Jump to content

கொடநாடு காவலாளி கொலை வழக்கு: ரூ.200 கோடியை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது அம்பலம்


Recommended Posts

கொடநாடு காவலாளி கொலை வழக்கு: ரூ.200 கோடியை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது அம்பலம்

 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கொடநாடு எஸ்டேட்டுக்குள் ரூ.200 கோடி ரொக்கமாக இருப்பதாகவும், அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டப்பட்டதாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்

 
 
 
 
கொடநாடு காவலாளி கொலை வழக்கு: ரூ.200 கோடியை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது அம்பலம்
 
கோவை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 24-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதும், அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொள்ளை கும்பல் தாக்கியதில் காயமடைந்த மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் ஜெயலலிதாவிடம் கார் டிரைவராக பணியாற்றிய கனகராஜ் என்பவர் தான் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது நண்பரான கோவையை சேர்ந்த சயன் ஏற்பாட்டின் பேரில் கேரள மாநிலத்தை சேர்ந்த கூலிப் படையினர் உள்பட மொத்தம் 11 பேர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

அவர்களை பிடிப்பதற்காக கேரளா, சென்னைக்கு தனிப்படை விரைந்தது. போலீஸ் நெருங்கியதை அறிந்த கனகராஜ் தனது சொந்த ஊரான சேலத்துக்கு தப்பி சென்றார். உடனே தனிப்படை அங்கு விரைந்து சென்றனர். போலீஸ் துரத்துவதை தெரிந்து கொண்ட கனகராஜ் போலீசாரிடம் சரணடைய சென்ற போது கார் மோதி விபத்தில் பலியானார். இதேபோல கனகராஜின் நண்பரான சயனை போலீசார் தேடி சென்றனர். அவர் தனது மனைவி வினுபிரியா(27), மகள் நீனு(5) ஆகியோருடன் காரில் கேரளாவுக்கு தப்பி சென்ற போது பாலக்காடு அருகே விபத்தில் சிக்கினார். இதில் வினுபிரியா, நீனு ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த சயன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
201704301008061559_Copy%20of%20Untitled-
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கொடநாடு எஸ்டேட்டுக்குள் பாதுகாப்பு குறைக்கப்பட்டு இருப்பது கனகராஜிக்கு தெரிந்தது. மேலும், எஸ்டேட்டுக்குள் ரூ.200 கோடி ரொக்கமாக இருப்பதாகவும் அவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்த பணத்தை கொள்ளையடிப்பதற்காக கனகராஜ் தனது நண்பர் சயனுடன் சேர்ந்து திட்டம் வகுத்துள்ளார்.

சயனுக்கு திருச்சூரை சேர்ந்த ஹவலாகும்பலுடன் தொடர்பு உண்டு. அவர்கள் மூலம் கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி கனகராஜூம், சயனும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருச்சூர் சென்று ஹவலா கும்பலின் முக்கிய புள்ளியும், சாமியாருமான மனோஜ் என்பவரை சந்தித்து பேசி உள்ளனர். அவர் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி 3 கார்களில் 11 பேர் வந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய திருச்சூரை சேர்ந்த சந்தோஷ் சாமி, தீபு, சதீ‌ஷன், உதயகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கொள்ளை மூலம் கிடைக்கும் பணத்தில் பங்கு தருவதாக மனோஜ் ஆசை காட்டியதால் அவருடன் வந்ததாக கைது செய்யப்பட்ட 4 பேரும் வாக் குமூலத்தில் கூறி உள்ளனர்.

இந்த கொள்ளையில் திருச்சூரை சேர்ந்த ஜிதின் ராய், ஜம்சத், குட்டி என்ற ஜிதின் ஆகியோர் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் ஜிதின் ராய், ஜம்சத் ஆகியோரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

இவர்களிடம் இருந்து கொள்ளை சம்பவத்தில் பயன் படுத்திய ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மனோஜ், குட்டி என்ற ஜிதின் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மனோஜ் மீது கேரளாவில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

கடைசியாக கடந்த ஜனவரி மாதம் ஹவலா பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கைதாகி ஜெயிலுக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் சயன் மூலம் கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கும் திட்டத்தை வகுத்து அரங்கேற்றி உள்ளார். அவர் பிடிபடும் போது இந்த திட்டத்தின் பின்னணியில் வேறு யார்-யாரெல்லாம் உள்ளனர்? கொள்ளையடிக்கப்பட்டவை என்னென்ன? என்பது போன்ற பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் தெரிகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/30100805/1082813/Kodanad-guard-murder-case-Rs-200-crore-plan-to-plunder.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
    • 22 ம்திகதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கும் என செய்திகள் கசிந்துள்ளது. ஈரானின் அணு ஆலைகள் தான் இஸ்ரேலுக்கு கண்ணுக்குள் குற்றிக்கொண்டு இருக்கிறது  நீண்ட நாட் களாக . தாக்குதல் இடமும் அவ்விடமாக  இருக்க நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆயுதங்களை அமெரிக்கா கட்டம் கட்டமாக அனுப்பி விட்டு ஈரானின் எண்ணையையும் களவாக பெற்று கொள்கிறது. (ஆதாரங்களை அமெரிக்க ஊடகங்களில் தேட வேண்டாம்)  
    • ஈவிம் மிசின் குள‌று ப‌டிக‌ள்😏.............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.