Jump to content

'வட கொரியாவுடன் மிகப்பெரும் பிரச்னைக்கு வாய்ப்பிருக்கிறது! ஆனால்...' - மனம் திறந்த ட்ரம்ப்


Recommended Posts

'வட கொரியாவுடன் மிகப்பெரும் பிரச்னைக்கு வாய்ப்பிருக்கிறது! ஆனால்...' - மனம் திறந்த ட்ரம்ப்

 
 

Donald trump

அமெரிக்கா - வட கொரியா இடையே நடக்கும் பனிப்போர், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசு, அதன் ராணுவத் துருப்புகளை கொரிய தீபகற்பத்துக்குப் பக்கத்தில் அனுப்புவதும்... வட கொரிய அரசு, அமெரிக்காவை அச்சுறுத்துவதுபோல அணு ஆயுதச் சோதனை நடத்தி எச்சிரிக்கை விடுவதும்,  இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழலை உருவாக்கிவருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், 'வட கொரியாவுடன் மிகப் பெரும் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னைக்கு, பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காணத் தயாராகவே இருக்கிறோம்.' என்று கூறியுள்ளார்.

மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த விஷயத்தையும் அணுகுவதுபற்றி ட்ரம்ப், 'எனக்குத் தெரிந்த இரு நாட்டு சச்சரவைத் தீர்ப்பதற்கு, சீன அதிபர் ஜின்பிங் அதிக சிரத்தையுடன் முயல்கிறார். கண்டிப்பாக, அவர் இரு நாட்டுக்கும் இடையில் கொந்தளிப்பை விரும்பவில்லை.' என்றுள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகம், நேற்று வட கொரியாவின் நிலையை, 'அவசர நிலையில் இருக்கும் தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் மற்றும் வெளியுறவு விஷயத்தில் உச்சக்கட்ட முன்னுரிமை கொடுக்கப்படவேண்டிய விஷயம்' என்று சுட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவருவதால், வட கொரியாவைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பதற்றமான சூழ்நிலையே நிலவிவருகிறது. 

http://www.vikatan.com/news/world/87782-there-is-a-chance-that-we-could-end-up-having-a-major-conflict-with-north-korea-says-trump.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நவீனன் said:

'வட கொரியாவுடன் மிகப்பெரும் பிரச்னைக்கு வாய்ப்பிருக்கிறது! ஆனால்...' - மனம் திறந்த ட்ரம்ப்

 
 

Donald trump

அமெரிக்கா - வட கொரியா இடையே நடக்கும் பனிப்போர், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசு, அதன் ராணுவத் துருப்புகளை கொரிய தீபகற்பத்துக்குப் பக்கத்தில் அனுப்புவதும்... வட கொரிய அரசு, அமெரிக்காவை அச்சுறுத்துவதுபோல அணு ஆயுதச் சோதனை நடத்தி எச்சிரிக்கை விடுவதும்,  இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழலை உருவாக்கிவருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், 'வட கொரியாவுடன் மிகப் பெரும் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னைக்கு, பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காணத் தயாராகவே இருக்கிறோம்.' என்று கூறியுள்ளார்.

மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த விஷயத்தையும் அணுகுவதுபற்றி ட்ரம்ப், 'எனக்குத் தெரிந்த இரு நாட்டு சச்சரவைத் தீர்ப்பதற்கு, சீன அதிபர் ஜின்பிங் அதிக சிரத்தையுடன் முயல்கிறார். கண்டிப்பாக, அவர் இரு நாட்டுக்கும் இடையில் கொந்தளிப்பை விரும்பவில்லை.' என்றுள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகம், நேற்று வட கொரியாவின் நிலையை, 'அவசர நிலையில் இருக்கும் தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் மற்றும் வெளியுறவு விஷயத்தில் உச்சக்கட்ட முன்னுரிமை கொடுக்கப்படவேண்டிய விஷயம்' என்று சுட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவருவதால், வட கொரியாவைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பதற்றமான சூழ்நிலையே நிலவிவருகிறது. 

http://www.vikatan.com/news/world/87782-there-is-a-chance-that-we-could-end-up-having-a-major-conflict-with-north-korea-says-trump.html

தும்பி ட்ரம்ப் 
அணுகுண்டு வைத்திருக்கான் .....ஆட்டுக்குட்டி வைத்திருக்கான் என்று மற்றைய நாடுகளை காலி செய்தது போல் அல்ல  வடகொரியா 
கையை வைத்தீர் ....உலகப்போர் 3 தான் ....அப்பு வல்லவனுக்கு வல்லவனும் உள்ளான் 

Link to comment
Share on other sites

வட கொரியா விவகாரம்: சீன அதிபருக்கு டிரம்ப் திடீர் புகழாரம்

 
 

வட கொரிய பிரச்சனையை சீன அதிபர் ஷி ஜின்பிங் கையாளும் விதம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழ்ந்து பேசியுள்ளார். ஷி ஜின்பிங், தன்னுடைய நாடான சீனாவை நேசிக்கின்ற "நல்லதொரு மனிதர்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்படத்தின் காப்புரிமைREUTERS

ராய்டஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய டிரம்ப், வட கொரிய பிரச்சனைக்கு ராஜீய வழிகளில் தீர்வு காண விரும்புவதாகவும், அது முடியாத பட்சத்தில், போர் தவிர்க்க முடியாமல் போகும் என்றும் கூறியுள்ளார்.

இத்தகைய சிறிய வயதிலேயே வட கொரியாவை கிம் ஜாங் உன் ஆள்வது "மிகவும் கடினம்" என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

இன்று வெள்ளிக்கிழமை வட கொரிய பிரச்சனை பற்றி விவாதிக்க ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது.

வட கொரியா இனி அணு சோதனைகள் நடத்தினால் தடைகள் விதிக்கப்படும் என்று சீனா தெரிவித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு செயலர் ரெக்ஸ் தில்லர்சன் தெரிவித்திருக்கிறார்.

 

சீனாவை குற்றஞ்சாட்டிய டிரம்ப்

அமெரிக்க அதிபராக டொனல்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், வட கொரிய பிரச்சனை தொடர்பாக சீனா போதுமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியதோடு, அமெரிக்கா தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

போர் பயிற்சிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனால், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வைத்து ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய விரிவான பேட்டியில், இந்த மாதத்தின் தொடக்கத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்த அதிபர் டிரம்ப், "கொந்தளிப்பும், மரணமும் ஏற்படுவதை சீன அதிபர் விரும்பவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

 

"அவர் மிகவும் நல்ல மனிதர். அவரை பற்றி நான் நன்றாக அறிய வந்துள்ளேன் சீனாவையும், சீன மக்களையும் அவர் மிகவும் நேசிக்கிறார். ஒருவேளை சாத்தியப்படாது என்றாலும், அவர் ஏதாவது செய்ய விரும்புகிறார்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கிம் குறித்து பேசிய டிரம்ப், "அவருக்கு 27 வயதுதான் ஆகிறது. அவர் தந்தை காலமான பின்னர் கிம் ஆட்சிக்கு வந்துவிட்டார். நீங்கள் அவரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அது எளிதானதல்ல" , என்றார்.

 

ஆனால், அவருக்கு நன்மதிப்பு அளிக்க வேண்டும் என்று இவ்வாறு கூறவில்லை என்று கூறிய டிரம்ப் , கிம் '' பகுத்தறிவுடன் நடந்து கொள்வார்" என்று நம்புவதாகக் கூறினார்.

 

தடையை மீறி வட கொரியா ஏவுகணை சோதனை

சமீபத்திய மாதங்களில் வட கொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்துள்ளது. 6வது அணு சோதனையை நடத்த போவதாக மிரட்டி வருகிறது.

வட கொரியா இனி ஏவுகணை சோதனைகளை நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியதாக தில்லர்சன் வியாழக்கிழமை ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார்.

புதினும் ஷின்சோ அபேவும்படத்தின் காப்புரிமைEPA

சீனாவின் அறிவுறுத்தல்கள் புறக்கணிக்கப்பட்டால், என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அவர் குறிப்பாக தெரிவிக்கவில்லை.

இந்த செய்தியை சீனா எப்போது வட கொரியாவிடம் தெரிவித்தது என்றும் தில்லர்சன் விவரிக்கவில்லை. சீனாவிடம் இருந்து இது பற்றி எந்தவித உறுதியும் இதுவரை வழங்கப்படவில்லை.

அணு சோதனை நடத்தாமல் அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தாமல், வட கொரியா அதனுடைய முக்கிய பொது நினைவு கொண்டாட்டத்தை நடத்தியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தில்லர்சன் தெரிவித்திருக்கிறார்.

 

பேச்சுவார்த்தைக்கு புதின் அழைப்பு

முன்னதாக, கொரிய தீபகற்பத்தில் பதட்டம் அதிகரிப்பதை தொடர்ந்து, வட கொரியாவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.

மாஸ்கோவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்த புதின் பேசுகையில், இந்த பிரச்சனையில் ஈடுபட்டுள்ளோர் போர் குணமிக்க சொல்லாடல்களை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்

http://www.bbc.com/tamil/global-39741949

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28.4.2017 at 8:13 AM, அக்னியஷ்த்ரா said:

தும்பி ட்ரம்ப் 
அணுகுண்டு வைத்திருக்கான் .....ஆட்டுக்குட்டி வைத்திருக்கான் என்று மற்றைய நாடுகளை காலி செய்தது போல் அல்ல  வடகொரியா 
கையை வைத்தீர் ....உலகப்போர் 3 தான் ....அப்பு வல்லவனுக்கு வல்லவனும் உள்ளான் 

எப்படி அவளவு உறுதியகக் கூறமுடியும்.  ஈராக்  லிபியா என நாடுகளைச் சூறையாடிவரும் மேற்குலகு  விரைவான வளர்ச்சியையும் பொருண்மிய நிலைத்தன்மையையும் பெற்றுவரும் சீனாவைக்கண்டு மிரள்கிறது. இனி என்னதான் முயன்றாலும் சீனாவை கடந்துபோய் நிமிர்தல் சாத்தியமில்லை. அதனால் அதனது செல்லப்பிள்ளைகளை வீழ்த்துவதூடாக நெருக்கடியைக் கொடுக்க முயல்கிறது. மத்தியகிழக்கில் கொதிநிலையைப் பேணியவாறு வடகொரியாவை நசுக்கவே மமேற்குலகு முனைகிறது. அண்மைய திரேசாமேயினது கூற்றும் அதனை வலுப்படுத்தகிறது. சீனா என்னதான் கதைத்தாலும் ஒரு கட்டத்தின் மேல் அனைத்து அனைத்துலக நகர்வுகளிலும் அகப்படாது பார்வையாளரகவே இருக்கிறது. ஆனால் மேற்குலகோ அமெரிக்கா தாக்கினால் உடன் பிரித்தானியாவும் தாக்குதலில் இணைகிறது. அண்மைய சிரியத் தாக்குதலே சாட்சி. 

வல்லவனுக்கு வல்லவன் உள்ளான் என்பது உண்மைதான். ஆனா அது யார் என்பதே விடைதெரியாத வினா. ஏனெனில் இன்றை தொழில் நுட்பப்பாய்ச்சல். இன்று வெற்றியைத் தீர்மானிப்பது போக்கிலித்தனமும் தொழில் நுட்பமுமே. அதற்கே நாமும் பலியானோம். வடகொரியத் தாக்குதல் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுத்தாலும் அழிவு உலகுக்கானதென்பதை நினைத்தப்பார்க்க மனம் ஏதோசெய்கிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.