Jump to content

திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி


Recommended Posts

திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி

 

( தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி 50 ஆண்டுகள் நிறைவடையும் இந்த ஆண்டில் , திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த பல்வேறு பரிமாணங்களை ஆராயும் பல கட்டுரைகளை தொடர்ச்சியாக பிபிசி தமிழ்.காம் வெளியிடுகிறது. அதில் முதல் கட்டுரை இங்கு பிரசுரமாகிறது-- பிபிசி தமிழ்)

அண்ணா பெரியார்படத்தின் காப்புரிமைARUNKUMARSUBASUNDARAM Image captionசமூக நீதிக்கு திராவிட ஆட்சிகளின் பங்களிப்பு

100 ஆண்டுகள் நிறைவெய்தியுள்ள திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அடையாளம் நீதிக்கட்சி ஆகும்.

மாகாணங்களுக்குக் குறைந்த அதிகாரங்களே வழங்கப்பட்ட நிலையிலும் 1921இல் ஆட்சி அமைத்த நீதிக்கட்சி அனைத்துத் தரப்பினருக்கும் கல்வி வேலைவாய்ப்புகளை வழங்கும் முதல் இடஒதுக்கீடு ஆணையை 1921இல் பிறப்பித்தது. 1927முதல்1947 வரை இடஒதுக்கீடு ஆணை பின்பற்றப்பட்டது.

ஆளுமைமிக்க ஐசிஎஸ் அலுவலர் கே.பி.எஸ்.மேனன் எழுதிய "இந்தியா:நேற்று-இன்று-நாளை" என்ற நூலில் நீதிக்கட்சியின் தலைவர்களின் பிராமணரல்லாத சமூகச் சிந்தனையை உணர்ந்த அன்றைய பெரும்பான்மையான பிராமண உயர் அலுவலர்கள் , தங்கள் பெயரோடு இணைத்திருந்த அய்யர், அய்யங்கார் பெயர்களை அரசாணைகள் வழியாக நீக்கிவிட்டனர், என்றார்.

இந்த இடஒதுக்கீட்டு ஆணையை 1950இல் பிராமணரான சம்பகம் ராஜன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நீக்கிவிட்டது.

பெரியார், அண்ணா, காமராசர் உள்ளிட்ட அனைவரும் போர்க் கோலம் பூண்டதால், இந்திய அரசியல் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்பட்டு இடஒதுக்கீடு கொள்கை மீண்டும் உறுதி செய்யப்பட்டது. 1990இல் வி.பி.சிங் ஆட்சியில் கொண்டு வந்த 27 விழுக்காடு இடஒதுக்கீடு ஆணை இன்று மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இடம் பெற வாய்ப்பு அளித்துள்ளது. இது திராவிட இயக்கத்தின் வெற்றியல்லவா?

மொழி, இன உரிமைகள், பகுத்தறிவு ஆகிய நோக்கங்களுடன் 1944இல் பெரியார் தலைமையில் தொடங்கப்பட்ட திராவிடர் கழகமும், 1949இல் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகமும்- மொழி, கலை, நாடகம், இலக்கியம், திரைப்படம் என அனைத்துத் துறைகளிலும் பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டதை யார் மறுக்கமுடியும்?

1957இல் சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்டு களம் கண்டது திமுக.

பின்னர், 1967இல் காங்கிரசை வீழ்த்தி ஆட்சி அமைத்த அண்ணா, சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம், பள்ளிகளில் இந்தி மொழியை அகற்றி தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகள் ஏற்பு, ஒரு ரூபாய்க்குப் படி அரிசித் திட்டம், அரசு அலுவலகங்களில் கடவுள் பட நீக்கம், சுயமரியாதை திருமணச் சட்டம், சென்னையில் ஏழைகளுக்குத் தீப்பிடிக்காத வீடுகள், கல்லூரி வரை இலவசக்கல்வி எனப் பல முற்போக்கான சட்டங்களும், திட்டங்களும் நிறைவேற்றினார்.

அண்ணா தொடங்கிய சமூக நலத் திட்டங்களை ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞரும், மும்முறை முதல்வராயிருந்த எம்ஜி.இராமச்சந்திரனும், ஐந்து முறை முதல்வராயிருந்த ஜெயலலிதாவும் மென்மேலும் வலிமைப்படுத்தினர்.

அண்ணா விரும்பிய மாநில சுயாட்சிக் கொள்கைகள் இன்று இந்திய அரசியலில் முதன்மையாகக் கருதப்படுவதற்கு திராவிட இயக்க ஆட்சிதான் காரணம்.

1969ஆண்டிலேயே முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு மத்திய-மாநில உரிமைகளை ஆய்வதற்கு நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து, பரிந்துரைகளைப் பெற்று, மத்திய அரசிற்கு அனுப்பியது திராவிட இயக்க ஆட்சியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடாகும்.

கருணாநிதிபடத்தின் காப்புரிமைGNANAM

அதிகாரங்கள் குறைவு, ஆனாலும் திட்டங்களுக்குக் குறைவில்லை

1983இல் இந்திராகாந்தி ஆட்சியிலமைக்கப்பட்ட நீதிபதி சர்க்காரியா குழு, "அளவுக்கு மீறிய அதிகாரக் குவியல்களால் மத்திய அரசிற்கு இரத்தக் கொதிப்பும் மாநில அரசுகளுக்கு இரத்தசோகையும் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். இதன் விளைவு- திறமையின்மையும், நோயும்தான் இதன் வெளிப்பாடாக உள்ளன. உண்மையில் அதிகாரக் குவியல் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாகத் தீமைகளைப் பெருக்கியுள்ளது" என்று கூறியது.

2000இல் வாஜ்பாய் ஆட்சியிலமைக்கப்பட்ட நீதிபதி வெங்கடாச்சலய்யா அரசமைப்புச் சட்டத்திருத்தக் குழுவின் பரிந்துரையில்(2003இல்) "வலிமையான ஒரு மத்திய அரசம், வலிமையான மாநில அரசுகளும் அமைவதால் பிளவு ஏற்படாது, இரண்டுமே வலிமையாக அமைய வேண்டும், இன்றைக்குக் காணப்படுகிற பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் அதிகாரக் குவியலும், அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதுமே" எனச் சுட்டிக் காட்டியது.

இந்த அரசமைப்புச்சட்டம் வழியாக குறைந்த, குறைக்கப்பட்டு வருகிற மாநில அதிகார எல்லைக்குள்ளிருந்து திராவிட இயக்கம் சமூகப் பொருளாதாரத் துறைகளில் பல எடுத்துக்காட்டான திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.

இந்நிலையில் மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் உண்மையான கூட்டாட்சியியல் மக்களாட்சி முறை மலர்வதற்கு இவ்வல்லுநர் குழுக்களின் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது இந்திய நாட்டு ஒற்றுமைக்கு வழிவகுக்கும். இதைத்தான் திராவிட இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

திராவிட இயக்க ஆட்சிக்காலங்களில் பொருளாதார, சமூக நலத்திட்டங்கள் சிறந்த முறையில் நிறைவேற்றப்பட்ட காரணங்களால்தான் தமிழ்நாடு வளர்ந்த மாநிலமாக இருக்கிறது.

மத்திய நிதிக்குழுவின் நிதிப்பகிர்வினால் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதியாதாரங்கள் தொடர்ந்து குறைந்து வந்தபோதும் மானுட மேம்பாட்டுக் குறியீடுகளில் தமிழ்நாடு இந்தியாவின் 14 பெரிய மாநிலங்களில் முதல் மூன்று இடங்களில் தொடர்ந்து இருந்து வருகிறது.

2001ல் வாஜ்பாய் ஆட்சியில் வெளி வந்த மானுட மேம்பாட்டு அறிக்கை தமிழ்நாட்டினுடைய மக்கள் தொகை கட்டுப்பாடு, சத்துணவு போன்ற சமூகத் திட்டங்களின் வெற்றிகளைப் பாராட்டியுள்ளது.

பின்னர் 2011இல் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அளிக்கப்பட்ட மானுட மேம்பாட்டு அறிக்கை தமிழ்நாட்டின் சமூகநலத் திட்டங்களைப் பாராட்டியுள்ளது.

அமர்த்தியா சென், ஜீன்டிரேஸ் எழுதிய 'நிலையில்லாத புகழ்-இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்' நூலில் பஞ்சாப், அரியானா மாநிலங்களைவிட பெண்கள், குழந்தைகள் நல வளர்ச்சியில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது (பக்77), இவ்வகையான சமூக-பொருளாதாரக் காரணிகளை ஒப்பிட்டு தமிழ்நாடு வளர்ச்சியடைந்த அய்ரோப்பிய நாடுகளோடு சமநிலையில் உள்ளது என்கின்றனர்.

ஊழலைக் காட்டி வளர்ச்சியை மறைக்கக் கூடாது

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு, உள்ளாட்சியில் 33% இடஒதுக்கீடு கலைஞர் கருணாநிதி ஆட்சியில் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில்தான் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படுகிற பொதுச்செலவு 44% அளவிற்குச் சமூக மேம்பாடு, சமூகநலத் துறைகளுக்குச் செலவிடப்படுகிறது. உலகளவில் உள்ள பொருளாதார அறிஞர்கள் தனிநபர் வருமானம் மட்டும் ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் வளர்ச்சியை எடுத்துரைக்காது, அடிப்படை மானுடத் தேவைகளை நிறைவேற்றினால்தான் பொருளாதார வளர்ச்சியின் பயன் மானுட முன்னேற்றத்தில் முடியும் என்கின்றனர்.

2016 ஐக்கிய நாடுகள் மன்றத்தால் அளிக்கப்பட்ட மானுட மேம்பாட்டு அறிக்கையில் வளர்ச்சிக் குறியீட்டு வரிசைப்பட்டியலில் இந்தியா 131 இடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, இவ்வறிக்கையில் இடஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றினால்தான் தாழ்த்தப்பட்டவர்களின் வளர்ச்சி உறுதி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது திராவிட இயக்கம் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் சமூகப் பொருளாதாரத் திட்டங்களுக்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரமே ஆகும்;.

1990இல் உலகமயமாதல் கொள்கை பின்பற்றப்பட்ட பிறகு, இந்தியாவில் ஊழலும் முறைகேடுகளும் எல்லா மாநிலங்களிலும், எல்லா கட்சிகளிலும் பெருகி வருகிறது. தமிழ்நாடு மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல.

இருப்பினும், எதிர்கால திராவிட இயக்கத் தலைமை நேர்மையான அரசியலை நிலைநிறுத்துவதற்கு முன்வரவேண்டும்.

திராவிட அரசியலை விமர்சிப்பவர்கள் தமிழ்நாடு பெற்றுவரும் தொடர் வளர்ச்சியையும், மானுட மேம்பாட்டுக் குறியீடுகளையும், செய்த சாதனைகளையும் மேற்கூறிய ஒரு காரணத்தைக் குறிப்பிட்டு மறைப்பது சரியான திறனாய்வன்று.

( இக்கட்டுரை ஆசிரியர் ,தமிழ் நாடு திட்டக்கமிஷனின் முன்னாள் துணைத் தலைவர். )

http://www.bbc.com/tamil/india-39541282

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.