Jump to content

வடகொரியாவுக்கு எதிராக ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை நிறுவத் துவங்கியது அமெரிக்கா


Recommended Posts

வடகொரியாவுக்கு எதிராக ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை நிறுவத் துவங்கியது அமெரிக்கா

 
 

அண்டை நாடான வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தென் கொரியாவில் உள்ள ஓர் இடத்தில் சர்ச்சைக்குரிய ஏவுகணைத் தடுப்பு அமைப்பை நிறுவும் நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் துவக்கியுள்ளது.

ஏவுகணை தடுப்பு சாதனங்கள் ராணு வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றனபடத்தின் காப்புரிமைAFP Image captionஏவுகணை தடுப்பு சாதனங்கள் ராணு வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன

தாட் எனப்படும் இந்த முறை, வடகொரியாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் முயற்சியாகும்.

தென் கொரியாவின் தென்பகுதியில் இருக்கும் அந்த இடத்துக்கு, ஏவுகணைப் பாதுகாப்பு சாத்தனங்கள் வரத் துவங்கியவுடன், நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அந்தப் பிராந்தியத்தில், பாதுகாப்பு சமநிலையை சீர்குலைக்கும் என்று இந்த பாதுகாப்பு முறைக்கு சீனாவும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

வடகொரியா இன்னும் கூடுதலாக ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனையை நடத்தலாம் என்ற அச்சங்களுக்கிடையில், அமெரிக்கா சமீப நாட்களில் கொரிய தீபகற்பப் பகுதிக்கு போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளை நிறுத்தியுள்ளது.

வடகொரியா வாலாட்டக்கூடாது என்று எச்சரிக்குமாறு அதன் கூட்டாளி நாடான சீனாவை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

திறன் என்ன?

இதற்கிடையில், வடகொரிய நிலவரம் தொடர்பாக, அமெரிக்க செனட்டர்களுக்கு வெள்ளை மாளிகையில் புதன்கிழமை பிற்பகுதியில் ரகசிய விளக்கக் கூட்டம் நடைபெற உள்ளது. தற்போதைய சூழ்நிலை எப்படி மாறக்கூடிய வாய்ப்பு உண்டு, அமெரிக்கா எந்தெந்த வழிகளில் எல்லாம் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்கள் அதில் விளக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பத்துக்கு எதிரான போராட்டம்படத்தின் காப்புரிமைEPA Image captionஏவுகணை தடுப்பு தொழில்நுட்பத்துக்கு எதிரான போராட்டம்

தற்போது, தென்கொரியாவின் தென் பகுதியில் அமெரிக்கா நிறுவிவரும் தாட் (Terminal High-Altitude Area Defense) என்ற முறை, பாலிஸ்டிக் ரக குறுகிய மற்றும் நடுத்தர ரக ஏவுகணைகள் அதன் கடைசிக் கட்டத்தை அடையும்போது, அதை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது.

வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனை அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், தாட் ஏவுகணை தடுப்பு தொழில்நுட்ப முறையை விரைவில் நிறுவுவதற்கான நடவடிக்கைகலை அமெரிக்காவும் தென் கொரியாவும் எடுத்து வருவதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த முறை, வரும் 2018-ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னதாக பயன்பாட்டுக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் முயற்சி

வடகொரிய தீபகற்பத்தில் அமெரிக்க மிச்சிகன் நீர்மூழ்கிபடத்தின் காப்புரிமைREUTERS Image captionவடகொரிய தீபகற்பத்தில் அமெரிக்க மிச்சிகன் நீர்மூழ்கி

அந்தப் பிராந்தியத்தில், சீனா தனது பாதுகாப்பு பிரசன்னத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானந்த தாங்கி போர்க் கப்பலை களமிறக்கும் நிலையில், இந்த புதிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.

தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில், பயன்படுத்தப்படாத கோல்ஃப் மைதானத்துக்கு புதன்கிழமை காலை, ராணுவ பாதுகாப்பு சாதனங்களை ஏற்றிய நீண்ட ராணுவ டிரெய்லர்கள் வருவதை தொலைக்காட்சி செய்திகள் அறிவித்தன.

நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு நின்று தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். சிலர் தண்ணீர் பாட்டில்களை அந்த வாகனங்கள் மீது வீசியெறிந்தனர்.

போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

அந்த பாதுகாப்பு சாதனங்களை அங்கிருந்து அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும், தென்கொரியாவின் புதிய அரசு தனது முடிவை மறுபரீசீலனை செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டரக்காரர்களில் ஒருவரான கிம் ஜாங்-க்யூங் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து போலீசார் உறுதிப்படுத்தவில்லை.

எச்சரிக்கை

வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனை தொடர்பாக வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையை சமீப நாட்களில் வார்த்தைப் போர் அதிகரித்து வருகிறது.

போர்க்கப்பல்படத்தின் காப்புரிமைREUTERS

அதிபர் டிரம்பின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என துணை அதிபர் மைக் பென்ஸ் வடகொரியாவை எச்சரித்திருந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று, அமெரிக்காவின் யுஎஸ்எஸ் மிச்சிகன் என்ற நீர்மூழ்கி, விமானந் தாங்கி போர்க்கப்பல் வசதியுடன், கொரிய தீபகற்பப் பகுதியை வந்தடைந்தது.

அமெரிக்காவின் அத்துமீறலுக்கு எதிராக சூப்பர் சானிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்த முடியும் என்றும், அதன் போர்க் கப்பல்களை மூழ்கடிக்க முடியும் என்றும் வடகொரியா எச்சரித்துள்ளது.

பொறுமை காக்க வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் கோரிக்கை கடந்த திங்கள்கிழமை டிரம்புடன் நடந்த தொலைபேசி உரையாடலின்போது கோரிக்கை விடுத்தார்

http://www.bbc.com/tamil/global-39718384

Link to comment
Share on other sites

வடகொரியா தாக்குதலை சமாளிக்க ஏவுகணை தடுப்பு சாதனம்: தென்கொரியாவுக்கு அனுப்பியது அமெரிக்கா

 

வடகொரியாவின் தாக்குதலைச் சமாளிக்கும் வகையில் அமெரிக்கா அனுப்பி வைத்த ஏவுகணை தடுப்பு சாதனம் தென்கொரியாவுக்கு சென்றடைந்தது.

வடகொரியா 6-வது அணு ஆயுத சோதனைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தினால் அதன்மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தவிர அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர்க் கப்பல் தலைமையில் ஏராளமான சிறிய ரக போர்க் கப்பல்கள் தென்கொரியாவில் குவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க கடற்படையின் அணுசக்தி நீர்மூழ்கி போர்க் கப்பலான யு.எஸ்.எஸ் மிக்ஸிகனும் தென்கொரியாவின் பூசன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் மேலும் அதிகரித்தது.

அதேசமயம் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு சவால் விடுக்கும் வகையில் வோன்சன் எல்லைப் பகுதியில் வடகொரியா நேற்று பேர் ஒத்திகையில் ஈடுபட்டது. தனது ராணுவத்தின் 85-வது ஆண்டு தினத்தையொட்டி இந்த ஒத்திகை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடகொரியாவின் ஏவுகணை தாக்குதலைச் சமாளிக்க கூடிய ஏவுகணை தடுப்பு சாதனத்தை தென்கொரியாவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது.

இந்த சாதனம் நேற்று தென்கொரியாவுக்கு வந்தடைந் தது. இதுகுறித்து தென்கொரிய ராணுவ அமைச்சக அதிகாரி கூறும்போது, ‘‘அமெரிக்கா அனுப்பியுள்ள இந்த ஏவுகணை தடுப்பு சாதனம் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிலை நிறுத்தப்படும்’’ என தெரிவித்தார்.

இந்த ஏவுகணை தடுப்பு சாதனம், குறுகிய மற்றும் நடுத்தர வகையைச் சேர்ந்த எந்தவொரு ஏவுகணையையும் இடைமறித்து தாக்கி அழிக்கும் திறன் பெற்றது.

http://tamil.thehindu.com/world/வடகொரியா-தாக்குதலை-சமாளிக்க-ஏவுகணை-தடுப்பு-சாதனம்-தென்கொரியாவுக்கு-அனுப்பியது-அமெரிக்கா/article9666148.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.