Jump to content

அத்துமீறி உள்நுழைந்த வெளிநாட்டு படகை கைப்பற்றியது கடற்படை


Recommended Posts

அத்துமீறி உள்நுழைந்த வெளிநாட்டு படகை கைப்பற்றியது கடற்படை

 

 

காங்கேசன்துறை கடற்பகுதியில் அத்துமீறி உள்நுழைந்த வெளிநாட்டு படகொன்றை இன்று காலை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த படகு காங்கேசன்துறையிலிருந்து 12 கடல் மைல் தூரத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

 

மேலும்,குறித்த படகில் இந்தியவைச் சேர்ந்த 2 பேர், மியன்மாரைச் சேர்ந்த 14 பேர் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

download.jpg

 

Tags

http://www.virakesari.lk/article/19576

Link to comment
Share on other sites

மியான்மர் அகதிகள் உள்பட 30 வெளிநாட்டவர்களுடன் சென்ற இந்திய படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை

மியான்மர் அகதிகள் உள்பட 30 வெளிநாட்டவர்களுடன் சென்ற இந்திய படகை இலங்கை கடற்படை வீரர்கள் வழிமறித்து பறிமுதல் செய்தனர்.

 
மியான்மர் அகதிகள் உள்பட 30 வெளிநாட்டவர்களுடன் சென்ற இந்திய படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை
 
கொழும்பு:

இலங்கை கடற்படை வீரர்கள் வடக்கு ஜாஃப்னா பெனின்சுலாவில் உள்ள காங்கேசந்துரை கடற்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த படகு ஒன்று சென்று கொண்டிருப்பதாக தெரியவந்தது.

அந்த படகில் ஏராளமானோர் பயணம் செய்வது தெரியவந்தது. உடனே இலங்கை கடற்படையினர் அந்த படகை பறிமுதல் செய்தனர். அப்போது மியான்மர் நாட்டைச் சேர்ந்த 30 பேர் உள்பட 32 வெளிநாட்டவர்கள் இருந்ததை கண்டு பிடித்தனர். அவர்களை கைது செய்ததுடன், படகையும் பறிமுதல் செய்தனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மியான்மரில் நடைபெற்ற மோதல் காரணமாக இந்தியாவிற்குள் அகதிகளாக வந்தவர்களை, படகில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/30203225/1082873/Sri-Lanka-nabs-Indian-fishing-vessel-with-Myanmar.vpf

Link to comment
Share on other sites

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த 32 வெளிநாட்டவர்களுக்கு விளக்கமறியல்!

 

 

சட்டவிரோதமாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசித்த வெளிநாட்டவர்களை நாளைய (02) தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

unnamed__1_.jpg

காங்கேசன்துறை கடற்பரப்பில்  நேற்று (30) மதியம்  சட்டவிரோதமாக நுழைந்த 32 வெளிநாட்டுப் பிரஜைகளில், மியன்மார் பிரஜைகள் 30 பேரும் 2 இந்தியர்களும் உள்ளடங்குவதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

குறித்த படகு காங்கேசன்துறையிலிருந்து 12 கடல் மைல் தூரத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. சிறிய படகில் மிகவும் ஆபத்தான முறையில் இவர்கள் பயணித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் 9 சிறுவர்கள் காணப்படுவதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

unnamed__3_.jpg

இவர்கள் இலங்கைக் கடற்பரப்பினூடாக வேறுநாடுகளுக்கு சட்டவிரோதமாகத் தப்பிச் செல்ல முயற்சித்திருக்கலாம் எனவும் இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

unnamed__4_.jpg

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தெல்லிப்பளை வைத்தியாசலையில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். வைத்தியசாலைக்கு விஜயம் செய்து பார்வையிட்ட மல்லாகம் பதில் நீதவான் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் நாளையதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

unnamed__5_.jpg

unnamed__6_.jpg

unnamed__7_.jpg

unnamed.jpg

 

Tags

http://www.virakesari.lk/article/19593

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.