Jump to content

காலடியில் பொக்கிஷம் – மதுரை குடைவரைக் கோவில்கள்


Recommended Posts

காலடியில் பொக்கிஷம் – மதுரை குடைவரைக் கோவில்கள்

 
samanar-hills-1-380x210.jpg
 
 
 
samanar-hills-1-1024x520.jpg

 

  

என் பயணக் கட்டுரைகளை வாசித்த முகம் தெரியாத தோழர் ஒருவர், அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார். (எப்படியும் பாராட்டுவார் என்று முகம் முழுதும் பற்களாக பேசத் தொடங்கினேன்.)

சில பல விசாரிப்புகளுக்கு பின் நீங்கள் மதுரையா? என்றார். ஆம் என்றேன் மதுரையை சுற்றியுள்ள குடைவரைக் கோயில்களை பார்த்தது உண்டா? என்றார், நான் சற்று பந்தாவாய்  ஓ! ஒத்தக்கடை யானை மலை, திருப்பருங்குன்றம் என்று மேதாவித்தனம் காட்டினேன்.

samanar-hills-e1489564667901.jpg

சமணர் மலை மதுரை (vivaciousanushri.files.wordpress.com)

கீழவளவு பஞ்ச பாண்டவர் மலை, பொக்கிஷ மலை, அரிட்டாபட்டி மலையை பார்த்தது உண்டா? என்றார், இல்லை என்றேன். உலகம் சுற்றும் எண்ணம் சிறந்ததுதான்! ஆனால் சொந்த உரைப்பற்றி தெரிந்த பின் சுற்றலாமே என்றார்.

அதற்குப் பின் அவர் பேசிய எதுவும் காதுகளில் கேட்கவில்லை. எப்படியோ சமாளித்து அலைபேசியை வைத்து விட்டேன். ஆனால், எந்த வேலையும் ஓடவில்லை எனக்கு,இரண்டு உடைகளை மட்டும் எடுத்துக்கொண்டு நண்பர்களிடம் கூடச் சொல்லாமல் 10 மணிநேர பயணத்திற்குப்பின் வீட்டை அடைந்தேன்.

விடியற்காலையில் யார் கதவை தட்டுகிறது? என்ற சந்தேகத்தில் கதவை திறந்த அம்மாவுக்கு அதிர்ச்சி, என்னாச்சுப்பா! என்று பதறினாள். காரணம், சினிமாவில் இயக்குனர் ஆகவேண்டும் என்று சென்னை வந்தபின் குலதெய்வ வழிபாடு, உறவினர் திருமணம் என்று எதற்கும் ஊருக்கு வராத மகன், இப்படி வந்து நிற்கிறானே என்ற பயம் அம்மாவின் குரலில் தெரிந்தது.

அரிச்சந்திரனின் 2017இன் பிரதிநிதி என்ற நினைப்புடன் குடைவரைக் கோவில் தேடி வந்ததை சொல்ல, அடுத்த அரைமணி நேரத்திற்கு என் அம்மா திட்டிய வார்த்தைகளை வாசகர்கள் நலன் கருதி நீக்கி விட்டேன். (துடைப்பம் தேடியது தனிக்கதை) ஒரு வழியாக விடிந்ததும் அம்மாவின் கண் படாமல் நண்பனுடன் பயணம் ஆரம்பமானது.

நண்பனிடம் பஞ்ச பாண்டவர் மலை போவோம் என்றதும், நீதான் “தண்ணி” அடிக்கமாட்டியே? அங்க எதற்கு என்றான்.  முறைத்தபடியே ஊர் வந்த வரலாறு சொல்லிகொண்டு வாகனத்தை செலுத்த, மேலூரில் இருந்து 13 கி.மீ தொலைவில்தான் இருந்திருக்கிறது மலை. எப்படி தவறவிட்டோம் என்ற கேள்வியுடன் மலையேறினோம்.

Samanar-Hills-1-e1489564538866.jpg

பஞ்சபாண்டவர் மலை/சமணர் மலை மதுரை (visittnt.com)

குறைந்த அளவிலான சிற்பங்கள் தான் செதுக்கப்பட்டிருந்தாலும் அனைத்தும் புடைப்புச் சிற்பங்கள், அந்த மலை குடையப்பட்ட விதம் பம்பரம் போன்ற காட்சியைத் தந்தது, மலையின் உள்ளே படுக்கைகள் போன்ற அமைப்புக்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. அருகில் ஆடு மேய்த்த பெரியவரை அழைத்து விசாரித்தோம்.

“தம்பி கொஞ்ச வருடங்களுக்கு முன்னாடி, இந்த மலையில் சில கல் தூண்களை கட்டி மலையை பாதுகாக்கறோம்-னு சொன்னாங்க. (ஆம் தொல்லியல் துறை வைத்த கல் தூண்கள் இருக்கிறது மற்றபடி எந்த வகையான பாதுகாப்பும் இல்லை! மது குடிக்கும் இடமாக மாறி உள்ளது என்பதை அங்கு கிடக்கும் கண்ணாடிக் குப்பிகளை வைத்து ஊகித்துக்கொள்ளலாம்). இதற்காகத்தான் நண்பன்நீதான் “தண்ணி” அடிக்கமாட்டியே? என்று கேட்டிருக்கிறான்) அங்க வந்த அதிகாரி ஒருத்தர்தான் சொன்னாரு இந்த மலையில் இருக்கும் சிற்பங்கள் 2,300 ஆண்டுகள் பழமையானது என்று, இங்க சமணத் துறவிகள் தங்கி பாடம் படுச்சாங்களாம், சொல்லியும் குடுத்தாங்களாம்! அவுங்க தங்கறதுக்குதான் இந்த படுக்கைகள்” என்றார்.

Untitled-design-171-e1489564610119.jpg

பிராமி தமிழ் எழுத்துக்கள் (kowthamkumark.files.wordpress.com)

அங்கு புரியாத மொழியில் எதோ எழுதி இருப்பதை காட்டி இது பற்றி எதாவது தெரியுமா? என்றோம்.

“இப்ப இருக்க தமிழுக்கு முன்னாடி இப்படித்தான் இருந்துச்சாம்! பேர் கூட பரமி-னு எதோ சொன்னாங்க” என்றார்,

நண்பன் குறுக்கிட்டு “பிராமி” தமிழ் எழுத்துக்களா? அய்யா என்றான், ஆமாப்பா என்றார். ஆனால் அத்தனை எழுத்துகளும் பக்க நேர்மாறலாக இருக்கிறது கண்ணாடியில் பார்த்தால் நேராக தெரிகிறது. எதற்காக இப்படி எழுதியுள்ளார்கள் என்று தெரியவில்லை.

இந்த இடம் சமணத் துறவிகள் கல்வி பயிற்றுவித்த இடம், பின் மக்கள் பயன்படுத்தும் இடமாக மாறி உள்ளது என்பது புரிந்தது, “நீங்க அரிட்டாபட்டி போங்க தம்பி அங்க கோயிலே உள்ளது” என்றார் அந்த அய்யா, உடனே அரிட்டாபட்டி சென்றோம்.

மேலூரில் இருந்து 10 கி மீ தூரத்தில் உள்ளது அரிட்டாபட்டி. ஊருக்குள் சிறிது தூரம் சென்ற பின் பெரிய “கண்மாய்” தாண்டி மலையில் படிகட்டுகள் தெரிந்தன. முன்பெல்லாம் கண்மாயில் இறங்கித்தான் செல்லவேண்டுமாம் இப்பொழுது தனிப்பாதை அமைந்துள்ளது என ஊர் மக்கள் சொல்ல கோயிலை அடைந்தோம்.

கோயிலை பார்த்தபோது மகிழ்சியாக இருந்தது. காரணம், கோயிலின் முகப்பில் கோவிலின் வரலாறு கல்வெட்டாக உள்ளது. நல்ல பராமரிப்பு உள்ளது என்று பார்த்ததும் தெரிந்தது. கோயில் மூலவர் லிங்க வடிவில் உள்ளார். வெளிப்புறச் சுவற்றின் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் “இலகுலீசர் ” சிலையும் செதுக்கப்பட்டிருந்தன. இந்த இலகுலீசர் சிவனின் 64 வடிவங்களில் 28 ஆவது ஆகும். இலகுலீசர் சிலை காண்பதற்கு அரிது என்பதால் வியப்பாக இருந்தது.

Arittapatti-Jain-caves-e1489567664467.jp

அரிட்டாபட்டி குகை (cpreecenvis.nic.in)

கோயில் அர்ச்சகரிடம் பேசினோம். சமணத் தீர்த்தங்கரர்களில் 22 வது தீர்த்தங்கரரான  “நேமிநாதர் ” என்பவருக்கு “அரிட்டநேமி” என்ற பெயர் இருந்ததாகவும், அவர்தான் இவ்வூரின் பெயருக்குக் காரணம் என்றும், இங்கும் 2000 ஆண்டுகளுக்கு முந்தய தமிழ் எழுத்துக்கள் உள்ளதெனவும் இங்கும் சமணர்கள் கல்வி பயின்றதாகவும் சொன்னார். தொல்லியல் துறையின் செயல்பாடு குறித்து மகிழ்ச்சியாக பேசிய போது, கோபமடைந்த பூசாரி;

“தம்பி, ஆசியாவிலேயே அரிதான மலைகளில் ஒன்றாம் இது (ரெட் கிரானைட்).  ஒரு பெரிய தனியார் கல் குவாரிக்கி வெட்டி எடுக்க அனுமதி கொடுத்துருச்சு அரசாங்கம், ஆரம்பத்தில் எங்களுக்கு பெருசா ஒன்னும் தெரியல ஆனா நம்ம “சக்கரை பீர்” மலைக்கு நேர்ந்த கெதி எங்க இந்த மலைக்கும் வந்துருமோனு பயந்துட்டோம்.”

(ஆரம்பத்தில் அந்த அலைபேசி நண்பர் சொன்ன பொக்கிஷ மலையின் மறு பெயரே சக்கரை பீர் மலை 80 ஏக்கர் மலையை 45 ஏக்கர் வெட்டி எடுத்து விட்டனர். எவ்வளவு பாரம்பரிய வரலாறுகள் கழிவறை கிரானைட்டாக மாறிவிட்டதோ! இப்பொழுது அங்கு ஒரு பள்ளிவாசல் மட்டுமே உள்ளது. இரு மத மக்களும் வழிபடும் இடமாக இருந்துள்ளது அந்த மலை).

போராட்டம் பண்ண ஆரம்பிச்சோம், காவல்துறை வச்சு பொய் வழக்கு போடுவோம்னு சொன்னாங்க. நம்ம ஊருல இருக்க சில முக்கிய புள்ளிகள கூப்பிட்டு கோடிகளில் பேரம் பேசுனாங்க, இதுக்கு மேல எதாவது செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் எங்க நிலமையை சொன்னோம். அவர்தான் இதை பெரிய அளவில் கொண்டு போனார். அவர் கொடுத்த தகவல் தமிழ் நாட்டையே திரும்பி பாக்க வைத்தது.

Untitled-design-181-e1489567909479.jpg

கிரானைட்டுக்காக வெட்டியெடுக்கப்பட்ட பொக்கிஷ மலை (frontline.in)

16,000 கோடி இழப்பு தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டிருக்கு. அவ்வளவு ஊழல். அரசு சொன்ன எந்த விதிமுறையும் பின்பற்றப்படல, இதுவரை 46 குளங்களை கிரானைட்டால் மூடியுள்ளது அந்த நிறுவனம். மலையை சுற்றியுள்ள வீடுகளையும், நிலங்களையும் விலைக்கு கேட்கப்படும், இல்லையேல் மிரட்டி பறிக்கப்படும் அதைவிட கொடுமை குவாரிக்கு “நரபலி ” கொடுக்கப்பட்டது எனவும் தகவல். மொத்தம் 96 வழக்கு அந்த நிறுவனத்தின் மீது போடப்பட்டது. விளைவு அந்த கலெக்டர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார், மேலூர் நீதிமன்றம் அந்த நிறுவனத்தை விடுதலையும் செய்துள்ளது. ஏதோ சினிமா கதை கேட்ட உணர்வு எங்களுக்கு! அதிகாரி, அரசியல்வாதி, நீதிபதி வரை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது அந்த நிறுவனம்.

அப்பறம் என்ன ஆச்சு என்று இருவரும் ஒன்றாக அவரிடம் கேட்க, மறுபடியும் போராட்டம் பண்ணோம் உச்ச நீதி மன்றம் அந்த நீதிபதியை நீக்கிடாங்க, அந்த கலெக்டர் (சகாயம்) தலமையில் மறுபடியும் விசாரனை நடக்குது, அந்த நிறுவன முதலாளி இப்பொழுது சிறையில்.

ஒரு நாள் டிஸ்கவரியில் மேன் வொய்ல்ட் நிகழ்ச்சியில், ஒரு காட்டில் 2000 ஆண்டுகள் முன் வாழ்ந்த காட்டுவாசி மக்களைப் பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டு இருந்தார் “பேர்ஹில்ஸ்”, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமியின் ஒரு பகுதி மக்கள் காட்டுவாசி வாழ்க்கை வாழ்ந்த போது இங்கு ஒரு இனம் பள்ளிகூடம் வைத்து கல்வி போதித்துள்ளது என்றால் எவ்வளவு உயர்ந்த ஓர் வாழ்க்கைச் சூழலை கொண்ட இனம் நம் தமிழ் இனம். ஆனால் அதை பாதுகாக்க நாதி இல்லை!, முயன்றாலும் மறுபடி உருவாக்க இயலாத பொக்கிஷங்களை இப்படி பொறுப்பே இல்லாமல் தாரைவார்த்துக்கொண்டு இருக்கிறோம், எம் முன்னோர்களின் ஆன்மா நம்மை மன்னிக்கவே மன்னிக்காது! என்று புலம்ப, “என்னடா! 5 மணிக்கு இப்படி வெயில் அடிக்கிறது” என்றான் நண்பன் இயற்கையின் பதிலடி இப்படி தான் இருக்கும் என்றேன்.

முறைத்துக்கோண்டே, டேய்! நீயே ஒரு ஊர் சுத்தி உனக்கே தெரியாத கோயில்கள் எல்லாம் ஒருத்தர் சொல்லியிருக்காருனா! அவர் எவ்வளவு கோவில் போயிருப்பாறு? அவர் பேர் என்ன பங்காளி? என்றான், அவர் பெயர் “உசேன் முகமது” என்றதும் புருவம் உயர்த்தி ஒரு ஆச்சர்யப் பார்வை பார்த்தான் பார்த்தான்! நண்பன் தலையில் ஒரு தட்டு தட்டி அடுத்த மலையை நோக்கி வாகனத்தை செலுத்தினேன்.

 
https://roartamil.com/travel/cave-carved-temples-madurai/

.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Untitled-design-181-e1489567909479.jpg

வெட்கம்  கெட்ட... தமிழ் நாட்டு அரசியல் வாதிகளும், குடி மக்களும். 
படங்களைப் பார்க்கும் போது, நெஞ்சம் பதறுகின்றது.  
tw_anguished:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

Untitled-design-181-e1489567909479.jpg

வெட்கம்  கெட்ட... தமிழ் நாட்டு அரசியல் வாதிகளும், குடி மக்களும். 
படங்களைப் பார்க்கும் போது, நெஞ்சம் பதறுகின்றது.  
tw_anguished:
 

யாருக்கு கவலை?

கன்னடத்தியும், தெலுங்கனும், மலையாளியும் ஆள விட்டு பின்னர், பண்டைத்தமிழனின் பழைய வரலாறு அழிக்கப் படுகின்றதே என்றால்?

தங்களது மாநிலத்தில் மண் அள்ள தடை. தமிழகத்தில், ராவ், ரெட்டி போன்ற தங்களது ஆட்களை வைத்து மணல் கொள்ளை அடித்து தமது மாநிலங்களுக்கு மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அனுப்பி பணம் பார்க்கின்றனர்.

மீத்தேன் எடுக்க அனுமதி வழங்கப் பட்டவர்கள் கன்னட நிறுவனம்.

அய்யகோ தமிழா..... இனி மெல்ல சாவாய்... போ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

யாருக்கு கவலை?

கன்னடத்தியும், தெலுங்கனும், மலையாளியும் ஆள விட்டு பின்னர், பழைய வரலாறு அழிக்கப் படுகின்றதே என்றால்?

தங்களது மாநிலத்தில் மண் அள்ள தடை. தமிழகத்தில், ராவ், ரெட்டி போன்ற தங்களது ஆட்களை வைத்து மணல் கொள்ளை அடித்து தமது மாநிலங்களுக்கு அனுப்பி பணம் பார்க்கின்றனர்.

மீத்தேன் எடுக்க அனுமதி வழங்கப் பட்டவர்கள் கன்னட நிறுவனம்.

அய்யகோ தமிழா..... இனி மெல்ல சாவாய்... போ..

..,,,,,,,,

"தலைக்கு மேல்... வெள்ளம் போன பின்,  சாண்...  ஏறினால் என்ன?  முளம்  ஏறினால் என்ன?"
என்ற நிலைப்பாட்டில் இருக்காமல்.... அனைத்து தமிழக மக்களும்,  நல்ல ஒரு அரசியல் தலைமையை தேர்ந்து எடுக்க வேண்டிய முக்கிய, தருணம்  இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

யாருக்கு கவலை?

கன்னடத்தியும், தெலுங்கனும், மலையாளியும் ஆள விட்டு பின்னர், பண்டைத்தமிழனின் பழைய வரலாறு அழிக்கப் படுகின்றதே என்றால்?

தங்களது மாநிலத்தில் மண் அள்ள தடை. தமிழகத்தில், ராவ், ரெட்டி போன்ற தங்களது ஆட்களை வைத்து மணல் கொள்ளை அடித்து தமது மாநிலங்களுக்கு மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அனுப்பி பணம் பார்க்கின்றனர்.

மீத்தேன் எடுக்க அனுமதி வழங்கப் பட்டவர்கள் கன்னட நிறுவனம்.

அய்யகோ தமிழா..... இனி மெல்ல சாவாய்... போ..

இந்தியாவிலேயே ஒரு மோசமான அரசியல் மாநிலமாக தமிழ்நாடு உணரப்படுகின்றது. இவற்றுக்கெல்லாம் காரணம் தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆளும்பொறுப்பு இதுவரைக்கும் கொடுக்கப்படாததுதான்.

Link to comment
Share on other sites

13 hours ago, Athavan CH said:

காலடியில் பொக்கிஷம் – மதுரை குடைவரைக் கோவில்கள்

நன்றி ஆதவன்

நான் நினைத்தபடி எனது இந்திய பிரயாணம் சென்றவருடம் நடை பெறவில்லை. ஆனால் நிச்சயம் எதிர்காலத்தில் நடக்கும். அப்போது இந்த இடத்தையும் என் கண்கள் தழுவும்.

தொடருங்கள் ஆதவன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
    • நன்றி. நான் மிக சமீபத்தில் சந்தித்த யாழ் உறவு பெரியவர் பாஞ் ஐயா மாதிரி ரொம்ப சீனியராக இருப்பீர்களென எண்ணுகிறேன்.🙏💐
    • சிங்கள ராணுவத்தில் முக்காவாசிக்கு சிங்களம் ஒன்றை தவிர மற்ற மொழிகள் வேப்பம் காயே  ரஸ்யாவில் என்ன மொழியில் கதைத்து இருப்பாங்கள் ?
    • ஈரான் இப்போது தான் இஸ்ரேலினுள் நேரடியாக தாக்கி இருக்கிறது. ஆனால், ஈரானின் உள்ளே 2020 இலேயே இஸ்ரேல் மிக நவீன முறையில் தாக்குதலொன்றை நடத்தியது. 2017 இல் இருந்து கண்காணித்து வந்த ஒரு ஈரானிய அணு விஞ்ஞானியை, 2020 இல் ஒரு ஆளில்லாமலே இயங்கக் கூடிய இயந்திரத் துப்பாக்கியை, ஈரானுக்கு வெளியே இருந்து இயக்கி,  இஸ்ரேல் கொன்றது (அருகில் இருந்த மனைவிக்கு ஒரு கீறலும் விழவில்லை). இதைப் பற்றிய செய்தியை கீழே வாசிக்கலாம், மிக நவீனமான முறையில் கொலை. https://www.timesofisrael.com/mossad-killed-irans-top-nuke-scientist-with-remote-operated-machine-gun-nyt/ ஆனால், நான் சொல்ல வருவது அதுவல்ல. இந்த 2020 கொலையை, ஈரான் மண்ணில் தயக்கமின்றி இஸ்ரேல் செய்ய  ஒரு பிரதான காரணம், அமெரிக்காவினால் கொல்லப் பட்ட ஈரானிய IRG ஜெனரலின் கொலைக்கு, ஈரான் பாரிய பதிலடி எதுவும் கொடுக்காத தைரியம் தான் என்கிறார்கள். இதன் படி பார்த்தால், இந்த ஈரானிய பதிலடி இல்லா விட்டால், நிலைமை எப்போதும் கட்டுக்குள் வராது, வன்முறை தொடரும். அப்படி நடக்காமல் எச்சரிக்கும் deterrence தான் ஈரானிய பதில் தாக்குதல். எனவே, இரு தரப்பும், சிவப்பு கோட்டைக் கிழித்து விட்டு வடிவேலு பாணியில் "கோட்டைக் தாண்டி நீயும் வராதே, நானும் வர மாட்டேன்"😂 என்று விலகுவதே புத்தி சாலித்தனம்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.