Jump to content

சசிகலா உறவினர் தினகரனின் 70 நாள் ஆட்டம்


Recommended Posts

gallerye_2328051000_1759413.jpg

 

 

 

spaceplay / pause

qunload | stop

ffullscreen

shift + slower / faster

volume

mmute

seek

 . seek to previous

126 seek to 10%, 20% … 60%

 

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப் பட்ட, சசிகலா அக்கா மகன் தினகரனை, ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, கோர்ட் அனுமதித்துள்ளது. தினகரனை சென்னை அழைத்து வந்து விசாரிக்கவும், போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

Tamil_News_large_1759413_318_219.jpg

தமிழகத்தில் ஆளும் கட்சியான, அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்ததால், அந்த கட்சியின் தேர்தல் சின்னமான, இரட்டை இலை முடக்கப்பட்டது.சின்னத்தை பெறுவதற்காக, சசிகலா அணியைச் சேர்ந்த, அவரது உறவினர் தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்தர் மூலமாக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 50 கோடி ரூபாய் லஞ்சம் தர முன்வந்ததாக தெரிகிறது.

டில்லி ஓட்டல் ஒன்றில், 1.3 கோடி ரூபாயுடன் சிக்கிய, சுகேஷ் சந்தரிடம் போலீசார் நடத்திய
விசாரணையில், இந்த தகவல் அம்பலம் ஆனது. இதையடுத்து, தினகரன் - சுகேஷ் சந்தர் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவு ஆதாரம் அடிப்படையில், 'விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்' என, டில்லி போலீஸ், தினகரனுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது.

அதன்படி, டில்லி சென்ற தினகரன், அவர் உதவியாளர் ஜனார்த்தனன், நண்பர் மல்லி கார்ஜுனா ஆகியோரிடம், டில்லி போலீசார் விசாரணை நடத்தினர்.
நான்கு நாட்கள் நடந்த விசாரணையில், பல்வேறு ஆதாரங்களை முன் வைத்து கேட்கப்பட்ட, கிடுக்கிப்பிடி கேள்வி களுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய தினகரன், வேறு வழியின்றி உண்மையை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தினகரனை, நேற்று முன்தினம் நள்ளிரவு, போலீசார் கைது செய்தனர். பின்,
ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில், நீதிபதி பூனம் சவுத்ரி முன்,தினகரனை டில்லி போலீசார், நேற்று, ஆஜர்படுத்தினர். டில்லி போலீஸ் தரப்பு வழக்கறிஞர், தினகரன் வழக்கறிஞர் வாதங் களை கேட்ட நீதிபதி, ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து, தினகரனை விசாரிக்க அனுமதி வழங்கினார்.


தினகரனுடன் கைது செய்யப்பட்ட, அவரது நீண்ட கால நண்பர் மல்லிகார்ஜுனாவையும், ஐந்து நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, நீதிபதி அனுமதி வழங்கினார். இதையடுத்து, வரும், மே, 1ம் தேதி வரை, தினகரனிடம், மல்லிகார்ஜுனாவிடமும், போலீசார், அடுத்தக் கட்ட விசாரணை நடத்த உள்ளனர்.

சென்னை, பெங்களூரு, கொச்சி ஆகிய நகரங்க ளுக்கு, தினகரனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும், டில்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைத்த தினகரன், 70 நாட்களுக்கு முன், அவரது சித்தி, சசிகலா வால், துணைப் பொதுச் செயலராக நியமிக்கப் பட்டார். டில்லிபோலீசாரின் அதிரடியால், அவரது அரசியல் ஆட்டம், தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
 

மொபைல் போன் எங்கே?


டில்லி சிறப்பு கோர்ட்டில், தினகரன் ஆஜர் படுத்தப்பட்டபோது, போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சிங், வாதிட்டதாவது:

இடைத்தரகர் சுகேஷ் சந்தருடன், தினகரன் பேசிய மொபைல் போனை கைப்பற்ற வேண்டிய அவசியம் போலீசுக்கு உள்ளது. பணப்பரிமாற்றம் நடந்த விதம் குறித்து, மேல் விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளது. எனவே, ஏழு நாட்கள், போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் வாதிட்டார்.

தினகரன் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறி ஞர், விகாஷ் பக்வா, தன் வாதத்தில் கூறியதாவது: தினகரனிடம், நான்கு நாட்களாக விசாரணை நடத்திய போலீசார், ஆதாரம் எதையும் சமர்ப்பிக்கவில்லை. எந்த சாட்சிய மும் இல்லாத நிலையில், பொய்யான விசாரணை நடக்கிறது. மிக அவசியமான சந்தர்ப்பத்தில் மட்டுமே, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.
 

ரூ.60 கோடி எப்படி வந்தது? தினகரனுக்கு ஐ.டி., 'நோட்டீஸ்'


தேர்தல் கமிஷனுக்கு, 60 கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்றதாக, தினகரன் கைது செய்யப்ப ட்டதை தொடர்ந்து, அந்த வருமானம் வந்த விதம் தொடர்பாக விளக்கம் கேட்டு, அவருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

 

இதுகுறித்து, தமிழக வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட தினகரன், வேட்புமனு தாக்கல் செய்தபோது, தன் சொத்து மதிப்பு, 70 லட்சம் ரூபாய் என குறிப்பிட்டு இருந்தார். தற்போது, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 60 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கும் வழக்கில் கைதாகியுள்ளார்.

அவர் கொடுத்த பணம், 1.30 கோடி ரூபாயும், இடைத்தரகரிடம் சிக்கியுள்ளது. அவ்வளவு பெரிய தொகையை, அவர் இடைத்தரகருக்கு கொடுத்திருப்பதாக, டில்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளதால், அவர்களை அணுகி, விபரங்களை கோரவுள்ளோம். மேலும், அந்த தொகை, தினகரனுக்கு எப்படி வந்தது என விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பவும் முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 

பலத்த பாதுகாப்பு


தினகரனும், அவரது நீண்ட கால நண்பர் மல்லிகார்ஜுனாவும், சிறப்பு கோர்ட் நீதிபதி முன், நேற்று பிற்பகல், 3:10 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர். தினகரனை ஆஜர் செய்வதற்கு சிறிது நேரத்துக்கு முன், கோர்ட் வளாகத்தில் இருந்த பத்திரிகையாளர்களை, அங்கிருந்து வெளியேறும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதங்கள், 45 நிமிடம் நடந்தது. முன்னதாக, 20 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார், கோர்ட் வளாகத்தில் திரண்டிருந்த பத்திரிகையாளர்கள், தினகரனை நெருங்க முடியாதபடி, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். முன்னதாக, டில்லி கிரைம் பிராஞ்ச் அலுவலகத்தில், தினகரனை, அவரது மனைவி சந்தித்ததாகவும் தெரிகிறது.
 

மன்னார்குடி கும்பல் பீதி!


தினகரனிடம், டில்லி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தும் நிலையில், இந்த பணப் பரிவர்த்தனை விஷயத்தில், அவருக்கு நெருக்கமான அமைச்சர்கள் யாரேனும் உதவி யுள்ளனரா என்ற விபரம் தெரிய வரும். அவர் கள் பெயரையும், வாக்குமூலத்தில், தினகரன் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே, வருமான வரித்துறை கண்காணிப் பில் இருக்கும் அமைச்சர்களின் பெயரை, தினகரன் சொல்லும் பட்சத்தில், அவர்களை நோக்கி, வருமான வரித்துறை திரும்பும் என தெரிகிறது. மேலும், தினகரனின் உறவினர் களும், தங்கள் மோசடியும் அம்பலமாகுமோ என்ற பீதியில் உறைந்துள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1759413

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
    • வருமான அதிகரிப்பு பொறிமுறை; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! சுற்றுலாவிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!  (மாதவன்) சுற்றுலாவிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (18) சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாவிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு பணிமனையிலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கூறினார். பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் கூறினார். அத்துடன் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான பொறிமுறையை வடிவமைக்குமாறும் அறிவுறுத்தினார். (ஏ)   https://newuthayan.com/article/வருமான_அதிகரிப்பு_பொறிமுறை;_வடக்கு_ஆளுநர்_தெரிவிப்பு!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.