Jump to content

லண்டனுக்கு அகதியாகச் சென்ற இளைஞன் தொழிலதிபராகிச் சாதனை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
லண்டனுக்கு அகதியாகச் சென்ற இளைஞன் தொழிலதிபராகிச் சாதனை! Top News 
[Friday 2017-04-28 19:00]
லண்டனுக்கு அகதியாகச் சென்ற யாழ்.இளைஞர் ஒருவர் தொழிலதிபராகி சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட இளைஞரே இவ்வாறு லண்டனில் தொழிலதிபராக முன்னேறியுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டனுக்கு அகதியாகச் சென்ற யாழ்.இளைஞர் ஒருவர் தொழிலதிபராகி சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட இளைஞரே இவ்வாறு லண்டனில் தொழிலதிபராக முன்னேறியுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.   

குறித்த இளைஞர், தான் சிறு பராயத்திலிருந்து எதிர் நோக்கிய இன்னல்கள் குறித்தும், தற்போது இந்த உயர் நிலைக்கு வருவதற்கு அவர் மேற்கொண்ட கடின முயற்சிகள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளார். “உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக ஐந்து வயதில் எனது குடும்பத்துடன் புகலிட கோரிக்கையாளர்களாக இலங்கையை விட்டுச் சென்றேன். இந்த அகதிப் பயணம், என் குழந்தை பருவத்தையும் வாழ்க்கையின் உயரிய கண்ணோட்டத்திற்கு வழிவகுத்தது. இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையாளராக 10 பெயர்கள், 15 கடவுச் சீட்டுகளில் சென்று இறுதியாக பிரித்தானியாவிற்குச் சென்றோம்.

அடிப்படை ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு வடமேல் லண்டனில் உள்ள பாடசாலையில் ஆரம்ப கல்வியை கற்றேன். இது ஒரு பெரிய சவாலாக இருந்தது, ஆனால் நான் அதை எதிர்கொண்டேன். கடின உழைப்பினாலும் இரவுகளிலும், ஆங்கிலத்தை கற்க ஆரம்பித்தேன். இருப்பினும் எனது முதல் தேர்வில் நான் தோல்வியடைந்தேன். பெற்றோர்களுக்கும் குறைந்த ஆங்கில அறிவு. எனவே ஆங்கிலம் தொடர்பில் அறிந்து கொள்வது எனக்கு சவாலாகவே அமைந்தது. பெற்றோருக்கும் ஆங்கில அறிவு குறைவு என்பதால் பிறர் பேசும் போது அதை மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. சில நேரங்களில் பெற்றோரின் வாடிக்கையாளர்களுடன் தொலைபேசியில் எனது அப்பாவைப் போன்று பேசி நடித்துள்ளேன்.

மொழிபெயர்ப்பு மற்றும் கடிதங்களை எழுதி நான் ஏனைய தமிழர்களுக்கு உதவி செய்து வந்தேன். இதனால் எனது ஆங்கில அறிவு கூடியதோடு, ஏனைய புது முயற்சிகளுக்கும் வழிவகுத்தது. எனக்கு சர்வதேச கல்வி அனுபவம் இருக்க வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினர். அவர்கள் என்னை இந்தியாவில் ஊட்டியில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலையில் படிக்க வைத்தனர். இந்த அனுபவம் என் வாழ்க்கையை மாற்றியது. இது கல்விக்கான முக்கியத்துவத்தை எனக்குக் கற்றுக் கொடுத்தது, வெற்றி தொடர்பில் உண்மையான பசி ஏற்பட்டது.

நான் உயர்தர கற்கை நெறிகளை மேற்கொள்ள மீண்டும் பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு வந்தேன்.அப்போது வயது 18 அப்போது. என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு எந்தக் குறிப்பும் இல்லை. சில சோதனை மற்றும் பிழைகளுக்குப் பிறகு, லண்டனில் உள்ள ஒரு முன்னணி பல்கலைக்கழகத்தில் கணக்கியல் பட்டம் பெற்றேன். நீண்ட இடைவேளைக்கு பிறகு கொலம்பியாவிற்கு வேலைவாய்ப்பு ஒன்றை தேடிச் சென்றேன். அங்கு பல மக்களை சந்தித்தேன். பின் கலாச்சாரத்தையும் மக்களையும் நேசித்தேன். வேலையில் எனது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் சில மாதங்கள் கழித்து, லண்டன் நகரத்தில் ஒரு தரகு நிறுவனத்தில் மீண்டும் பதவி வகித்தேன்.

மூன்று மாதங்களின் முடிவில், நான் வர்த்தகம் செய்யத் தயாராக இருந்தேன். சுவிஸ் நிறுவனமான UBS உட்பட மூன்று நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களாக செயற்பட்டேன். நிதி தொழில்நுட்பம் தொடர்பில் பணியாற்ற விரும்பினேன். ப்ரோடக்ட் தொடக்கத்தில் ஒரு வணிக மேம்பாட்டு மேலாளராக நியமனம் பெற்றேன். பின்னர், தலைமை நிர்வாகி என்ற விருதையும் பெற்றுக் கொண்டேன்” என குறித்த ஈழத்து இளைஞர் தெரிவித்துள்ளார்.

 

uk-tamil-280417-seithy.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளுக்கு அகதியாக வந்து முன்னேறியபின்.....

அகதி என்ற சொல்லை உச்சரிக்க வெட்கப்படும் எம்மக்கள் மத்தியில்.....

தம்பியின் உண்மைத்தன்மை மிகவும் வரவேற்கத்தக்கது.

உங்கள் அறிவும் திறமையும் சொந்த மண்ணிற்கும் உதவும் என நம்புகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

வெளிநாடுகளுக்கு அகதியாக வந்து முன்னேறியபின்.....

அகதி என்ற சொல்லை உச்சரிக்க வெட்கப்படும் எம்மக்கள் மத்தியில்.....

தம்பியின் உண்மைத்தன்மை மிகவும் வரவேற்கத்தக்கது.

உங்கள் அறிவும் திறமையும் சொந்த மண்ணிற்கும் உதவும் என நம்புகின்றோம்.

உங்களின் எதிர்பார்ப்பும் எங்களின் எதிர்பார்ப்பும் நிலைபெறவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பிரதர் தொடரட்டும் உங்கள் சாதனை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.