Jump to content

கவிப்புயல் இனியவன் கவிதைகள்


Recommended Posts

காதல்..............
உலகில் அன்பு .............
நிலைபெற, ...............
இறைவன் எழுதிட்ட ...........
எழுத்து...............!!!

காதல் 
வந்துவிட்டால்.... 
காட்சிகள் தெரிவதில்லை! 
உறங்காத விழிகள் 
எரிகின்ற போதும்.... 
வலிகள் ஏதுமில்லை.........!!!

$$$$$
கவிப்புயல் இனியவன் 
 

Link to comment
Share on other sites

  • Replies 233
  • Created
  • Last Reply

நான் ...............
இருக்கும் வரை என் ...............
மனதோடு இதயத்தோடும் ...........
உன் நினைவுகள் இருக்கும் ............
இறந்த பின்னும் இருக்கும் ............
என் கல்லறையோடு.. ............
என் கல்வெட்டோடும் .........!!!
&
கவிப்புயல் இனியவன்  

Link to comment
Share on other sites

காலங்கள் மாறினாலும் 
உன் மீது நான் கொண்ட 
காதல் மாறாது.. 
உன்னில் நான் மோகம் ....
கொள்ளவில்லை ......
உயிர் கொண்ட காதல் .....
கொண்டேன் ........
என் மூச்சில் கலந்திருக்கும் 
ஒரு பகுதி உன் மூச்சு...........!!!

&
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

ஆங்கில புத்தாண்டே என்.....
காதல் சொன்ன தினம்.....
அதுவே என் காதலர் தினம்.....!!!

அவள் சொன்ன வார்தையே.....
ஆயிரம் மத்தாப்பூ மலர்ந்த நாள்.....
இன்று பல ஆண்டுகள் ஆயினும்......
அந்த ஆங்கில ஆண்டே காதல் தினம்.....!!!

என்ன வேண்டும் உனகென்றேன் .......
உன்னருகில் நாள் முழுதும் இருக்கும் .......
பாக்கியம் வேண்டுமென்றாள்...........
கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்.......
வெளியூரில் வேலை செய்வதால்.....!!!

^
கவி நாட்டியரசர். கவிப்புயல் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
++++++யாழ்ப்பாணம்+++++++ 

Link to comment
Share on other sites

ஒவ்வொரு பிறந்த நாள் .....
கொண்டாட்டமும் .....
இறக்கும் நாளின் ....
திறப்பு விழா ..............!!!

நீ 
அடையாளப்படும் ....
போதுபிரச்சனையை ......
எதிர் கொள்கிறாய் ......!!!

மெழுகு திரி .....
தொழிற்சாலையில் ......
உழைப்பாளிகள் ....
உயிருள்ள மெழுகுதிரி .......!!!

&
சமுதாய கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

தொழிலாளியை .....

சுரண்டுவதற்கு  அவர்களிடம் ......

சதையில்லை .....

எலும்புகள் தான் மீதியாய் ......

இருக்கின்றன ...........!!!

 

குடிகாரர் மட்டுமல்ல .....

அரசியல் வாதிகளும் ....

உளறுகிறார் ................!!!

 

நீ 

தீக்குச்சி தலைக்கனம் ....

உன்னை சாம்பலாக்கும் ....!!!

 

&

சமுதாய கஸல் கவிதை 

கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

கோபமான
உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது

உன்னில் கோபமே
வரமாட்டேன்
என்கிறதே ....!!!

&
கவிப்புயல் இனியவன் 

நீ .................
சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
முத்தாய் இருக்கிறாய் ....!
 
சிறு மழைதுளிதான்
முத்தாக மாறுவது போல் ...
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் ..........!
 
முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம்
உன்னை அறிந்து கொள்வது ..?
 
&
கவிப்புயல் இனியவன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தூய்மையானது உலகில் நட்பு ஒன்றுதான். எங்களை தாங்கிக் கொள்ளும் தோழும் ஏணியும் நட்பு.

Link to comment
Share on other sites

இனிய பொங்கல் வாழ்த்துகள்
இனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்
இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்
இனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்
இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........!!!

இனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....
இன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...
இல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......
இல்லாதருக்கும் அள்ளிக்கொடுத்து......
இல்லறம் நல்லறமாக செழித்திட.......
இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!!

இல்லங்களில் பொங்கலை பங்கிட்டு......
இல்லத்தாரோடும் உறவுகலோடும்.....
இன்முகத்தோடு பொங்கலை உண்டு.....
இன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......
இனிய உறவுகளுக்கு  இனியவனின்......
இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......!!!

இரவு பகலாய் வயலில் புரண்டு......
இதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....
இன் முகத்தோடு அறுவடை செய்து.....
இவுலகுக்கே உணவு படைக்கும்.....
இறைவனுக்கு ஒப்பான உழவர்களுக்கு.....
இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!! 
 

Link to comment
Share on other sites

--------------

ஓடுகின்ற நீரில்
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!

நீ 
வரும் பாதையை....
ஒழுங்கை ஒன்றில்...
ஒட்டி நின்று...
ஓரக்கண்ணால்...
பார்க்கிறேன் ....!!!

சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்

----------

நீ .................
சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
முத்தாய் இருக்கிறாய் ....!
 
சிறு மழைதுளிதான்
முத்தாக மாறுவது போல் ...
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் ..........!
 
முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம்
உன்னை அறிந்து கொள்வது ..?
 
&
கவிப்புயல் இனியவன்
On 1/3/2017 at 8:56 PM, கவிப்புயல் இனியவன் said:

கோபமான
உன் முகத்தை
பார்த்தாலே
எனக்கு ரசிக்கதான்
தோன்றுகிறது

உன்னில் கோபமே
வரமாட்டேன்
என்கிறதே ....!!!

&
கவிப்புயல் இனியவன் 

நீ .................
சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
முத்தாய் இருக்கிறாய் ....!
 
சிறு மழைதுளிதான்
முத்தாக மாறுவது போல் ...
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் ..........!
 
முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம்
உன்னை அறிந்து கொள்வது ..?
 
&
கவிப்புயல் இனியவன்

 

Link to comment
Share on other sites

ஆங்கில புத்தாண்டே என்.....
காதல் சொன்ன தினம்.....
அதுவே என் காதலர் தினம்.....!!!

அவள் சொன்ன வார்தையே.....
ஆயிரம் மத்தாப்பூ மலர்ந்த நாள்.....
இன்று பல ஆண்டுகள் ஆயினும்......
அந்த ஆங்கில ஆண்டே காதல் தினம்.....!!!

என்ன வேண்டும் உனகென்றேன் .......
உன்னருகில் நாள் முழுதும் இருக்கும் .......
பாக்கியம் வேண்டுமென்றாள்...........
கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்.......
வெளியூரில் வேலை செய்வதால்.....!!!

^
கவி நாட்டியரசர். கவிப்புயல் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
++++++யாழ்ப்பாணம்+++++++ 

நீ 
நட்புக்காக..... 
பழகுகிறாயா ...?
காதலுக்கு ....
பழகுகிறாயா ...?
கண்டுபிடிக்க முன்.... 
படாத பாடு படும் 
மனம் ...!!!

பூ பறிக்கப்படுவது......
இரண்டு சந்தர்பத்தில்..
ஒன்று இறைவனுக்கு....
மற்றையது காதலுக்கு...
இரண்டுமே ஏக்கம்....
தந்து வரம்கிடைக்கும் ...!!!

&
இனிக்கும் 
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

தமிழன் ஜல்லி கட்டுக்காக .......
மட்டும் இங்கு போராடவில்லை ......
தமிழனை ஒரு சில்லியாய் .....
நினைக்காதே என்பதற்கு ........
சல்லி சல்லியாய் குவிக்கிறான் ......!!!

ஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......
காளைகள் கூட அடங்காமல் ......
சீறிப்பாய்ந்தன  காளையை .....
அடக்குபவன் சீறிப்பாய் வான் ....
எனபதை மறந்து விடீர்களே .......???

போதும் உங்கள் அடக்குமுறை ......
இதற்கு மேல் அடக்கினால் ......
அடங்கிவிடும் எல்லாம் கவனம் .......!!!
தூபமிடாதீர்கள் இளைஞரின் ......
உணர்வுகளுக்கு தீயாக மாறினால் .....
தாங்கவே மாட்டீர்கள் ...............!!!

&
கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம் 

 

Link to comment
Share on other sites

அடுக்கு  மொழி பேசி .......
கவிதை எழுதும் நேரம் .....
இதுவல்ல -என்றாலும் .....
அடக்க நினைப்பவனை ....
அடுக்கு மொழியால் .....
சாட்டை அடி அடிக்கவே .....
அடுக்கு மொழியை ......
பயன்படுத்துகிறேன் ......!!!

ஜல்லியாய் பாயும் காளையை ......
கில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......
தமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....
என்று தப்பு கணக்கு போடும் .....
சில்லறைகளே - நாம் கல்லறை ....
என்றாலும் நிறைவேறாது .....
உங்கள் எண்ணம் ..............!!!

பாய்ந்து வரும் காளைகள் ......
எங்கள் நெஞ்சின் மேல் .....
பாய் வதில்லை நாங்கள் .....
நெஞ்சுசோடு அணைக்கவே .....
பாய் கின்றான் - அடக்காதீர் ....
அடக்கினால் உங்கள் நெஞ்சின் .....
பாய் வதற்கு வெகு தூரமில்லை .....!!!

&
கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம் 
 

Link to comment
Share on other sites

உணர்வின் வழி
தெரியுமா.....?
பீட்டவுக்கு......!!!

உணர்வின் வலி
தெரியுமா....?
பீட்டவுக்கு......!!! 

உணர்வின் மொழி
தெரியுமா.....?
பீட்டவுக்கு......!!! 

வழி, வலி, மொழி.....
தெரிந்தான்
இளைஞன்......
திரண்டான்.........
புறப்படான்.......
போராடுகிறான்.....
தமிழன்.................!!!

&
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்

Link to comment
Share on other sites

கை பேசியில் .....
அரட்டை அடித்த ....
இளைஞன்......
கைபேசி வெளிச்சத்தில் ....
மிரட்டி வருகிறான் 
அடக்கு முறையினரை .....!!!

&
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் அதிகம் படித்த பெண்களுக்கு மாப்பிள்ளை தேடுவதில் உள்ள சிக்கல்கள், புறோக்கர் கூறுவது என்ன? என்கிற தலைப்பில் நாம் பிரசுரித்த பிற்பாடு அன்பர் ஒருவர் அனுப்பி வைத்த கவிதை இது.

 

யாழில் அதிகம் படித்த பெண்களுக்கு மாப்பிள்ளை தேடுவதில் உள்ள சிக்கல்கள், புறோக்கர் கூறுவது என்ன? என்கிற தலைப்பில் நாம் பிரசுரித்த பிற்பாடு அன்பர் ஒருவர் அனுப்பி வைத்த கவிதை இது.

புரோக்கரும், யாழ்ப்பாண மாப்பிள்ளையும் உரையாடுவதாக இக்கவிதை அமைந்து உள்ளது.

யாழ்ப்பாண மாப்பிள்ளையின் கொழுப்பையும், எதிர்பார்ப்புகளையும் நக்கலாகவும், கிண்டலாகவும் வெளிப்படுத்தி உள்ளது.

வாரும் அண்ண வாரும் வாரும்

வார்த்தை ஜாலம் நூறும் கூறும்

ஆருக் கிந்த கிழடும் வேணும்

ஆட்டக் காரி போலும் போலும்

தென்ம ராட்சி பெண்கள் என்ன

தெய்வம் என்றோ எண்ணு கின்றீர்

என்னை பார்த்து வேணாம் எண்ட

எந்த பொண்ணு அண்ண உண்டு

பொண்ணும் கொஞ்சம் கற்ற தால

பொட்டி பாம்போ என்றும் ஐயம்

பண்ணும் கற்றாள் என்றே சொன்னீர்

பட்டம் கிட்டம் உண்டோ அண்ண

இந்த கால பெண்க ளுக்குள்

இன்னும் காதல் இல்லை என்றால்

சிந்திக் கத்தான் வேணும்அண்ண

செக்ஸில் ஏதும் வீக்கும் உண்டோ

அண்ணா பொண்ண பார்த்து டாக்டர்

அச்சா என்று கூற வேண்டும்

நண்பர் பொண்ண பார்த்து அண்ண

நக்மா என்று ஏங்க வேண்டும்

ஊருக் குள்ள கூட அண்ண

நூறு இலட்சம் தேறும் தேறும்

நீரும் கொஞ்சம் கூட்டி போடும்

நீட்டி போட்டா நல்லம் ஆகும்.

http://newtamils.com/

 

Link to comment
Share on other sites

ஓடுகின்ற நீரில்
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!

நீ 
வரும் பாதையை....
ஒழுங்கை ஒன்றில்...
ஒட்டி நின்று...
ஓரக்கண்ணால்...
பார்க்கிறேன் ....!!!

சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்

சிறகு இல்லாமல் பறக்க முடியும் காதல் செய் 
********
தனிமையிலும் இனிப்பது காதல்
*********
நினைவுகள் நாளாந்தம் சண்டையிடுவது காதல் 
********
கண்ணில்விதைதூவி மனதில் வளரும் மரம்காதல் 
********
தொட்டது நீ மனத்தால்  கெட்டது நான் ...!!!
*******
&
ஒரு வரியில் கவிதை 
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொப்புக்குள் வண்ண வண்ண முத்துக்கள் கொட்டியிருப்பது போல் கவிதைகள் ஒவ்வொன்றும்  முத்து முத்தாய் இருக்கு....! tw_blush:

Link to comment
Share on other sites

யாருக்கு யார்....
என்பதை இறைவன்....
சொல்லியிருந்தால்...
உன்னை நான்.....
விலக்கிஇருப்பேன் ....!!!

*****
அழகை.... 
நேசித்தவன் அறிவை... 
இழக்கிறான்......
பணத்தை .....
நேசித்தவன் பாசத்தை ....
இழக்கிறான்.....
குணத்தை 
நேசித்தவன் கோபுரமாகிறான்.....!!!

******

சின்ன சின்ன கவிதைகள் 
கவிப்புயல் இனியவன் 

8 minutes ago, suvy said:

சொப்புக்குள் வண்ண வண்ண முத்துக்கள் கொட்டியிருப்பது போல் கவிதைகள் ஒவ்வொன்றும்  முத்து முத்தாய் இருக்கு....! tw_blush:

மிக்க நன்றி நன்றி 

Link to comment
Share on other sites

இறைவனுக்கு என் எதிர்காலம் தெரியும்
வாழ்க்கைக்கு என் இறத்தகாலம் தெரியும்
இன்பத்தில் வாழஎன் நிகழ்காலத்துக்கு தெரியும் ....!!!

*******

எவ்வளவு பெரிய அலையாக இருந்தாலும்.....
கடல் கரைக்கு தெரியும் அலையின்.....
அன்பும் அரவணைப்பும் .....!!!

*******

சிந்திக்க சில வரிகள் 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

தமிழனுக்குக் கொம்பு முளைத்துவிட்டது!

கவிப்பேரரசு வைரமுத்து, படம்: ப.சரவணகுமார்

 

p34aa.jpgவாடிவாசல் திறந்துவிடும்
    வாழ்த்துகிறேன் தம்பி – இனி
கோடிவாசல் திறக்கும்உன்
    கொள்கைகளை நம்பி

தலைவர்களே இல்லாத
    கட்சியொன்று காட்டி – ஒரு
தலைமுறைக்கே வழிசொன்னீர்
     தமிழினத்தைக் கூட்டி

அடையாளம் தொன்மங்கள்
     அழிக்குமொரு கூட்டம் – உங்கள்
படையாழம் பார்த்தவுடன்
    பயந்தெடுத்த தோட்டம்

பீசாவும் பெப்சியுமே
     இளைஞர்கள் என்று – வாய்
கூசாமல் சொன்னவரைக்
     கொன்றுவிட்டீர் கொன்று

சொல்வாங்கி எல்லாரும்
    சூளுரைத்த பாட்டு - கடல்
உள்வாங்கிப் போனதடா
    உங்கள்குரல் கேட்டு

p34.jpg

ஒருகொம்பு ஆணென்றால்
    மறுகொம்பு பெண்தான் – அந்த
இருகொம்பின் மத்தியிலே
    இடுங்கியது மண்தான்

தண்பனியால் சுடுகதிரால்
    தமிழினமா சாகும்? – அட
தண்ணீரில் வீழ்வதனால்
     வெயில்நனைந்தா போகும்?

தெருவிருந்து போராடத்
    திறம்தந்தார் தமக்கும் – உம்மைக்
கருவிருந்து பெற்றாரின்
     கால்களுக்கும் வணக்கம்

p6aa7.jpgசதுராடிக் களம்கண்ட
     சகோதரிகாள் வணக்கம் – உங்கள்
எதிர்காலக் கருப்பைகள்
     நெருப்பைத்தான் சுமக்கும்

காளைகளை மீட்டெடுக்கக்
    களம்கண்ட கூட்டம் – இனி
நாளைகளை மீட்டெடுக்க
     நாணில்அம்பு பூட்டும்

வரம்புகளை யார்விதித்தார்
    வரட்டுமொரு யுத்தம் – எங்கள்
நரம்புகளில் ஓடுதடா
    ராஜ ராஜ ரத்தம்

போராடிச் சாதித்துப்
     புகழ்கொண்டீர் யாண்டும் – இனிச்
சாராயம் குறித்தும்நீர்
    ஆராய வேண்டும்

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: aeroplane and sky

பொழுது மங்கும் வேளையதில்

நீண்ட பறப்பில் இருந்த வான்பறவை

இலக்கில் இறங்கி ஓய்வெடுக்க..

நானும் காலாற இறங்கி அமர முதல்...

நீண்ட கியூவில் காத்துக்கிடப்பு.

 

உலகமெல்லாம்.. சுத்தி அடிச்ச போதும்

கண்டிராத கோலம்..

அந்த மண்ணில் மட்டும்

காக்கிகளும் பச்சைகளும் நீலங்களும்

சிவிலியன்கள் மத்தியில்

நல்லாட்சி என்றாங்கள்

இருந்தும்..

இன்னும் போர் ஓயவில்லை...?!

 

பண்பாட்டுக் குறைவோ

அதிகாரத் திமிரோ

தமிழன் என்ற முத்திரையோ..

இன்னும் அங்கு கெடுபிடிதான்..

மிரட்டல்களுக்கும் தட்டிப்பறிப்புகளுக்கும்

குறைச்சலில்லை. 

 

தெரிந்த சிங்களத்தைப் பேசி 

நானும்

சிங்களவனாகிக் காட்ட...

என் கொச்சைச் சிங்களம்

ராக்சி ரைவர்.. நீ தமிழா.. முஸ்லிமா

கேட்க வைச்சதில் வியப்புமில்லை.

Image may contain: sky, tree, outdoor, nature and water

 

எல்லாம் கடந்து

ஏசிக்கு மயங்கி இன்ரசிர்ரி ஏறி

இடிமுழக்க இழுவைகளோடு போய்

வடக்கே என்

ஊரை அடைகையில்..

யார் வரவேற்பாரோ

என்றிருக்க..

என் நேரம்

அங்கும் காக்கிகளும் பச்சைகளும் நீலங்களும்...

அவர் தம் கண்கள்

ஊருடுவிய பார்வைகளில்..

உலகோடு சேர்ந்தடிச்ச

வெற்றியின் வெறித்தனம் குறையவில்லை.

 

எல்லாம் போக

ஆட்டோவில் ஏறி

ஒரு உல்லாச உலா வருவம் என்றால்...

நாலு சந்திக்கொரு அலங்காரம்.

என்னடா சங்கதி என்று

எட்டிப்பார்த்தால்..

தமிழனை வெட்டி விழுத்தி கண்ட

வெற்றிப்பிரதாபங்கள் பிரதிபலித்தன.

யாரை நோவது தெரியவில்லை.!

 

ஊர் உள்ள போய்

வீட்டை காணியை பார்த்தால்..

அண்டை அயல் எல்லாம் மாறிக் கிடக்கு.

ஏட்டிக்குப் போட்டியாய் வாழ்ந்த அயல்வீடு

தரை மட்டமாய்க்கிடக்கு.

எல்லைக்கும் கதியாலுக்கும் சண்டை போட

அங்க எதுவும் இல்லை.

Image may contain: bird, plant, outdoor and nature

 

இரைக்கு ஏங்கும் நாரைகளும் கொக்குகளும் 

இப்ப குளம் குட்டை தேடுவதில்லை

வெற்றுக் காணிகளுக்குள்

இரை தேடுகின்றன.

அவைக்கும் இசைவாக்கத்தில்

குறைவில்லை...

தமிழர்களைப் போல

ஒட்டாத போதும் ஒட்டி வாழினம். 

எங்கும் ஒரு ஏக்கம்

மண்ணோடு கலந்து விட்டது

மக்கள் மனங்களில் பட்டு

கண்களில் தெறிப்பதில் குறைவேயில்லை. 

 

Image may contain: plant, flower, outdoor and nature

இருந்தாலும்..

தெற்கில் இல்லா வசதிகளோடு

தொடரூந்து நிலைகள் வடக்கில்..

மேற்குக்கு இணையாக

வசதிகளோடு வடக்கு..

இப்படி கண்டதில்

மனங்களில் ஒரு மாற்றம்.

அன்றாட தேவைகளுக்காக ஓடும் நிலையில்...

அரசியல் தேவைகள்

அருகிவிட்ட சிந்தனைகள்.

அடக்க வந்தவர்கள் கச்சிதமாய்

செய்து வரும் காரியங்கள்

மக்கள் தம் இசைவாக்கத்தில் பிரதிபலிக்க

தவறவேயில்லை. 

 

வாய்கள் மூடினாலும்

மனதுகள் மூடவில்லை.

கோலங்கள் மாறினாலும்

ஏக்கங்கள் மாறவில்லை. 

உள்ளே அடங்கிக் கிடக்கும் வேட்கைகளோடு

மக்கள்..

உச்ச இசைவாக்கம் தேடி.

நல்லிணக்கம்.. நல்லெண்ணம்.. சக வாழ்வு

கட்டாயக் கொட்டிலுக்குள்

மக்கள்..!

ஏக்கங்கங்களின் உறைவிடமாய்

என் சொந்த மண்..!

இன்று.!!

மக்கள் அரசியல் ஆசைகளில்

தேனும் பாலும் ஓடுவதாய்

மட்டும் தெரியவேயில்லை..!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 படங்களுக்கும் உள்ளதைச்சொல்லும் அழகான கவி வரிகளுக்கும் பாராட்ட்டுக்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

 படங்களுக்கும் உள்ளதைச்சொல்லும் அழகான கவி வரிகளுக்கும் பாராட்ட்டுக்கள் !

ஊர் வந்து போயிருக்கு போல் குருவி 

நல்லது அப்பப்ப வந்து போங்க ஏங்கி நிற்கும் வரிகளில் தெரிகிறது   வலிகள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

 

இருந்தாலும்..

தெற்கில் இல்லா வசதிகளோடு

தொடரூந்து நிலைகள் வடக்கில்..

மேற்குக்கு இணையாக

வசதிகளோடு வடக்கு..

இப்படி கண்டதில்

மனங்களில் ஒரு மாற்றம்.

அன்றாட தேவைகளுக்காக ஓடும் நிலையில்...

அரசியல் தேவைகள்

அருகிவிட்ட சிந்தனைகள்.

அடக்க வந்தவர்கள் கச்சிதமாய்

செய்து வரும் காரியங்கள்

மக்கள் தம் இசைவாக்கத்தில் பிரதிபலிக்க

தவறவேயில்லை. 

------

ஏக்கங்கங்களின் உறைவிடமாய்

என் சொந்த மண்..!

இன்று.!!

ஏக்கங்களை.... பகிர்ந்த விதம் அழகு, நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.