Jump to content

தமிழில் வெளியான முதல் புத்தகத்தின் நகலைக் காணலாமா?


Recommended Posts

தமிழில் வெளியான முதல் புத்தகத்தின் நகலைக் காணலாமா?

 
 

நூல்களின் கால இயந்திரத்தில் பயணிக்க ஆசைப்படுபவர்கள், கன்னிமாரா நூலகத்தில் நடந்து வரும் '500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அரிய நூல்கள் கண்காட்சி'யில் கலந்துகொள்ளலாம். நம் வரலாற்றுடன், நூல்களின் பரிணாம வளர்ச்சியையும் காணும் வண்ணம், நூல்களை மலையாக அடுக்கி வைத்திருந்தார்கள்.

தமிழ், ஆங்கிலம், இந்தி  எனப் பல்வேறு மொழிகளைச் சார்ந்த நூல்கள் இந்த அரிய வகை நூல்கள் கண்காட்சியில் உள்ளன. தமிழில் வெளியான முதல் புத்தகத்தின் நகல் நம்மை வரவேற்கிறது. காந்தி பிறப்பதற்கு முன்பே இந்தியாவைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள் கண்ணாடிப் பெட்டிகளில் இருந்துகொண்டு கதை சொல்கின்றன. பிரிட்டிஷ் மாணவர்கள் தமிழகத்தில் நடத்திய ஆய்வுக் கட்டுரைகள், அந்தக் காலத்திலேயே அழகாகத் தொகுக்கப்பட்டு புத்தகமாக வந்திருக்கிறது. ஆங்கிலேயர்களின் 'அரசு புகைப்படக்காரர்'களால் எடுக்கப்பட்ட அன்றைய இந்தியாவின் பல்வேறு புகைப்படங்கள், 'கறுப்பு வெள்ளை'ப் படங்களாக காலம் கடந்தும் நிற்கின்றன. 

கன்னிமாரா நூலகம்

புகைப்படம் எடுக்க முடியாத காலகட்டங்களில்... இந்தியாவில் இருந்த பறவைகள், விலங்குகள், மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் ஓவியங்களாக வரையப்பட்டு தொகுப்பாக இருக்கிறது. ஓவியங்களோடு, ஒவ்வொரு உயிரினத்துக்கான விளக்கமும் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. தவிர, அடிமை இந்தியாவில் ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள் புத்தக வடிவில் இருக்கிறது. அஜந்தா, எல்லோரா குகைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் நம்மைப் பின்நோக்கிக் கடத்துகின்றன.

அரிய நூல்கள் கண்காட்சி

1781-ம் ஆண்டு தரங்கம்பாடியில் நிறுவப்பட்ட தமிழகத்தின் முதல் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட 'ஞானமுறமைகளின் விளக்கம்' கன்னிமாரா பொதுநூலகத்தில் இருக்கும் பழைமையான நூல்களில் ஒன்று. திருச்சபை வழக்கங்களை விளக்கும் இந்நூல், இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கிறது. 1913-களில் தென்னிந்தியாவின் சிலை வடிவமைப்பாளர்களைப் பற்றிப் பேசும் புத்தகம் இருக்கிறது. இந்தியர்களின் கட்டடக்கலை பற்றிப் பேசும், 'இந்தியன் ஆர்கிடெக்சர்' புத்தகம் 1921-ல் வெளிவந்திருக்கிறது. இதுதவிர, டாவின்ஸியின் ஒட்டுமொத்த ஓவியங்களையும் உள்ளடக்கிய 'Leonardo da vinci - the complete paintings and drawings' புத்தகம் கண்காட்சியில் இருக்கிறது. 

தவிர, பண்டைய இந்தியாவின் நில அமைப்புகள், இயற்கை வளங்கள் குறித்த தொகுப்புகள், விலங்கியல், தாவரவியல் சார்ந்து வெளியான புத்தகங்களும் இருக்கிறது. 'மிலிட்டரி காஸ்ட்யூம்ஸ் ஆஃப் இந்தியா' என்ற புத்தகம், ராணுவ வீரர்களின் உடைகள் எப்படியெல்லாம் பரிணாமம் பெற்றது என்பதை விளக்கும் 'pigeons post' என்ற புத்தகம், இந்தியத் தபால் துறையின் பரிணாமங்களைக் கலர் கலர் படங்களில் விவரித்திருக்கிறது. ஓட்டத் தூதுவர்களாக இருந்த 'தபால்காரர்'கள் பயன்படுத்திய உடை, ஆயுதங்கள் எல்லாம் வாசிப்போடு சேர்ந்து பிரமிப்பையும் கொடுக்கிறது. 

அரிய நூல்கள் கண்காட்சி

பதினைந்து ரவுண்ட் டேபிள் போட்டு புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு புத்தகத்தின் வெளியே மட்டும் அட்டை போட்டு இருக்கிறார்கள். இதில், சில புத்தகங்கள் தொட்டாலே உதிரும் நிலையில் இருந்தாலும்... பெரிய மனசுக்காரர்களாக  அந்தப் புத்தகத்தைத் தொடவும், திருப்பிப்பார்த்து போட்டோ எடுக்கவும், ஏன் செல்ஃபி எடுக்கவுமே அனுமதிக்கிறார்கள்.  கண்காட்சியைப் பார்க்கப் பார்க்க... நம் தமிழ்நாட்டின் கடந்த கால சரித்திரத்தை, நிகழ்காலத்தில் நின்றபடியே அணு அணுவாகச் சுவைக்க முடிந்தது. ஆழ்கடலில் தேடித் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்களாக இருந்தது இந்த அரிய நூல்கள். 

கன்னிமாரா நூலகத்தின் இயக்குநர் மீனாட்சி சுந்திரம், "ஒவ்வொரு ஆண்டும் உலக புத்தக தினத்தை முன்னிட்டுதான் இந்தக் கண்காட்சியை நடத்துகிறோம். இந்த ஆண்டும் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அறிவுறுத்தலின்படி இந்தக் கண்காட்சி நடக்கிறது. எங்களிடம் அரிய நூல்கள்னு கிட்டத்தட்ட 25,000 நூல்களுக்கு மேல இருக்கிறது. அது அத்தனையும் வைக்க முடியாது என்பதால், அதில் தேர்ந்தெடுத்து 300 நூல்களை மட்டும் வைத்திருக்கிறோம். இந்த  நூல்களை, இந்தத் தலைமுறையினர் பார்க்க வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம். 

மீனாட்சி சுந்தரம்

இந்த கண்காட்சியில் 1545-ம் ஆண்டு வெளியான நூல்கள் முதல் 1920-ம் ஆண்டு வெளியான நூல்கள் வரை வைத்திருக்கிறோம். 1808-ம் ஆண்டு வெளியான பைபிள். 1858-ம் ஆண்டு மதுரை, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். சென்னை மாகாண வரலாறு, இந்திய வரலாறு, கல்வி வளர்ச்சி போன்ற நூல்களும் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 23-ம் தேதி புத்தக தினம். அதில் இருந்து 29-ம் தேதி வரை கண்காட்சி நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். காலை 10.30 மணிமுதல் மாலை 5 மணி வரை இந்தக் கண்காட்சி நடக்கும். சென்னை மட்டும் இல்லாமல் பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து இந்தக் கண்காட்சியைப் பார்க்கவேண்டும்." எனத் தன் வேண்டுகோளையும் வைத்தார் மீனாட்சி சுந்தரம். 

அரிய நூல்கள் கண்காட்சி

 

பல அரிய நூல்களின் பக்கங்கள் உதிரும் நிலையில் உள்ளன. அதைக் கண்காட்சியில் பார்க்கும் பலரும் அவற்றைத் தொட்டுப்பார்க்கிறார்கள். புத்தகத்துக்கு அருகிலேயே ஊழியர்கள் நின்றாலும், பார்வையாளர்கள் நூல்களைப் புரட்டிப்பார்ப்பதும், புகைப்படம் எடுத்துக்கொள்வது, செல்ஃபி எடுப்பதுமாய் இருந்தார்கள். இவ்வளவு அரிய நூல்களை மக்கள் பார்வைக்கு வைப்பது பாராட்டுக்குரியது. வரும் வாசகர்களும் அதை உணர்ந்துகொண்டு, புரட்டிப்பார்க்கும்போதும்,  புகைப்படம் எடுக்கும்போதும் கவனமாகக் கையாள்வது மிக முக்கியம்! 

http://www.vikatan.com/news/miscellaneous/87468-exhibition-for-500-year-old-and-rare-books-in-kannimara-library-chennai.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.