Jump to content

சசி கையில் ‛குடுமி': இணைப்பு சாத்தியமா


Recommended Posts

சசி கையில் ‛குடுமி': இணைப்பு சாத்தியமா

 

சென்னை: சிறையில் சசிகலா இருந்தாலும், டில்லி போலீஸ் பிடியில் தினகரன் சிக்கினாலும், உண்மையில் கட்சியும் அதிமுக அம்மா அணியின் தலைவர்களின் குடுமியும் சசிகலா கையில் தான் இருக்கின்றன.

 

நியமன புது பதவி:

அதிமுகவின் விதிமுறைப்படி, தொண்டர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், சசிகலா அப்படி செய்யப்படாமல், பொதுக்குழு மற்றும் செயற்குழு சேர்ந்து நியமன பொதுச்செயலாளர் என்ற புதுபதவியை உருவாக்கி, அவரை அமர வைத்தனர்.
அவர் நியமிக்கப்பட்டிருந்தாலும், பொதுச் செயலாளர் என்ற பதவியின் அனைத்து அதிகாரங்களும் அவரிடமே உள்ளன. இதன் அடிப்படையிலேயே பொருளாளராக இருந்த பன்னீர்செல்வம், அவைத்தலைவராக இருந்த மதுசூதனன், அமைச்சராக இருந்த மாபா பாண்டியராஜன் போன்றவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார்.
தற்போது, தேர்தல் கமிஷனில் ஓபிஎஸ் அணி கொடுத்த பிரமாண பத்திரத்தில், ‛‛அதிமுக விதிமுறைப்படி ஒருவர் பதவிக்கு வர குறைந்தது 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். ஜெயலலிதாவால் 2012ல் கட்சியை விட்டு நீக்கப்பட்டு, மீண்டும் சேர்க்கப்பட்ட சசிகலா, கட்சிக்கு மீண்டும் வந்து 5 ஆண்டுகள் முடியவில்லை. எனவே, அவர் உறுப்பினரும் அல்ல; பொதுச்செயலாளரும் அல்ல. எம்ஜிஆர் வகுத்த விதிமுறைப்படி, அனைத்து உறுப்பினர்கள், நிர்வாகிகள் சேர்ந்து தேர்தல் நடத்தி, பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த இரண்டு காரணங்களை வைத்து, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளது.
தேர்தல் கமிஷனில் இபிஎஸ் அணி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‛‛சசி தான் பொதுச்செயலாளர்'' என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் கமிஷன் முடிவு எப்போது வரும் என தெரியாத நிலையில், இன்றைய நிலவரப்படி சசி தான் பொதுச்செயலாளர் என்பது தெரிகிறது. இதில் இன்னொரு வினோதம், சசியை பதவியில் அமர வைத்தவர்களால், அவரை அதே முறையில் நீக்க முடியாது என்பது தான்.
தற்போதைய கேள்வி, இபிஎஸ் அணி, ‛‛தினகரனை ஒதுக்குவோம், தினகரன் இல்லாமல் அதிமுகவை நடத்துவோம்'' என சொல்கிறார்கள். ஆனால், சசி பெயரை உச்சரிக்க மறுக்கிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள்.

 

பயம், பயம், பயம்:

இது குறித்து, கட்சி நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‛‛சசியின் குணம் அனைவரும் அறிந்ததே. அவர் ஜெயலலிதாவையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர். ஜெயக்குமார் அல்லது இடைப்பாடி பழனிசாமி சசியை விமர்சித்து ஒரு பேட்டியோ அல்லது சசியை நீக்க பொதுக்குழு கூட்டப்படும் என அறிக்கை விட்டால் கூட, இவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசியால் நீக்க முடியும்.
அப்படி நீக்கினால், கட்சியின் விதிமுறைப்படி, கோ்ட்டுக்கு கூட போக முடியாது. இதற்கு பயந்தே தேர்தல் கமிஷனே சசியை நீக்கட்டும் என காத்திருக்கிறார்கள்.
தேர்தல் கமிஷனில் கொடுத்த பிரமாண பத்திரத்தைக் கூட வாபஸ் பெற முடியாத நிலையில் இவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

 

லெட்டர்பேடில் சசி கையெழுத்து:

இன்னொரு தகவல், அதிமுக லெட்டர்பேடில் பொதுச்செயலாளர் என கையெழுத்திட்டு தினகரனிடமோ திவாகரனிடமோ கொடுத்து கூட வைத்திருக்கலாம். சசியை எதிர்த்து பேசினால், சென்னையில் இருந்து கூட எந்த நேரத்திலும் யாரையும் கட்சியை விட்டு நீக்கி அறிக்கை வந்து விடும். இந்த பயத்தினால் தான், இபிஎஸ் அணி மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறது'' என்றார்.
அதிமுக ஒன்று சேர, ஓபிஎஸ் அணி விதிக்கும் நிபந்தனைகளை மனதளவில் இபிஎஸ் அணி ஏற்றுக்கொண்டாலும், சசி நியமனத்தை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவிக்காமல் இணைப்பு சாத்தியமில்லை.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1759316

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.