Jump to content

பாகிஸ்தான் துறைமுகம் சீனா வசமானது! சீன கடற்படை ஆதிக்கம் அதிகரிக்கும்


Recommended Posts

பாகிஸ்தான் துறைமுகம் சீனா வசமானது! சீன கடற்படை ஆதிக்கம் அதிகரிக்கும்

 
 

சீனா வசமாகியுள்ள பாகிஸ்தான் குவாடர் துறைமுகம்

பாகிஸ்தானின் அரபிக்கடலின் கரையில் அமைந்துள்ள குவாடர் துறைமுகத்தைச் சீனா கையகப்படுத்தியுள்ளது. துறைமுகத்தை 40 ஆண்டுக் குத்தகைக்குச் சீன நிறுவனத்திடம் அளித்துவிட்டதாகப் பாகிஸ்தான் கப்பல் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் அறிவித்திருக்கிறார். 

சீனா தொடர்ந்து பாகிஸ்தானுக்குக் கடனுதவி செய்துவருகிறது. இதன் காரணமாக, ''சீனாவிடமிருந்து பெற்ற அதிகப்படியான கடனால் பாகிஸ்தான், தம்முடைய வருவாயில் பெரும்பகுதியைச் சீனாவுக்குக் கொடுத்தால் விரைவில் அது திவால் ஆகும்'' என்று அந்த நாட்டு வல்லுநர்கள் எச்சரிக்கும் சூழலில், சீனா - பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 62 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் சீனா முதலீடு செய்திருக்கிறது. சீனா - பாகிஸ்தான் சாலை திட்டத்தின் கீழ், சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் இருந்து பாகிஸ்தான் குவாடர் நகரம் வரையில் சாலை வசதி உருவாக்கப்படும். மேலும், இந்தப் பாதையை ஒட்டி ரயில் பாதை, தொழில்நுட்ப பூங்காக்களை ஏற்படுத்தச் சீனா திட்டமிட்டுள்ளது. 

துறைமுகத்தின் இயக்க வருவாயில் 90 சதவிகிதமும், வரியில்லாத் துறைமுகச் சேவை மூலம் கிடைப்பதில் 85 சதவிகிதமும் சீனா நிறுவனம் எடுத்துக்கொள்ளும். இதுதவிர, பல்வேறு வரிச் சலுகையும் சீனா நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகள்வரை இந்தத் துறைமுகத்தை இயக்கி, முழு லாபத்தையும் சீனா எடுத்துச்செல்லும். அதன்பிறகு, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் துறைமுகம் ஒப்படைக்கப்படும். 

இந்தத் துறைமுக இயக்கத்தின் மூலம், அரேபியாவை ஒட்டி உள்ள ஹர்மூஸ் நீரிணைப்புப் பகுதியில் செயல்பட்டுவரும் சீனக் கப்பல் படைக்கு, மிகச்சரியான தளமாகக் குவாடர் துறைமுகம் இருக்கும். அரபிக்கடல் பிராந்தியத்தில் தன்னுடைய கப்பற்படை ஆதிக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில்தான் தொடக்கத்தில் இந்தத் துறைமுகத்தை மேம்படுத்திக்கொடுக்கச் சீனா முன்வந்தது. தற்போது, 40 ஆண்டுகால ஒப்பந்தம் மூலம் அது நிறைவேறியுள்ளது. 

அடுத்ததாக, குவாடர் துறைமுகத்தைக் கையாளுவதன் மூலம், சீனாவின் சிஞ்சியாங் மாகாணம் வழியாகப் பொருட்களை மிக விரைவாகச் சீனாவுக்குள் கொண்டுவரலாம். அதேபோல், ஏற்றுமதியும் செய்ய முடியும். இந்தியா, மலேசியாவைச் சுற்றிப் பொருட்களை எடுத்துச்செல்லும் செலவு குறையும். 

அடுத்தகட்டமாக, இந்நிறுவனம் இங்கிருந்து பாகிஸ்தான் வழியாகக் குழாய் மூலம் கச்சா எண்ணெயை மத்திய கிழக்குச் சீனாவுக்குக் கொண்டுசெல்லத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், மலேசியாவை ஒட்டிய கடல் பகுதி வழியாகச் சுற்றிச் செல்லும் கப்பல் பயணத் தூரம் குறையும். 

இங்குக் கப்பல் படை தளம் அமைவது இந்தியாவுக்குப் பாதுகாப்பின்மையையும், பாகிஸ்தானுக்கு அதிகத் துறைமுக வருவாயையும் கொடுக்கும். அது வேறு வகையில் இந்தியாவுக்கு இழப்பாகவே இருக்கும். இதை எதிர்கொள்ள, வங்கதேசத்துக்கு உதவுவதுபோல், ஈரானின் சப்பார் துறைமுகத்தை இந்தியா கட்டமைத்துவருகிறது. இந்தத் துறைமுகம், குவாடர் துறைமுகத்தில் இருந்து 100-க்கும் குறைவான கடல் மைல் தொலைவில்தான் அமைந்திருக்கிறது. இந்தத் துறைமுகத்தின் மூலம், மத்திய ஆசிய நாடுகள் பயன்பெறும். சீனாவின் ஆதிக்கமும் கட்டுப்படுத்தப்படும். 

http://www.vikatan.com/news/india/87872-china-to-handle-pakistans-port-for-next-40-years.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடனுக்கு பக்கத்து நாட்டில் அம்பாந்தோட்டை துறைமுகமும்  அம்பாந்தோட்டை நகரசபையும் சேர்த்தே சிங்களவங்கள் சைனாகாரனுக்கு வித்த கதை தெரியாதாக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29.4.2017 at 1:28 PM, நவீனன் said:

பாகிஸ்தான் துறைமுகம் சீனா வசமானது! சீன கடற்படை ஆதிக்கம் அதிகரிக்கும்

 

2 hours ago, பெருமாள் said:

விகடனுக்கு பக்கத்து நாட்டில் அம்பாந்தோட்டை துறைமுகமும்  அம்பாந்தோட்டை நகரசபையும் சேர்த்தே சிங்களவங்கள் சைனாகாரனுக்கு வித்த கதை தெரியாதாக்கும் .

சேர்ந்து அழித்த நாதாரிகள் தங்களுக்குள் அடிபட்டு சாக வேண்டும்.
தர்மத்தின் நியதியும் அதுவே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.