Jump to content

15 மாத தடைக்குப் பிறகு நாளைமறுநாள் மீண்டும் களம் இறங்குகிறார் மரியா ஷரபோவா


Recommended Posts

15 மாத தடைக்குப் பிறகு நாளைமறுநாள் மீண்டும் களம் இறங்குகிறார் மரியா ஷரபோவா

 

ஊக்கமருந்து பயன்படுத்தியதற்கான தண்டனை காலம் முடிந்து 15 மாதங்களுக்குப்பின் மீண்டும் டென்னிஸ் அரங்கில் புதன்கிழமை களமிறங்குகிறார் மரியா ஷரபோவா.

 
 
15 மாத தடைக்குப் பிறகு நாளைமறுநாள் மீண்டும் களம் இறங்குகிறார் மரியா ஷரபோவா
 
ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்போது தடைவிதிக்கப்பட்ட மெல்டோனியம் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்திய தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அவருக்கு 15 மாதம் தடைவிதிக்கப்பட்டது. இந்தத் தடை தற்போது நீங்கியுள்ளது. இதனால் அவர் மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு ‘வைல்டுகார்டு’ கிடைக்குமா? என்ற கேள்வி எழும்பியது.

இந்நிலையில் ஸ்டட்கார்ட் டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்காக, அந்தத் தொடரின் அமைப்பாளர்கள் ஷரபோவாவிற்கு வைல்டுகார்டு கொடுத்துள்ளனர். இதனால் புதன்கிழமை மீண்டும் டென்னிஸ் அரங்களில் களம் இறங்க இருக்கிறார்.

ஸ்டட்கார்ட் தொடரின் முதல் சுற்றில் ரொபர்ட்டா வின்சியை எதிர்கொள்கிறார். இதில் வெற்றில் பெற்றால் 2-வது சுற்றில் போலந்தின் ரட்வன்ஸ்காவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மரியா ஷரபோவாவிற்கு வைல்டுகார்டு வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தவர் ரட்வன்ஸ்கா என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/24132308/1081644/Tennis-star-Maria-Sharapova-rejoins-the-action-on.vpf

Link to comment
Share on other sites

களத்தில் மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.. tw_grin:

Maria-Sharapova1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

களத்தில் மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.. tw_grin:

Maria-Sharapova1.jpg

தம்பியில்லாமல்

களமும் காய்ஞ்சு போய்த்தான் கிடக்கு...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 15 மாதம் இரவு பகலாக வளர்ந்த ...........
மரியாவின் திறமைகளை .
எந்த ஒழிவு மறைவும் இன்றி காண 
ஆவலுடன் காத்திருக்கிறோம் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு   மிகவ்வும் பிடித்த டெனிஸ் வீராங்கணை  ம்மரியா ஷரபோவா tw_blush:  

ஆனால் என்ன சானியா மிர்ஷா ஆடினால் அலுக்காமல் பார்க்கலாம்  ஆட்டத்தை  tw_blush:

53 minutes ago, Maruthankerny said:

கடந்த 15 மாதம் இரவு பகலாக வளர்ந்த ...........
மரியாவின் திறமைகளை .
எந்த ஒழிவு மறைவும் இன்றி காண 
ஆவலுடன் காத்திருக்கிறோம் !

ஆசை யாரை விட்டது tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, முனிவர் ஜீ said:

எனக்கு   மிகவ்வும் பிடித்த டெனிஸ் வீராங்கணை  ம்மரியா ஷரபோவா tw_blush:  

ஆனால் என்ன சானியா மிர்ஷா ஆடினால் அலுக்காமல் பார்க்கலாம்  ஆட்டத்தை  tw_blush:

ஆசை யாரை விட்டது tw_blush:

இஞ்சை பாரடா இவற்றை கூத்தை!!!!!!!
இடக்கையுக்கு ஒண்டு வலக்கையுக்கு ஒண்டு வேணுமாமெல்லே :grin:

Link to comment
Share on other sites

ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஷரபோவா போராடி தோல்வி

ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டி ஒன்றில் தடையில் இருந்து மீண்டு வந்த ஷரபோவா பிரான்ஸ் வீராங்கனையிடம் போராடி தோல்வியுற்றார்.

 
ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஷரபோவா போராடி தோல்வி
 
ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா 15 மாத தடைக்காலம் முடிந்து ஸ்டட்கார்க் ஓபன் மூலம் மீண்டும் டென்னிஸ் களத்தில் அடியெடுத்து வைத்தார். முதல் சுற்று, 2-வது சுற்று மற்றும் காலிறுதியில் வெற்றி பெற்ற அவர், நேற்று அரையிறுதியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா மிலாடெனோவிச்சை எதிர்கொண்டார்.

முதல் செட்டை மரியா ஷரபோவா 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டில் மிலாடெனோவிச் அபாரமாக விளையாடினார். மரியா ஷரபோவாவும் இணையாக போராட இறுதியில் மிலாடெனோவிச் 7-5 என அந்த செட்டை கைப்பற்றினார்.

201704301632299626_Kristina-Mladenovic-s

வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் மிலாடெனோவிச்சின் கையே ஓங்கியது. அவர் 6-4 என 3-வது செட்டை கைப்பற்றி ஷரபோவாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

15 மாதம் தடைக்குப்பின் களமிறங்கிய ஷரபோவா அரையிறுதிக்கு நுழைந்த திருப்யோடு வெளியேறினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/30163229/1082850/Stuttgart-Open-Maria-Sharapova-Falls-To-Kristina-Mladenovic.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.