Jump to content

ஓட்டம்? ஜெ., பங்களா கொள்ளை; முக்கிய நபர் வெளிநாடு ஓட்டம்?


Recommended Posts

ஓட்டம்?
ஜெ., பங்களா கொள்ளை;
முக்கிய நபர் வெளிநாடு ஓட்டம்?
 
 
 

கோடநாடுக்கு கூலிப்படையினரை அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் மரக்கடத்தல், 'மாபியா' கும்பலின் தலைவன், முன்கூட்டியே வெளிநாடுக்கு தப்பியோடியது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

Tamil_News_large_1761497_318_219.jpg

மறைந்த முன்னாள் முதல்வர், ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறை தயாரித்து, கோர்ட்டில் சமர்ப்பித்த சொத்து பட்டியலில், வரிசை எண், 166ல் இடம் பெற்றிருந்தது, 900 ஏக்கர் பரப்புள்ள, கோடநாடு எஸ்டேட். ஜெ., மறைவுக்கு பின், இது யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த எஸ்டேட்டை விட, 99 அறைகள், 48 ஆயிரம் சதுர அடி பரப்பில், அங்கு பிரம்மாண்ட மாக கட்டப்பட்டுள்ள கோடநாடு பங்களாவே, தற்போது மர்ம தேசமாக மாறி யுள்ளது. ஜெ., மறைந்த பின், சசிகலா, இளவரசி, தினகரன் என, எல்லாரும் சிறைக்கு போய் விட்டதால், இது யாருடைய கட்டுப் பாட்டில் இருக்கிறது என்பதே, புரியாத புதிராக உள்ளது.

இந்நிலையில் தான், கடந்த, 24ம் தேதி, கோடநாடு எஸ்டேட் காவலாளி, ஓம்பகதுார் மர்ம கும்பலால் கொல்லப்பட்டார்; மற்றொருவர், கடுமையாக தாக்கப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும், ஜெ.,யிடம், கார் டிரைவராக வேலை பார்த்த கனகராஜ், சேலம் அருகே விபத்தில் உயிரிழந்தார்.

தேடப்பட்டு வந்த சயான் என்பவர், கேரள மாநிலம், பாலக்காடு அருகே, நேற்று காலை யில், விபத்தில் படுகாயமடைந்தார். இவரது

மனைவி, மகள் இறந்தனர்.இந்த தொடர் சம்பவங் களின் பின்னணியில், மன்னார்குடி குடும்பத்துடன் தொடர்பில் உள்ள,கேரளாவை பூர்வீகமாக கொண்ட நீலகிரியைச் சேர்ந்த, முக்கிய புள்ளி இருக்கலாம் என்ற சந்தேகம், போலீசுக்கு எழுந்துள்ளது.

சம்பவத்துக்கு முன்பாகவே, அவர் துபாய் கிளம்பிச் சென்றிருப்பது சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது. ஏனெனில், ஜெயலலிதா, சசிகலா, தற்போதுள்ள மேலாளர் ஆகியோர் தவிர, கோடநாடு பங்களாவை துல்லியமாக அறிந்த ஒரே நபர், அவர் தான்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட, 'ஜீவன்' உள்ள அந்த நபர், நீலகிரி மாவட்டம், கூடலுாரில் வசித்து வருகிறார். 15 ஆண்டுகளுக்கு முன், கூடலுார் வனப்பகுதியில், 'செக் ஷன் 17' நிலங்களில் உள்ள ஈட்டி மற்றும் தேக்கு மரங்களை வெட்டிக் கடத்தும், 'மாபியா'வாக வலம் வந்தார். 2008ல், ஜெ., பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் உதவியுடன், கோடநாட்டில் நுழைந்துள்ளார்.

மர வேலை செய்பவராக, ஜெ., மற்றும் சசிகலா வுக்கு அறிமுகமான அவர், கோடநாடு பங்களாவில், பர்னிச்சர் வேலைகளைச் செய்துள்ளார். நீலகிரி யில், கட்சியில் செல்வாக்கு மிக்கவராகவும் திகழ்ந்தார்.மன்னார்குடி குடும்பத்தினரிடம் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, கூடலுார் வனத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஈட்டி, தேக்கு மரங் களை வெட்டி கடத்தி, ஓவேலி என்ற ஊரில், மர அறுவை மில் நடத்தி வந்ததாக, வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அங்கிருந்து பர்னிச்சர்களாக மாற்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பிவந்துள்ளார்; கோவையிலும், ஒரு பர்னிச்சர் ஷோரூம் நடத்தி வருகிறார்.
 

இது குறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:


கோடநாடு பங்களாவின் அனைத்து ரகசியங்களை யும் அறிந்த நபரே, ஆட்களை வைத்து, பங்களாவில் இருந்த, 'ஏதோ' ஒன்றை கடத்தியிருக்க வாய்ப்புள் ளது. பங்களாவை துல்லியமாகத் தெரிந்துள்ளவர் என்பதோடு,கதவுகள் உட்பட மர வேலைகளையும்

 

செய்தவர் என்பதால், அவரிடம் அந்த கதவு களுக்கான கூடுதல் சாவிகள் இருந்திருக்கவும் வாய்ப்புண்டு.

காவலாளி கொல்லப்பட்ட அன்று, ஜெ., மற்றும் சசிகலா அறைகளிலிருந்து, 'ஏதாவது' கடத்தப்பட்டிருக்கலாம். இந்த விவகாரத்தில் தமக்கு தொடர்பில்லை என, வாதிட வசதியா கவே வெளிநாடு சென்றிருக்கலாம். அவர் திரும்பி வந்ததும் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

ஆவணங்களை அழிக்க முயற்சி?


கோடநாடு எஸ்டேட்டின் பங்குதாரர்களாக, ஜெ., - சசிகலா இருவர் மட்டுமே இருந்தனர். இவர்களில், ஜெ., இறந்து விட்டதால், 'சசிகலா வுக்கு மட்டுமே எஸ்டேட் சொந்த மாகுமா' என்ற கேள்வி உள்ளது.

ஆனால், ஜெ., இறப்பதற்கு முன், 'எஸ்டேட் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும், பொதுமக்களுக்கு செல்லும் வகையில், ஆவணத்தை தயார் செய்திருந்தார்' என்ற ஒரு தகவலும், நீலகிரி, அ.தி.மு.க., வட்டாரத்தில் பரவியுள்ளது.

இதன் காரணமாக, அந்த ஆவணத்தை அழிப் பதற்கு நடந்த முயற்சியாக, இந்த சம்பவங்கள் இருக்கலாம் என்ற ஒரு யூகத்திலும், போலீஸ் விசாரணை தொடர்கிறது.

- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1761497

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.