Jump to content

தினகரன் கைது: ஆட்சிக் கலைப்புக்கு வழிவகுக்குமா? #VikatanExclusive


Recommended Posts

தினகரன் கைது: ஆட்சிக் கலைப்புக்கு வழிவகுக்குமா? #VikatanExclusive

 
 

ரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக 50 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாகக் கூறி, அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் கைது செய்யப்பட்ட அவரை டெல்லி போலீஸார் நேற்று சென்னைக்கு அழைத்து வந்து, அவரது வீட்டில் 6 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து, பெங்களுரு, கொச்சி ஆகிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தினகரனுடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் சென்னைக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

தினகரன்

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்புவரை, தினகரனுக்கு ஆதரவாக இருந்து அமைச்சர்கள், அ.தி.மு.க  சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றுசேர்ந்துள்ளனர்.

நாஞ்சில் சம்பத்சென்னைக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தினகரனைப் பார்க்க, அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ வரவில்லை. கட்சியின் செய்தித்தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட சிலரே தினகரனைச் சந்திக்க வந்தனர். எனினும் காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது, தினகரனை தாங்கள் பார்த்ததாக நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார், மேலும் தினகரனுக்கு ஆதரவாக அ.தி.மு.க-வின் 87 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்று கூறினார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றதும், தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவருக்கு ஆதரவு தெரிவித்த 12 எம்.எல்.ஏக்களைத் தவிர்த்து 122 அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் அரசு வெற்றிபெற்றது. பிப்ரவரி மாதம் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இரண்டு மாதத்திற்குள் ஆட்சியிலும், அ.தி.மு.க கட்சியிலும் எண்ணற்ற நிகழ்வுகள் அரங்கேறி விட்டன. தினகரனை கட்சியில் இருந்து ஓரங்கட்டிய அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தற்போது ஓ.பி.எஸ் அணியுடன் இணைவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தினகரனை 87 எம்.எல்.ஏக்கள் ஆதரிப்பதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளதால், மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், சட்டசபையைக் கூட்டி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தி உள்ளார். சசிகலாவை சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்த நிலையில், ஓ.பி.எஸ் தனி அணியாகப் பிரிந்து போது, கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களை தங்க வைத்து, பெரும்பான்மையை நிரூபித்ததைப் போன்று இப்போது காட்சிகளை அரங்கேற்ற முடியாது.  

தினகரனுக்கு ஒருசில அமைச்சர்கள், ஒன்றிரண்டு எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவிப்பார்கள் என்று கூறப்படும் சூழ்நிலையில், 87 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக சம்பத் கூறியிருப்பது, எடப்பாடி தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினராக உள்ள 25 பேர் தனியாக சென்னையில் கலந்தாலோசனை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமைச்சரவையில் தங்களுக்கான பிரதிநிதித்துவம் போதிய அளவில் அளிக்கப்படவில்லை என்று அந்த எம்.எல்.ஏக்களின் குற்றச்சாட்டு என்று தெரிய வந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி.தி.மு.க-வின் இரு அணிகளின் இணைப்பைப் பொறுத்தவரை நாளொரு நிபந்தனை, பொழுதொரு தலைவர்களின் பேட்டி என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறது. இரு தரப்பினருமே "பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்" என்று தெரிவித்துள்ள போதிலும், இதுவரை இரு அணியின் குழுக்களும் சந்திக்கவில்லை.

ஆட்சிக்கு பெரும்பான்மை உள்ளதாக என்பதை மீண்டும் நிரூபிக்க ஒருவேளை ஆளுநர் வித்யாசாகர் உத்தரவிடுவாரேயானால், நிலைமை என்னவாகும் என்று கணிக்க முடியாத நிலையில்தான் எடப்பாடி தலைமையிலான அரசு, 'நித்யகண்டம் பூரண ஆயுள்' என்ற பழமொழிக்கேற்ப ஆட்டம் கண்டுள்ளது.

அ.தி.மு.க அணிகள் இணைப்பு தொடர்ந்து தாமதமாகிச் சென்று கொண்டேயிருக்குமானால், ஆட்சியைக் கலைப்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழியிருக்காது. அதற்கு முன்னதாக, தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவின் பங்கு, குறிப்பிடத்தக்கதாக இருக்கும். முதலில் ஆளுநரிடம் அறிக்கை கோரப்படும். ஆட்சி கலைப்புக்கு ஆளுநர் பரிந்துரை செய்யும்பட்சத்தில், தமிழக அரசு கலைக்கப்படும்.  அநேகமாக ஒரு சில மாதங்கள் வரை இதே குழப்பத்தில் அரசை செயல்பட விட்டு, பின்னர் கலைப்பதற்கான சாத்தியங்களும் உள்ளன. எனவே, எப்படி இருப்பினும் தமிழகத்தில் ஆட்சிக் கலைப்புக்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

அது எப்போது என்பதுதான் இப்போதை கேள்வியாக உள்ளது!

http://www.vikatan.com/news/coverstory/87790-would-dinakaran-arrest-lead-to-the-dissolution-of-tn-government.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.