Jump to content

சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் குறித்து, வருமான வரித்துறை விசாரணையை துவக்கியுள்ளது.


Recommended Posts

gallerye_235600480_1761921.jpg

சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் குறித்து, வருமான வரித்துறை விசாரணையை
துவக்கியுள்ளது. இவரது, 'ஜாஸ்' சினிமா நிறுவனத்திற்கு, 1,000 கோடி ரூபாய் முதலீடு வந்தது பற்றியும், அவரது மலைக்க வைக்கும் அரசியல் தொடர்புகள் குறித்தும் விசாரிக்க திட்டமிட்டுள்ளது. சசிகலா, தினகரன், விவேக் என, அதிரடி நடவடிக்கை தொடர்வதால், சொத்துக்கள் பறிபோகுமோ என திவாகரன், வெங்கடேஷ் உள்ளிட்ட, சசிகலா சொந்தங்கள் பலரும் பீதியில் உள்ளனர்.

 

Tamil_News_large_176192120170430235541_318_219.jpg

அ.தி.மு.க.,வின் தலைமை பதவி மற்றும் முதல்வர் பதவியை கைப்பற்றும் வகையில், திட்டமிட்டு, அசுர வேகத்தில் காய் நகர்த்திய சசிகலா, தினகரன் ஆகியோர், அதே வேகத்தில் சிறைக்கு சென்றனர். 'இதனால், அவர்களின் குடும்ப ஆதிக்கம், இனி கட்சிக்குள் இருக்காது' என்ற நம்பிக்கை, அ.தி.மு.க.,வினரிடம் உருவாக துவங்கியது.

ஆனால், அ.தி.மு.க.,வின் அதிகாரபூர்வ பத்திரிகையான, 'நமது எம்.ஜி.ஆர்.,' நாளிதழில், வழக்கம் போல சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவான செய்திகள் வந்தபடி உள்ளன.
முதல்வர் பழனிசாமி செய்தியை விட, அவர்களின் செய்திக்கே, முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஜெயா, 'டிவி' நிர்வாகத்தை நேரடியாகவும், நமது எம்.ஜி.ஆர்., நாளிதழை மறைமுகமாக வும் கவனித்து வருபவர், விவேக் ஜெயராமன். இவர், சசிகலாவின் மறைந்த அண்ணன் ஜெயராமனின் மகன். இவரது தாய் இளவரசி, பெங்களூரு சிறையில், சசிகலாவுடன் அடைக்கப்பட்டுள்ளார்.

விவேக், அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராக உள்ளார். 2011ல், சசிகலாவின்

மொத்த சொந்தங்களையும் கட்சியை விட்டு நீக்கிய ஜெயலலிதா, விவேக்கை மட்டும் நீக்கவில்லை; போயஸ் கார்டனின் முகவரி யிலேயே, விவேக் உறுப்பினர் அட்டை வைத்துள்ளார்.எட்டு ஆண்டுகளுக்கு முன், ஜெ.,யிடமே உறுப்பினர் அட்டை வாங்கியவர் என்பதால், அவர் மூலமாக மறுபடியும், சசிகலா குடும்பத்தினர், கட்சிக்குள் நுழைய வாய்ப்புள்ள தாக, பன்னீர் அணியினர் சந்தேகிக்கின்றனர்.

எனவே தான், 'விவேக்கையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும்' என, பன்னீர் அணியினர், சசிதரப்பினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கட்சியை விட்டு ஒதுங்கி கொள்வதாக, தினகரன் அறிவித்துள்ள நிலையில், அவரது மைத்துனரான, டாக்டர் வெங்கடேஷ், தன் சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள, கட்சி நடவடிக்கைகளை, அடியோடு குறைத்து அமைதியாக உள்ளார்.

சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன், அக்கா மகன் பாஸ்கரன் உள்ளிட்ட மன்னார்குடி உறவினர்கள் யாருமே, தற்போது, அ.தி.மு.க.,வில் உறுப்பினர்களாக இல்லை. கோடி கோடியாக சேர்த்த சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள, இவர்களும் அடக்கியே வாசிக்கின்றனர்.

இதற்கிடையே, வருமான வரித்துறை, விவேக் மீது, தன் பார்வையை திருப்பியுள்ளது. 30 வயதைக் கூட எட்டாத விவேக், 1,000 கோடி ரூபாய் முதலீடு கொண்டதாக கூறப்படும், ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக உள்ளார்.
 

இதற்கான முதலீடு எங்கிருந்து வந்தது;


1,000 கோடி ரூபாய்க்கான பணப் பரிவர்த்தனை கள் எப்படி நடந்தன என்ற விபரங்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.'ஜாஸ் சினிமாஸ் உரிமையாளர் விவேக் அல்ல. அதில், சம்பளத்துக்கு பணி யாற்றுபவர் தான்' என கூறப்பட்டாலும், அரசி யல், சினிமா, தொழிலதிபர்கள் என, பலராலும் அணுக முடியாத உச்சத்துக்கு, விவேக் எப்படி உயர்ந்தார் என்பது, வருமான வரித்துறை

 

அதிகாரிகளை, கிறுகிறுக்க வைத்திருக்கிறது. டில்லி வரை நீண்டிருக்கும், விவேக்கின் அரசியல் தொடர்புகளும், மலைக்க வைக்கும் அளவுக்கு இருப்பதாக சொல்கின்றனர். இதனால், விரைவிலேயே, விவேக் சம்பந்தப் பட்ட நிறுவனங்களில், வருமான வரித்துறை சோதனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சசிகலாவின் தம்பியான திவாகரனும், விவேக்கிற்கு எதிரான வேலைகளில், தீவிரமாக இறங்கி உள்ளார். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, அடிக்கடி சந்திக்கும் ஒரே ஆள், விவேக் தான்.

திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த் உள்ளிட்டோர், சிறையில் சசிகலாவை சந்திக்க சென்ற போது, அவர் சந்திக்க மறுத்து விட்டார். இதில், ரொம்பவே நொந்து போன திவாகரன், விவேக்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத் துவத்தை கண்டித்து, குடும்பத்துக்குள்ளே எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளார்.

இதற்கு பதிலடியாக, விவேக்கும், திவாகர னுக்கு எதிராக கொந்தளித்துள்ளார். 'தினகர னுக்கு எதிராக செயல்படுவதாக சொல்லி, நீங்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டு இருக்கி றீர்கள். தினகரனோ, நானோ, கட்சிக்காரர்கள் யாரிடமும் சிபாரிசுக்காக பேசியதில்லை. ஆனால், நீங்களும், உங்கள் மகனும், அனைத்து அமைச்சர்களையும் போன் போட்டு நச்சரித்தீர் கள். உங்களால் தான் சசிகலாவிற்கு கெட்ட பெயர்' என, ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால், கடும் கோபத்துக்கு ஆளான திவா கரன், விவேக்கை அரசியலில் இருந்து அப்புறப் படுத்த, தீவிரமான வேலைகளில் இறங்கி உள்ளார். பன்னீர்செல்வம் தரப்பின் போர்க் கொடி, வருமான வரித்துறையின் கண் காணிப்பு, திவாகரன் உள்ளிட்ட உறவினர் களின் கோபம் என, பல விதங்களிலும் நெருக் கடி வளையத்தில், விவேக் சிக்கி உள்ளார். விரைவில் அவரால், தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது.

-- நமது நிருபர் - -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1761921

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,LSG 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) LSG     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) CSK 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) PSK 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி   CSK 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறானபெயருக்கு -2 புள்ளிகள் Riyan Parag  11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) DC ——— @ஈழப்பிரியன் அண்ணா, @கிருபன் ஜி @பையன்26 அன்புக்காக🙏. டெம்பிளேட்டுக்கு நன்றி @வாதவூரான்
    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்னை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.