Jump to content

பிரபாகரனின் ஆசையை நிறைவேற்றத் தயார்! - ஆனந்தசங்கரி கூறுகிறார் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பிரபாகரனின் ஆசையை நிறைவேற்றத் தயார்! - ஆனந்தசங்கரி கூறுகிறார் 
[Friday 2017-04-28 19:00]
தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ் செயற்பட வேண்டுமென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஊடகவியலாளர் தராகி சிவராமின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக இருக்கிறது என்று, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ் செயற்பட வேண்டுமென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஊடகவியலாளர் தராகி சிவராமின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக இருக்கிறது என்று, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.   

தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இனிவரும் தேர்தல்களின் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடும். தமிழர்களின் ஒற்றுமைக்காக செயற்பட வேண்டுமென்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஊடகவியலாளர் தராகி ஆகியோரின் விருப்பம். இருந்தாலும், அவற்றினை நிர்ணயித்தவர்கள் ஜி.ஜி.பொன்னம்பலம் மற்றும் தந்தை செல்வா போன்ற மூதாதைய தலைவர்களாகும்.

தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்வரும் தேர்தலில் தனது சின்னத்தில் போட்டியிடும். இந்த கட்சியில் அனைவரும் கட்சி வேறுபாடின்றி செயற்பட முடியும். நாம் எந்த கட்சியையும் வெறுக்கமாட்டோம். தமிழர்களின் ஒன்றுமைக்காக இணைந்து செயற்படுவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றவர்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். மக்கள் இன்றும் வீதிகளில் இருந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் நிலமீட்பு போராட்டங்கள், அரசியல் கைதிகள் விடுதலை போன்றவற்றில் எத்தகைய அக்கறையும் காட்டாது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இணைந்து செயற்படுகிறது. மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும். அவ்வாறு தீர்க்க முடியாவிட்டால், என்னிடம் வந்தால், அதற்காக வழிமுறைகளை சொல்லித்தர முடியும். யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்திற்கு இங்கு வேலையில்லை.

இராணுவ முகாம்களை மூடி விட்டு செல்ல முடியும். இங்கே இராணுவம் தேவை தான் என்றால் ஆரம்பத்தில் இருந்த ஓரிரு முகாம்களில் இராணுவம் இருக்க முடியும். ஏனையவற்றினை மூடலாம். இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது சிறையில் இருந்த பாரிய குற்றங்கள் புரிந்துள்ளவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அவ்வாறான ஒரு நிலை இருந்தும், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் எதற்காக அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாதவர்கள் பதவி விலக வேண்டுமென்றும் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.http://www.seithy.com/breifNews.php?newsID=181369&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் இந்தாளையும் கொம்பு சீவி விடுவது இப்போது எங்களின் நிலைமைக்கு நன்மை பயக்கும் போல் உள்ளது .

போட்டிக்கு குரைப்பதுக்கு ஆள் இல்லாமையால் சம்சும் வாயை திறப்பினம் இந்தா இந்தா என்று gsbயை எடுத்துபோட்டான்கள் தமிழனுக்கு தீர்வு மட்டும் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

கொஞ்சம் இந்தாளையும் கொம்பு சீவி விடுவது இப்போது எங்களின் நிலைமைக்கு நன்மை பயக்கும் போல் உள்ளது .

போட்டிக்கு குரைப்பதுக்கு ஆள் இல்லாமையால் சம்சும் வாயை திறப்பினம் இந்தா இந்தா என்று gsbயை எடுத்துபோட்டான்கள் தமிழனுக்கு தீர்வு மட்டும் இல்லை .

நல்ல,  சுப்பர்  ஐடியா... பெருமாள். tw_blush:
"ஆனந்த சங்கரி  ஐயா...  சம்பந்தனை விட,   நீடுழி வாழ்க..."  :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

கொஞ்சம் இந்தாளையும் கொம்பு சீவி விடுவது இப்போது எங்களின் நிலைமைக்கு நன்மை பயக்கும் போல் உள்ளது .

போட்டிக்கு குரைப்பதுக்கு ஆள் இல்லாமையால் சம்சும் வாயை திறப்பினம் இந்தா இந்தா என்று gsbயை எடுத்துபோட்டான்கள் தமிழனுக்கு தீர்வு மட்டும் இல்லை .

 பொறுத்த எதிர்த்தரப்புகள் இல்லாதபடியாலை தான் சம்சும் கோஷ்டி தாங்கள் நினைச்சமாதிரி குத்தியாட்டம் போட வெளிக்கிட்டினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

 பொறுத்த எதிர்த்தரப்புகள் இல்லாதபடியாலை தான் சம்சும் கோஷ்டி தாங்கள் நினைச்சமாதிரி குத்தியாட்டம் போட வெளிக்கிட்டினம்.

பல்லைப்  புடிங்கின... பாம்பை, வைத்து..
வித்தை  காட்டிக்   கொண்டு  இருக்கிறாங்கள்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

 பொறுத்த எதிர்த்தரப்புகள் இல்லாதபடியாலை தான் சம்சும் கோஷ்டி தாங்கள் நினைச்சமாதிரி குத்தியாட்டம் போட வெளிக்கிட்டினம்.

சங்கரியை விட எத்தனயோ கேவலம் கெட்டதுகள் சம்சும் பக்கம் இருக்கினம் இந்தாளை உசுப்பி விட்டால் பழைய நாகம் போல் வாயலை விசத்தை வேண்டியவர்களுக்கு ஏத்தி விடும் இதனால் தமிழர் தரப்புக்கு நன்மையே .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.