Jump to content

கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 5 புதிய சாதனைகள்


Recommended Posts

கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 5 புதிய சாதனைகள்

 

 

திய­கம மஹிந்த ராஜபக்ஷ வி­ளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் 55ஆவது தேசிய கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களின் மூன்றாம் நாளான நேற்­றைய தினம் பிற்­பகல் 4.00 மணி­வரை ஐந்து புதிய சாத­னைகள் நிலை­நாட்­டப்­பட்­ட­துடன் ஒரு சாதனை சமப்­ப­டுத்­தப்­பட்­டது.

left-to-right-kapilshan-puvitharan_-keth

இதே­வேளை வட மாகாண பாட­சாலை ஒன்­றுக்கு நேற்­றைய தினமும் ஒரு தங்கப் பதக்கம் சொந்­த­மா­னது.

18 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் சாவ­கச்­சேரி இந்து கல்­லூ­ரியின் அருந்­த­வ­ராஜா புவி­தரன் (4.20 மீற்றர்) முன்­னைய சாத­னையை சமப்­ப­டுத்தி தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார்.

இப் போட்­டியில் தெல்­லிப்­பழை மகாஜனாக் கல்­லூ­ரியின் சிவ­குமார் கபில்சன் (4.10 மீற்றர்) மற்றும் கதிர்­கா­ம­லிங்கம் கேதுஷான் (4.00 மீற்றர்) ஆகியோர் முறையே வெள்ளி வெண்­கலப் பதக்­கங்­களை வென்­றனர். இப் போட்­டியில் வட மாகா­ணத்தைச் சேர்ந்த வீரர்­களே முதல் ஆறு இடங்­களைப் பெற்­றனர்.

ஆர். யதுசன் (4.00 மீ. அருணோதயா)இ என். பானுஜன் (3.70 மீ. சாவகச்சேரி இந்து)இ ஜே. நீல் ஜான்சன் (3.00 மீ. மகாஜன) ஆகியோர் முறையே 4ஆம்இ 5ஆம்இ 6ஆம் இடங்களைப் பெற்றனர்.

http://www.virakesari.lk/article/19408

Link to comment
Share on other sites

55 ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் 21 புதிய சாதனைகள்

 

 

திய­கம மஹிந்த ராஜபக்ஷ வி­ளை­யாட்­­ரங்கில் நேற்று நிறை­வு­பெற்ற 55ஆவது கனிஷ்ட தேசிய மெய்­வல்­லுநர் போட்­டி­களில் அதி சிறந்த மெய்­வல்­லு­­ராக வென்­னப்­புவை திருக்­கு­டும்ப கன்­னியர் மடத்தைச் சேர்ந்த வீராங்­கனை ஹஷினி பிர­போதா பால­சூ­ரிய தெரி­வானார்.

Untitled-1.jpg

இவ் வருட கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் மொத்­­மாக 21 புதிய சாத­னைகள் நிலை­நாட்­டப்­பட்­­துடன் இரண்டு சாத­னைகள் சமப்­­டுத்­தப்­பட்­டன.

 

போட்­டியின் கடைசி நாளான நேற்­றைய தினம் மாத்­திரம் 7 புதிய சாத­னைகள் நிலை­நாட்­டப்­பட்­டன.

18 வய­துக்­குட்­பட்ட பெண்­­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் தெல்­லிப்­பழை மகா­ஜன கல்­லூரி வீராங்­கனை சந்­தி­­குமார் ஹெரினா 3.01 மீற்றர் உயரம் தாவி புதிய சாதனையை நிலை­நாட்­டினார்.

இப் போட்­டியில் சாவ­கச்­சேரி இந்துக் கல்­லூ­ரியைச் சேர்ந்த எஸ்.சங்­கவி (2.80 மீ.), எஸ்.தார­ணிகா (2.70 மீ.) ஆகியோர் முறையே வெள்ளி, வெண்­கலப் பதக்­கங்­களை வென்­றனர்.

ஹெரி­னாவை விட 23 வய­துக்­குட்­பட்ட ஆண்­­ளுக்­கான சுற்­றியல் எறிதல் போட்­டியில் இரா­ணு­வத்தைச் சேர்ந்த எஸ். பண்­டார (40.27 மீ.), 16 வய­துக்­குட்­பட்ட பெண்­­ளுக்­கான குண்டு எறி­தலில் கொழும்பு மகளிர் கல்­லூ­ரியைச் சேர்ந்த சரிஷா குண­சே­கர (11.55 மீ.), 20 வய­துக்­குட்­பட்ட பெண்­­ளுக்­கான முப்­பாய்ச்­சலில் வென்னப்­புவை திருக்­கு­டும்ப கன்­னி­யாஸ்­தி­ரிகள் மடத்தைச் சேர்ந்த பிர­போதா பால­சூ­ரிய (13.20 மீ.), 23 வய­துக்­குட்­பட்ட ஆண்­­ளுக்­கான முப்­பாய்ச்­சலில் இரா­ணு­வத்தைச் சேர்ந்த .கரு­ணா­சிங்க (16.13 மீ.), ஆகியோர் புதிய சாத­னை­களை நிலை­நாட்­டினர்.

இது இவ்­வா­றி­ருக்க, 20 வய­துக்­குட்­பட்ட ஆண்­­ளுக்­கான சுற்­றியல் எறிதல் போட்­டியில் பருத்­தித்­துறை ஹாட்லி கல்­லூ­ரியைச் சேர்ந்த எஸ். பிர­காஸ்ராஜ் (25.17 மீ.) தங்கப் பதக்­கத்­தையும் வை. ஜதார்த்தன் (25.25 மீ.) வெள்ளிப் பதக்­கத்­தையும் யாழ். மாவட்ட மெய்­வல்­லுநர் சங்­கத்தைச் சேர்ந்த ஆர். சுஜீவன் (24.44 மீ.) வெண்­கலப் பதக்­கத்­தையும் வென்றெடுத்தனர்.

23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சுற்றியல் எறிதல் போட்டியில் வவுனியா மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தைச் சேர்ந்த சி. ஜெனோஜன் (31.53 மீ.) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

http://www.virakesari.lk/article/19458

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.