Jump to content

விழிநீரால் குளிப்பாட்டி.....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

art.jpg

விழிநீரால் குளிப்பாட்டி எனக்கு விடை தருவாயா?

 

ஆணதாய், பெண்ணதாய் பிம்பங்கூட

பேரன்பில் மாய்ந்ததாய் மனதில் தோன்றி

ஊரதும், உலகதும் உறைந்தே போக – உன்

உறவது மட்டுமே உயிர் மேவுமோ?

 

தோளிலே சாயவே வரத்தைக் கேட்டேன்

தோல்வியில் சாயெனச் சாபம் பெற்றேன்

வாயது விட்டழா வலிந்த பெண்மை – உனைக்

கண்டதும் கண்ணீரில் கரைவதென்ன?

 

நேற்றுவரை மோகித்த கனவு எல்லாம்

நெடுந்துயர் தந்ததன்றி வேறு இல்லை

ஆற்ற வா…. அன்பே! அருகே நீதான் – அன்றில்

ஆற்றாத துயரோடு……. உயிர் போகுமோ?

 

எதையுமே கேட்டதில்லை உன்னிடத்திலே

என்னையும் தந்ததில்லை உன் கரத்திலே

பிரிவினை மட்டுமே பேறாய் பெற்றேன் – இந்தப்

பேதையின் நெஞ்சம் செய் பிழைதான் என்ன?

 

காலனவன் கவர வரும் கடைசி ஒரு வேளை – என் கனவே!

கட்டுடைத்து கரம் இறுகப் பற்றிடவே வருவாயா?

சிதையேற்றி என் உடலைத் தீ தீண்டும் முன்னே – உன்

விழிநீரால் குளிப்பாட்டி எனக்கு விடை தருவாயா?

 

sad_eyes_by_paintedmonke.jpg

Link to comment
Share on other sites

நெஞ்சை உருக்கும் கவி வரிகள். 

உங்கள் ஆக்கத்திற்கு நன்றி. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோளிலே சாயவே வரத்தைக் கேட்டேன்

தோல்வியில் சாயெனச் சாபம் பெற்றேன்

வாயது விட்டழா வலிந்த பெண்மை – உனைக்

கண்டதும் கண்ணீரில் கரைவதென்ன?

 

 கேட்கிற வரம் யாருக்கு கிடைக்குது.... கெடுக்கிற வரம் கேளாமலே கிடைக்குது....! அழகான வரிகள்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பதில் எழுத முடியாத பதிவு இது
எதில் உனது இதயத்தை நீ தொலைத்தாய்
ஒளியினிலே தொலைத்து விட்ட உன் உறவை
விழியினிலே தேடி விட ஏன் துணிந்தாய்
வழியனுப்பும் தருணத்தை எண்ணி நீயும்
வாழ்க்கையினைத் தொலைக்காதே அன்புத் தோழி
விதி வலிது எனத் துணிந்து நீ எழுந்து
வாழ்க்கையெனும் வரமதனை நீயும் வாழு
கவிதை நன்று
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் சடத்துவத்துக்கும்.....மலின உணர்வுகளுக்கும் அப்பாலிருக்கும்...பரந்த வெளியில் பயணிக்கின்றது கவிதை!

மீரா....கண்ணனைத் தேடுவது போல...ஒரு கற்பனையைத் தேடுகிறதா கவிதை.....அல்லது மானிடத்தின் சமூக விதிகளால்..தொலைக்கப் பட்ட எதையோ தேடுகிறதா கவிதை..என்று புரியவில்லை!

ஒரு சூனிய வெளியிலிருந்து பிரசவிக்கப் பட்ட ஒரு கவிதை போல உள்ளது!

எதற்கும்....அந்த ஔவையார் தான் வந்து விளக்கம் தர வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாகவி, சுவியண்ணா, யாயினி, தமிழினி, ரோமியோ, காவலூர் கண்மணி ஆகியோரின் பச்சைப்புள்ளிகளுக்கு நன்றி பகர்கிறேன்

On 4/27/2017 at 6:53 AM, yakavi said:

நெஞ்சை உருக்கும் கவி வரிகள். 

உங்கள் ஆக்கத்திற்கு நன்றி. 

 

 

நெஞ்சை உருக்குகிறதா யாகவி நீங்கள் மிகவும் மென்மையானவர் என நினைக்கிறேன். உங்கள் பதிவுக்கு நன்றி சகோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உந்த கவிதை வாசித்து கருத்து சொல்லும் அளவுக்கு அறிவில்லை இருந்தாலும் எதோ சோக கவிதை என்பது மட்டும் புரிகின்றது....ஒம் நமச்சிவாய..என்று சொல்லி ...ரிலாகஸ் 

On 2017-4-25 at 5:48 AM, வல்வை சகாறா said:

 

விழிநீரால் குளிப்பாட்டி எனக்கு விடை தருவாயா?

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/27/2017 at 10:33 AM, suvy said:

தோளிலே சாயவே வரத்தைக் கேட்டேன்

தோல்வியில் சாயெனச் சாபம் பெற்றேன்

வாயது விட்டழா வலிந்த பெண்மை – உனைக்

கண்டதும் கண்ணீரில் கரைவதென்ன?

 

 கேட்கிற வரம் யாருக்கு கிடைக்குது.... கெடுக்கிற வரம் கேளாமலே கிடைக்குது....! அழகான வரிகள்....!  tw_blush:

கேட்கிற வரங்களெல்லாம் கிடைத்துவிட்டால் வாழ்க்கையே சப் என்றாகிவிடும். வாழ்க்கை என்பது பெருங்கடலில் படகுபோல் இருக்கவேண்டும் அப்போதுதான் எமக்கு பிறந்ததன் அர்த்தம் புரியும். எக்காரணத்தைக் கொண்டும் தோற்க முடியாது. கட்டாய வெற்றிகளை கைப்பிடித்தே ஆகவேண்டும்...சுவியண்ணா இப்பதிவைப்பார்த்து நீங்கள் தலைமுடியைப் பிய்த்து எறிந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.... இருந்தாலும் என்கவி மனம் உங்களை அந்த நிலையில் கற்பனைபண்ணிப்பார்ப்பதை தவிர்கக மறுக்கிறது.<_<

pulling+hair+out+man+large.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/25/2017 at 1:18 AM, வல்வை சகாறா said:

சிதையேற்றி என் உடலைத் தீ தீண்டும் முன்னே – உன்

விழிநீரால் குளிப்பாட்டி எனக்கு விடை தருவாயா?

வாவ் வாவ் வாவ் வாவ்  சகாறா அக்கா மீண்டும் கவிதையில் கலக்கல்  விழிநீரால் குளிப்பாட்டி விடை தருவாயா  யாருக்கோ அருவி போல் கொடூகிறது போல கண்ணீர்

 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/27/2017 at 11:30 AM, Kavallur Kanmani said:
பதில் எழுத முடியாத பதிவு இது
எதில் உனது இதயத்தை நீ தொலைத்தாய்
ஒளியினிலே தொலைத்து விட்ட உன் உறவை
விழியினிலே தேடி விட ஏன் துணிந்தாய்
வழியனுப்பும் தருணத்தை எண்ணி நீயும்
வாழ்க்கையினைத் தொலைக்காதே அன்புத் தோழி
விதி வலிது எனத் துணிந்து நீ எழுந்து
வாழ்க்கையெனும் வரமதனை நீயும் வாழு
கவிதை நன்று

இதயம் இருக்கிறது என்பதை தெரியுமுன்பாகவே காணாமல் போய்விட்டதே தோழி. அப்போதே தெரிந்திருந்தால் பத்திரப்படுத்தி வைத்திருந்திருப்பேன் காலம் எழுதியின் கதையில் ஒரு அத்தியாயமே இல்லாமல் போயிருக்கும். தொலைத்ததை கண்டபின்னர் திரும்பப்பெறும் துணிவின்றிப்போனது.tw_blush: சரி போனாப் போகட்டும் ஆசைப்பட்டு வைத்திருக்கும் பேர்வழி வைத்துக் கொள்ளட்டுமே என்று விட்டுவிட்டேன்....அடப்பாவி மகளே இதயம் இல்லாமல் இருந்தால் இறைலோகப்பதவி பெற முடியாதேடி என்று எண்ணங்கள் வலிமையாகிச்சா... அச்சச்சோ நம்ம இதயத்தை கொண்டு வந்து கடைசி மூச்சில தன்னும் தந்துவிட்டு போ ராசா... நீ என்னிடம் அதைத் திருப்பித் தந்து bye காட்டினாத்தானே நான் நிம்மதியா போக முடியும்.....அதான் கனகாலமா பொத்தி பொத்தி வச்ச பொருளை இழப்பதென்றால் யாருக்கு முடியும்.... அடம் பிடித்து அழமாட்டாங்களா.... அதுதான் நீ அழுகிற அந்தக்கணம்தான் நாம நம்ம பொருளை மீளப் பெறுவது உறுதியாகும் இல்லையா... அத்த நெனைச்சு எழுதின கவிதை தோழி.... நாம எல்லாம் எங்கேம்மா சீரியசான ஆட்களா இருந்திருக்கிறோம்?

என்ன ஒருவரை அழ வைத்து நம்ம பொருளைப் பறிப்பது கொஞ்சம் கடினமானதுதான் பட் பறித்துத்தான் ஆகவேண்டும். இல்லையென்றால் அடுத்த உலகத்திலும் தொலைத்ததைத் தேடி அலையவேண்டி வருமே....tw_angry:tw_angry:tw_angry:

hqdefault.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/27/2017 at 6:37 PM, புங்கையூரன் said:

வெறும் சடத்துவத்துக்கும்.....மலின உணர்வுகளுக்கும் அப்பாலிருக்கும்...பரந்த வெளியில் பயணிக்கின்றது கவிதை!

மீரா....கண்ணனைத் தேடுவது போல...ஒரு கற்பனையைத் தேடுகிறதா கவிதை.....அல்லது மானிடத்தின் சமூக விதிகளால்..தொலைக்கப் பட்ட எதையோ தேடுகிறதா கவிதை..என்று புரியவில்லை!

ஒரு சூனிய வெளியிலிருந்து பிரசவிக்கப் பட்ட ஒரு கவிதை போல உள்ளது!

எதற்கும்....அந்த ஔவையார் தான் வந்து விளக்கம் தர வேண்டும்!

கண்ணன் என்கிற மாயையை மீரா சிறுவயதில் வரித்ததும் போஜராசனின் மனையானபின்னும் அம்மாயையில் இருந்து மீளாமல் மலினப்பட்டும் சடத்துவத்திற்கு அப்பால் பரந்த வெளியில் வியாபித்தும் பேரன்பில் கட்டுண்டு கிடந்ததும்...... மகத்துவம் பெற்றதும் கிரிதாரி மீதான நேசிப்பால்தானே..

..de1da034867dbd4638218280d8e09337.jpg

 

சூனிய வெளியில் மட்டுமே ஜீவாத்மா கண்களுக்கு பரமாத்மா புலப்படும்.

 

rooh-uyir-endral-enna-w619-o.jpg

 

 

ரோமியோ இப்படியெல்லாம் திக்குமுக்காட வைக்கக்கூடாது....

வந்தமா வாசிச்சமா இரசிச்சமா என்று இருக்கிறதை விட்டுட்டு பிரபஞ்சத்தின் சூனிய வெளியை பேசி அவ்வெளியில் போய் நின்று பரமாத்மா ஜீவாத்மா என்றெல்லாம் தேடி பெரும் பேரன்புசார் பெரிய விடயங்களை எல்லாம் பேச வச்சிட்டீங்களே ரோமியோ....

 

இருந்தாலும் ரோமியோ நீங்கள் கற்பூரம்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24.4.2017 at 9:48 PM, வல்வை சகாறா said:

 

பிரிவினை மட்டுமே பேறாய் பெற்றேன் – இந்தப்

பேதையின் நெஞ்சம் செய் பிழைதான் என்ன?

 

காலனவன் கவர வரும் கடைசி ஒரு வேளை – என் கனவே!

கட்டுடைத்து கரம் இறுகப் பற்றிடவே வருவாயா?

சிதையேற்றி என் உடலைத் தீ தீண்டும் முன்னே – உன்

விழிநீரால் குளிப்பாட்டி எனக்கு விடை தருவாயா?

ஏக்கத்தை.. அழகாக வர்ணித்த,  மனதை உருகிய வரிகள். 
கவிதைக்கு நன்றி வல்வை  சகாறா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/29/2017 at 5:32 AM, கஜந்தி said:

உயிரோடு வலிகலந்து மொழிசிந்திய கண்ணீர்துளி அருமை

நன்றி கஜந்தி நீண்ட காலத்திற்குப் பின்னர் மீளவும் இப்பதிவில் உங்களைக் காண்கிறேன்.

On 4/29/2017 at 10:15 AM, putthan said:

எனக்கு உந்த கவிதை வாசித்து கருத்து சொல்லும் அளவுக்கு அறிவில்லை இருந்தாலும் எதோ சோக கவிதை என்பது மட்டும் புரிகின்றது....ஒம் நமச்சிவாய..என்று சொல்லி ...ரிலாகஸ் 

 

சோகமாவது புரிந்து ஓம் நமசிவாய சொல்லி ரிலாக்ஸ் போட்டுவிட்டீர்கள் வரவுக்கும் வாசிப்பிற்கும் நன்றி புத்ஸ்

23 hours ago, முனிவர் ஜீ said:

வாவ் வாவ் வாவ் வாவ்  சகாறா அக்கா மீண்டும் கவிதையில் கலக்கல்  விழிநீரால் குளிப்பாட்டி விடை தருவாயா  யாருக்கோ அருவி போல் கொடூகிறது போல கண்ணீர்

 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 

இப்படித் தொடர் சவுண்ட் கொடுத்தால் நாய் குரைக்கிற மாதிரி இருக்கு முனி.....tw_angry:

இந்தக்காலத்தில யாருக்கப்பா அருவி கொட்டும் எல்லாம் செயற்கையான சவர்தான்

img_768_ins_3515_600.jpg

Link to comment
Share on other sites

On 29/04/2017 at 10:15 AM, putthan said:

எனக்கு உந்த கவிதை வாசித்து கருத்து சொல்லும் அளவுக்கு அறிவில்லை இருந்தாலும் எதோ சோக கவிதை என்பது மட்டும் புரிகின்றது....ஒம் நமச்சிவாய..என்று சொல்லி ...ரிலாகஸ் 

 

ஓம் நமச்சிவாய!

ஓம் நமச்சிவாய!

ஓம் நமச்சிவாய!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/30/2017 at 11:04 AM, தமிழ் சிறி said:

ஏக்கத்தை.. அழகாக வர்ணித்த,  மனதை உருகிய வரிகள். 
கவிதைக்கு நன்றி வல்வை  சகாறா. 

நன்றி இலையான் கில்லர்

On 4/30/2017 at 11:32 AM, கலைஞன் said:

ஓம் நமச்சிவாய!

ஓம் நமச்சிவாய!

ஓம் நமச்சிவாய!

b9f8ac840adccac79f9fa232770d5f02--symbol

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரிகள் வலிகளைக்கடந்து நகர்ந்து செல்கிறது.

சிலவேளைகளில்...

ஒரு தடவல்
ஒரு வருடல்
ஒரு தழுவல் தராத சுகத்தை தந்துவிடும். 

சோகமேயில்லாத வாழ்வுமில்லை
சோகமே வாழ்வாவதும் இல்லை சகோதரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2017 at 4:04 PM, nochchi said:

வரிகள் வலிகளைக்கடந்து நகர்ந்து செல்கிறது.

சிலவேளைகளில்...

ஒரு தடவல்
ஒரு வருடல்
ஒரு தழுவல் தராத சுகத்தை தந்துவிடும். 

சோகமேயில்லாத வாழ்வுமில்லை
சோகமே வாழ்வாவதும் இல்லை சகோதரி!

உண்மைதான் நொச்சி

காதல் வெற்றி பெறுவது மட்டுமல்ல அழியாநிலை கொள்வதும் சோகத்திலும் பிரிவிலும்தான் அதிகம் போல் இருக்கிறது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்த எதிர்பார்ப்புக்கள் காலம் கடந்த பின்னர் நிஜமானாலும்
காலம் கடந்த கவிதையாகி.... விதையாகி மரமாக வளர்ந்து நிற்கும் :100_pray:

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2017 at 8:06 AM, வாத்தியார் said:

காலம் கடந்த எதிர்பார்ப்புக்கள் காலம் கடந்த பின்னர் நிஜமானாலும்
காலம் கடந்த கவிதையாகி.... விதையாகி மரமாக வளர்ந்து நிற்கும் :100_pray:

நன்றி  வாத்தியார்.

Link to comment
Share on other sites

உயிர்ப்பை உணர்த்தும் வலிதோய்ந்த வரிகள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.