Jump to content

லண்டன் - சீனா சரக்கு ரயில் 12,000 கிமீ பயணத்தை முடித்து சீனா வந்தடைந்தது


Recommended Posts

லண்டன் - சீனா சரக்கு ரயில் 12,000 கிமீ பயணத்தை முடித்து சீனா வந்தடைந்தது

 

லண்டனிலிருந்து சீனாவுக்கு சனிக்கிழமை வந்து சேர்ந்த சரக்கு ரயில் ஈஸ்ட் விண்ட். | படம். |ஏ.எஃப்.பி.
லண்டனிலிருந்து சீனாவுக்கு சனிக்கிழமை வந்து சேர்ந்த சரக்கு ரயில் ஈஸ்ட் விண்ட். | படம். |ஏ.எஃப்.பி.
 
 

மேற்கு ஐரோப்பாவுடன் தனது வர்த்தக தொடர்பை உயர்த்தும் நோக்கத்துடன் லண்டன் - சீனா சரக்கு ரயில் ’ஈஸ்ட் விண்ட்’ தனது 12,000 கிமீ பயணத்தை முடித்து கிழக்கு சீன நகரமான யிவூக்கு இன்று (சனிக்கிழமை) வந்து சேர்ந்தது.

உலகின் 2-வது மிக-நீளமான ரயில் தடமாகும் இது. இந்த ரயிலில் விஸ்கி, குழந்தைகளுக்கான பால் உள்ளிட்ட பொருட்கள் சீனாவுக்கு வந்திறங்கின.

தனது வர்த்தகத்தை உலகின் பல்வேறு திசைகளுக்கும் கொண்டு செல்லும் சீனாவின் மிகப்பெரிய திட்டமாகும் இது. அதே போல் பாகிஸ்தான் - சீனா ‘சில்க் ரோடு’ திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் பல உள்கட்டுமான திட்டங்களுக்கு சீனா திட்டமிட்டு வருகிறது.

இந்த சரக்கு ரயில் ஏப்ரல் 10-ம் தேதி விஸ்கி, குழந்தைகளுக்கான பால், மருந்துப் பொருட்கள், சில இயந்திரங்கள் உள்ளிட்டவையுடன் லண்டனிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ், ரஷ்யா, கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளைக் கடந்து 20 நாட்கள் பயணமாக சனிக்கிழமையன்று சீனாவின் யிவூ நகருக்குள் நுழைந்தது. இந்த நகரம் சிறு நுகர்பொருட்களுக்கான மொத்த விற்பனை மையச் சந்தையாகும்.

ரஷ்யாவின் ட்ரான்ஸ்-சைபீரியன் ரயில்வே தடத்தை விட இந்த தடம் நீளமானது, ஆனால் சீனா-மேட்ரிட் (2014) ரயில் பாதையை விட தூரம் குறைவானது.

சீனா ரயில்வே கார்ப்பரேஷன் மூலமாக இணையும் 15-வது புதிய சரக்கு நகரமானது லண்டன். விமானச் சரக்கு போக்குவரத்தைக் காட்டிலும் இது செலவு குறைவானது, மேலும் கப்பலை விட குறைந்த நேரமே எடுத்துக் கொள்கிறது.

கப்பலைக் காட்டிலும் 30 நாட்கள் முன்னதாகவே இந்த ரயில் தனது இடத்தை வந்தடைகிறது. சாதாரணமாக 18 நாட்களில் லண்டனிலிருந்து சீனாவுக்கு வருமாறு திட்டமிடப்பட்டது, ஆனால் இந்தச் சோதனை ஓட்டத்தில் 20 நாட்களாகியுள்ளது. இந்த ரயிலில் 88 ஷிப்பிங் கண்டெய்னர்களையே ஏற்றி வர முடியும், ஆனால் கப்பலில் 10,000 முதல் 20,000 கண்டெய்னர்களைக் கொண்டு வர முடியும்.

இந்தத் திட்டம் பொருளாதார ரீதியாக சரியானதுதானா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இப்போதைக்கு இதன் பொருளாதார லாப நஷ்டங்களைக் கூற முடியாது, சிறிது காலம் ஆன பின்பே கணக்கிட முடியும் என்று ஆக்ஸ்பர்ட் இகானமிக்ஸ் ஹாங்காங்கைச் சேர்ந்த ஹீ தியாஞ்சி என்ற நிபுணர் கூறுகிறார்.

சீனா ஏற்கெனவே ஜெர்மனிக்கு இத்தகைய சரக்கு ரயிலை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/world/லண்டன்-சீனா-சரக்கு-ரயில்-12000-கிமீ-பயணத்தை-முடித்து-சீனா-வந்தடைந்தது/article9674017.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

இந்த ரயிலில் விஸ்கி,

தண்ணி அடிக்கிறதில் எகாதிபத்தியமும் கம்னியூசமும்  தோழர்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீரில் பொருட்களை இடம்பெயர்த்துவது எப்போதும் இலகுவானது அதாவது சக்திச் செலவு குறைவானது.  ஆனால் சில உள் நகர்களில் தரைவழிப்பாதை மட்டுமே பொருத்தமானதால் ரயில் மூல நகர்த்தல் அவசியமாகலாம். உல்லாசப் பிரயாணிகளைக் கொண்டு செல்வதற்கே இத்தகைய முறைகள் சிறந்தவை.

Link to comment
Share on other sites

4 hours ago, putthan said:

தண்ணி அடிக்கிறதில் எகாதிபத்தியமும் கம்னியூசமும்  தோழர்கள்.....

ஆமா 

புத்தன் ஏன் இப்ப இவரை ஞாபகப்படுத்துறார் மை லார்ட் :grin:

200.webp#8-grid1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

st_20170120_train20a_2886360.jpg

12 ஆயிரம் கிலோமீற்றர்களை.... 20 நாட்களில் கடந்து, லண்டனிலிருந்து சீனா சென்ற ரயில்..!

பிரிட்டன்  மற்றும் சீனாவிற்கிடையே உலகின் இரண்டாவது மிக நீண்ட ரயில் பாதையினுடாக ’ஈஸ்ட் விண்ட்’ என்ற கொள்கலன் ரயிலானது 12 ஆயிரம் கிலோமீற்றர்களை, 20 நாட்களில் கடந்து லண்டனிலிருந்து சீனா சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

chin_2.jpg

ஈஸ்ட் விண்ட் ரயிலானது ஐரோப்பா மற்றும் சீனாவிடையே  வர்த்தக உறவை பலப்படுத்துவதற்காக கடந்த 10ஆம் திகதி லண்டனிலிருந்து தனது பயணத்தை தொடங்கியது.

chn3.jpg

குறித்த ரயிலானது பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ், ரஷ்யா மற்றும் கசகஸ்தான் உள்ளிட்ட நாடுகளைக் கடந்து 20 நாட்கள் பயணத்தை முடித்து இன்று சீனாவின் வர்த்தக நகரமான ஈவு நகரை அடைந்துள்ளதாக சீன ஊடகங்கள் தகவல் தகவல் பகிர்ந்துள்ளன.

அத்தோடு விமான போக்குவரத்தின் மூலம் ஏற்படும் அதிக செலவு, கப்பல் போக்குவரத்தின் மூலம் ஏற்படும் காலதாமதத்தை தவிர்த்து கொள்வதற்காக ரயில் போக்குவரத்து திட்டத்தில் சீன அரசு அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

City News.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.