Jump to content

பாகுபலி - 2 : சினிமா விமர்சனம்


Recommended Posts

பாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

 
 
பாகுபலி திரைப்படம் குறித்த சுவாரஸ்ய 10 தகவல்கள்படத்தின் காப்புரிமைBAAHUBALI

இந்திய திரைப்பட வரலாற்றில் எந்தவொரு திரைப்படமும் இதுவரை ஏற்படுத்தாத எதிர்பார்ப்பை எஸ்.எஸ் ராஜமெளலியின் பாகுபலி 2 ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

•பாகுபலி 1 மற்றும் 2 இரண்டு பாகங்களின் மொத்த பட்ஜெட் தொகை 450 கோடி ரூபாய். முதல் பாகம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் வெளியாகிறது.

•இந்தியா முழுக்க சுமார் 6,500 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் சுமார் 9,000 திரையரங்குகளிலும் இப்படம் திரையிடப்படுகிறது.

•பாகுபாலி 2 திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் ஈட்டிவிட்டது.

•உலகளவில் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பாகுபலி 2 வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

•இந்தி, தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஆங்கிலம், ஜெர்மன், ஜப்பானிய, ஃபிரெஞ்சு மற்றும் சைனீஸ் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகியுள்ளது.

பாகுபலி திரைப்படம் குறித்த சுவாரஸ்ய 10 தகவல்கள்படத்தின் காப்புரிமைBAAHUBALI

•தெலுங்கு திரைப்படத்துறையில் 4K எச் டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் இதுவாகும்.

•உலகளவில் 650 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் தென்னிந்திய திரைப்படம் பாகுபலி 1.

•முதல் பாகம் வெளியான பிறகு பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற ஹேஷ்டேக்குகள், மீம்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் வைரலாக வலம் வந்தன.

•இந்தியாவில் பிரபல காமிக் புத்தகமான அமர சித்ர கதைகள் மீதான ஈர்ப்பு பாகுபலி என்ற திரைப்படத்தை எடுக்க இயக்குநர் எஸ் எஸ் ராஜமெளலிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

•பாகுபலியின் இரண்டாம் பாகத்திற்காக தெலுங்கு நடிகர் பிரபாஸ் தன்னுடைய எடையை 120 கிலோவில் இருந்து 150 கிலோவாக கூட்டினார்.

http://www.bbc.com/tamil/india-39742927

Link to comment
Share on other sites

பாகுபலி - 2 : சினிமா விமர்சனம்

 
 
 
படம் பாகுபலி
 
நடிகர்கள் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ரோகிணி, நாசர்
 
இசை கீரவாணி
 
இயக்குனர் ராஜமெளலி
பாகுபலி - 2 : சினிமா விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாகியிருக்கும் பாகுபலி - 2ஆம் பாகம், உண்மையில் முதல் பாகத்திற்கு முந்தைய கதையைச் சொல்கிறது. ஒரு வகையில் பார்த்தால் Prequel என்று சொல்லலாம்.

முதலாவது பாகத்தில், மகிழ்மதி தேசத்தின் அரசனாக வேண்டிய அமரேந்திர பாகுபலியை, அவனுக்கு விசுவாசமாக இருந்த கட்டப்பா கொல்கிறான். கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றான் என்ற கேள்விக்குப் பதிலாக விரியும் படம் அமரேந்திர பாகுபலியின் கதையைச் சொல்கிறது. சிவகாமியால் வளர்க்கப்படும் அமரேந்திரன், தாயின் சொல்லை மீறி தேவசேனாவை திருமணம் செய்வதால், பல்லாள தேவன் மகிழ்மதியின் அரசனாக முடிசூடப்படுகிறான். இருந்தும் மக்கள் ஆதரவு அமரேந்திரனுக்கே இருக்கிறது. எதிர்காலத்தில் தன் சிம்மாசனத்திற்கு ஆபத்து வராமல் இருக்க, ஒரு திட்டம் தீட்டுகிறான் பல்லாள தேவன். அதன்படியே அமரேந்திரன் கொல்லப்படுகிறான். முடிவில், பல்லாள தேவனை வென்று, தாயை மீட்பதோடு, மகிழ்மதியின் அரசனாகிறான் மகேரந்திர பாகுபலி.

பாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

பாகுபலியின் முதலாவது பாகத்தைப் பார்க்காவிட்டால்கூட, புரிந்துகொண்டு ரசிக்கும் வகையில் இந்த இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மகிழ்மதி நகரம், குந்தள தேசம் ஆகியவற்றின் நகர அமைப்பு, யுத்தக் காட்சிகள், எருமைகள் இழுத்துச் செல்லும் ரதம், உடைந்து சிதறும் பொற்சிலை, வில் சண்டை என முதல் பாகத்தைப் போலவே, இந்த பாகமும் சினிமா ரசிகர்களின் கண்களுக்கு விருந்துதான்.

பாகுபலி - 2 : சினிமா விமர்சனம்

முதல் பாகத்தில் வயதான பெண்ணாக அனுஷ்காவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்களுக்கு, இந்த பாகம் ஆறுதலாக இருக்கும். தேவசேனா - அமரேந்திர பாகுபலி இடையிலான முற்பகுதி காட்சிகள், சினிமா ரசிகர்களின் நெஞ்சில் இருந்து நீண்ட நாட்களுக்கு அழியாது. தேவசேனையின் பாத்திரத்தை அனுஷ்காவைத் தவிர வேறு யார் செய்திருக்க முடியும் என்று எண்ண வைக்கின்றன இந்தக் காட்சிகள். பல இடங்களில் இவரது கம்பீரமான ஓவியங்கள் வந்துபோவது, ஒரு காப்பியத் தன்மையை இவரது பாத்திரத்திற்கு கொடுக்கிறது.

பாகுபலி - 2 : சினிமா விமர்சனம்

தந்தை - மகன் என இரு பாத்திரங்களில் நடித்திருக்கும் பிரபாஸ், பல்லாள தேவனாக வரும் ராணா, அவரது தந்தையாகவரும் நாசர் ஆகியோர் முந்தைய பாகங்களிலும் வந்தவர்கள் என்பதால், புதிதாக ஆச்சரியப்படுத்தவில்லை.

பாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

முதல் பாகத்தையும் இரண்டாவது பாகத்தையும் இணைக்கும் புள்ளியான கட்டப்பாவாக வரும் சத்யராஜ், படம் நெடுக ஒரு நன்மையின் அடையாளமாக வந்துகொண்டேயிருக்கிறார். அலட்டல் இல்லாத நடிப்பு.

39742927 - பாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் காட்சியும் துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருக்கும் பிரம்மாண்டமும் நுணுக்கமும் வண்ணக்கலவையும் பார்ப்பவர்களை அசரவைக்கிறது. எந்த இடத்திலும் தவறே இல்லாத ராஜமவுலியின் திரைக்கதை, படத்தின் மற்றுமொரு தூண். ஆனால், முதல் பாகத்தில் இருந்த ரசிக்க வைத்த பாடல்கள் இந்தப் படத்தில் இல்லை.

39742927 - பாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

சிறந்த நடிகர்கள், திகைக்க வைக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள், துல்லியமான திரைக்கதை என பல ஆண்டுகளுக்கு நினைவுகூரத்தக்க படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் சற்றே நெருடலான அம்சம் அரண்மனையில் நடக்கும் சதிகள்தான். சிறுபிள்ளைத்தனமான திட்டங்களை பல்லாள தேவன் தீட்டுவதும், அதற்கு சிவகாமி, அமரேந்திரன் உள்ளிட்டவர்கள் பலியாவதும் படத்தின் பலவீனமான பகுதி. படத்தின் பிற்பகுதியில், பல்லாள தேவனும் மகேந்திரனும் மோதும் காட்சிகள் பிரம்மாண்டமானவை என்றாலும் சுமார் அரை மணி நேரம் அவை நீள்வது சற்றே அலுப்பைத் தருகின்றன.

39742927 - பாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

ஆனால், இதையெல்லாம் மீறி இந்தப் படம் இந்திய சினிமாவின் மிக முக்கியமான படம். இதிகாச பாணியிலான திரைப்படங்களை இந்தியாவிலும் உருவாக்கி, உலகம் முழுவதும் ஆர்வத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறது இந்தப் படம். மேலும் பாகுபலியை திரையரங்கில் பார்ப்பதென்பது, ஒரு திரைப்படத்தை பார்ப்பதாக இல்லை, அனுபவிப்பது என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்கும்.

http://www.bbc.com/tamil/india-39747501

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பார்வை: பாகுபலி 2 - பெருமித சினிமா!

தன் வரலாறு அறிந்த இளைஞன் படையைத் திரட்டி, பழி தீர்த்து தலைவன் ஆகும் கதையே 'பாகுபலி 2'.

பங்காளிச் சண்டையில் அரியாசனத்தை இழந்து உயிரை விடுகிறார் அமரேந்திர பாகுபலி (பிரபாஸ்). கணவர் இறந்ததும் தன் மகன் வருவான், பழி தீர்ப்பான், மகிழ்மதியை ஆள்வான் என சபதம் எடுக்கிறார் தேவசேனை (அனுஷ்கா). இந்த வரலாறு மகன் மகேந்திர பாகுபலிக்கு (பிரபாஸ்) தெரிய வருகிறது. அதற்குப் பிறகு எப்படி படைபலம் திரட்டுகிறார், பல்வாள்தேவனை (ராணா) எப்படி எதிர்கொள்கிறார், பகையை முடித்தாரா என திரைக்கதை விரிகிறது.

முதல் பாகத்தில் மிகப் பெரிய ட்விஸ்ட் வைத்து அடுத்த பாகத்துக்காக காத்திருக்க வைத்த விதத்திலும், அதை சரியாக சினிமா மொழியில் கச்சிதமாக வெளிப்படுத்திய விதத்திலும் இயக்குநர் ராஜமௌலி நிமிர்ந்து நிற்கிறார்.

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார், சிவகாமி ஏன் அந்தப் பச்சிளம் குழந்தையை ஆற்றில் தத்தளித்தபடி வந்து உயிர்த் தியாகம் செய்து காப்பாற்றுகிறார் என்பதே பாகுபலி முதல் பாகம் எழுப்பும் இரு முக்கிய கேள்விகள். அதற்கான பதிலை சூழலுடன் பொருந்துகிற மாதிரியும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் இயக்குநர் ராஜமௌலி பதிவு செய்திருக்கிறார்.

பிரபாஸ் இரண்டு தோற்றங்களிலும் மிகச் சரியான பக்குவமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அப்பா கதாபாத்திரத்தில் நடை, உடை, பாவனையில் காட்டும் கம்பீரம், பெண்மையை மதிக்கும் குணம், அறிவுரை சொல்லும் நிதானம், வாள் சுழற்றும் வீரம், வாக்கை காப்பாற்றப் போராடும் மன உறுதி, எதிர்த்து நிற்கும் துணிச்சல் என கதாபாத்திரத்துக்கு பலம் சேர்க்கிறார். மகன் பிரபாஸ் உணர்வுகளின் சிக்கலையும், விவேகத்தையும் வெளிப்படுத்துகிறார்.

தேவசேனை கதாபாத்திரத்தில் அனுஷ்கா வசீகரிக்கிறார். ரம்யா கிருஷ்ணனுடன் அரண்மனையில் பேசும் காட்சி, பிரபாஸிடம் கைதியாக வர மாட்டேன் என தன் ஆளுமையை நிறுவும் காட்சி, தனக்கு வேண்டிய பரிசை சொல்லும் காட்சி என கதாபாத்திரமாகவே மாறி நிற்கிறார்.

தன்னை எதிர்க்கும் பிரபாஸை ரம்யா கிருஷ்ணன் அணுகும் விதம், மகன் பிரபாஸ் களங்கமற்றவன் என உணரும் விதம் இரு விதமான பரிமாணங்களில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி மிளிர்கிறார்.

வழக்கமான கொம்பு சீவி விடும் கதாபாத்திரம்தான் என்றாலும் அதில் ராஜதந்திரத்துடன் செயல்படுவது, வஞ்சகத்துடன் அணுகுவது என நாசர் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார்.

கள்ளம் கபடமில்லாமல் பிரபாஸுடன் பழகுவது, அவர் காதலுக்கு உதவுவது, சூழ்ச்சி, சதித் திட்டம் என எதுவுமே செய்யாமல் கட்டளைக்குப் பணிவது, அதற்காக கலங்குவது என எல்லா தருணங்களிலும் பல பரிமாணங்கள் தாண்டி அநாயசமான நடிப்பில் சத்யராஜ் கவர்கிறார். ரம்யாகிருஷ்ணனை 'சிவகாமி' என பெயர் சொல்லி அழைக்கும் அந்த இடத்தில் சத்யராஜூக்கு கிடைக்கும் கரவொலிகள் கணக்கில் அடங்காது. ஒற்றை வரியில் சொல்வதென்றால் சத்யராஜூக்கு விருதுகள் நிச்சயம்.

பலம் பொருந்திய எதிர்மறைக் கதாபாத்திரத்தில் ராணா நிறைவான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். குமார வர்மாவாக வரும் சுப்பாராஜூவின் நடிப்பு கவனிக்க வைக்கிறது.

தமன்னா, ரோகிணிக்கு படத்தில் பெரிதாக எந்த வேலையும் இல்லை.

இதிகாசம், சரித்திரம் என்று கதைக்கான பின்னணியோ, சம்பவங்களோ நினைவூட்டுவதாக அல்லது தொடர்புபடுத்திக்கொள்வதாக இருந்தாலும் அதை ஒரு கதையாக வடிவமைத்து, திரைக்கதையாக செதுக்கி, நுட்பமாகவும் துல்லியமாகவும் திரைமொழியில் வெளிப்படுத்துவது சாதாரணமல்ல. அந்த விதத்தில் இயக்குநர் ராஜமௌலி சாதித்திருக்கிறார்.

ஒரு சாகச வீரனின் கதை என்று படத்தின் துவக்கத்திலேயே இயக்குநர் நிறுவுவது அவரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. ஒற்றை நபராக தேர் இழுப்பது என மக்கள் ரசனையை அத்தோடு நிற்க விடாமல், மதம் கொண்ட யானையை அடக்க செய்யும் முயற்சிகளும், அதற்கான துல்லியமான காட்சிப் பதிவுகளும் ஆச்சரியத்தை வரவழைக்கின்றன. பிரபாஸ் அம்பு எய்தும் சாகசம், அனுஷ்கா பிரபாஸ் தோள்களில் ஏறி படகில் ஏறும் லாவகம் உட்பட பல்வேறு அம்சங்கள் ரசனைக்குரியவை. சறுக்கல், சரிவு இல்லாமல் நேர்த்தியான நம்பகத்தன்மை வாய்ந்த திருப்பங்களுடன் திரைக்கதை பயணிக்கிறது.

செந்தில்குமாரின் ஒளிப்பதிவும், மரகதமணியின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. தேவையில்லாத ஒரு காட்சி கூட படத்தில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு வெங்கடேஸ்வர ராவ் செதுக்கி இருக்கிறார்.

ஆக்‌ஷன் படத்துக்கான சங்கதிகளை அப்படியே அள்ளி வந்து சண்டைக் காட்சிகளில் கொட்டியிருக்கிறார் பீட்டர் ஹெய்ன். சாபுசிரிலின் அரங்க அமைப்பும், கமலக் கண்ணனின் கிராபிக்ஸும் அசத்தல்.

திக் விஜயம் செய்வது, பட்டாபிஷேகம், போர் வியூகம், பெண்ணின் சபதம் என நுட்பமான பதிவுகள் அர்த்தமும் அழுத்தமும் மிக்கவை.

பட்டாபிஷேகத்தின் போது சத்யராஜ் எங்கே போனார், நாசரின் நிலைக்கான காரணம் என்ன, தமன்னாவின் வரலாறு ஆகியவற்றை போகிற போக்கில் காட்சிப்படுத்தியிருந்தாலோ அல்லது வசனமாக சொல்லியிருந்தாலோ இன்னும் நிறைவு பெற்றிருக்கும்.

இதை தவிர்த்துப் பார்த்தாலும் 'பாகுபலி 2' பெருமித சினிமாவாக ஒரு பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/முதல்-பார்வை-பாகுபலி-2-பெருமித-சினிமா/article9670589.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகுபலி-1 Vs பாகுபலி-2.... எது பெஸ்ட்? - பாகுபலி 2 விமர்சனம்

பாகுபலி... சூப்பர்ப் சினிமா. அப்போ, பாகுபலி-2 எப்படி இருக்க வேண்டும்..? அதுவும் இரண்டு வருட எதிர்பார்ப்புக்குப் பின் படம் வெளியாகும்போது, எப்படி இருக்க வேண்டும்!? ‘எப்படியெல்லாம் இருக்க வேண்டும்?’ என்று நீங்கள் நினைத்த மாதிரியும், அதற்கு மேலுமாகக் கவர்கிறது படம். ஹாட்ஸ் ஆஃப் ராஜமெளலி அண்ட் டீம்! 

வழக்கமாக இது கதை, இதிது இப்படி இப்படி இருந்தது என்று சொல்வதை விட, பாகுபலி-2-வைக் கொஞ்சம் வேறுவிதமாக அலசுவோம்.

முதல் பாகம் Vs இரண்டாம் பாகம்!

 

பாகுபலி 2

முதல் பாகத்திற்கு தமிழில் இந்த அளவு எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கவில்லை. அக்கட தேசத்தில் அசால்ட் காட்டும் எஸ்.எஸ்.ராஜமௌலியை அதிகம் அறியாதவர்கள் ‘ஈய வெச்சே அப்படி ஒரு படம் குடுத்தவர்’ என்ற ஒரே ஒரு அடையாளத்தோடுதான் அணுகினார்கள். ஆனால் படத்தின் ட்ரீட்மென்ட் தந்த பிரமிப்பு ரசிகர்களை ஆச்சர்யத்தில் அள்ளியது. படத்தையும், ராஜமௌலியையும் கொண்டாடினார்கள். முதல் பாகத்தின் க்ளைமாக்ஸ் ‘அச்சச்சோ... பாகுபலி சாகறானா.. அப்பறம்?’ என்று பதற்றப்பட வைத்தது.  

இரண்டாம் பாகம், அகில உலகத்துக்குமான எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தது. ப்ரமோஷன், மார்க்கெட்டிங் என்று எல்லாவிதத்திலும் எல்லா தரப்பினரையும் மனதில் வைத்து இறங்கினார்கள் படக்குழுவினர். இயக்குநரே எதிர்பார்க்காத வண்ணம் #WhyKattappaKilledBaahubali ட்ரெண்டிங் ஆனது. பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று மூன்று அம்புகளை, ஒரே வில்லில் பூட்டி வைத்து சக்ஸஸைக் குறிவைத்து இறங்கினர். ‘அதெப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அம்புகள் ஒரே வில்லில்?’ என்று கேட்பவர்களுக்கு.. இரண்டாம் பாகத்தில் பிரபாஸ் பதில் சொல்லியிருக்கார் பாஸ்!

அமரேந்திர பாகுபலி Vs மகேந்திர பாகுபலி

பிரபாஸ்

இரண்டுமே பிரபாஸ்தான். அப்பா, மகன். ரிவர்ஸாக முதலில் மகன், இரண்டாம் பாகம் அப்பா என்று  ஒரு சுவாரஸ்யம் கூட்டியிருப்பார் எஸ்.எஸ்.ராஜமௌலி. முதல்பாகத்தில் முழுவதும் மகன், மகேந்திர பாகுபலிதான். இந்த இரண்டாம் பாகத்தில், கட்டப்பா ஃப்ளாஷ்பேக் சொல்வதால் முழுக்க முழுக்க அப்பா அமரேந்திர பாகுபலியாக அள்ளுகிறார் ப்ரபாஸ். அதுவும் அந்த அறிமுகக் காட்சி... ஆஸம் கற்பனை! புகழும் பெருமையும் வரும்போதும், அவை இல்லாதபோதும் எப்போதுமே சலனமற்று இருக்கும் ஜென் முக பாவத்தை அருமையாகக் காட்டுகிறார் பிரபாஸ். முறுக்கேறிய அவர் உடலமைப்பு நம்புகிறபடியே இருக்கிறது. கதைப்படி சில காட்சிகளில் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கும்போதும் நடிப்பில் வெளுத்து வாங்குகிறார். க்ளைமாக்ஸில் பல்வாள்தேவன் ராணா டகுபதியுடன் மோதும் காட்சிகளில் வலி, வெறி, வீரம் என்று சகல ஃபீலிங்ஸிலும் வெளுத்துக் கட்டுகிறார் பிரபாஸ். அனுஷ்காவை அத்தனை காதலோடு பார்ப்பதும் பிரபாஸ்தான், அம்மாவாகப் பாசத்துடன் பார்ப்பதும் பிரபாஸ்தான் என்பதை படம் முடிந்தபிறகுதான் உணரமுடிகிறது. அப்படி வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.

அனுஷ்கா Vs தமன்னா

அனுஷ்கா

முதல் பாகம் முழுவதும் தமன்னா என்றால் இரண்டாம் பாகம் அனுஷ்காவுக்கானது. ‘நான் சீனியராக்கும்’ என்று நடிப்பிலும் அழகிலும் கில்லியடித்திருக்கிறார் அழகி. படத்தில் ராஜமாதா சிவகாமியைக் கேள்வி கேட்கும் ஒரே கேரக்டரும் இவரே. அதை நம்பும்விதத்தில் கம்பீரம் காட்டியிருக்கிறார் அனுஷ்கா. அதே சமயம் கண்களில் காதல் காட்டுவதில் குறைவைக்கவில்லை. தமன்னாவுக்கு இதில் கெஸ்ட் ரோல்தான்.      

 

கட்டப்பா Vs பிங்களத்தேவன்

kattappa

சத்யராஜும் நாசரும். அனுபவ நடிப்பு என்பதற்கு லைவ் உதாரணங்களாக நடித்துத் தள்ளியிருக்கிறார்கள் இருவருமே. கிட்டத்தட்ட படத்தைத் தோள்மாற்றித் தாங்கிக் கொள்பவராக படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் சத்யராஜ். ஆரம்ப காட்சியில் நாசருக்கும், சத்யராஜுக்குமான வசனமோதல் காட்சி ஒன்றுண்டு. மதன்கார்க்கி வசனம். நாசரிடம் அவரை ஏன் மன்னனாக்கவில்லை என்பதற்கு ஒரு காரணம் சொல்வார் சத்யராஜ்.  அப்ளாஸ் அள்ளுகிறது. அந்தக் காட்சி முடிந்து சத்யராஜ் வெளியேற முற்பட, ‘ஒட்டுக்கேட்டாயா?’ என்பார் நாசர், அதற்கன பதிலும்தான்!      

வெறி, துரோகம், சூழ்ச்சி எல்லாமுமாய் நாசர் வலம்வர, அதற்கு நேரெதிராக விசுவாசத்தின் மொத்த உருவமாய் வலம்வருகிறார் சத்யராஜ். இந்த இரண்டு கேரக்டர்களுக்கும் இவர்களை விடுத்து ஒருவரை நினைக்க முடியவில்லை. அப்புறம் ஒருவிஷயம்; கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பது இருக்கட்டும், கட்டப்பா ஏன் பிங்களத்தேவனைக் கொல்லவில்லை?’

ராஜமாதா ரம்யாகிருஷ்ணன்! 

Ramya krishnan

படத்தின் அல்டிமேட் கதாபாத்திரமும், நடிப்பும் இவருடையதுதான். இவர் கட்டளையே சாசனம் என்றானபின், அந்த கம்பீரம் நடிப்பில் இருக்க வேண்டுமல்லவா? அது தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது! அவரது குரலும் பெரிய ப்ளஸ். பாசத்துக்கும், ஆட்சிக்குமிடையே அவர் மனம் அலைபாயும்போது முகமும் அதற்கேற்ப பாவங்களை வெளிப்படுத்துகிறது.   

சரி, இந்தப் படத்தை ஏன் பார்க்கவேண்டும்?  

இந்தியத் திரையுலகின் பெருமைமிகு படைப்புகளில் ஒன்றாக இப்படம் நிச்சயம் இடம்பிடிக்கும். பழகிய கதையாக இருந்தாலும், அதன் ஒவ்வொரு நிமிடங்களிலும் ஒரு உணர்வைக் கடத்துவதும், கிராபிக்ஸ் கற்பனைகளில் அவ்வளவு சுவாரஸ்யம் சேர்த்திருப்பதுமாக... ஆஸம்!   

Dot ஆரம்ப காட்சியில் ரம்யாகிருஷ்ணன் அடிதப்பாமல் நடக்க வேண்டும். ஆனால் யானை ஒன்றுக்கு மதம் பிடிக்கிறது, இரண்டையும் சமாளிக்கும் ஒரு விஷயத்தைச் செய்கிறார் பிரபாஸ்.   

 Dot அனுஷ்கா படகில் ஏறிச் செல்லும் காட்சி ஒன்றில், எதன்மீது ஏறிச் செல்கிறார் என்பது... கெத்து!

Dot அனுஷ்காவும், பிரபாஸும் மகிழ்மதிக்கு வரும் அந்த அன்னப்படகு அழகிய கற்பனை. தண்ணீரில் படகாகச் சென்று, வானத்தில் பறந்து மேகங்கள் குதிரைகளாக.. சபாஷ்!

Dot ஓப்பனிங் காட்சி போலவே, க்ளைமாக்ஸில் அனுஷ்கா அடிதப்பாமல் நடக்க இருக்கும்போதும் ஒரு தடை வருகிறது. அதற்கும் ஒரு வயலன்ட் கற்பனையில் தீர்வு தருகிறார்கள். 

Dot படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் மட்டுமல்ல... தலைகாட்டும் ஒவ்வொரு துணை கதாபாத்திரமும் சூழ்நிலையின் தன்மைக்கேற்ப உருக்கமும் மூர்க்கமுமாக அசர வைக்கிறார்கள். 

இப்படிப் பல காட்சிகள். போலவே, படத்தின் டீட்டெய்லிங். திரையில் ஒரு காட்சி ஓடும்போது, மையக் காட்சியத் தவிர்த்து எதைக் கவனித்தாலும் அதில் ஒரு டீட்டெய்லிங். அந்த பெர்ஃபெக்‌ஷன்.. ராஜமௌலியின் பெஸ்ட்

சில சுட்டிக்காட்டல்கள்!

Dot காதலிக்கும் பெண்ணைக் கவர ஹீரோ கோழையாக நடிக்கிறான் என்பது பல படங்களின் டெம்ப்ளேட் அல்லவா? இதிலுமா? 

Dot எதை எடுப்பது, எதை விடுவது, எப்படி நேரத்தைக் குறைப்பது என்று எடிட்டர் குழம்பியிருப்பது ஆங்காங்கே தெரிகிறது. சில காட்சிகளின் Ending  சட்டென்று முடிகிறது.

Dot பாடல்கள்.... இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம்!  

 இடைவேளைக்கு முன் பரபர, விறுவிறுவென இருக்கும் படம்.... அதன் பின் சற்றே வேகம் குறைத்துக் கொள்கிறது   

எது எப்படியோ, இந்திய சினிமாவின் கதை சொல்லலையே வேறு தளத்துக்குக் கொண்டு சென்ற வகையில் பாகுபலி-2-வுக்கு சொல்லலாம் ஜெய் மகிழ்மதி! 

 

http://www.vikatan.com/cinema/movie-review/87862-baahubali-2-the-conclusion-review.html

Link to comment
Share on other sites

பாகுபலி- 2 திரையில் மட்டுமே காண வேண்டிய பிரமாண்டம்  அதை எல்லாம் ஒன்லைன் பார்ப்பம்  என்டு இருந்தீங்க கொம்பியூட்டரேகாறிதுப்பும்

  உங்களின் பிள்ளைகளிற்காகவது தியேட்டரிற்கு கூட்டிட்டு போங்க விரிந்த கண் மூடாது ரசிப்பார்கள் 

 

 

பொன்னியின் செல்வனை ராஜமௌலியிடம் கொடுத்தால் 5 பாகமாகவே எடுத்து அதகளபடுத்துவார் :)

 

அனுஷ்காவின் மிடுக்கும் அழகும் குந்தவையை நினைவுபடுத்தியது ?

 

தேவசேனாவும் பாகுபலியும் பன்றி  வேட்டைக்கு செல்லும் காட்சி அப்படியே வந்தியத்தேவனும் ஆதித்தகரிகாலனும் வேட்டைக்கு சென்ற காட்சியை நினைவுபடுத்தியதுஇ (அந்த வேட்டையில் காட்டுப்பன்றி அவர்கள் இருவரையும்  தாக்கும் ஒரு காட்சி வருகிறது அதை ராஜமௌலி 

எப்படி எடுப்பார் என்று கற்பனை பண்ணி பார்க்கிறன் :)

 

சந்தேகமே வேண்டாம் பழுவேட்டரையருக்கு நம்ம கட்டப்பா சத்தியராஜ்  இருக்கவே இருக்கார்  :னு என்ன உடம்பு தான் கொஞ்சம் ஏத்தணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னியின் செல்வனை சிலர் எடுக்க முயற்சித்தார்கள் இதுவரை நடக்கவில்லை..... ஒருவேளை இன்றைய தொழில் நுட்பத்துடன் ஒரு பிரமாண்டத்துக்காக காத்திருக்கிறதோ என்னமோ....!  tw_blush:

Link to comment
Share on other sites

ரூ.1000 கோடியை எட்டி உச்சம் தொட்ட ‘பாகுபலி-2’

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘பாகுபலி-2’ படம் ரூ.1000 கோடியை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

 
201705071211568016_Baahubali-2-crosses-r
 
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ இந்திய சினிமாவில் இதுவரை நிகழ்த்திய சாதனைகளையெல்லாம் தகர்த்தெறிந்து சென்று கொண்டிருக்கிறது. இப்படம் வெளியாகி 9 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும், திரையிட்ட அனைத்து திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருக்கின்றன.

இதனால், இந்த படத்தின் வசூலும் இந்திய சினிமாவில் யாரும் நிகழ்த்த முடியாத சாதனையை சாதனையை பெற்றுள்ளது. படம் வெளியான 6 நாட்களிலேயே ரூ.800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவிலேயே அதிகமான வசூலை பெற்ற படம் என்ற சாதனையை பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படம் விரைவில் ரூ.1000 கோடியை எட்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

201705071211568016_baahubali-223-X._L_st

அந்த சாதனையையும் தற்போது பாகுபலி-2 நிகழ்த்தியுள்ளது. தற்போது 9 நாட்களில் இந்த படம் ரூ.1000 கோடியை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவிலேயே ரூ.1000 கோடியை எட்டிய முதல் படம் இதுதான் என்ற பெருமையை பெற்றுள்ளது. இனிமேல், இந்தியாவில் வெளிவரும் படங்கள்கூட இந்த சாதனையை எட்டுமா? என்பது சந்தேகம்தான். 

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/05/07121155/1083962/Baahubali-2-crosses-rs-1000-crore.vpf

Link to comment
Share on other sites

'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொலை செய்தார்' என்பதை முன்பே கணித்த பலே கில்லாடி!

 

கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் என பாகுபலி-2 வெளியாகும் முன்பே மிகச் சரியாக கணித்திருக்கிறார் சுஷாந்த் தஹால் என்ற இளைஞர். படம் பார்க்காதவர்கள் இதை படிப்பதை தவிர்க்கலாம்! ( Spoilers Ahead)

பாகுபலி

2015-ல் வெளியான பாகுபலி முதல் பாகத்தின் வெற்றியைவிட அது விட்டுச் சென்ற கேள்விதான் பாகுபலி-2க்கான விளம்பரம். அது 'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்' என்பது தான். இந்தக் கேள்விக்கு விடைக்காணவே தற்போது வெளியாகியுள்ள பாகுபலி-2-ம் பாகத்தை முந்திக்கொண்டு பார்க்கிறார்கள் சினிமா ரசிகர்கள். அதன் விளைவாக 1000 கோடி வசூல் சாதனையையும் பாகுபலி படைத்துவிட்டது.

இதனிடையே பாகுபலி 2-ம் பாகம் வெளியாகும் முன்னரே ஏன் கட்டப்பா அப்படி செய்தார்? என சரியாக கணித்திருக்கிறார் சுஷாந்த் தஹால். கோரா இணையதளத்தில் அவரது பதிவில் 'ராஜ்ஜியத்தையும் தேவசேனாவையும் இழந்த பல்வாள் தேவன், சூழ்ச்சி செய்து சிவகாமி மூலமே பாகுபலியைக் கொள்ள கட்டப்பாவுக்கு உத்தரவிட்டிருக்கலாம்' என கணித்திருக்கிறார் அவர். அண்மையில் வெளியான பாகுபலி 2-ம் பாகத்தில் இவரின் கணிப்பு மிகச் சரியாக ஒத்துப்போயிருப்பது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

http://www.vikatan.com/news/cinema/88887-this-guy-predicted-why-kattappa-killed-bahubali-before-release.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.