Jump to content

100-ஆவது நாள் பேரணியில் ஊடகங்களை கடுமையாக சாடிய டிரம்ப்


Recommended Posts

100-ஆவது நாள் பேரணியில் ஊடகங்களை கடுமையாக சாடிய டிரம்ப்

 
 

அமெரிக்க அதிபராக தான்பதவியேற்ற 100-ஆவது நாளை குறிக்கும் வகையில் நடந்த பேரணியில் ஊடகங்கள் மீது கடுமையான தாக்குதலை டொனால்ட் டிரம்ப் தொடுத்துள்ளார்.

ஊடகங்கள் மீது டிரம்ப் சாடல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஊடகங்கள் மீது டிரம்ப் சாடல்

பென்சில்வேனியாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய டிரம்ப், ஒன்றன் பின் ஒன்றாக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும், தன்மீதான விமர்சனங்களை எவ்வித தொடர்பும், புரிதலும் இல்லாத சில பத்திரிக்கையாளர்கள் எழுதும் பொய்யான செய்திகள் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிபர் அலுவலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுடனான இரவு உணவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்க்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

இதற்கு முன்னர், கடந்த 1981-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் இந்த விருந்தில் பங்கேற்கவில்லை.

http://www.bbc.com/tamil/india-39761529

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஊடகங்களால் தான் அவர் ரஷ்யன் ஆள் என்று மாட்டுபட்டவர் .அதான் இன்று சூடாக திருப்பி குடுத்தாங்கள் ட்ரம் நினைத்துவிட்டார் அமெரிக்காவை ரஸ்யா என்று .

Link to comment
Share on other sites

முதல் 100 நாள்களில் என்ன செய்தார் டொனால்டு ட்ரம்ப்? #Trump100

´
 

டொனால்டு  ட்ரம்ப்

லக அளவில் அதிக வல்லமை படைத்த பதவிகளில் ஒன்று அமெரிக்க அதிபர் பதவி. கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது, தேர்தலுக்கு முந்தையநாள் வரை அமெரிக்கா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலக நாடுகளுமே ஹிலரி கிளின்டன்தான் அந்நாட்டின் அதிபராக வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்திருந்தது. ஹிலரி பக்கமே சாய்ந்து அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்பட்டு, அமெரிக்காவின் முதல் பெண் அதிப‌ராக அவர் பொறுப்பேற்பார் என்று அவரை வரவேற்க மக்கள் தயாராக இருந்தனர். ஆனால், அனைவரின் எதிர்பார்ப்புகளையும், கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி, அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர், ரியல் எஸ்டேட் அதிபர் மீம்ஸ் நாயகன் என்பதையெல்லாம் தாண்டி, டொனால்டு ஜான் ட்ரம்ப் புதிய அதிபரானார். ஆம். இதுதான் அமெரிக்க மக்களின் மனநிலை. "ட்ரம்ப் போன்றவர்களைத்தான் அமெரிக்க மக்களுக்குப் பிடித்திருக்கிறது" என்ற கருத்துகள் உலகமெங்கும் பேசப்பட்டன.

அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப், ஜனவரி 20-ம் தேதி  பதவியேற்றார். பதவியேற்பு விழாவை புறக்கணிக்கப் போகிறோம் என அமெரிக்காவில் இருந்து நிறைய குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. பராக் ஒபாமா அதிபராகப் பதவியேற்றபோது, வெள்ளை மாளிகையையே மறைக்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் கூடியிருந்தது. ஆனால், டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றபோது அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் பங்கேற்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் பெருமளவுஇடம் காலியாகவே இருந்தது. ட்ரம்ப் பதவியேற்ற அன்று ட்விட்டரில் #ThankYouObama என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது, ட்ரம்புக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

டொனால்டு  ட்ரம்ப்

முதல் கையெழுத்து:

ட்ரம்ப் பதவியேற்றதும், முன்னாள் அதிபர் ஒபாமா அறிமுகம் செய்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து, மாற்றுத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கான உத்தரவில் தனது முதல் கையெழுத்தை போட்டார். அந்த உத்தரவில், "ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்வதுதான் எனது அரசின் கொள்கையாகும். இந்தத் திட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நிதிச்சுமையை அகற்றும் விதத்தில் மாற்றுத்திட்டத்தை அறிமுகம் செய்வோம். புதிய திட்டம் அறிவிக்கும் வரை தற்போதுள்ள திட்டத்தால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் களையும் விதத்தில் நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டார். ட்ரம்ப்-ன் முதல் கையெழுத்தே அமெரிக்க மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

சிலிக்கான் வேலி சிக்கல்:

ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின்போது கூறியது போலவே  அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அமெரிக்காவின் நலன் கருதி ஈராக், சிரியா உள்ளிட்ட ஏழு இஸ்லாமிய நாடுகளுக்கு இனி விசா கிடையாது என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தது, அந்த நாடுகளிடையே மட்டுமின்றி, உலக நாடுகள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாடுகளில் இருந்து யாரும் இனி அமெரிக்கா வர முடியாது. சிலிக்கான் வேலியில் உள்ள தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் பலருக்கு வேலை பறிபோகும் அபாயம் உள்ளது என அந்த நிறுவனங்களின் சி.இ.ஓ-க்கள் பொங்கினர். ஃபேஸ்புக் சிஇஓ சுந்தர் பிச்சை ட்ரம்ப்-ன் இந்த அறிவிப்பிற்கு கடும் அதிருப்தி தெரிவித்தார். "அமெரிக்கா புலம் பெயர்ந்தவர்களுக்கான நாடு, ட்ரம்ப் நீங்கள் தவறு செய்கிறீர்கள். திறமைசாலிகளை இழக்கப் போகிறீர்கள்" என்றார் அவர். 

டொனால்டு ட்ரம்ப்

ஆஸ்கர் அவமானம்:

ஏழு நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த தடையால் சிரியா நாட்டைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் காலித் கதீப் விருது வென்றும் விழா மேடைக்கு வர முடியாமல் போனது. ஆஸ்கர் மேடையில் நின்றுகொண்டு ஆஸ்கர் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் லைவ் ட்வீட் செய்தார். அவர் ட்ரம்புக்குத் தான் ட்விட் செய்தார். சரமாரியான விமர்சனங்களால் ஆஸ்கர் மேடையில் ட்ரம்ப்-ஐ கலாய்த்துத் தள்ளினார்.

சிரியா சோகம்:

சிரியாவில், அரசுப் படையினர் நடத்திய ரசாயனத் தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கிளர்ச்சியாளர்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், குழந்தைகள் உள்பட பொதுமக்களே பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்கா, சிரியா விமான தளங்களை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இது அதிபர் ட்ரம்ப் உத்தரவின்பேரிலேயே நடத்தப்பட்டது. மேலும், சீன அதிபருடனான ட்ரம்ப்-ன் சந்திப்புக்குப் பின் இந்தத் தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

போராட்டங்கள்:

அமெரிக்காவில் ட்ரம்ப் அதிபரானவுடன் 'ட்ரம்ப் எங்கள் அதிபர் இல்லை' என்ற போராட்டமும், 'ட்ரம்ப் கேர் நாட்டுக்கு நோயைத் தரும்' என்ற வாசகம் உள்ளிட்ட ட்ரம்ப்-க்கு எதிரான வாசகங்களுடன் கூடிய எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதிபர் பதவியிலிருந்து விலகிய பின்னர் ஒபாமா பங்கேற்ற முதல் நிகழ்ச்சியிலேயே 'அடுத்த தலைமுறை தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்' என சூசகமாகக் கூறியது ட்ரம்ப்-க்கு எதிரான கருத்தாகவே பார்க்கப்படுகிறது. 

டொனால்டு  ட்ரம்ப்

நம்பர் கேம்:

ஜனநாயகக் கட்சியினர், கனடா, நீதிபதிகள் என அனைவரையும் விமர்சித்து கண்டனத்துக்குள்ளான ட்ரம்ப், அமெரிக்க அதிபராக 100 நாட்களை நிறைவு செய்துள்ளார். அதிபராகப் பதவியேற்று இந்த 100 நாட்களில் ட்ரம்ப் தனது சொந்த ட்விட்டர் பக்கத்தில் 475 ட்வீட்களையும், அதிகாரப்பூர்வ அதிபர் பக்கமான @POTUS-ல் 492 ட்வீட்களையும் பதிவிட்டுள்ளார். மேலும் தனது சொந்த டிவிட்டரில் உள்ள பல ட்வீட்களை @POTUS பக்கத்திலும் ரீ-ட்விட் செய்கிறார். முன்னாள் அதிபர் ஒபாமா, தனது பர்சனல் பக்கத்திலிருந்து ஒரு ட்வீட்டைக் கூட ரீ-ட்விட் செய்ததில்லை. ஒபாமா அறிவித்த 9 திட்டங்களை ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். 100 நாட்களில் 80 நாட்கள் வெள்ளை மாளிகையில் தங்கியுள்ளார். அமெரிக்காவுக்கும் மெக்ஸிகோவுக்கும் இடையே சுவர் எழுப்புவேன் என்று கூறிய ட்ரம்ப், ஒரு செங்கலைக்கூட வைக்கவில்லை. இவரால் மூன்றாம் உலகப்போர் ஏற்படலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது. ட்ரம்ப் இதே நிலையில் தொடர்ந்தால், வரும் 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவியில் அவரது பெயர் கட்டாயம் இடம்பெறாத நிலை உருவாகும். சிறந்த அமெரிக்காவை மீண்டும் உருவாக்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். அதிபர் தேர்தலில் மீண்டும் ட்ரம்ப் போட்டியிட வேண்டுமானால், அமெரிக்காவுக்கு உருப்படியாக எதையாவது செய்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்பதை ட்ரம்ப் புரிந்து கொள்ள வேண்டும்!

http://www.vikatan.com/news/world/88033-a-short-note-on-100-days-of-donald-trump.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.