Jump to content

தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க டி.டி.வி.தினகரன் ரகசியத் திட்டம்?


Recommended Posts

தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க டி.டி.வி.தினகரன் ரகசியத் திட்டம்?

 

டி.டி.வி.தினகரன், தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

Dinakaran
 

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டி.டி.வி.தினகரன் நேற்று நள்ளிரவு அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார். சமீபத்தில், டெல்லி போலீஸில் சிக்கிய சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். தொடர்ந்து, தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனனிடமும் தீவிர விசாரணை நடைபெற்றது. தினகரனின் செல்போன் உரையாடல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 

தினகரன், விசாரணைக்காக டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் முன் ஆஜரானார். கடந்த நான்கு நாள்களாக தினகரனிடம் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவந்தனர். நான்கு நாள்களில் 37 மணி நேரம் தினகரனிடம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், தினகரன் டெல்லி குற்றப்பரிவு காவல்துறையினரால் நேற்று நள்ளிரவு கைதுசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம், தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் என்று அறிவிக்கப்பட்ட சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளர் என அறிவிக்கப்பட்ட தினகரனும் சிறைக்குச் சென்றுவிட்டதால், அ.தி.மு.க-வில் சிக்கலான சூழல் நிலவிவருகிறது. இந்தச் சூழல் தினகரனுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 'இது முழுக்க முழுக்க பொய் வழக்கு. வேண்டுமென்றே அ.தி.மு.கவின் ஒரு கோஷ்டிக்காக இதை பா.ஜ.க செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்' என்று கருதிய அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள், தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க முடிவுசெய்தனராம். தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களான தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, குணசேகரன், பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம், கனகராஜ் உள்ளிட்ட சிலர் ஆளுநரிடம் இதை தெரிவிக்க முடிவுசெய்துள்ளனர்.

இன்று அதிகாலை, இவர்கள் மும்பை செல்வதாக இருந்ததாம். ஆனால், தினகரனின் குடும்பத்தினருக்கு இந்த முடிவில் விருப்பம் இல்லாததால், எம்எல்ஏ-க்களின் மும்பைப் பயணம் ரத்தாகி உள்ளது.  தினகரனின் குடும்பத்தினர், இந்த முடிவுக்கு தற்காலிகமாக முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/87572-ttvdinakaran-plans-for-dissolution-of-tn-government.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.