Jump to content

திருமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து இறுதி தீர்மானம் இல்லை


Recommended Posts

திரு­மலை எண்ணெய் குதங்­களை இந்­தி­யா­வுக்கு வழங்­கு­வது குறித்து இறுதி தீர்­மானம் இல்லை

ffffff-ffdf67325c86e9aa2a0763d1d3831a77a164f8a3.jpg

 

பிரதமரின் இந்திய விஜயத்தின்போது ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டு­வதில் சந்­தேகம் என்­கிறார் அமைச்சர் சந்­திம
(க.கம­ல­நாதன்)

திரு­கோ­ண­மலை எண்ணெய்க் குதங்கள் பற்­றிய பேச்­சு­வார்த்­தைகள் இன்னும் இறுதிக் கட்­டத்­ தினை எட்­ட­வில்லை. எனவே பிர­த­மர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்­திய விஜ­யத்தின் போது மேற்­படி விவ­காரம் குறித்த ஒப்­பந்தம் கைச்சாத்­தி­டப்­ப­டு­வது சந்­தே­கத்­திற்­கி­ட­மா­ன­தாகும் என பெற்­றோ­லிய வளத்­துறை  அமைச்சர் சந்­திம வீரக்­கொடி தெரி­வித்தார். 

எவ்­வா­றா­யினும் ஒப்­பந்தம் கைசாத்­திடப்படும்போது 10 எண்ணெய் குதங்­களை முழு­மை­யாக இலங்கை பொறுப்­பேற்பதுடன் ஏனையவற்றை இந்­தி­யா­விற்கு குத்தகை அடிப்­ப­டை­யில் வழங்­குவதே அர­சாங்­கத்தின் எதிர்­பார்ப்­பாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

திரு­கோ­ண­மலை எண்ணெய் குதங்கள் முழு­மை­யாக இந்­தி­யா­விற்கு கைய­ளிப்­பட்­டுள்ள நிலையில் அதன் தற்­கால நில­வரம் குறித்து வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

திரு­கோ­ண­மலை எண்ணெய் குதங்கள் பற்­றிய பேச்­சு­வர்த்­தைகள் தற்­போதும் வழ­மைப்­போ­லவே இடம்­பெ­று­கின்­றன. இந்த பேச்­சு­வார்த்­தைகள் தற்­போது வரையில் இறுதி தீர்­மா­னத்­தினை எட்­ட­மா­லேயே உள்­ளன.

இந்­நி­லையில் அண்­மையில் திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள எண்­ணெய்­கு­தங்கள் சக­ல­தையும் இந்­தி­யா­விற்கு அர­சாங்கம் வழங்­கி­யது. அப்­ப­கு­தியில் மீண்டும் வியா­பார செயற்­பா­டு­களை சீர் செய்து முன்­னெ­டுப்­ப­தற்­கா­கவே அவற்றை முழு­மை­யாக இந்­தி­யா­விற்கு வழங்­கி­யி­ருந்தோம்.

இதற்கு முன்­பாக 14 எண்ணெய் குதங்­களை இந்­தி­யா­விற்கு குத்­தகை அடிப்­ப­டையில் வழங்­கு­வது குறித்து பேசப்­பட்­டது. பின்னர் 75 எண்ணெய் குதங்­களை இந்­தி­யா­விற்கு வரு­டாந்த குத்­தகை அடிப்­ப­டையில் வழங்கும் பரிந்­துரை ஒன்றும் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இது குறித்து பேச்­சப்­பட்­டதன் பின்பே சகல எண்ணெய் குதங்களை இந்­தி­யா­வி­டத்தில் கைய­ளித்து அதனால் திரு­கோ­ண­மலை எண்ணெய் குதம் அமைந்­துள்ள பகு­தியில் வியா­பார பகு­தி­களை மீண்டும் உயிர்­பெறச் செய்ய எதிர்­பார்தோம்.

எனினும் அது தொடர்­பி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கைசாத்­தி­டப்­ப­டு­வது குறித்து அமைச்­ச­ர­வையில் ஆலோ­சிக்­கப்­ப­ட­வில்லை. எனவே அமைச்­ச­ர­வையில் ஆலோ­சிக்­க­ப­டாத ஒரு விடயம் நடை­மு­றைக்கு வரு­வது சாத்­தி­ய­மற்ற ஒன்­றாகும்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்­வரும் நாட்­களில் இந்­தி­யா­விற்­கான உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்­றினை மேற்­கொள்­ள­வுள்ள நிலை­யில்தான் இவ்­வா­றான விட­யங்கள் குறித்து பேசப்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் உள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. இருப்­பினும் புரிந்­து­ணர்வு ஒப்­பந்த கைச்­சாத்­து இதன்போது சாத்திமற்ற ஒன்றாகவே உள்ளது.

எவ்வாறாயினும் திருகோணமலை எண்ணெய் குதங்கள் குறித்த ஒப்பந்தம் கைத்திடப்படுகின்ற போது 10 எண்ணைக்குதங்களை முழுமையாக இலங்கையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கச் செய்து ஏனயைவற்கை குத்தகை அடிப்படையில் இந்தியாவிற்கு வழங்குவதே எமது நோக்கமாகவுள்ளது என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-24#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.