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்திருந்தது. இதில்,முதல் விக்கெட்டிற்கு, ஹெய்ன்ஸ்சும் கிரீனிட்ஜும் 296 ரன்களைக் குவித்திருந்தனர். கிரீனிட்ஜ் 154ரன்களுடன் ஆடிக்கொண்டு இருந்தார். ஆறு ஆண்டுகளில், அவர் அடித்த முதல் சதம் இதுதான்.

ரெஸ்ட் டே: ஆனால், கிரீனிட்ஜின் 2 வயது மகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு,மருத்துவமனையில் சீரியஸான நிலையில் இருக்கிறார் என்ற தகவலும் அன்றுதான் வந்து சேர்ந்தது. இந்தப் போட்டி நடந்த ஆன்ட்டீகாவில் இருந்து உடனடியாகக் கிளம்பி, ஜமைக்கா சென்று   சேர்ந்தார், கிரீனிட்ஜ். மருத்துவமனையிலேயே அவரது மகளுடன் இருந்து, அவரது சிகிச்சையை அருகில் இருந்து கவனித்துக்கொண்டார். ஆனால், இரண்டு நாட்கள் கழித்து, அவரது 2 வயது மகள், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மே 2ஆம் தேதி, அதுதான் அந்த ஐந்தாவது டெஸ்ட் மேட்சின் ரெஸ்ட் டே. அன்றுதான் கிரீனிட்ஜின் மகளும் நிரந்தரமாக ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.

 

அந்தப் போட்டி, ஐந்தாவது நாளின் முடிவில், இருதரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. அந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக கிரீனிட்ஜ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.கிரீனிட்ஜின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அதுவரையில் (ஏன்.. இதுவரையிலும்) நடக்காத ஒரு விஷயத்தைச் செய்தார்கள். அந்த டெஸ்ட் மேட்ச்சின் அதிகாரபூர்வ ஸ்கோர்கார்டில் Retired Hurtஎன்று குறிப்பிடாமல், Retired Not Out என்று வெளியிட்டார்கள். ஒவ்வொரு ஏப்ரல் 30ஆம் தேதியும் ஒரு தந்தையின் பாசத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது இந்த ஸ்கோர் கார்ட்.

http://www.vikatan.com/news/sports/88042-rare-score-card-which-reminds-of-dad-and-daughters-love.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ட் ஏ வொண்டர்புல் பீலிங்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.