Jump to content

இழுபறியாகும் இணைப்பு - சுற்றுப்பயணத்துக்குத் தயாராகும் ஓ.பி.எஸ்.!


Recommended Posts

இழுபறியாகும் இணைப்பு - சுற்றுப்பயணத்துக்குத் தயாராகும் ஓ.பி.எஸ்.!

 
 

பன்னீர்செல்வம்

.தி.மு.க இரு அணிகளின் இணைப்புப் பேச்சுவார்த்தை ஏப்ரல் 25-ம் தேதியே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இன்னும் நடக்கவில்லை. இணைப்புப் பேச்சுவார்த்தைக்கு இடையே, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க அம்மா அணி சார்பில் தாக்கல் செய்ய வேண்டிய பிரமாணப் பத்திரத்தைத் தயார் செய்யும் வேலைகளில் இப்போது அந்த அணி ஈடுபட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த மூன்று நாள் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் அந்த விஷயம்தான் முன்னிறுத்தப்பட்டு இருந்தது. இருந்தாலும் இரு அணிகளின் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று இரு அணிகளும் சொன்னாலும் முக்கியத் தலைவர்கள் சிலர் மனப்பூர்வமாக இணைப்புப் பேச்சுவார்த்தைக்கு இன்னும் தயாராகவில்லை. ஆனாலும் அவர்களுக்குள் ரகசிய பேச்சுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

பேச்சுவார்த்தைக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வெளிப்படையாக இரண்டு நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளன. ''கட்சியில் இருந்து சசிகலா மற்றும் தினகரனை முழுமையாக நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணைக்கு ஏற்பாடு செய்யவேண்டும்" என்ற கோரிக்கைகளைத்தான் அந்த அணி முன்வைத்துள்ளது. ஆனால், வேறுகோரிக்கைகள் பற்றி வெளிப்படையாக ஓ.பன்னீர்செல்வம் சொல்லாவிட்டாலும்... மேலும் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ''ஓ.பன்னீர்செல்வம் - முதல்வர் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர்; மதுசூதனன் - அவைத்தலைவர்; செம்மலை, மாஃபா பாண்டியராஜன், சண்முகநாதன் ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் என்றும், அதுபோக, துணைப் பொதுச்செயலாளர் பதவி இரண்டு உருவாக்கி, அதில் ஒவ்வோர் அணியிலிருந்தும் தலா ஒருவருக்கு அந்தப் பதவியைக் கொடுக்க வேண்டும்'' என்றும் அந்த அணி சொல்லியிருக்கிறது.

edappaasi palanisamy

எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் சொல்வது என்னவென்றால், ''122 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டு அ.தி.மு.க அம்மா அணியிடம்தான் முதல்வர், பொதுச்செயலாளர், பொருளாளர், அவைத்தலைவர் பதவிகள் இருக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் பதவி கொடுத்துவிடலாம். செம்மலை மற்றும் மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று பேசி இருக்கிறார்கள். வைத்திலிங்கத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியைக் கொடுக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி அணி திட்டமிட்டுள்ளது. இந்த அஜென்டாக்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணி இல்லை. அதனால்தான் சேலத்தில் பேட்டி கொடுத்த ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் மேட்டுர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான செம்மலை, ''பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு அக்கறை இல்லை. தேர்தலைச் சந்திக்க நாங்கள் ரெடி' என்று அதிரடியாகச் சொல்லி இருக்கிறார்.

இரு அணியினரின் ரகசிய பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் ஓ.பி.எஸ் கொஞ்சம் அப்செட் ஆகியுள்ளார். ''சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டால் உடனடியாக நாம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவிடலாம்'' என்று அவர் சொல்லியுள்ளார். இணைப்பு விவகாரம் இழுபறியாக நீடிப்பதால், தனது அணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கத் தொடங்கிவிட்டார் ஓ.பி.எஸ். தனது அணியின் ஆதரவாளர்களைச் சந்திக்க வெளிமாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணத் திட்டம் தொடங்கி இருக்கிறது. மே 3-ம் தேதி தூத்துக்குடியில் கட்சி நிர்வாகியின் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்கு வருமாறு ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்துள்ளார்கள். அங்கு வர ஓ.கே சொல்லி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அந்தத் திருமண நிகழ்ச்சி முடிந்த கையோடு தூத்துக்குடி மாவட்டத் தொண்டர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. முதல்கட்டமாக, 16 நாள்கள் சுற்றுப்பயணத்துக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/87867-hurdles-in-merging-the-factions-panneerselvam-plans-for-political-tour.html

Link to comment
Share on other sites

இரு அணிகளிடையே மறைமுகப் பேச்சுவார்த்தை - பொன்னையன் பகீர் தகவல்!

 
 

அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீனஸ் இல்லத்தில், மாஃபா. பாண்டியராஜன், மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, பொன்னையன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை, இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரையிலும் நடைபெற்றது.

Ponnaiyan


ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் பொன்னையன் செய்தியாளர்களிடம், “ஏதோ ஒரு மாவட்டத்தில் இரு அணிகளும் இணைவது குறித்துக் கூறிய கருத்தை, ஒட்டுமொத்த கருத்தாகக் கூறிவிட முடியாது. செம்மலை கூறியது, சேலம் மாவட்டத்தின் நிலை மட்டும்தான்.

இரு அணிகளுக்கும் இடையே  மறைமுகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பொதுச் செயலாளர்குறித்து நாங்கள் எந்தவிதக் கோரிக்கையும் வைக்கவில்லை. எங்கள் அணியினர் இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாகுறித்தும், அதை எப்படி சிறப்பாக நடத்துவது என்பதுகுறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இரு அணிகளும் இணைவதில், இயற்கையாகவே கால தாமதம் உண்டாகிவருகிறது. எல்லாம் நல்லபடியாக நடக்கும். பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கும். அதற்கான இணக்கமான சூழல் வரும். சசிகலா நீக்கம் குறித்து எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை" என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/87927-to-factions-had-indirect-talk-says-ponnaiyan.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.