Jump to content

‘அது தீபா பேரவை இல்ல... தீபா சிட்ஃபண்ட்ஸ்!’ - கடுகடுக்கும் பொறுப்பாளர்


Recommended Posts

‘அது தீபா பேரவை இல்ல... தீபா சிட்ஃபண்ட்ஸ்!’ - கடுகடுக்கும் பொறுப்பாளர்

 
 

தீபா

ள்கட்சிப் பூசல், ஆர்வக்கோளாறால் முடிவு எடுக்கிறார், மற்ற கட்சியினரிடம் பணம் பெற்றார், கணவரை தனியாகத் துரத்தி விட்டார்... என்றெல்லாம் எத்தனையோ குற்றசாட்டுகள் தன் மீது கூறப்பட்டாலும், "நான் முதலைமைச்சர் ஆகியே தீருவேன்' என வைராக்கியத்துடன் தெரிவித்து வருகிறார் 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின்' பொதுச்செயலாளர் தீபா. 

இந்நிலையில், "பதிவு செய்து கட்சி ஆரம்பித்தவர்கள் மட்டும்தான் அரசியல் வாழ்க்கை பற்றிக் கனவு காணத் தகுதி படைத்தவர்கள். ஆனால், இன்றுவரை கட்சியைப் பதிவு செய்யாமல், தன்னை நம்பி வரும் அ.தி.மு.க. தொண்டர்களிடம் இருந்து சுமார் 20 கோடி ரூபாய் வரை நன்கொடையாகப் பெற்று, அந்தப் பணத்தை மோசடி செய்திருக்கிறார் தீபா" என்று அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தென்மண்டல பொறுப்பாளர் ஜானகிராமன்.

இந்த மோசடிப் புகார் குறித்து ஜானகிராமனிடம் பேசியபோது "நான் பல வருஷமா அ.தி.மு.க.வின் உண்மையான விசுவாசியாக இருந்தவன். முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்தவுடன் கட்சி இரண்டாக உடைந்தது. எனக்கு யார் பக்கமும் சேரப் பிடிக்கவில்லை. அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார். அ.தி.மு.க-வை காப்பாற்ற இவர்தான் சரியான நபர் என்று கருதி பலர், தீபாவின் பின்னால் படையெடுத்துச் சென்றார்கள். நானும் அந்த எண்ணத்தில்தான் தீபாவுக்கு ஆதரவு அளித்தேன். உருவ ஒற்றுமை, இவரின் வேகம், அரசியல் குறித்த பார்வை ஆகிய அனைத்தும் ஜெயலலிதாவை நினைவுப்படுத்தும் வகையில் இருந்தது. ஆனால், போகப்போகத்தான் தெரிந்தது. ஒரே உருவ அமைப்பைக் கொண்டிருந்தாலும் புலி வேறு; பூனை வேறு என்பது. தீபா தலைமையிலான கட்சியில் உறுப்பினர் ஆவதற்கு ஆரம்பத்தில் 20 ரூபாய் கொடுத்து ஒரு மனுவை வாங்கி எழுதிக் கொடுத்தோம். பின்னர் தீபா பேரவை ஆரம்பித்ததும் நிர்வாகிகள் பட்டியலைத் தயார் செய்தார். அதில் என்னையும் சேர்த்து மொத்தம் 24 பேர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டோம். 'ஒவ்வொருவரும் கண்டிப்பாக நன்கொடை கொடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். நான் மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தேன். என்னைப்போல ஒவ்வொருவரும் அவரவர் வசதிகேற்ப பல லட்சங்களைக் கொடுத்தனர். இது தவிர, கட்சியோட எல்லா செலவுகளையும் ஒவ்வொருத்தர் பார்த்துக்கணும்னு சொல்லிட்டாங்க.. ஆனால், ரசீது ஏதும் கொடுக்கவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலின்போது, நான் மட்டுமே ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு பண்ணிருக்கேன்.

ஜானகிராமன்

அதுக்கப்பறம் ஏற்கெனவே உள்ள உறுப்பினர்களை மறுபடியும் ஃபார்ம் வாங்கி உறுப்பினராகச் சேர்க்கணும்னு சொல்லி இரண்டரை லட்சம் மனுக்களை கொடுத்தாங்க. ஒரு மனுவோட விலை 20 ரூபாய். நான் மட்டும் 5,000 ஃபாரம் வாங்கி எங்க தொகுதியில இருக்குற தொண்டர்களிடம் கொடுத்து, நிரப்பிக்கொடுக்கச் சொன்னேன். இந்த நேரத்துலதான் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் ரத்தான அடுத்தநாளே தீபா பேரவை கேன்சல் ஆயிருச்சி. அதுபற்றி எந்தவொரு பதிலும் இப்போ வரைக்கும் வரவில்லை. ஆனால், தீபா பேரவை ரத்தானது குறித்து ரெஜிஸ்டர் ஆபிஸ்ல இருந்து பேரவையின் செயலாளர் ராஜா பேருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதை யாருக்கும் தெரியாம தீபா மூடி மறைச்சிட்டாங்க.

கட்சி வளர்ப்பு நிதி என்ற பெயரில் திரும்பவும் பணம் பிடுங்கும் அத்தியாயம் நடந்துச்சி. எனக்கு சந்தேகம் வந்து விசாரித்தேன். அரசியலைமைப்பு ரீதியாகத்தான் தீபா பேரவை நடந்திட்டிருக்கு, ‘சங்க விதிகளின்படி, எந்த ஒரு பதிவும் உங்க பேரவைக்கு இல்லை என்பதை அறிந்தேன். இதுபற்றி ஏற்கெனவே உங்க செயலாளர் ராஜாவுக்கு மனு அனுப்பிட்டோம்’ என்று ரெஜிஸ்டர் ஆபிஸ்ல சொல்லிட்டாங்க. அப்போதான் தெரிஞ்சுது ஏற்கெனவே தீபா பேரவையில் இருந்து நீக்கிவிட்டதாகக் கூறப்பட்ட ராஜாவும், அவரது மனைவி சரண்யாவும் இன்னமும் அதே பொறுப்புகளில் நீடிப்பது. அவர்களை இன்னமும் தீபா நீக்கவில்லை. நீக்கிட்டேன்னு சொன்னது எல்லாம் ஒரு கண்துடைப்பு நாடகம் என்று எனக்குப் புரிஞ்சுது. நான் தீபாகிட்ட வந்து இதுபற்றிக் கேட்டேன். ஆனால், ஒரு பதிலும் சொல்லவில்லை. இத்தகவலை நான் எல்லார்கிட்டயும் சொன்னேன். பேரவை உயர்மட்டக் குழுவில் இருந்த 12 பேர் தீபாவை விட்டுப் பிரிஞ்சு போயிட்டாங்க. இவங்க கட்சி நடத்தல, கட்சிங்கற பேருல தன்னை நம்பி வந்த தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும் சிட் ஃபண்ட் கம்பனி மாதிரி பேரவையை நடத்தி இதுவரை பல கோடி மோசடி செஞ்சுருக்காங்க. எனவேதான், போலீஸில் புகார் கொடுத்துள்ளேன்" என்றார். 

மேலும், "அவங்களுக்குத் தேவை பணம். அதை மற்ற கட்சிகளிடம் இருந்து ராஜா, சரண்யா வாங்கினார்கள்.  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் இருந்து தீபா பணம் வாங்கினாங்க. இன்னொரு பக்கம், பணம் பறிக்க தன் கணவரை தனியாகக் கட்சி ஆரம்பிக்கவைத்து, சும்மா நடிக்கச் சொல்லியிருக்காங்க. மொத்தத்தில் இவர்கள் அனைவரும் பணம் பறிக்கும் நாடகக் கும்பல். நான் இப்போ புகார் கொடுத்தது என் பணம் எனக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக மட்டும் இல்லை. இனிமேலும் தீபாவை நம்பி யாரும் பணத்தை இழக்கக்கூடாது என்பதற்காகத்தான். பத்திரிகையாளர் சந்திப்பின்போது, 'என்னை யாருன்னே தெரியாது. இதுவரைக்கும் என்னைப் பார்த்ததே இல்லைன்னு' தீபா சொல்லியிருக்காங்க. நான் அவங்க கட்சியில சேரும்போது அவங்களே எடுத்த புகைப்படம், ஆர்.கே நகர்த் தொகுதியில்  பிரச்சாரத்தின்போது, ஒரே வண்டியில பக்கத்துல பக்கத்துல நின்னு பிரசாரம் செஞ்சது எல்லாம் மக்களுக்கு தெரியும்." என்றார்.

பிரச்சாரத்தில் தீபாவுடன், ஜானகிராமன்

இப்படி ஏகப்பட்ட குற்றசாட்டுகளினால் 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' ஆரம்பித்த மிகக்குறுகிய காலத்திலேயே அரசியல் பயணத்தில் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு, ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தீபா தன் அரசியல் பயணத்தின் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/87443-its-not-a-political-party-its-a-chit-fund-angered-cadre-express-his-anger-over-deepa-peravai.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.