Jump to content

தினகரனை போட்டு கொடுத்தது யார்?


Recommended Posts

தினகரனை போட்டு கொடுத்தது யார்?
 
 
 

இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்க,தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தபுகாரில், தினகரன் கைது செய்யப்பட்டு, சென்னை, பெங்களூரு, கொச்சி என, பல இடங்களுக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு வருகிறார்.

 

Tamil_News_large_176147020170430001448_318_219.jpg

இந்த வலையில், இவர் சிக்கியது எப்படி என்பது குறித்து, பல சுவாரசியமான தகவல்கள் டில்லியில் வலம் வருகின்றன. மன்னார்குடி கூட்டத்தில் பல கோஷ்டிகள்; அதில் சிலருக்கு, தினகரனை பார்த்தாலே பிடிக்காது. பண

பரிமாற்ற விவகாரம், ஹவாலா விஷயம் என, பலவற்றையும் தெரிந்த மன்னார்குடி ஆட்கள், தமிழகபோலீசுக்கு போட்டுக் கொடுத்துள்ளனர்.

தமிழக போலீசிலும் தினகரன் ஆதரவு,எதிர்ப்பு என, பல கோஷ்டிகள் உள்ளன. விஷயம் கிடைத்ததும், எதிர்ப்பு கோஷ்டியினர், டில்லிக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இப்படித்தான், தினகரன் கைது செய்யப்பட்டார் என, சொல்லப்படுகிறது. முதலில், தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி என, சொல்லப்பட்டது; இப்போது, தினகரன் ஹவாலா மூலம் பணம் பட்டுவாடா செய்தார் என,குற்றஞ்சாட்டப்பட்டு, ஒரு ஹவாலா தரகர் கைதுசெய்யப்பட்டுஉள்ளான்.

இந்த விவகாரம், தினகரனோடு நிற்காது. மேலும், சில பரபரப்பான விஷயங்கள் வெளியாகலாம் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறையில் உள்ள சசிகலாவிடம், ஹவாலா தொடர்பாக விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மற்றொரு பக்கம், பெங்களூரில்

 

தீர்ப்பு எழுத பணம் கொடுக்கப்பட்டதா எனவும் விசாரணை நடக்கிறதாம். ஹவாலா மூலம், இதற்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என, டில்லி போலீஸ் சந்தேகிக்கிறதாம்.

இந்த விசாரணை முழுவதுமாக நடந்தால், சசிகலா, யார் யாரையெல்லாம் பணத்தால் விலைக்கு வாங்கினார் என்ற விபரங்கள் வெளியாகும் என, தெரிகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1761470

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.