Jump to content

'ஒற்றை தலைமை'யை இழக்கும் அ.தி.மு.க... எதிர்காலம் என்ன?


Recommended Posts

'ஒற்றை தலைமை'யை இழக்கும் அ.தி.மு.க... எதிர்காலம் என்ன?

 
 

எம்.ஜி.ஆர். கருணாநிதி

தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட காலம் அது. புதிய கட்சியைத் துவக்க எம்.ஜி.ஆர் திட்டமிட்டார். அப்போது கருணாநிதியையும், எம்.ஜி.ஆரையும் தனியாக சந்தித்துப் பேச வைத்தால் பிரச்னை தீர்ந்து விடும் என நினைத்து அதற்கு தூதுவர்களாக சிலர் இயங்கினர். ஆனால் அதை இரு தரப்பினரும் ஏற்கவில்லை. கட்சி உடைந்தது. அ.தி.மு.க. என்ற புதிய கட்சியை எம்.ஜி.ஆர். துவக்கினார்.

அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். துவக்கிய சில ஆண்டுகளுக்குப் பின்னர், அ.தி.மு.க. - தி.மு.க.வை இணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. கட்சி பொறுப்பை கருணாநிதியும், ஆட்சிப் பொறுப்பை எம்.ஜி.ஆரும் கவனித்துக்கொள்ளும் ஏற்பாடு அது. ஆனால் இதையும் இருவரும் ஏற்கவில்லை. இருவரும் இணையாமல் எதிர் அரசியலையே செய்தனர். ஆளுங்கட்சியாக அ.தி.மு.க.வும், எதிர்கட்சியாக தி.மு.க.வும் செயல்பட்டது.

கருணாநிதி

வெறுப்பு அரசியலுக்கிடையே இருந்த புரிதல்

இரு கட்சிகளிடம் இருந்த பெருவாரியான வாக்கு வங்கி, வேறு கட்சியையோ, தலைவரையோ வளர விடாமல் பார்த்துக்கொண்டது. தமிழகத்தை தொடர்ச்சியாக சிலமுறை ஆண்ட காங்கிரஸ் கரைந்து போனதும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வளர்ச்சியை கண்ட பி.ஜே.பி. தமிழகத்தில் கால் பதிக்க முடியாமல் போனதும் இதனால் தான்.  எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் பேசிக்கொண்டே இந்த முடிவை எடுத்திருப்பதாக கூட அப்போது கிசுகிசுக்கப்பட்டது.

இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொண்டனர். எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஜெயலலிதாவும், கருணாநிதியும் நேருக்கு நேர் சந்திப்பதை அறவே தவிர்த்தனர். அந்தளவு வெறுப்பு அரசியலை கடைபிடித்தனர். ஆனால் இரு கட்சிகளுக்குமிடையே ஒரு புரிதல் இருந்ததை உணர முடிந்தது. அது தான் வேறு கட்சிகளை தமிழகத்தில் கால் பதிக்க முடியாமல் பார்த்துக்கொண்டது.

மிகக் கடுமையான நெருக்கடி கால கட்டங்களில்கூட தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் மாற்று ஏற்பட்டதில்லை. தமிழகத்தில் மூன்றாவது அணி எதுவும் வலுப்பெற்றதே இல்லை. மூன்றாவது பெரிய கட்சியாக உருவான தே.மு.தி.க. அ.தி.மு.க.வுடன் அணி சேர்ந்து தேர்தலை சந்தித்து பிரதான எதிர்கட்சியானது. ஆனால் அதன் பின்னர் அந்த கட்சி தேய்ந்து போனது. வேறு கட்சிகள் கால்பதிக்க முடியாத அளவுக்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்கள் வியூகங்களை அமைத்திருந்தன என்று தான் சொல்ல வேண்டும்.

மோடி ஜெயலலிதா

'ஒற்றை தலைமை' தான் அ.தி.மு.க.வின் பலம்

அ.தி.மு.க.வின் மிகப்பெரிய பலம் ஒற்றைத் தலைமை. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என கட்சிக்கு இருந்த ஒற்றைத்தலைமை வேறு கட்சிகள் ஆதிக்கம் செய்யாமல் பார்த்துக்கொண்டன. சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தபோது, நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பி.ஜே.பி. கூட்டணி அமைக்க விரும்பியது. ஆனால் அதை ஜெயலலிதா அனுமதிக்கவில்லை. அதன்பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்து வீட்டிலேயே இருந்தார் ஜெயலலிதா. அப்போது ஜெயலலிதாவை தேடிவந்து மத்திய அமைச்சர்கள் சந்தித்தார்கள். வழக்கின் மேல்முறையீட்டில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் மோடியே ஜெயலலிதாவை வீடு தேடி வந்து சந்தித்தார்.

'2016 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. உடன் கூட்டணி சேர விரும்பியது பி.ஜே.பி. அதைத்தான் பிரதமரும், மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசி வருகிறார்கள்' என அப்போது சொல்லப்பட்டது. ஆனால் 2016 தேர்தலிலும் பி.ஜே.பி.க்கு கூட்டணி வாய்ப்பு கிடைக்கவில்லை. கொள்கை ரீதியாக பி.ஜே.பி.யுடன் தி.மு.க. விலகி நிற்கும் சூழலில், ஒத்த கருத்துடைய கட்சியாக இருந்த போதும், தமிழகத்தில் பி.ஜே.பி. காலூன்றுவதை அ.தி.மு.க. விரும்பவில்லை என்பதைத்தான் ஜெயலலிதாவின் நடவடிக்கை உணர்த்தியது. ஜெயலலிதாவை மீறி பி.ஜே.பி.யால் தமிழகத்தில் கால் பதிக்க முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் எப்படியேனும் தமிழக சட்டமன்றத்தில் தங்கள் கணக்கை துவங்கி விட வேண்டும் என எதிர்பார்த்த பி.ஜே.பி.க்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

ஜெயலலிதா

ஜெயலலிதா வழியில் சசிகலா...

அ.தி.மு.க.வில் நிலவும் ஒற்றை தலைமை தான் தமிழகத்தில் பி.ஜே.பி. கால் பதிக்க இருந்த மிகப்பெரிய சிக்கல் என சொல்லப்பட்டதும் உண்டு. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் சசிகலா கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துவார் எனும்போது மீண்டும் ஒரு ஒற்றை தலைமை அ.தி.மு.க.வில் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே நிழல் அதிகாரமாக இருந்தவர், நிஜத்தில் அதிகாரம் செலுத்தியது அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கோ, அமைச்சர்களுக்கோ புதியது இல்லை. சசிகலாவுக்கு மக்கள் ஆதரவு என்பது இல்லாத போதும், கட்சியில் அமைப்பு ரீதியாக மிகப்பெரிய ஆதரவு இருந்ததை ஏற்கத்தான் வேண்டும். சசிகலா எனும் ஒற்றைத் தலைமையில் கட்சி இயங்கத்துவங்கியது.

கட்சி வரலாற்றில் அ.தி.மு.க. கடுமையான நெருக்கடிகளை சந்தித்திருக்கிறது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர், அ.தி.மு.க.வில் பெரும் பிளவு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட அதிகாரப்போட்டியால் சின்னம் முடக்கப்பட்டது. ஆனால் அது தற்காலிகமானதாகவே இருந்தது. இது தவிர மேலும் சிறிய பிளவுகள் ஏற்பட்டன. ஆனால் அவை கட்சியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

சசிகலா

30 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் நெருக்கடி !

இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பின்னால் கட்சி மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்திருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க.வை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றாலும், கட்சியையும், ஆட்சியையும் சசிகலாவே வழிநடத்தினார். ஒரு கட்டத்தில் சசிகலாவே முதல்வர் பதவியேற்பார் என அறிவிக்க, சசிகலாவுக்காக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம். அதுவரை சசிகலாவின் கண்ணசைவில் இருந்து வந்தவர், திடீரென சசிகலாவுக்கு எதிராக திரும்பினார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இடமாறினர்.

ஆனாலும், கட்சியில் மிகப்பெரிய பிளவு ஏற்படவில்லை. பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் என 95 சதவீதம் பேர் சசிகலாவுக்கு ஆதரவாகவே இருந்தனர். சசிகலா முதல்வர் பொறுப்பேற்பார் என சொல்லப்பட... திடீரென ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்தது. இதில் குற்றவாளி என சசிகலா உள்ளிட்டோர் சிறைக்குச் செல்ல... சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் துணைப்பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தத் துவங்கினார். இந்நிலையில் இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழக அமைச்சர்கள்

ஒற்றை தலைமையை இழக்கும் அ.தி.மு.க.?

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மட்டுமல்ல... சசிகலா, தினகரனும் கூட அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமையாகத்தான் இருந்தார்கள். ஒற்றை தலைமையாக கட்சியை வழிநடத்தும் ஆற்றலை பெற்றிருந்தார்கள். பெரும்பான்மை கட்சி நிர்வாகிகளை தங்கள் கண்ணசைவில் இயங்க வைத்தனர். இந்நிலையில் தற்போது அப்படிப்பட்ட ஒரு சூழல் மறைந்திருக்கிறது.

இப்போது கட்சியில் யார் தலைமை ஏற்கப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. சசிகலா தரப்பு, பன்னீர்செல்வம் தரப்பு என பிரிந்து நின்ற அணிகள் ஓரணியில் சேரத் துடிக்கின்றன. சசிகலா அணி, தினகரன் அணியாகி... இப்போது யார் தலைவர் என தெரியாத அணியாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். தம்பிதுரை பேசுகிறார். ஜெயக்குமார் பேசுகிறார். செங்கோட்டையன் பேசுகிறார். ஆனால் இவர்களில் யார் தலைவர் என்பது மட்டும் தெரியவில்லை.

நிதியமைச்சராக உள்ள ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம் வந்தால் நிதியமைச்சர் பதவியை தர தயாராக இருக்கிறோம் என்கிறார். சசிகலாவின் படங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பு நிபந்தனை விதித்தால் அதையெல்லாம் நாங்கள் செய்ய வேண்டியதில்லை என மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன மறுநாளே சசிகலாவின் படங்கள் அகற்றப்படுகின்றன. யார் சொல்லி இது நடக்கிறது என்பது தெரியவில்லை. யார் சொன்னால் நடக்கும் என்பதும் தெரியவில்லை.

தமிழக அமைச்சர்கள்

12 பேரிடம் 122 பேர் கெஞ்ச இது தான் காரணம்...!

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், தம்பிதுரை, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார் என பலர் கட்சியை வழிநடத்துகிறார்கள். சசிகலாவுக்கு ஆதரவாக பேசுகிறார் ஒருவர். கட்சி நலன் தான் முக்கியம் சசிகலா அவசியமில்லை என்கிறார் இன்னொருவர். அ.தி.மு.க.வின் பலமான ஒற்றைத் தலைமையை இழந்து பல்வேறு தலைமைகளுடன் பலவீனமாக காட்சியளிக்கிறது அ.தி.மு.க. 122 எம்.எல்.ஏ.க்களையும் 95 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களையும் தங்கள் பக்கம் கொண்ட தரப்பு, 12 எம்.எல்.ஏ.க்களையும், 5 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களையும் கொண்ட தரப்பிடம் கெஞ்ச நேர்ந்ததற்கு காரணம் இது தான்.

அ.தி.மு.க. இதுவரை பல சிக்கல்களை சந்தித்துள்ளது. இரு அணியாக பிரிந்து இரு ஆண்டுகள் சின்னத்தை பறிகொடுத்ததும் உண்டு. போட்டி பொதுக்குழுவை நடத்தி நெருக்கடி கொடுத்ததும் உண்டு. ஆனால் அப்போதெல்லாம் கட்சியைக் காப்பாற்றியது கட்சியின் ஒற்றை தலைமை தான். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், கருணாநிதியும் தமிழகத்தில் மற்ற கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொண்டார்கள். அதற்கு காரணமும் ஒற்றைத் தலைமை தான். இப்போது அதை இழந்து அ.தி.மு.க. பரிதாபமாக காட்சியளிக்கிறது.

அ.தி.மு.க.வுக்கு இது மிகப்பெரிய வீழ்ச்சி. இது தற்காலிகமானதா, நிரந்தரமானதா என்பதைக் காலம் தான் தீர்மானிக்கும். ஒருவேளை அ.தி.மு.க. வீழ்ந்தால், அது தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதைத்தான் சில கட்சிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. இதில் முதலிடம் பி.ஜே.பி.க்கு.

http://www.vikatan.com/news/coverstory/87715-end-of-single-leader-rule-what-is-the-future-of-aiadmk.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.