Jump to content

காலடியில் பொக்கிஷம் – மதுரை குடைவரைக் கோவில்கள்


Recommended Posts

காலடியில் பொக்கிஷம் – மதுரை குடைவரைக் கோவில்கள்

 
samanar-hills-1-380x210.jpg
 
 
 
samanar-hills-1-1024x520.jpg

 

  

என் பயணக் கட்டுரைகளை வாசித்த முகம் தெரியாத தோழர் ஒருவர், அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார். (எப்படியும் பாராட்டுவார் என்று முகம் முழுதும் பற்களாக பேசத் தொடங்கினேன்.)

சில பல விசாரிப்புகளுக்கு பின் நீங்கள் மதுரையா? என்றார். ஆம் என்றேன் மதுரையை சுற்றியுள்ள குடைவரைக் கோயில்களை பார்த்தது உண்டா? என்றார், நான் சற்று பந்தாவாய்  ஓ! ஒத்தக்கடை யானை மலை, திருப்பருங்குன்றம் என்று மேதாவித்தனம் காட்டினேன்.

samanar-hills-e1489564667901.jpg

சமணர் மலை மதுரை (vivaciousanushri.files.wordpress.com)

கீழவளவு பஞ்ச பாண்டவர் மலை, பொக்கிஷ மலை, அரிட்டாபட்டி மலையை பார்த்தது உண்டா? என்றார், இல்லை என்றேன். உலகம் சுற்றும் எண்ணம் சிறந்ததுதான்! ஆனால் சொந்த உரைப்பற்றி தெரிந்த பின் சுற்றலாமே என்றார்.

அதற்குப் பின் அவர் பேசிய எதுவும் காதுகளில் கேட்கவில்லை. எப்படியோ சமாளித்து அலைபேசியை வைத்து விட்டேன். ஆனால், எந்த வேலையும் ஓடவில்லை எனக்கு,இரண்டு உடைகளை மட்டும் எடுத்துக்கொண்டு நண்பர்களிடம் கூடச் சொல்லாமல் 10 மணிநேர பயணத்திற்குப்பின் வீட்டை அடைந்தேன்.

விடியற்காலையில் யார் கதவை தட்டுகிறது? என்ற சந்தேகத்தில் கதவை திறந்த அம்மாவுக்கு அதிர்ச்சி, என்னாச்சுப்பா! என்று பதறினாள். காரணம், சினிமாவில் இயக்குனர் ஆகவேண்டும் என்று சென்னை வந்தபின் குலதெய்வ வழிபாடு, உறவினர் திருமணம் என்று எதற்கும் ஊருக்கு வராத மகன், இப்படி வந்து நிற்கிறானே என்ற பயம் அம்மாவின் குரலில் தெரிந்தது.

அரிச்சந்திரனின் 2017இன் பிரதிநிதி என்ற நினைப்புடன் குடைவரைக் கோவில் தேடி வந்ததை சொல்ல, அடுத்த அரைமணி நேரத்திற்கு என் அம்மா திட்டிய வார்த்தைகளை வாசகர்கள் நலன் கருதி நீக்கி விட்டேன். (துடைப்பம் தேடியது தனிக்கதை) ஒரு வழியாக விடிந்ததும் அம்மாவின் கண் படாமல் நண்பனுடன் பயணம் ஆரம்பமானது.

நண்பனிடம் பஞ்ச பாண்டவர் மலை போவோம் என்றதும், நீதான் “தண்ணி” அடிக்கமாட்டியே? அங்க எதற்கு என்றான்.  முறைத்தபடியே ஊர் வந்த வரலாறு சொல்லிகொண்டு வாகனத்தை செலுத்த, மேலூரில் இருந்து 13 கி.மீ தொலைவில்தான் இருந்திருக்கிறது மலை. எப்படி தவறவிட்டோம் என்ற கேள்வியுடன் மலையேறினோம்.

Samanar-Hills-1-e1489564538866.jpg

பஞ்சபாண்டவர் மலை/சமணர் மலை மதுரை (visittnt.com)

குறைந்த அளவிலான சிற்பங்கள் தான் செதுக்கப்பட்டிருந்தாலும் அனைத்தும் புடைப்புச் சிற்பங்கள், அந்த மலை குடையப்பட்ட விதம் பம்பரம் போன்ற காட்சியைத் தந்தது, மலையின் உள்ளே படுக்கைகள் போன்ற அமைப்புக்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. அருகில் ஆடு மேய்த்த பெரியவரை அழைத்து விசாரித்தோம்.

“தம்பி கொஞ்ச வருடங்களுக்கு முன்னாடி, இந்த மலையில் சில கல் தூண்களை கட்டி மலையை பாதுகாக்கறோம்-னு சொன்னாங்க. (ஆம் தொல்லியல் துறை வைத்த கல் தூண்கள் இருக்கிறது மற்றபடி எந்த வகையான பாதுகாப்பும் இல்லை! மது குடிக்கும் இடமாக மாறி உள்ளது என்பதை அங்கு கிடக்கும் கண்ணாடிக் குப்பிகளை வைத்து ஊகித்துக்கொள்ளலாம்). இதற்காகத்தான் நண்பன்நீதான் “தண்ணி” அடிக்கமாட்டியே? என்று கேட்டிருக்கிறான்) அங்க வந்த அதிகாரி ஒருத்தர்தான் சொன்னாரு இந்த மலையில் இருக்கும் சிற்பங்கள் 2,300 ஆண்டுகள் பழமையானது என்று, இங்க சமணத் துறவிகள் தங்கி பாடம் படுச்சாங்களாம், சொல்லியும் குடுத்தாங்களாம்! அவுங்க தங்கறதுக்குதான் இந்த படுக்கைகள்” என்றார்.

Untitled-design-171-e1489564610119.jpg

பிராமி தமிழ் எழுத்துக்கள் (kowthamkumark.files.wordpress.com)

அங்கு புரியாத மொழியில் எதோ எழுதி இருப்பதை காட்டி இது பற்றி எதாவது தெரியுமா? என்றோம்.

“இப்ப இருக்க தமிழுக்கு முன்னாடி இப்படித்தான் இருந்துச்சாம்! பேர் கூட பரமி-னு எதோ சொன்னாங்க” என்றார்,

நண்பன் குறுக்கிட்டு “பிராமி” தமிழ் எழுத்துக்களா? அய்யா என்றான், ஆமாப்பா என்றார். ஆனால் அத்தனை எழுத்துகளும் பக்க நேர்மாறலாக இருக்கிறது கண்ணாடியில் பார்த்தால் நேராக தெரிகிறது. எதற்காக இப்படி எழுதியுள்ளார்கள் என்று தெரியவில்லை.

இந்த இடம் சமணத் துறவிகள் கல்வி பயிற்றுவித்த இடம், பின் மக்கள் பயன்படுத்தும் இடமாக மாறி உள்ளது என்பது புரிந்தது, “நீங்க அரிட்டாபட்டி போங்க தம்பி அங்க கோயிலே உள்ளது” என்றார் அந்த அய்யா, உடனே அரிட்டாபட்டி சென்றோம்.

மேலூரில் இருந்து 10 கி மீ தூரத்தில் உள்ளது அரிட்டாபட்டி. ஊருக்குள் சிறிது தூரம் சென்ற பின் பெரிய “கண்மாய்” தாண்டி மலையில் படிகட்டுகள் தெரிந்தன. முன்பெல்லாம் கண்மாயில் இறங்கித்தான் செல்லவேண்டுமாம் இப்பொழுது தனிப்பாதை அமைந்துள்ளது என ஊர் மக்கள் சொல்ல கோயிலை அடைந்தோம்.

கோயிலை பார்த்தபோது மகிழ்சியாக இருந்தது. காரணம், கோயிலின் முகப்பில் கோவிலின் வரலாறு கல்வெட்டாக உள்ளது. நல்ல பராமரிப்பு உள்ளது என்று பார்த்ததும் தெரிந்தது. கோயில் மூலவர் லிங்க வடிவில் உள்ளார். வெளிப்புறச் சுவற்றின் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் “இலகுலீசர் ” சிலையும் செதுக்கப்பட்டிருந்தன. இந்த இலகுலீசர் சிவனின் 64 வடிவங்களில் 28 ஆவது ஆகும். இலகுலீசர் சிலை காண்பதற்கு அரிது என்பதால் வியப்பாக இருந்தது.

Arittapatti-Jain-caves-e1489567664467.jp

அரிட்டாபட்டி குகை (cpreecenvis.nic.in)

கோயில் அர்ச்சகரிடம் பேசினோம். சமணத் தீர்த்தங்கரர்களில் 22 வது தீர்த்தங்கரரான  “நேமிநாதர் ” என்பவருக்கு “அரிட்டநேமி” என்ற பெயர் இருந்ததாகவும், அவர்தான் இவ்வூரின் பெயருக்குக் காரணம் என்றும், இங்கும் 2000 ஆண்டுகளுக்கு முந்தய தமிழ் எழுத்துக்கள் உள்ளதெனவும் இங்கும் சமணர்கள் கல்வி பயின்றதாகவும் சொன்னார். தொல்லியல் துறையின் செயல்பாடு குறித்து மகிழ்ச்சியாக பேசிய போது, கோபமடைந்த பூசாரி;

“தம்பி, ஆசியாவிலேயே அரிதான மலைகளில் ஒன்றாம் இது (ரெட் கிரானைட்).  ஒரு பெரிய தனியார் கல் குவாரிக்கி வெட்டி எடுக்க அனுமதி கொடுத்துருச்சு அரசாங்கம், ஆரம்பத்தில் எங்களுக்கு பெருசா ஒன்னும் தெரியல ஆனா நம்ம “சக்கரை பீர்” மலைக்கு நேர்ந்த கெதி எங்க இந்த மலைக்கும் வந்துருமோனு பயந்துட்டோம்.”

(ஆரம்பத்தில் அந்த அலைபேசி நண்பர் சொன்ன பொக்கிஷ மலையின் மறு பெயரே சக்கரை பீர் மலை 80 ஏக்கர் மலையை 45 ஏக்கர் வெட்டி எடுத்து விட்டனர். எவ்வளவு பாரம்பரிய வரலாறுகள் கழிவறை கிரானைட்டாக மாறிவிட்டதோ! இப்பொழுது அங்கு ஒரு பள்ளிவாசல் மட்டுமே உள்ளது. இரு மத மக்களும் வழிபடும் இடமாக இருந்துள்ளது அந்த மலை).

போராட்டம் பண்ண ஆரம்பிச்சோம், காவல்துறை வச்சு பொய் வழக்கு போடுவோம்னு சொன்னாங்க. நம்ம ஊருல இருக்க சில முக்கிய புள்ளிகள கூப்பிட்டு கோடிகளில் பேரம் பேசுனாங்க, இதுக்கு மேல எதாவது செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் எங்க நிலமையை சொன்னோம். அவர்தான் இதை பெரிய அளவில் கொண்டு போனார். அவர் கொடுத்த தகவல் தமிழ் நாட்டையே திரும்பி பாக்க வைத்தது.

Untitled-design-181-e1489567909479.jpg

கிரானைட்டுக்காக வெட்டியெடுக்கப்பட்ட பொக்கிஷ மலை (frontline.in)

16,000 கோடி இழப்பு தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கு. அவ்வளவு ஊழல். அரசு சொன்ன எந்த விதிமுறையும் பின்பற்றப்படல, இதுவரை 46 குளங்களை கிரானைட்டால் மூடியுள்ளது அந்த நிறுவனம். மலையை சுற்றியுள்ள வீடுகளையும், நிலங்களையும் விலைக்கு கேட்கப்படும், இல்லையேல் மிரட்டி பறிக்கப்படும் அதைவிட கொடுமை குவாரிக்கு “நரபலி ” கொடுக்கப்பட்டது எனவும் தகவல். மொத்தம் 96 வழக்கு அந்த நிறுவனத்தின் மீது போடப்பட்டது. விளைவு அந்த கலெக்டர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார், மேலூர் நீதிமன்றம் அந்த நிறுவனத்தை விடுதலையும் செய்துள்ளது. ஏதோ சினிமா கதை கேட்ட உணர்வு எங்களுக்கு! அதிகாரி, அரசியல்வாதி, நீதிபதி வரை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது அந்த நிறுவனம்.

அப்பறம் என்ன ஆச்சு என்று இருவரும் ஒன்றாக அவரிடம் கேட்க, மறுபடியும் போராட்டம் பண்ணோம் உச்ச நீதி மன்றம் அந்த நீதிபதியை நீக்கிடாங்க, அந்த கலெக்டர் (சகாயம்) தலமையில் மறுபடியும் விசாரனை நடக்குது, அந்த நிறுவன முதலாளி இப்பொழுது சிறையில்.

ஒரு நாள் டிஸ்கவரியில் மேன் வொய்ல்ட் நிகழ்ச்சியில், ஒரு காட்டில் 2000 ஆண்டுகள் முன் வாழ்ந்த காட்டுவாசி மக்களைப் பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டு இருந்தார் “பேர்ஹில்ஸ்”, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமியின் ஒரு பகுதி மக்கள் காட்டுவாசி வாழ்க்கை வாழ்ந்த போது இங்கு ஒரு இனம் பள்ளிகூடம் வைத்து கல்வி போதித்துள்ளது என்றால் எவ்வளவு உயர்ந்த ஓர் வாழ்க்கைச் சூழலை கொண்ட இனம் நம் தமிழ் இனம். ஆனால் அதை பாதுகாக்க நாதி இல்லை!, முயன்றாலும் மறுபடி உருவாக்க இயலாத பொக்கிஷங்களை இப்படி பொறுப்பே இல்லாமல் தாரைவார்த்துக்கொண்டு இருக்கிறோம், எம் முன்னோர்களின் ஆன்மா நம்மை மன்னிக்கவே மன்னிக்காது! என்று புலம்ப, “என்னடா! 5 மணிக்கு இப்படி வெயில் அடிக்கிறது” என்றான் நண்பன் இயற்கையின் பதிலடி இப்படி தான் இருக்கும் என்றேன்.

முறைத்துக்கோண்டே, டேய்! நீயே ஒரு ஊர் சுத்தி உனக்கே தெரியாத கோயில்கள் எல்லாம் ஒருத்தர் சொல்லியிருக்காருனா! அவர் எவ்வளவு கோவில் போயிருப்பாறு? அவர் பேர் என்ன பங்காளி? என்றான், அவர் பெயர் “உசேன் முகமது” என்றதும் புருவம் உயர்த்தி ஒரு ஆச்சர்யப் பார்வை பார்த்தான் பார்த்தான்! நண்பன் தலையில் ஒரு தட்டு தட்டி அடுத்த மலையை நோக்கி வாகனத்தை செலுத்தினேன்.

 
https://roartamil.com/travel/cave-carved-temples-madurai/

.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Untitled-design-181-e1489567909479.jpg

வெட்கம்  கெட்ட... தமிழ் நாட்டு அரசியல் வாதிகளும், குடி மக்களும். 
படங்களைப் பார்க்கும் போது, நெஞ்சம் பதறுகின்றது.  
tw_anguished:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

Untitled-design-181-e1489567909479.jpg

வெட்கம்  கெட்ட... தமிழ் நாட்டு அரசியல் வாதிகளும், குடி மக்களும். 
படங்களைப் பார்க்கும் போது, நெஞ்சம் பதறுகின்றது.  
tw_anguished:
 

யாருக்கு கவலை?

கன்னடத்தியும், தெலுங்கனும், மலையாளியும் ஆள விட்டு பின்னர், பண்டைத்தமிழனின் பழைய வரலாறு அழிக்கப் படுகின்றதே என்றால்?

தங்களது மாநிலத்தில் மண் அள்ள தடை. தமிழகத்தில், ராவ், ரெட்டி போன்ற தங்களது ஆட்களை வைத்து மணல் கொள்ளை அடித்து தமது மாநிலங்களுக்கு மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அனுப்பி பணம் பார்க்கின்றனர்.

மீத்தேன் எடுக்க அனுமதி வழங்கப் பட்டவர்கள் கன்னட நிறுவனம்.

அய்யகோ தமிழா..... இனி மெல்ல சாவாய்... போ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

யாருக்கு கவலை?

கன்னடத்தியும், தெலுங்கனும், மலையாளியும் ஆள விட்டு பின்னர், பழைய வரலாறு அழிக்கப் படுகின்றதே என்றால்?

தங்களது மாநிலத்தில் மண் அள்ள தடை. தமிழகத்தில், ராவ், ரெட்டி போன்ற தங்களது ஆட்களை வைத்து மணல் கொள்ளை அடித்து தமது மாநிலங்களுக்கு அனுப்பி பணம் பார்க்கின்றனர்.

மீத்தேன் எடுக்க அனுமதி வழங்கப் பட்டவர்கள் கன்னட நிறுவனம்.

அய்யகோ தமிழா..... இனி மெல்ல சாவாய்... போ..

..,,,,,,,,

"தலைக்கு மேல்... வெள்ளம் போன பின்,  சாண்...  ஏறினால் என்ன?  முளம்  ஏறினால் என்ன?"
என்ற நிலைப்பாட்டில் இருக்காமல்.... அனைத்து தமிழக மக்களும்,  நல்ல ஒரு அரசியல் தலைமையை தேர்ந்து எடுக்க வேண்டிய முக்கிய, தருணம்  இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

யாருக்கு கவலை?

கன்னடத்தியும், தெலுங்கனும், மலையாளியும் ஆள விட்டு பின்னர், பண்டைத்தமிழனின் பழைய வரலாறு அழிக்கப் படுகின்றதே என்றால்?

தங்களது மாநிலத்தில் மண் அள்ள தடை. தமிழகத்தில், ராவ், ரெட்டி போன்ற தங்களது ஆட்களை வைத்து மணல் கொள்ளை அடித்து தமது மாநிலங்களுக்கு மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அனுப்பி பணம் பார்க்கின்றனர்.

மீத்தேன் எடுக்க அனுமதி வழங்கப் பட்டவர்கள் கன்னட நிறுவனம்.

அய்யகோ தமிழா..... இனி மெல்ல சாவாய்... போ..

இந்தியாவிலேயே ஒரு மோசமான அரசியல் மாநிலமாக தமிழ்நாடு உணரப்படுகின்றது. இவற்றுக்கெல்லாம் காரணம் தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆளும்பொறுப்பு இதுவரைக்கும் கொடுக்கப்படாததுதான்.

Link to comment
Share on other sites

13 hours ago, Athavan CH said:

காலடியில் பொக்கிஷம் – மதுரை குடைவரைக் கோவில்கள்

நன்றி ஆதவன்

நான் நினைத்தபடி எனது இந்திய பிரயாணம் சென்றவருடம் நடை பெறவில்லை. ஆனால் நிச்சயம் எதிர்காலத்தில் நடக்கும். அப்போது இந்த இடத்தையும் என் கண்கள் தழுவும்.

தொடருங்கள் ஆதவன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.