Jump to content

தினகரனுடன் சென்னை புறப்பட்டது டில்லி போலீஸ்


Recommended Posts

தினகரனுடன் சென்னை புறப்பட்டது டில்லி போலீஸ்

 

புதுடில்லி : தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, டில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தினகரன். இவரை விசாரணைக்காக டில்லி போலீசார் இன்று (ஏப்ரல் 27) சென்னை அழைத்து வருகின்றனர்.
 

 

சென்னை விரையும் டில்லி போலீஸ் :


இரட்டை இலை சின்னத்தை பெருவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு ரூ.60 கோடி வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டில்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவரிடம் 4 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் நேற்று முன்தினம் இரவு தினகரன் கைது செய்யப்பட்டார். இவர் நேற்று டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தினகரன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். தினகரனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டில்லி போலீசாரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில் தினகரின் ஜாமின் மனுவை நிராகரித்து நீதிபதி, அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார். இதனையடுத்து இன்று காலை 9 மணியளவில் தினகரனை அழைத்துக் கொண்டு டில்லி போலீசார் சென்னை புறப்பட்டனர். தினகரனுடன் கைது செய்யப்பட்டுள்ள அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1760048

Link to comment
Share on other sites

டிடிவி.தினகரன் முதல்வர் பதவிக்கு ‘குறி’ வைத்தார்: விசாரணையில் பரபரப்பு தகவல்

டிடிவி. தினகரன் முதல்வர் பதவிக்கு குறி வைத்தே இரட்டை இலை சின்னத்திற்காக ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 
 
டிடிவி.தினகரன் முதல்வர் பதவிக்கு ‘குறி’ வைத்தார்: விசாரணையில் பரபரப்பு தகவல்
 
சென்னை:

ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி.தினகரனிடம் போலீசார் சுமார் 40 மணி நேரம் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

அடுத்த கட்டமாக அவரை 5 நாள் காவலில் எடுத்துள்ள டெல்லி போலீசார் மேலும் அவரிடம் இருந்து புதிய தகவல்களை பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை விசாரணை குழுவினரிடம் டி.டி.வி.தினகரன் அளித்துள்ள பதில்கள் பற்றி டெல்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற்றுவிட வேண்டும் என்பதில் டி.டி.வி.தினகரன் தீவிரமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதற்காகத்தான் அவர் கோடிக்கணக்கில் பணபேரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் போது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்துள்ளது. அதில் வெற்றி பெற்றால்தான் முதல்-அமைச்சர் பதவியை எளிதாக பெற முடியும் என்று அவர் குறி வைத்திருந்தார்.
 
201704271139487250_irattai-chinnam._L_st

அதன்காரணமாகவே அவர் ரூ.50 கோடி வரை லஞ்சம் கொடுக்க முன் வந்தது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. இதற்காக அவர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் பல தடவை பேசியுள்ளார்.

நாங்கள் விசாரணை நடத்திய போது முதலில் அவர் இதை மறுத்தார். ஆனால் ஒரே கேள்வியை நாங்கள் 5 விதமாக கேட்ட போது அவர் சுகேசிடம் பேசியதை ஒப்புக் கொண்டார்.

அவரது பெங்களூர் நண்பர் மல்லிகார்ஜுனா இந்த பணப்பரிமாற்றங்களுக்கு உதவியாக இருந்துள்ளார். அவர்தான் முதல் தவணை தொகையாக ரூ.10 கோடியை திரட்டியுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த சில தொழில் அதிபர்கள் மற்றும் மந்திரிகளிடம் ரூ.10 கோடி பெறப்பட்டுள்ளது. அந்த பணத்தை அவர்கள் கொச்சியை சேர்ந்த ஹவாலா ஏஜெண்டு ஷேக் பைசல் மற்றும் டெல்லி சாந்தினி சவுக்கை சேர்ந்த 2 பேர் மூலம் கைமாற்றியுள்ளனர்.

ஹவாலா ஏஜெண்டுகள் அனைவரும் எங்கள் விசாரணைக்குள் உள்ளனர். அவர்கள் ரூ.10 கோடி பணம் கைமாறியதை ஆதாரபூர்வமாக ஒப்புக்கொண்டனர். எனவே அடுத்தக் கட்டமாக சென்னை, கொச்சி, பெங்களூர் நகரங்களில் விசாரணையையும், சோதனையும் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/27113945/1082246/TTV-Dinakaran-aimed-to-become-TN-CM.vpf

Link to comment
Share on other sites

டி.டி.வி.தினகரன் கைதுக்குக் காரணன் ஜனார்த்தனன்...!? பின்னணி என்ன?

 
 

தினகரன்

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயிலுக்குப் போன சசிகலா, தன் இருப்புக்கு எதிர்காலத்தில் சிக்கல் எதுவும் வந்துவிடக்கூடாது என்று தன்னுடைய அக்காள் மகன் டி.டி.வி.தினகரனை கட்சிக்குள் கொண்டுவந்தார். ஆனால், ஒட்டுமொத்தமாக மன்னார்குடி குடும்பமே கட்சிக்கு முழுக்குப் போடும் நிலையை ஏற்படுத்திவிட்டார் டி.டி.வி தினகரன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா பிரச்னையில் அமைச்சர்கள் சிக்கிய நிலையில், இரட்டை இலை மீட்பு பிரச்னையில் டி.டி.வி.தினகரனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இது ஆளும்கட்சிக்கு பெரிய தலைவலியை  உருவாக்கி இருக்கிறது. அடுத்து என்ன செய்யலாம் என்று அவரது ஆதரவாளர்கள் ரகசியமாகப் பேசி வருகிறார்கள். இந்த நிலையில், டி.டி.வி தினகரன் கைது விஷயத்தில் டெல்லி போலீசார் சொல்லும் தகவல்கள் இதுதான்.

வருமான வரித்துறை சோதனையின் போது ஆர்.கே நகர் பணப்பட்டுவாடா குறித்து சில அமைச்சர்கள், எம்.பி-க்கள் பெயர்கள் லீக் ஆனது. அந்த சோதனையில் சிக்கிய சில ஆவணங்களை வருமான வரித்துறையினர்  அப்படியே ரகசியமாக டெல்லிக்கு பரிமாறினர். அதுதொடர்பான தகவல்களை வெளியே கசியாமல் பார்த்துக் கொண்டதோடு ரகசிய விசாரணையையும் மேற்கொண்டனர். அதன் பின்னணியில்தான் டெல்லியில் கடந்த 15-ம் தேதி சுகேஷ் சந்திரசேகர் என்னும் இடைத்தரகரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினகரன்அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ''இந்திய தேர்தல் ஆணையத்தில் மூத்த அதிகாரிகள் 2 பேரை எனக்கு நன்றாகத் தெரியும் என்று அ.தி.மு.க மூத்த தலைவர் ஒருவரிடம் பேரம் பேசினேன்.  இரட்டை இலையை மீட்க 50 கோடி ரூபாய் தருவதாக அவர்கள் சொன்னார்கள். தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் இரண்டுபேருக்கும் தலா ரூ.20 கோடி வீதம் ரூ.40 கோடி கொடுக்க வேண்டும் என்றும் இந்த காரியத்தை செய்து முடிக்க 10 கோடி ரூபாய் கமிஷன் வேண்டும் என்றும் சொன்னேன். அவர்களும் தந்தார்கள். இது தொடர்பாக பல தடவை மூத்த தலைவர் ஒருவரிடம் பல தடவை பேசினேன். டெல்லியில்தான் பணத்தை கொண்டு வந்து கொடுத்தார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது'' என்று கூறி இருந்தார்.

அதன்பின்னர்தான், டி.டி.வி தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. பின்னர் டெல்லிக்கு விசாரணைக்கு அழைத்தனர். டெல்லியில் 4 நாள் விசாரணை என்று மொத்தம் 37 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு 25-ம் தேதி  கைது செய்தனர். அந்த கைதுக்கு அவர்கள் முக்கிய சாட்சியாக ஜனார்த்தனன் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தை சாட்சியாகக் காட்டுகிறார்கள். இவர், டி.டி.வி.தினகரனின் உதவியாளர். போயஸ் கார்டன், அந்தக் கட்சி டி.வி என்று 2002-ம் ஆண்டில் இருந்து டி.டி.வி தினகரனுக்கு நெருக்கமாக, நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கொண்டிருக்கிறார். 2011-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் இருந்து டி.டி.வி தினகரனை நீக்கியபோது அவரோடு சென்றுவிட்டார். சசிகலா கைதுக்கு பிறகு, கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி தினகரன் ஆன பிறகு அரசியலில் மீண்டும் பிஸியானார் ஜனார்த்தனன்.

இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், டெல்லியில் இருந்து இந்த ஜனார்த்தனன் போன் நம்பர் வழியாகத்தான் டி.டி.வி.தினகரனிடம் அடிக்கடி பேசி இருக்கிறார். அந்த உரையாடல்தான் இப்போது டி.டி.வி தினகரனுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி போலீசார் விசாரித்தபோது முதலில் ஜனார்த்தனன் 'தனக்கு ஒன்றுமே தெரியாது' என்றுதான் கூறி இருக்கிறார். போன் உரையாடல்களை அவருக்குப் போட்டுக் காட்டியபோதுதான்  அதிர்ச்சியில் உறைந்து போனது மட்டுமல்லாமல், இனிமேல் தப்பிக்க முடியாது என்று ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்துள்ளார். அவரின் வாக்குமூலம் அனைத்தையும் அப்படியே டெல்லி குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளார்கள். அந்த பதிவுகளை காட்டிய பிறகுதான் டி.டி.வி தினகரனும் 'சுகேஷ் சந்திரசேகரிடம் பேசினேன்' என்று சொல்லி இருக்கிறார். ஆனால், 'பணம் கொடுக்கவில்லை' என்று திரும்பத் திரும்ப சொல்லி இருக்கிறார். 

இந்த வழக்கில், ஜனார்த்தனனை சாட்சியாக சேர்த்துவிடலாம் என்று டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்று டெல்லி தகவல்கள் சொல்கின்றன. அதற்கான பேச்சுகளும் ஒரு புறம் நடந்துகொண்டு இருக்கிறது. இதுகுறித்து ஜனார்த்தனன் நட்பு வட்டாரத்தில் பேசிய போது, ''கடந்த 15 வருடங்களாக விசுவாசத்தோடு அந்த குடும்பத்துக்கு பணியாற்றி வருகிறார். 2011-ம் ஆண்டு டி.டி.வி.தினகரன் குடும்பத்தை அ.தி.மு.க-வில் இருந்து நீக்கி வைத்தபோது ஆட்சியாளர்களின் கடுமையான நெருக்கடிகளை ஜனார்த்தனன் சந்தித்தார். அப்போது யாருடைய மிரட்டலுக்கும் அவர் பயப்படவில்லை. இப்போது அவர் அப்ரூவர் ஆகிவிடுவார்; அரசு சாட்சியாக மாறிவிடுவார் என்பதெல்லாம் ஜனார்த்தனன் மீது கிளப்பி விடப்படும் வதந்திகள்'' என்கிறார்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/87660-janarthanan-is-one-of-the-reasons-for-ttv-dinakaran-arrest.html

Link to comment
Share on other sites

அடையாறு இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் தினகரன்!

 
 

ttv_dinakaran_intervier_2aa_12399.jpg

இரட்டை இலைச் சின்னத்தை கைப்பற்ற 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக டெல்லி போலீஸார் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். நேற்று நீதிமன்றத்தில் தினகரனை ஆஜர் செய்தபோது, தினகரனை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி அளித்தது நீதிமன்றம். அதன் தொடர்ச்சியாக தினகரனை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த டெல்லி குற்றப்பிரிவு புலனாய்வுத்துறையினர் முடிவு செய்தனர்.

இன்று காலை டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னைக்கு டி.டி.வி தினகரன் அழைத்து வரப்படுகிறார். விமான நிலையத்தில் இருந்து, தினகரனை அவருடைய அடையார் இல்லத்துக்கு காவல்துறையினர் அழைத்து சென்று அங்கு வைத்து விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலையிலே தினகரன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/87697-delhi-police-en-route-to-chennai-with-ttv-dinakaran-for-investigation.html

Link to comment
Share on other sites

முதலில் அரசு விடுதி... அடுத்து அடையாறு வீடு..! டி.டி.வி.தினகரனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

 

Enqury_ttv_dinakaran_17291.jpg

இரட்டை இலைச் சின்னம் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி.தினகரனை சென்னை அழைத்து வந்து டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியில் உள்ள ஹோட்டலில் கடந்த 18-ம் தேதி இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்ததோடு, 1.3 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க டி.டி.வி.தினகரன் பணம் கொடுத்ததாகக் கூறினார். இதையடுத்து தினகரன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

டெல்லிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட தினகரனை நான்கு நாள்களுக்குப் பிறகு காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரனை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதியளித்தது. இதைத்தொடர்ந்து தினகரனை விமானம் மூலம் சென்னைக்கு இன்று டெல்லி காவல்துறை உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் தலைமையில் ஐந்து காவல்துறையினர் அழைத்து வந்தனர்.

Enqury_ttv_dinakaran_1_17544.jpg

விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவனில் உள்ள மத்திய அரசு விடுதியில் வைத்து தினகரனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அடையாறில் உள்ள தினகரன் இல்லத்துக்கு அவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் அவரிடம் காவல்துறையினர் கிடுக்கிப்பிடி கேள்விகளைக் கேட்டுவருவதாகக் கூறப்படுகிறது. 40 நிமிடங்களுக்கு மேல் விசாரணை நடந்து வருவதால் தினகரனின் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/87732-first-government-hostel-next-adyar-house-intense-inquiry-to-ttv-dinakaran.html

Link to comment
Share on other sites

"நெக்ஸ்ட்... அனுராதா..!’’ அதிர்ச்சியில் மன்னார்குடி உறவுகள்

 

அனுராதா -தினகரன்

“தினகரனை  கைது செய்து சசிகலா குடும்பத்துக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு, அடுத்த கட்டமாக தினகரன் மனைவி அனுராதாவிற்கு குறிவைத்துள்ளது. இதனால் சசிகலாவின் ஒட்டுமொத்த குடும்ப உறவுகளும் அதிர்ச்சியில் உள்ளார்கள். 
இரட்டை இலைச் சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார், சுகேஷ் சந்திரசேகர் என்கிற தரகரை கைது செய்தார்கள். அவனிடம் நடத்திய விசாரணையில், இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தர தினகரன் தரப்பிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், அதற்கு முன்பணமும் பெற்றதாக வாக்குமூலம் கொடுத்தார். இதுதொடர்பாக தினகரனுக்கு டெல்லி போலீஸார் வீட்டுக்கே வந்து சம்மன் அளித்தனர். இதையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முன் தினகரன் ஆஜரானார். நான்கு நாட்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு தினகரனுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி அவரை கைது செய்தனர் டெல்லி போலீசார்.

நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட தினகரனை ஐந்து நாட்கள் போலீஸ் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தினகரனை சென்னையில் வைத்து விசாரணை நடத்த முடிவு செய்த டெல்லி காவல்துறையினர் அவரை விமானத்தில் சென்னை அழைத்து வந்தனர். அடையாறு வெங்கடேஷ்வரா நகரில் உள்ள அவரது  வீட்டில் வைத்து விசாரணையைத் தொடர்ந்தனர். 
இந்த விசாணைக்குப்பின் வெளியான தகவல்கள் தான் இப்போது சசிகலா குடும்பத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தினகரன் தரப்பில் இருந்து இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்கு சுகேஷ் சந்திரசேகரிடம் தினகரன் உதவியாளர் ஜனா தான் பேசியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் மல்லிகார்ஜுனாவும் உடன் இருந்துள்ளார். அதிகாரிகளுக்கு பணம் கொடுப்பது குறித்து அப்போது பேச்சு எழுந்தபோது, ஒரே தவணையாக பணத்தை கொடுக்க முடியாது என தினகரன் தரப்பில் இருந்து சொல்லப்பட்டது. முன்தொகையாக பத்துகோடி ரூபாய் சுகேஷ் கேட்டுள்ளார். அந்த பணத்தை மல்லிகார்ஜுனன் மூலம் மும்பையில் இருந்து பணம் சுகேஷ் கைக்கு மாறியுள்ளது. 

தினகரன்

இந்தப் பணம் வந்த வழியை இப்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆய்வு நடத்திவருகின்றனர். பணம் கொடுக்கப்பட்டதில் தினகரன் மனைவி அனுராதாவுக்கு சம்பந்தம் இருப்பதாக போலீஸார் கருதுகின்றனர். அவர் பெயரில் தான் பணம் மாற்றம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.  இந்த ஆவணங்களை கையில் வைத்து கொண்டு தான் சென்னைக்கு வந்த விசாரணைக்குழு தினகரன் வீட்டிலும் ஆய்வு செய்து வேறு சில ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளார்கள். தினகரன் வீட்டில் வைத்தே அனுராதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

அனுராதாவையும் இந்த வழக்கில் சிக்கவைக்கும் முயற்சியில் கனக் கச்சிதமாக டெல்லி காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றார்கள். அனுராதாவுக்கு இந்த வழக்கில் சம்பந்தம் இருப்பதற்கான ஆதாரங்கள் வலுவாக இருந்தால் அனுராதாவும் வளைக்கப்படலாம் என்கிறார்கள். தினகரனை டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து அவர் வீட்டில் வைத்து விசாரணை நடத்த வேண்டிய அவசியம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் சசிகலா உறவினர்களிடம் எழுந்துள்ளது. அனுராதா, தினகரன் மனைவி என்பதைத் தாண்டி சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் ஆவார். 

சசிகலா குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் கொடுப்பதன் பின்னணியில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதால் விழிபிதுங்கி நிற்கிறார்கள், சசிகலா உறவுகள். 
அடுத்தடுத்த நிகழ்வுகளில் பொறுத்திருந்துப் பாருங்கள் என்கிறார்கள் டெல்லி அதிகாரிகள்!

http://www.vikatan.com/news/tamilnadu/87759-anuradha-likely-to-be-questioned-soon.html

Link to comment
Share on other sites

தேர்தல் கமிஷனுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டில்லி போலீசா ரால் கைது செய்யப்பட்டுள்ள தினகரன், மேல் விசாரணைக்காக நேற்று சென்னை அழைத்து வரப்பட்டார். அப்போது அவரைப் பார்க்க அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் யாரும் வரவில்லை. அவருக்கு ஆதரவாக கோஷம் போடவும் போதிய ஆட்கள் இல்லை.

 

Tamil_News_large_1760193_318_219.jpg

டில்லி போலீஸ் என்பதால் அவரது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் தலைமறைவாகி விட்டனர். வழக்கமாக வரும் துதிபாடிகளை காணாததால் தினகரன் வருத்தத்துடன் காணப்பட்டார்.

இரட்டை இலை சின்னத்தை மீட்க சசிகலா வின் அக்கா மகன் தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்தர் என்பவன் மூலம் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து சட்ட விரோத மாக 10 கோடி ரூபாய் டில்லிக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

அதில் 1.30 கோடி கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ஹவாலா ஏஜன்ட் மூலம் டில்லி நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த

சுகேஷ் சந்தரிடம் சேர்க்கப்பட்டுள்ளது. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய டில்லி போலீசார் சுகேஷ் சந்தரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். அவனது வாக்குமூலப்படி தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம்கொடுக்க முயன்ற விவகாரத்தில் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, உதவியாளர் ஜனார்த்தனன் சிக்கினர்.

அவர்களு டன் அலைபேசியில் பேசிய உரை யாடல்கள் மற்றும் 'வாட்ஸ் ஆப்' வாயிலாக பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்களையும் போலீசாரிடம் சுகேஷ்அளித்துள்ளான்.

இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு தினகரனுக்கு டில்லி போலீசார் சம்மன் அளித்து பல கட்ட விசாரணைக்கு பின் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் கைது செய்தனர். அவரையும் மல்லிகார்ஜுனாவையும் போலீஸ் காவலில் விசாரிக்க ஐந்து நாள் அனுமதி பெற்றனர்.அதன்படி நேற்று மதியம் டில்லியில் இருந்து தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவை 'ஏர் இந்தியா' விமானம் மூலம் உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத் தலைமையில் 11 பேர் இடம் பெற்ற போலீஸ் படையினர் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அப்போது அவரை காண நாஞ்சில் சம்பத் மற்றும் கர்நாடக ஜெ., பேரவை செயலர் புகழேந்தி மட்டுமே வந்திருந்தனர். முக்கிய பிரமுகர்கள் யாரும் வரவில்லை. விமான நிலையம் அருகே இருந்தவர்களும் டில்லி போலீசார் கண்ணில் பட்டால் தாங்களும் சிக்கி கொள்வோம் என்பதால் ஓட்டம் பிடித்தனர். துதிபாதிகளை காண முடியாததால் தினகரனும் மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டார். பின்

 

டில்லி போலீசார்தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவை பெசன்ட் நகரில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது லஞ்சப் பணம் எங்கிருந்து வந்தது; அதை எங்கு பதுக்கி வைத்து இருக்கிறீர்கள் என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள் ளன. மாலையில் தினகரனை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர் தந்த தகவலின் அடிப்படையில் ஆவணங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தினகரன் மனைவி அனுராதாவிட மும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பின் தினகரனையும் மல்லிகார்ஜுனாவையும் தனித்தனியாக விசாரித்தனர். அப்போது கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற முயன்ற, மூன்று தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரிகள்; இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதா கக் கூறிய தேர்தல் கமிஷன் அதிகாரிகள்; சுகேஷ் பின்னணியில் இருக்கும் வி.வி.ஐ.பி.,க் கள் குறித்த விபரங்களையும், டில்லி போலீசார் சேகரித்துள்ளனர்.

தினகரன் தொடர்பான விசாரணை நேற்று இரவு வரை நீடித்தது. அதைத் தொடர்ந்து, திருவல்லிக்கேணி அண்ணா நகரில் உள்ள மல்லிகார் ஜுனாவின் வீடுகளுக்கு அவரை அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். பின் தினகரன், மல்லிகார்ஜுனாவை பெங்களூரு, கொச்சிக்கும் அழைத்துச் சென்று விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1760193

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.