Jump to content

தினகரனிடம் விசாரணை முடிந்தது: மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றது குற்றப்பிரிவு போலீஸ்


Recommended Posts

தினகரனிடம் விசாரணை முடிந்தது: மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றது குற்றப்பிரிவு போலீஸ்

சென்னையில் டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனாவிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்களாக நடத்திய விசாரணை முடிவடைந்ததையடுத்து, அவர்களை மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

 
 
 
 
தினகரனிடம் விசாரணை முடிந்தது: மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றது குற்றப்பிரிவு போலீஸ்
 
சென்னை:

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

தினகரனை 5 நாட்கள் காவலில் எடுத்த போலீசார், விசாரணைக்காக கடந்த வியாழக்கிழமை சென்னைக்கு அழைத்து வந்தனர். இன்று அவரிடம் மூன்றாவது நாளாக விசாரணை நடந்தது. இன்று மாலையுடன் விசாரணையை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முடித்துக்கொண்டனர். பின்னர் அவரையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.
201704291827297899_ttv-one._L_styvpf.gif
தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் இன்று கொச்சி மற்றும் பெங்களூர் அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சென்னையில் நடந்து வரும் விசாரணையே 3 நாட்களை கடந்து விட்டது. எனவே அவர்களை கொச்சிக்கு அழைத்து செல்லும் திட்டத்தை போலீசார் கைவிட்டனர்.

இதற்கிடையே டி.டி.வி.தினகரனுக்கு வழங்கப்பட்டுள்ள 5 நாள் போலீஸ் காவல் திங்கட்கிழமையுடன் முடிகிறது. திங்கட்கிழமை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். அப்போது, அவரது காவல் நீட்டிக்கப்படுமா? அல்லது ஜாமீன் வழங்கப்படுமா? என்பது தெரியவரும்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/29182727/1082757/ttv-dinakaran-taken-to-delhi-again-after-3-day-investigation.vpf

Link to comment
Share on other sites

3 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணை முடிந்தது: தினகரனுக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க போலீஸ் முடிவு - சென்னையை சேர்ந்த 5 பேரிடம் விசாரிக்க சம்மன்

 
டிடிவி தினகரனை சென்னையில் நடைபெற்ற விசாரணைக்குப் பின் அவரது வீட்டில் இருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்ல தயாராகும் போலீஸார்
டிடிவி தினகரனை சென்னையில் நடைபெற்ற விசாரணைக்குப் பின் அவரது வீட்டில் இருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்ல தயாராகும் போலீஸார்
 
 

சென்னையில் 3 நாட்களாக நடத்தப் பட்ட விசாரணை முடிந்ததையடுத்து டிடிவி தினகரனை போலீஸார் மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டியுள்ள போலீஸார், அவற்றை நீதிமன்றத் தில் நாளை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதிமுக அம்மா கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் டெல்லி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், டெல்லியில் ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த 16-ம் தேதி இரவு கைது செய்தனர். முன்பண மாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடி யில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து டெல்லி போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சுகேஷ் கொடுத்த வாக்கு மூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகிய இருவரை யும் டெல்லிக்கு அழைத்து 4 நாட்கள் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீஸார், கடந்த 25-ம் தேதி நள்ளிரவில் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

போலீஸாரின் கோரிக்கையை ஏற்று தினகரன், மல்லிகார்ஜுனா இருவரையும் 5 நாள் காவலில் விசாரிக்க டெல்லி மாவட்ட நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதையடுத்து இருவரையும் கடந்த 27-ம் தேதி போலீஸார் சென்னைக்கு அழைத்துவந்தனர். அவர்களிடம் டெல்லி குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் சஞ்சய் ஷெகாவத் தலைமையிலான போலீஸார் 3 நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர்.

5 பேருக்கு சம்மன்

அடையாறில் உள்ள தினகரனின் வீட்டில் வைத்து அவரிடமும் அவரது மனைவி அனுராதாவிடமும் விசாரணை நடத்தினர். வீட்டில் சோதனையும் நடத்தப்பட்டது. அண்ணா நகரில் உள்ள மல்லிகார்ஜு னாவின் வீட்டிலும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை யின்போது, வழக்குக்குத் தேவை யான சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, ஆதம்பாக்கம் நிலமங்கை நகரில் வசிக்கும் தினகரனின் நண்பர் மோகனரங்கம், கொளப்பாக்கம் பிலிப்ஸ் டேனியல், திருவேற்காடு அருகே சுந்தரசோழபுரத்தில் வழக்கறிஞர் கோபிநாத் மற்றும் பாரிமுனை, பெரம்பூரில் வசிக்கும் 2 பேர் என 5 பேரின் வீடுகளிலும் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த 5 பேருக்கும் சம்மன் அனுப்பி டெல்லி வரவழைத்து விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள் ளனர்.

இதற்கிடையே, லஞ்சப் பணத்தை பரிமாற்றம் செய்த ஹவாலா தரகர் நரேஷ் என்பவரை டெல்லியில் போலீஸார் கடந்த 28-ம் தேதி கைது செய்தனர். அவர் மூலமாக சென்னை யில் இருந்து கொச்சி வழியாக டெல்லிக்கு ரூ.10 கோடி கொண்டு செல்லப்பட்டு சுகேஷிடம் தரப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நரேஷ் அனுப்பிய ரூ.10 கோடியை டெல்லியில் ஷாபைசால் என்பவர் பெற்று, இடைத்தரகர் சுகேஷிடம் கொடுத்துள்ளார்.

ஆதாரங்கள் சிக்கின

லஞ்சப் பணம் ரூ.10 கோடியை பரிமாற்றம் செய்த ஹவாலா தரகர்கள் நரேஷ், ஷாபைசால் ஆகியோர் சிக்கியிருப்பதால், அவர் களிடம் இருந்து இந்த வழக்குக்கு தேவையான முக்கிய ஆதாரங் களை டெல்லி போலீஸார் கைப் பற்றிவிட்டனர். இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் ஏற்கெனவே அனைத்து தகவல்களையும் வாக்குமூலமாக கொடுத்துவிட்டார். இதன்மூலம் டிடிவி தினகரனுக்கு எதிரான 90 சதவீத ஆதாரங்களை டெல்லி போலீஸார் கண்டுபிடித்துள் ளனர். இந்த ஆதாரங்களை நாளை (1-ம் தேதி) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க டெல்லி போலீஸார் முடிவு செய்திருப்பதாக கூறப்படு கிறது.

டெல்லி புறப்பட்டனர்

சென்னையில் விசாரணை முடிந்ததும் தினகரனையும், மல்லி கார்ஜுனாவையும் கொச்சி, பெங்களூரு அழைத்துச் சென்று விசாரிக்க போலீஸார் திட்டமிட்டி ருந்தனர். ஆனால், சென்னையில் நடந்த விசாரணையே 3 நாட்களை கடந்துவிட்டதால், இருவரையும் நேற்று மாலை விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். போலீஸ் காவல் முடிந்து இருவரையும் நாளை (1-ம் தேதி) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்ற னர்.

இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், லஞ்சம் வாங்க முயன்ற தேர்தல் அதிகாரி யார் என்று இதுவரை பெயர் வெளியிடப்படவில்லை. அவரை யும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் குரல் எழுந்து வருகிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/3-நாட்களாக-நடத்தப்பட்ட-விசாரணை-முடிந்தது-தினகரனுக்கு-எதிரான-ஆதாரங்களை-நீதிமன்றத்தில்-சமர்ப்பிக்க-போலீஸ்-முடிவு-சென்னையை-சேர்ந்த-5-பேரிடம்-விசாரிக்க-சம்மன்/article9674520.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.