Jump to content

தினகரன் கதை! போயஸ் கார்டன் என்ட்ரி முதல் டெல்லி கைது வரை...


Recommended Posts

தினகரன் கதை! போயஸ் கார்டன் என்ட்ரி முதல் டெல்லி கைது வரை...

 

டி.டி.வி.தினகரன்

‘சமாதிகளின் பூமி’ என்றழைக்கப்படும் டெல்லியில் டி.டி.வி.தினகரனின் அரசியல் வாழ்க்கை அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. இரட்டை இலையை மீட்கத் துடித்த தினகரன் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம், அ.தி.மு.க-வில் அவருக்கிருந்த கொஞ்சநஞ்ச ஆதிக்க சக்தி, ஆட்சியில் அவருக்கு இருந்த எச்சசொச்ச செல்வாக்கு, சமீபமாக அவருக்குள் வளர்ந்திருந்த அரசியல் கனவுகள் அனைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன்பு போயஸ் கார்டனுக்குள் நுழைந்தபோது தொடங்கிய தினகரனின் அரசியல்... டெல்லியில் அவர் கைது செய்யப்பட்டதில் ‘அஸ்தமனம்’ ஆனது வரையிலான கதை... 

தினகரனின் போயஸ் கார்டன் ‘என்ட்ரி’!

சசிகலாவின் உடன்பிறந்த அக்கா வனிதாமணி. அவருடைய கணவர் டி.விவேகானந்தன். வனிதாமணி-விவேகானந்தன் தம்பதியின் மூத்த மகன்தான் டி.டி.வி.தினகரன். இவர், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் அனுராதாவை திருமணம் செய்துள்ளார். அனுராதாவின் உடன்பிறந்த சகோதரர்தான் டாக்டர் வெங்கடேஷ். 1987-ல் எம்.ஜி.ஆர் மறைந்ததற்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு ‘ஆல்-இன்-ஆல்’ ஆக இருந்தவர்கள் சசிகலாவும் அவரது கணவர் நடராசனும். அவர்கள் தயவில், சசிகலாவின் தம்பி திவாகரனும் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தார். அவர் தலைமையில் இயங்கிய பூனைப்படைதான் ஜெயலலிதாவுக்கு அந்தக் காலகட்டத்தில் பாதுகாப்புக் கொடுத்தது. திவாகரனைத் தொடர்ந்து தினகரனும் கார்டனுக்குள் அடியெடுத்து வைத்தார். ஜெயலலிதா செல்லும் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் மெல்ல தினகரனின் தலையும் தென்பட ஆரம்பித்தது. அதன்பிறகு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பார்வையிடுவது, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது என்று தினகரனும் பரபரப்பானார். 1991-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஒட்டுமொத்தமாக மன்னார்குடி குடும்பத்தின் செல்வாக்கு கட்சியிலும் ஆட்சியிலும் கொடிகட்டிப் பறந்தது. அதில், தினகரனின் செல்வாக்கும் உயர்ந்தது. ஜெயலலிதா-சசிகலாவின் வெளிநாட்டு முதலீடுகள், நிறுவனங்கள் தொடங்கும் வேலைகள், வெளிநாடுகளில் இருந்து ஜெயலலிதா கணக்குக்கு வந்த பணம் மற்றும் பரிசுப்பொருள்கள் என்று ஜெயலலிதாவின் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை மேலாளராகவே தினகரன் திகழ்ந்தார். 

டி.டி.வி.தினகரன்

 

குறிப்பாக, ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கில் அமெரிக்க டாலர்கள் வரவு வைக்கப்பட்டது, லண்டனில் ‘காப்ஸ் கிராப்ட்’ என்ற ஹோட்டலை வாங்கியது, சசிகலா பங்குதாரராக இருந்த ‘பரணி பீச் ரிசாட்ஸ்’ நிறுவனத்தில் அமெரிக்க டாலர்கள் வரவு வைக்கப்பட்டது, ஜெ.ஜெ.தொலைக்காட்சிக்கு அப்லோடிங் கருவிகளை வெளிநாட்டில் இருந்து வரவழைத்தது என்று அனைத்திலும் தினகரனின் தலையீடு இருந்தது. 1995-ம் ஆண்டு இறுதியில், இந்த விவகாரங்களில் உள்ள வில்லங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை ‘பெரா’ வழக்குகளாக தினகரனை வளைத்தன. 1996-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஜெயலலிதா, சசிகலா மீது தொடரப்பட்ட மிக முக்கியமான வழக்கு சொத்துக்குவிப்பு வழக்கு. அதில், தினகரன் பெயரில் லண்டனில் வாங்கப்பட்ட ‘காப்ஸ் கிராப்ட்’ ஹோட்டலும் சேர்க்கப்பட்டது. ஆனால், அதையும் சேர்த்து அந்த வழக்கை விசாரித்தால், இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் அந்த வழக்கை முடிக்க முடியாது என்பதை தி.மு.க உணர்ந்தது. இதையடுத்து, லண்டன் ஹோட்டல் விவகாரத்தை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து பிரித்தது. அதனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தினகரனின் தலை தப்பியது. 

ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற தினகரன்!

1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதாவும் தோல்வி அடைந்தார். வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க வென்றது. அந்த மாபெரும் தோல்விக்குக் காரணம், சசிகலாவின் குடும்பமும், அவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் செய்த தலையீடுகளும்தான் என கடுமையான விமர்சனம் எழுந்தது. இதையடுத்து ஜெயலலிதா சசிகலாவின் குடும்பத்தில் பலரை ஒதுக்கி வைத்தார். நடராசன், சுதாகரன், பாஸ்கரன் உள்ளிட்டவர்கள் ஓரம்கட்டப்பட்டனர். ஆனால், ஜெயலலிதாவின் கோபப் பார்வைக்குள் தினகரன் அப்போது சிக்கவில்லை. அதனால், 1999-ம் ஆண்டு  நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தினகரனுக்கு ஜெயலலிதா வழங்கினார்.

டி.டி.வி.தினகரன்

 

பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் போய் தினகரன் போட்டியிட்டார். அப்போது, ஜெயலலிதாவே பெரியகுளத்துக்கு நேரில் சென்று தினகரனை மேடையில் வைத்து அறிமுகப்படுத்தினார். “நான் இங்கு போட்டியிடுவதாகக் கருதி தினகரனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கட்சிக்காரர்களுக்கு  கட்டளையிட்டார். அந்தத் தேர்தலில் தினகரனுக்காக தேர்தல் வேலை பார்க்க வந்தவர்தான் ஓ.பன்னீர் செல்வம். அப்போது தினகரனின் நம்பிக்கையைப் பெற்ற பன்னீர் செல்வத்துக்கு, அடுத்து எம்.எல்.ஏ சீட்டும், அமைச்சர் பதவியும், முதல்முறை முதல் அமைச்சராகும் வாய்ப்பும் கிடைப்பதற்கு தினகரன் மிக முக்கியமான காரணம். 1999 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற தினகரனுக்கு தொகுதிக்குள் ஒரளவுக்கு நல்லபெயரே கிடைத்தது. அந்தத் தொகுதியில் இருக்கும் கட்சிக்காரர்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை வாங்குவது, தொகுதிக்குள் நடக்கும் கோயில் விழாக்கள், சமய நிகழ்ச்சிகளுக்கு நன்கொடை வழங்குவது, மாணவர்களுக்கு உதவிகள் செய்வது என்று வலம் வந்தார்.அதனால், 2004 நாடாளுமன்றத் தேர்தலிலும் தினகரனுக்கே பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை ஜெயலலிதா வழங்கினார். ஆனால், அப்போது அந்தத்தொகுதியில் தி.மு.க கூட்டணியில் இருந்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆருண் வெற்றி பெற்றார். தினகரன் 21 ஆயிரத்து 155 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனாலும், அதன்பிறகும் ஜெயலலிதா தினகரனைக் கைவிடவில்லை. ராஜ்யசபா எம்.பி. பதவியைக் கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்தார். 

2011-ல் ஓரம்கட்டப்பட்ட தினகரன்!

ஜெயலலிதா, டி.டி.வி.தினகரன்2011-ல் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. அதேநேரத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கும் வேகமெடுத்துக் கொண்டிருந்தது. தீர்ப்பின் முடிவு பாதகமாக வந்தால், கட்சியையும் ஆட்சியையும் யார் கட்டுப்படுத்துவது? என்று மன்னார்குடி குடும்பம் மொத்தமாக ஆலோசனையில் இறங்கியது. தஞ்சாவூரிலும் இந்த ஆலோசனை நடந்தது. பெங்களூருவிலும் அந்த ஆலோசனை தொடர்ந்தது. இதை மோப்பம் பிடித்த உளவுத்துறை ஜெயலலிதாவுக்கு ‘ரிப்போர்ட்’ அனுப்பியது. மன்னார்குடி குடும்பத்தின் நம்பிக்கைத் துரோகத்தால் கொதித்துப்போன ஜெயலலிதா... வெறுத்துப்போய் சசிகலா உள்பட அனைவரையும் கார்டனை விட்டுத் துரத்தினார். கட்சியை விட்டு நீக்கினார். ‘மன்னார்குடி குடும்பத்தோடு அ.தி.மு.க-வினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது’ என்று அறிக்கைவிட்டு எச்சரித்தார். ஜெயலலிதாவின் அந்த ஆவேசத்தில் தினகரனும் அடித்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு, 2017-வரை தினகரன் எங்கிருந்தார்... என்ன செய்து கொண்டிருந்தார்... என்ற சுவடே பதிவாகாமல் போனது. ஜெயலலிதாவின் உயிர் அவர் உடலைவிட்டுப் பிரியும்வரை அந்த நிலையே தொடர்ந்தது.

அப்போலோவில் ஐக்கியம்! 

2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் சிகிச்சைக்காக அப்போலோ ‘அட்மிட்’ ஆனார். அந்தச் சாக்கில் சிதறியிருந்த மன்னார்குடி குடும்பம் மீண்டும் ஐக்கியமானது. நடராசன் தவிர்த்து தினகரன், திவாகரன், பாஸ்கரன், சுதாகரன், மஹாதேவன் தலைகள் அப்போலோ மருத்துவமனை வளாகத்துக்குள்ளும், வேதா நிலையம் இருக்கும் போயஸ் கார்டன் தெருவுக்குள்ளும் தென்பட ஆரம்பித்தன. அப்போலோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை நடந்தது. மூன்றாவது தளத்தில் மன்னார்குடி குடும்பத்தின் ஐக்கியம் நிகழ்ந்தது. டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். டிசம்பர் 6-ம் தேதி அவருடைய உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்தது. அவர் உடலைச் சுற்றி அ.தி.மு.க அமைச்சர்களோ... எம்.எல்.ஏ-க்களோ நிற்கவில்லை. சசிகலா, திவாகரன், மகாதேவன், டாக்டர் சிவக்குமார், இளவரசி, பிரியா, நடராசன், பாஸ்கரன், தினகரன் ஆக்கிரமித்து இருந்தனர். ஆனால், அந்தக்கூட்டத்தில்கூட தினகரன் பிரதானமாக நிற்கவில்லை. ஆனால், அதன்பிறகு என்ன நடந்தது... எப்படி நடந்தது என்பது தெரியவில்லை; கட்சிக்காரர்களுக்கும் புரியவில்லை. நடராசன், திவாகரன், மகாதேவன் எல்லாம் சத்தமில்லாமல் ஒதுங்கி இருந்தனர். தினகரனும், டாக்டர் வெங்கடேஷ் மட்டும் போயஸ் கார்டனில் சசிகலாவின் நிழலாக வலம் வர ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் சசிகலாவையே இவர்கள் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்தனர். 

சசிகலாவை கட்டுப்படுத்திய தினகரன்!

சசிகலா, தினகரன்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஊருக்குப் போகும் யோசனையில் இருந்த சசிகலாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை திவாகரன் வாங்கிக் கொடுத்தார். ஆனால், அவருக்கு முதல் அமைச்சராகும் ஆசையைக் கொடுத்தது தினகரன்தான் என்கின்றனர் அ.தி.மு.க பின்னணி அறிந்தவர்கள். தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நடராசன், “பன்னீர் செல்வம் தலைமையில் நல்லாட்சிதான் நடக்கிறது; அதனால், முதலமைச்சரை மாற்றத் தேவையில்லை” என்றுதான் குறிப்பிட்டார். ஆனால், தினகரனுக்கு அதில் உடன்பாடு இல்லை. “பன்னீர் செல்வம் தி.மு.க-வினரோடு நெருக்கமான உறவு வைத்துள்ளார். அவர் தலைமையில் ஆட்சி நடப்பது கட்சிக்கும் நல்லதல்ல... நமது குடும்பத்துக்கும் நல்லதல்ல...” என்று எதையோ சொல்லி சசிகலாவை மாற்றினார்கள். திடீரென ஒருநாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தையும், மற்ற அமைச்சர்களையும் போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்தனர். பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்யச் சொல்லி நிர்பந்தம் கொடுத்தனர். பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். சசிகலா சட்டமன்ற ஆளும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

 

 

அ.தி.மு.க துணைப்பொதுச் செயலாளர் தினகரன்!

திண்டுக்கல் சீனிவாசன், தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன்

பன்னீர் செல்வம் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டதை அடுத்து, அவர் ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்துவிட்டு, அ.தி.மு.க-வை இரண்டாக உடைத்தார். அதேநேரத்தில் சசிகலா முதல் அமைச்சர் நாற்காலியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கவர்னரிடம் முறையிட்டார். அப்போது சசிகலாவோடு கவர்னரைச் சந்திக்கச் சென்றது தினகரன்தான். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டுத்  தீர்ப்பு சசிகலாவின் கனவைக் கலைத்தது. அந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள்தான் என்று வெளியான தீர்ப்பு, சசிகலாவை பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அனுப்பியது. ஆனாலும் அசரவில்லை தினகரன். சசிகலா சிறைக்குப் போகும் முன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை கேட்டு வாங்கினார். சசிகலாவும் தினகரனை அந்தப் பதவியில் நியமித்துவிட்டுப் போனார். “ஜெயலிதா உயிரோடு இல்லை; சசிகலா சிறைக்குச் சென்றுவிட்டார்; குடும்ப உறவுகளை ஒதுக்கிவிட்டோம்” என்று நினைத்த தினகரனின் அரசியல் ஆட்டம் ‘டாப் கியரி’ல் வேகமெடுத்தது. அவர் கையில் துணைப் பொதுச் செயலாளர் பதவியும் இருந்ததால், கட்சியிலும் பெரிதாக எதிர்ப்புகள் கிளம்பவில்லை. அதன் தொடர்ச்சியாக ஆட்சியைக் கைப்பற்ற நினைத்த தினகரன் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். ஒரு காலத்தில் தினகரனால் எம்.எல்.ஏ சீட் வாங்கி, அமைச்சர் பதவியை வாங்கி, முதல்முறை முதலமைச்சராகும் வாய்ப்பையும் பெற்ற பன்னீர் செல்வம் தினகரனை எதிர்த்து மதுசூதனனைக் களமிறக்கினார். கட்சி இரண்டாகப் பிளவுபட்டு நிற்பதால், இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. தினகரனுக்கு சின்னமாக தொப்பி கிடைத்தது. மதுசூதனனுக்கு இரட்டை மின்கம்பம் கிடைத்தது. தேர்தல் சூடு தொடங்கியது. ஆரம்பத்தில் ஆர்.கே.நகரில் தினகரனுக்கு ஆதரவே இல்லை. ஆனால், கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஆனால், தேர்தல் தேதி நெருங்க. நெருங்க நிலைமை மாறியது. தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விநியோகம் செய்யப்பட்டது. தினகரனுக்கு இருந்த கடுமையான எதிர்ப்பு, கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவாக மாறுவதுபோல் தோன்றியது. அவர் வெற்றி பெற்றுவிடுவார் என்று பரவலாகக் கணிக்கப்பட்டது. உளவுத்துறையும் அதையே அறிக்கையாக டெல்லிக்கு அனுப்பியது. 

 

 

விறுவிறுப்பான சறுக்கல்கள்! 

ttv_with_cap_13570.jpgஇரட்டை இலையைப் பறிகொடுத்ததில் தினகரனுக்கான சறுக்கல் தொடங்கியது. ஆர்.கே.நகர் தேர்தல் களேபரங்களில் தினகரனின் சறுக்கல்கள் வேகமெடுத்தன. தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன், தினகரனின் ஆதரவாளரான அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமானவரித்துறை நுழைந்தது. சிட்லபாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார் வீடுகளிலும் ஐ.டி.துறையில் அதிரடி ரெய்டு நடந்தது. அந்த ரெய்டுகளில் ஆர்.கே.நகர் வாக்களார்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின. இதையடுத்து தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்தது. தினகரனின் திட்டம் தகர்ந்தது. ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற அவரது எண்ணம் தள்ளிப்போனது. தேர்தல் ரத்து செய்யப்பட்ட  நேரத்தில் மற்றொரு அடியும் தினகரன் தலையில் விழுந்தது. தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் பெறுவதற்காக தினகரன் லஞ்சம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டை டெல்லி போலீஸ் கிளப்பியது. அந்த வழக்கில் சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டார். “இரட்டை இலையை மீட்பதற்காக தினகரன் 60 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கத் தயாராக இருந்தார். அட்வான்ஸ் தொகையாக ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்” என்று சொன்னதாக டெல்லி போலீஸ் சொன்னது.  

 

 

சிறைக்கு அனுப்பிய சின்னம்! 

டெல்லியில் தினகரன்

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தானபோதே, அ.தி.மு.க-வில் இருந்த அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக அணி திரளத் தொடங்கிவிட்டனர். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்ததும், “தினகரனை கட்சியில் இருந்தும் ஆட்சி அதிகாரங்களில் தலையீடுவதில் இருந்தும் முற்றிலும் ஒதுக்கி வைப்பதாக” அ.தி.மு.க-வின் மூத்த அமைச்சர்கள் அறிவித்தனர். அந்த நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த தினகரன், “நான் நேற்றே ஒதுங்கிவிட்டேன்” என்று சொல்லி சரண்டர் ஆனார். அதோடு தினகரனின் அரசியல் அத்தியாயம் முடிந்தது. ஆனாலும், அவருக்கு ஆதரவாகச் சிலர் கட்சியிலும் ஆட்சியிலும் பேசிக் கொண்டுதான் இருந்தனர். சாதாரணமாக இப்படி ஒதுங்கக்கூடியவர் இல்லை தினகரன் என பன்னீர் அணியும் சந்தேகத்தோடுதான் இருந்தது. ஆனால், இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், டெல்லி போலீஸ் நடத்திய விசாரணைக்கு சென்றார் தினகரன். 4 நாட்கள் 37 மணி நேரம் நடந்த விசாரணையின் இறுதியில், தினகரன் குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்று சொல்லி டெல்லி போலீஸ் அவரைக் கைது செய்தது. இன்று(26-ம் தேதி) தினகரனையும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் ‘தீஸ் ஹசாரி’ நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் ஆஜர்படுத்த உள்ளது. அதன்பிறகு தினகரன் திஹார் சிறைக்கு அனுப்பப்படுவார். சில நாட்கள் கழித்து அவர் ஜாமீனில் வெளிவரலாம். ஆனால், அவருடைய அரசியல் கனவுகள் என்பது சமாதிகளின் பூமியில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. மீண்டும் அவர் அரசியல் செய்ய நினைத்தாலும் அது எதிர்காலமற்ற செத்துப்போன அரசியலாகத்தான் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

http://www.vikatan.com/news/coverstory/87599-tale-of-dinakaran-from-poes-garden-to-delhi-arrest.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.