Jump to content

மீண்டும் பரபரக்கும் திருகோணமலை


Recommended Posts


மீண்டும் பரபரக்கும் திருகோணமலை
 
 

article_1493557165-Trinco-oil-storage-ta- கே.சஞ்சயன்

கடந்த பல ஆண்டுகளாகவே இலங்கை அரசியலில் துறைமுகங்கள் பற்றிய சர்ச்சைகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்று வந்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில், கொழும்பு துறைமுக நகரச் சர்ச்சை தீவிரமாக இருந்தது.   

அதற்குப் பின்னர் கொழும்புத் துறைமுகத்துக்கு சீன நீர்மூழ்கிகள் மேற்கொண்ட பயணங்களால் சர்ச்சைகள் எழுந்தன.  

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், துறைமுக நகரத் திட்டத்தை புதிய அரசாங்கம் இடைநிறுத்தியதாலும், அந்தத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் விடயத்தில் நீடித்த இழுபறிகளாலும் சர்ச்சைகள் எழுந்திருந்தன.   

அதற்குப் பின்னர், ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் சர்ச்சைகளுக்கு இன்னமும் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில் இப்போது திருகோணமலை துறைமுகம் தொடர்பான சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன.  

திருகோணமலை பற்றிய சர்ச்சைகள் இப்போது எழுந்திருப்பதற்குத் தனியே துறைமுகம் மட்டும் காரணமல்ல. அதனை அண்டியதாக சீனக்குடாவில் அமைந்துள்ள- பிரித்தானியர்களால் நிறுவப்பட்ட 99 பாரிய எண்ணெய்க் குதங்கள் தொடர்பான விவகாரமும் தான், இப்போது ஏற்பட்டுள்ள சூழலுக்கு இன்னொரு காரணம்.  

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் வழங்கி அபிவிருத்தி செய்யவுள்ளதைப் போலவே, திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிடம் வழங்கி அல்லது அதனுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் திட்டம் ஒன்று அரசாங்கத்திடம் இருக்கிறது. இதன் மூலம் ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்குவதால் ஏற்பட்டுள்ள சமநிலை மாற்றங்களை ஈடு செய்யலாம் என்று அரசாங்கம் கருதுகிறது.  

அடுத்து, சீனக்குடாவில் உள்ள 99 எண்ணெய்க் குதங்களை இந்தியாவுடன் இணைந்து, கூட்டு முயற்சியாக நிர்வகிக்கும் திட்டம் ஒன்றும் அரசாங்கத்திடம் இருக்கிறது.  

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வாங்கிக் குவித்த கடன்களால் நாடு பொருளாதார ரீதியாக தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு, இதுபோன்ற வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களை மாத்திரமே சாத்தியம் என்று அரசாங்கம் நம்பியிருக்கிறது.  

ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்க எடுக்கப்பட்ட முடிவும் சரி, திருகோணமலை விடயத்தில் இந்தியாவுடன் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளும் சரி, இதனை அடிப்படையாகக் கொண்டவை தான்.  

இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த புதன்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுகளின் முக்கியமான கருப்பொருளாக இருந்தது திருகோணமலை தான்.  

திருகோணமலை துறைமுகம் மற்றும் சீனக்குடா எண்ணெய்க் குதங்கள் இந்த இரண்டையும் இந்தியாவுடன் இணைந்து எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது குறித்தே பிரதான பேச்சுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.  

ஆனால், இந்த விடயத்தில் அரசாங்கம் எந்தளவுக்கு முன்னேற்றங்களைப் பெறமுடியும் என்பது முக்கியமான வினாவாக இருக்கிறது. அதற்குக் காரணம், சீனாவுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு இருப்பதைப் போலவே, இந்தியாவுடன் திருகோணமலை தொடர்பான உடன்பாடுகளைச் செய்து கொள்வதற்கும் எதிர்ப்புகள் காணப்படுகின்றன.  

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை, இந்திய நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அந்தத் திட்டத்தைக் கைவிடக் கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடக்கம், பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தன.  

இதனால் நாடெங்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அல்லோலகல்லோலப்பட்டன. ஒரு வழியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தொழிற்சங்கங்களுடன் பேச்சுகளை நடத்தி, சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு விற்கப் போவதில்லை, என்ற உறுதிமொழியைக் கொடுத்த பின்னரே, போராட்டம் கைவிடப்பட்டது. அதற்காக இந்தத் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டு விட்டது என்று அர்த்தமில்லை.   

சீனக்குடாவில் உள்ள 99 எண்ணெய்க் குதங்களில் ஒருபகுதி, 2002 ஆம் ஆண்டு இந்தியாவின் ஐஓசி நிறுவனத்துக்கு 35 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஐஓசி நிறுவனம் 15 எண்ணெய்க் குதங்களை மாத்திரம் பயன்படுத்தி வருகிறது.  

எஞ்சியுள்ள 84 எண்ணெய்க் குதங்களையும் அபிவிருத்தி செய்து பயன்படுத்துவது தொடர்பாகவே இழுபறிகள் ஏற்பட்டுள்ளன. இதில் 10 எண்ணெய்க் குதங்களை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கி விட்டு, எஞ்சிய 74 குதங்களை இந்தியாவுடன் இணைந்து கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.  

ஆனால், இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரையில் தெரியவரவில்லை. எவ்வாறாயினும், புதுடெல்லியில் பேச்சுகளை நடத்தும் போது, தொழிற்சங்கங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட வேண்டாம் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி எச்சரித்திருந்தார் என்று கூறப்படுகிறது.  

இன்னொரு பக்கத்தில், திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கும் அரசாங்கம் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.   

ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கவும், அதனைச் சமப்படுத்தும் வகையில் திருகோணமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரச்சினையைக் கிளப்பி விட்டிருந்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.  

அவரது தலைமையிலான கூட்டு எதிரணியினர், திருகோணமலை துறைமுக அபிவிருத்தித் திட்டத்துக்கும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கூட, திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்குத் தாரைவார்க்க அரசாங்கம் முற்படுவதாகவே குற்றம்சாட்டி வருகின்றன. 

 திருகோணமலையில் சீனக்குடா எண்ணெய்க் குதங்கள் தொடர்பாகவும், துறைமுகம் தொடர்பாகவும் எப்படியாவது இந்தியாவுடன் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் மே 12 ஆம் திகதி கொழும்புக்கு வரும் போது, இது தொடர்பான உடன்பாட்டைச் செய்யும் திட்டத்துடன் அரசாங்கம் இருக்கிறது. ஆனால், அமைச்சரவைப் பேச்சாளர் ஒப்பந்தங்கள் எதுவும் கைச்சாத்திடும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்று கூறியிருக்கின்றார்.  

எனினும், இந்த உடன்பாட்டைச் செய்து கொள்வதில் இந்தியா எந்தளவுக்கு அக்கறையுடன், ஆர்வத்துடன் இருக்கிறது என்பது முதலாவது பிரச்சினை.  

அரசாங்கத்துக்கு உள்ளேயும், உள்நாட்டிலும் எழுந்திருக்கின்ற எதிர்ப்புகளை, நல்லாட்சி எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது இரண்டாவது பிரச்சினை.  திருகோணமலை என்பது இந்தியாவுக்கு முக்கியமானது. சீனக்குடா எண்ணெய்க் குதங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்தியா விரும்புகிறது. ஏற்கெனவே தனது கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய்க் குதங்களின் பாதுகாப்புக் கருதி. திருகோணமலைத் துறைமுகத்தின் மீது வேறெந்த நாடும் கண் வைத்து விடக்கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருக்கிறது.  

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்டிருந்த முதலாவது பயணத்தின் போது, வெளியிட்ட கூட்டறிக்கையில், திருகோணமலையை பிராந்தியத்தின் எண்ணெய்க் கேந்திரமாக மாற்றுவதற்கு இந்தியா உதவும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பின்னர், திருகோணமலையை பிராந்திய எண்ணெய்க் கேந்திரமாக மாற்றுவதற்குரிய எந்த நடவடிக்கையையும் இந்தியா மேற்கொண்டிருக்கவில்லை.   

அதுபோலத்தான், திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம், இந்தியாவுக்கு நீண்டகாலப் பொருளாதார நலன்கள் கிடைக்காது என்பதால், அதிலும் இந்தியா ஆர்வம் காட்டவில்லை.  

பாகிஸ்தானில் குவடார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் சீனாவுக்குப் போட்டியாக, ஈரானின் சபஹார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.   

ஆனாலும், கடல்கடந்த துறைமுகங்களில் சீனாவைப் போல பெருமளவில் நிதியைக் கொட்டுகின்ற வல்லமை இந்தியாவுக்கு இன்னமும் இல்லை என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். சீனாவுடன் போட்டியிடும் ஆர்வம் இருந்தாலும், வரையறுக்கப்பட்ட நிதி வளம் இந்தியாவுக்கு ஒரு தடையாகவே இருக்கிறது.  

இலங்கையின் துறைமுகங்களின் மீது இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்பினாலும் கூட, அதற்காக பில்லியன் கணக்கான டொலர்களைக் கொட்டுவதற்கு தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. இது இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையில் திட்டங்களை முன்னெடுக்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களுக்கு முக்கியமானதொரு தடைக்கல்லாகும். 

அதுபோலவே, அரசாங்கத்துக்குள்ளேயும், திருகோணமலை தொடர்பாக இந்தியாவுடன் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிர்ப்புகள் இருக்கின்றன. இரண்டு பிரதான கட்சிகளின் கூட்டு அரசாங்கமே ஆட்சியில் இருக்கிறது என்பதை, இதுபோன்ற தருணங்களில், காணப்படுகின்ற வேற்றுமைகளே அப்பட்டமாகவே வெளிப்படுத்தி விடுகின்றன.  அரசாங்கத்துக்கு வெளியே உள்ள தரப்புகளும் திருகோணமலை விடயத்தில் அரசாங்கத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. திருகோணமலை என்பது, ஹம்பாந்தோட்டையை விட முக்கியமானது. திருகோணமலை எப்போதுமே உணர்வு பூர்வமான இடமாக இருந்து வந்திருக்கிறது.  

அழிவுகள் நிறைந்த நான்காவது கட்ட ஈழப்போர் கூட திருகோணமலையில் தான் ஆரம்பிக்கப்பட்டது. எனவே, திருகோணமலையை முன்னிறுத்தி இந்தியாவுடன் உடன்பாடுகளைச் செய்து கொள்ளும் அரசாங்கத்தின் முயற்சிகள் எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/195742/ம-ண-ட-ம-பரபரக-க-ம-த-ர-க-ணமல-#sthash.f0EFWDmF.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

 

அழிவுகள் நிறைந்த நான்காவது கட்ட ஈழப்போர் கூட திருகோணமலையில் தான் ஆரம்பிக்கப்பட்டது. எனவே, திருகோணமலையை முன்னிறுத்தி இந்தியாவுடன் உடன்பாடுகளைச் செய்து கொள்ளும் அரசாங்கத்தின் முயற்சிகள் எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/195742/ம-ண-ட-ம-பரபரக-க-ம-த-ர-க-ணமல-#sthash.f0EFWDmF.dpuf

இன்னும் கால்நூற்றாண்டில் இலங்கையின் பலபகுதிகளில் வெளிநாட்டவரின் ஆதிக்கமே நிலவும். சும்மா கிடைத்த விடுதலையை வைத்துத் தமிழரை அழித்துச் சிங்கள பெளத்த பூமியாக்கிற வெறியிலை கடனாளியான சிறீலங்கா துண்டு  துண்டா வித்துப்போட்டுக் கடைசியா கையைபிசையப்போகுது. போறபோக்கிலை இதுதான் நிலை. 

மீட்சிக்கான ஒருவழி : இலங்கையைச் சமஸ்டி ஆட்சிக்கு மாற்றுதல். இரண்டாவது வழி: தமிழரை தமது பாட்டில் விடுதல். இதனூடாக மட்டுமே இரு இனங்களுக்கும் வாழ்வு சிறக்க வழிபிறக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.