Jump to content

‘சம்பந்தன் செல்லும் பாதையில் கண்களை மூடிக்கொண்டு செல்வோம்’


Recommended Posts


‘சம்பந்தன் செல்லும் பாதையில் கண்களை மூடிக்கொண்டு செல்வோம்’
 

article_1492958873-sitthrthan.jpg-எஸ்.நிதர்ஷன்   
“ஈழத் தமிழ் அரசியலில் எத்தகைய முரண்பாடுகள், மாற்றங்கள் ஏற்பட்டாலும் அரசியலமைப்பு முயற்சிகள் முடிவுறும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தலைவர் சம்பந்தனையும் விட்டு விலகமாட்டோம்.அதுவரை அவர் செல்லும் பாதையில் கண்களை முடிக்கொண்டு செல்வோம்” என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.  

“தடுமாறும் தமிழ்த் தலைவர்களால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள்? அடுத்து என்ன?” என்ற தலைப்பில், கருத்தாய்வு நிலை கருத்துப் பகிர்வு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், வவுனியா விருந்தினர் விடுதியில் சனிக்கிழமை (22) நடைபெற்றது.   

இதன் போது உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித் சித்தார்த்தன் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“ கூட்டமைப்பு தொடர்பில் என்னால், முடிவெடுக்க முடியாது என்றும் என்னுடைய கட்சி சம்பந்தமாகவே முடிவெடுக்க முடிமென்றும் இங்கு உரையாற்றிய ஒருவர் குறிப்பிட்டதில் உண்மை இருக்கின்றது.

இன்றிருக்கின்ற சூழ்நிலையில் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் பங்காளிக் கட்சிகளாக இருக்கின்ற கட்சிகள் முடிவெடுக்கின்ற எல்லா விடயங்களிலும் பங்காளிகள் இருக்கவில்லை. அவ்வாறு பங்காளிகளாக, நாங்கள் பங்குபற்றவில்லை.

இருந்தாலும் எங்களுக்கு கூட்டுப் பொறுப்பு இருக்கின்றது.  இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் தவறுகள் இடம்பெற்றுகொண்டிருக்கிறன. ஏன் தொடர்ந்தும் கூட்டமைப்பில் இருக்கின்றீர்கள் என்ற கேள்வி எழுகின்றது.

ஆனால், என்னைப் பொறுத்தவரையில் அல்லது எங்கள் கட்சியைப் பொறுத்தவரையில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்” என்றார்.   

- See more at: http://www.tamilmirror.lk/195285/-சம-பந-தன-ச-ல-ல-ம-ப-த-ய-ல-கண-கள-ம-ட-க-க-ண-ட-ச-ல-வ-ம-#sthash.5KS3TiYS.dpuf
Link to comment
Share on other sites

தற்போதைய தலைமை தவறான பாதையில் சென்றால் மாற்று தலைமை அவசியமாகும்

p13-5a9b0b54e7b397eb5e45617caffe917bf43f57ae.jpg

 

வவுனியா கருத்தரங்கில் தமிழ் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
(ஓமந்தை நிருபர் )

தற்­போ­தைய அர­சியல் சூழலில் அடுத்து என்ன என்­பது தொடர்பில் சிந்­திக்க வேண்­டி­ய­வர்­க­ளாக நாம் இருக்­கின்றோம். தற்­போ­தைய தலைமை தவ­றான பாதையில் தொடர்ந்து செல்­லு­மானால் மாற்று தலைமை என்­பது தேவை­யாகும் என்று தமிழ்க் கட்­சி­களின் தலை­வர்கள் கலந்­து­கொண்ட நிகழ்வில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

மன்னார் அமைப்­புக்­களின் ஒன்றி­யத்தின் ஏற்­பாட்டில் தடு­மாறும் தலை­மைகளால் தளர்­வ­டை­கி­றார் களா தமிழ் மக்கள்? அடுத்து என்ன? எனும் தலைப்­பி­லான கருத்தாய்வு நிலை கருத்து பகிர்­வு­ற­வாடல் நிகழ்வு நேற்று முன்­தினம் வவு­னியா நகர விருந்­தினர் விடு­தியில் நடை­பெற்­றது. இங்கு உரை­யாற்­றிய பிர­மு­கர்கள்  இந்தக் கருத்தை முன்­வைத்­தனர். 

இதன்­போது தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான புளொட் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தரு­ம­லிங்கம் சித்­தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன், வட­மா­காண சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன், மற்றும் சட்­டத்­த­ரணி சுகாஸ் ஆகியோர் முன்­வைத்த கருத்­துக்கள் வரு­மாறு.

புளொட் தலைவர் சித்­தார்த்தன் எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் பங்­கா­ளிக்­கட்­சி­யாக இருக்கும் எல்­லாக்­கட்­சி­க­ளுமே முடி­வெ­டுக்கும் விட­யத்தில் ஒரு பங்­கா­ளி­க­ளாக இருக்­க­வில்லை. இருந்­தாலும் எங்­க­ளுக்கு கூட்­டுப்­பொ­றுப்பு இருக்­கின்­றது. அந்த கட்­சியில் அங்­கத்­து­வ­மாக இருக்­கின்றோம். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருக்­கின்றோம். இருந்­தாலும் கட்­சியில் எப்­போ­தா­வது நடக்­கின்ற கூட்­டங்­களில் ஆனந்­தனும், பிரே­மச்­சந்­தி­ரனும் மிகத்­தௌி­வாக விட­யங்­களை கூறு­கின்­றார்கள். அதா­வது கூட்­டுப்­பொ­றுப்பு விலத்­திச்­செல்­வதை தௌிவாக கூறு­கின்­றனர்.

இவ்­வா­றான நிலையில் நீங்கள் ஏன் தொடர்ந்தும் இருக்­கின்­றீர்கள் என்ற கேள்வி வரு­கின்­றது. இந்த விட­யத்தில் என்­னைப்­பெ­றுத்­த­வ­ரை­யிலும் எங்கள் கட்­சி­யை­பொ­றுத்­த­வ­ரை­யிலும் ஒரு நிலைப்­பாட்டை எடுத்­துள்ளோம். அதா­வது இன்­றி­ருக்க கூடிய அர­சியல் சூழலில் அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான வரை­வுகள் நடந்­து­கொண்­டி­ருக்­கும்­போது அர­சி­ய­ல­மைப்பு சரி­யாக வரும் என்று நான் கூறா­விட்­டாலும் அது முற்­றுப்­புள்­ளிக்கு சென்ற நிலை இருந்­தாலும் நாம் கலந்­து­ரை­யாடும் வௌிநாட்டு தூத­ர­கங்­க­ளாக இருக்­கலாம் அல்­லது மக்­க­ளாக இருக்­கலாம் எங்­க­ளுக்கு சொல்­வது நீங்கள் குழப்­பி­வி­டா­தீர்கள் என்­ப­தோகும்.

கூட்­ட­மைப்­புக்­குள்ளே ஒரு உடைவு வந்து அது சிதை­வ­டைந்து செல்லும் நிலை ஏற்­பட்டால் அது அர­சிற்கு சாத­க­மாக மாறி­விடும். அவர்கள் கூட்­ட­மைப்­புக்குள் ஒற்­று­மை­யில்லை அவர்­களே ஒன்­றையும் சீராக சொல்­கின்­றார்கள் இல்லை. நாங்கள் என்ன செய்­வது என்று சர்­வ­தே­சத்­திற்கு கூறி தம் பக்­கத்தை நியா­யப்­ப­டுத்தும் நிலை ஏற்­படும். இது எமக்கு அடுத்த கட்ட நட­வ­டிக்­கையை எடுப்­ப­தற்­கான வாய்ப்பை இல்­லாமல் பண்­ணி­விடும். இத­னா­லேயே எங்­க­ளுக்கு தொியாமல் நடக்கும் விட­யங்­களில் கூட நாம் மௌனி­யாக இருக்­கின்றோம் என்றார்.

சுரேஸ் பிரே­மச்­சந்­திரன்

2015ஆம் ஆண்­டுக்கு பிற்­பாடு தமிழத் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்சி பத­வியை ஏற்­றுக்­கொண்­டதன் பிற்­பாடு இந்த அர­சாங்­கத்தால் பல்­வேறு விட­யங்­களை நிறை­வேற்­றலாம் என்று எமது தலை­வர்கள் வாக்­கு­ற­திகள் கொடுத்­தார்கள். அதன் அடிப்­ப­டையில் அவ் வாக்­கு­று­திகள் எவ்­வ­ளவு தூரம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது எனப் பர்க்க வேண்டும். அவ் வாக்­கு­ற­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்­லை­யாயின் அதற்­கான கார­ணங்கள் என்ன என்ற அடிப்­ப­டையில் இருந்து கடந்த காலத்தை பார்க்­கின்­ற­போது நாம் அடுத்து என்ன செய்­வது என்ற கேள்வி எழு­கின்­றது.

யுத்­தத்­திற்கு பிற்­பாடு வடக்கு மாகா­ணத்தில் 15 டிவிசன் இரா­ணு­வத்­தினர் இருந்­தனர். அதில் 1 50, 000 இரா­ணுவம் இருந்­தது. என்னைப் பொறுத்­த­வ­ரையில் அதே­ய­ளவு இரா­ணுவம் இன்னும் இருக்­கின்­றது. முகாம்கள் மாற்­றப்­பட்­டி­ருக்­கலாம் ஆனால் 5 மாவட்­டங்­க­ளிலும் மாவட்­டத்­திற்கு 3 டிவிசன் என்ற வகையில் இன்னும் அதே­ய­ளவு இரா­ணுவம் இருக்­கின்­றது.

இதற்­கு­மப்பால் கடற்­படை, விமா­னப்­படை, விசேட அதி­ர­டிப்­படை, சிவில் பாது­காப்பு படை, பொலிஸ் என்­ப­னவும் உள்­ளது. வடக்கு மாகா­ணத்தில் இறு­தி­யாக எடுத்த தர­வு­களின் அடிப்­ப­டையில் பத்து இலட்சம் மக்கள் வாழ்­கின்­றார்கள். இத­ன­டிப்­ப­டையில் பார்க்­கின்­ற­போது மூன்று நான்கு தமி­ழர்­க­ளுக்கு ஒரு இரா­ணுவம் என்ற வகையில் உள்­ளதால் எந்­த­ளவு தூரம் நாம் இரா­ணுவ அடக்­கு­மு­றைக்குள் இருக்­கின்றோம்.

இரா­ணு­வத்­தி­னரை வீதியில் பார்க்க முடி­ய­வில்லை என்று சிலர் கூறுக்­கின்­றனர். ஆனால் எந்த சிறிய கூட்­டத்­தினை நடத்­தி­னாலும் அனைத்து புல­னாய்வு பிரி­வு­களும் உள்­ள­தா­கவே நிகழ்வை நடத்­த­வேண்­டி­யுள்­ளது. இவை யுத்­தத்­திற்கு பின்னர் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பிரச்­ச­னைகள்.

மக்­களை மீளக்­கு­டி­யே­ற­வேண்டும். அதற்கு நிலங்கள் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும். அதற்கு இரா­ணுவம் வௌியேற வேண்டும். எனவே வடக்கில் உள்ள இரா­ணு­வத்­தி­னரை 9 மாகா­ணங்­க­ளுக்கும் பிரிக்­க­வேண்டும். அவ்­வாறு செய்தால் வடக்கில் மக்­களை குடி­யற்­று­வ­தற்­கான நிலங்கள் வௌிப்­படும். எனினும் அவ்­வாறு செய்­யாமல் தொடர்ச்­சி­யாக வடக்கு கிழக்கை இரா­ணுவ கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருப்­பது என்­பதே நடை­பெ­று­கின்­றது.

இந்­நி­லையில் சம்­பந்தன், மைத்­திரி ஒரு இன­வாதி அல்ல அவரை நாம் நம்­பு­கின்றோம் என்­கின்றார். ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நம்­பு­கின்றோம் என்­கின்றார். இந்த நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் தான் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான போராட்­டங்­களை நடத்­த­வேண்டாம். எழுக தமிழ் நிகழ்வை நடாத்­த­வேண்டாம். அமை­தி­யாக இருங்கள் நீங்கள் நடத்தும் போராட்­டங்கள் குழப்­பங்­களை உரு­வாக்கும் என்று பேசி வந்­த­தெல்லாம் அந்த நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் தான்.

சுமந்­திரன் ஏன் பொய்­யான தக­வல்­களை செல்­ல­வேண்டும். எந்த வித எழுத்து மூல நிபந்­த­னையும் இன்றி கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வ­ளித்­தது. ஆனால் இன்று சுமந்­திரன் சொல்­கின்றார் காணி­களை விடு­விப்போம் என் மைத்­தி­ரி­பால சிறி­சேன எழுத்­து­மூலம் உத்­த­ர­வாதம் தந்­துள்­ள­தாக பொய் கூறு­கின்றார்.

அவ்­வாறு தந்­தி­ருந்தால் அந்த ஆவ­ணத்­தினை காட்­ட­வேண்டும். ஆனால் அவ்­வாறு எந்­த­வி­ட­யமும் நடை­பெ­ற­வில்லை என்­பதே உண்மை. இதனைப் பார்க்­கின்­ற­போது இவர்கள் தற்­போது தமிழ் மக்­க­ளிடம் பொய்­களை கூறத ்தொடங்­கி­யுள்­ளனர்.

அபி­வி­ருத்தி தொடர்­பான பக்­க­மாக இருக்­கலாம். இரா­ணு­வ­ம­ய­மாக்­கலில் இருந்து விடு­விக்­கப்­படும் விட­யங்­க­ளாக இருக்­கலாம் அல்­லது அர­சியல் ரீதி­யாக தமிழ் மக்­களின் உரி­மை­களை பெற்­றுக்­கொள்ளும் விட­யங்­க­ளாக இருக்­கலாம் நாங்கள் அனைத்­திலும் தோல்­வி­ய­டைந்­த­வர்­க­ளாக இருக்­கின்றோம்.

ஆகவே அடுத்­தது என்ன என்­பது தொடர்பில் சிந்­திக்­க­வேண்­டி­ய­வர்­களா நாம் இருக்­கின்றோம். தற்­போது இருக்­க­கூ­டிய தலைமை தவ­றான பாதையில் செல்­வ­தாக இருந்தால் மாற்­றுத்­த­லைமை என்­பது தேவை.

அந்த தலைமை தற்­போ­துள்ள தலைமை விட்ட தவ­று­களை மீண்டும் விடு­வ­தற்­காக அல்ல. புதிய யுக்­தி­களை, புதிய தந்­தி­ரோ­பா­யங்­களை வகுத்து எவ்­வாறு தமிழ் மக்­களின் அபி­லா­சை­களை முன்­னெ­டுத்து சென்று வெற்­றி­பெ­றலாம் என்ற அடிப்­ப­டையில் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்றார்.

உறுப்­பினர் அனந்தி சசி­தரன்

வடக்கில் இரா­ணுவம் குறைந்து சென்­ற­மைக்கு வட மாகா­ண­ச­பையே காணரம் என வட மாகாண கல்வி அமைச்சர் தொிவித்தார். ஆனால் இன்றும் பல பாட­சாலை நிகழ்­வு­களில் இரா­ணு­வத்­தினை அழைக்­கின்­ற­மையை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இது வட­மா­காண கல்வி அமைச்சர் வாக­னத்தில் செல்­லு­வ­தனால் தெரி­ய­வில்லை போல் உள்­ளது.

நாங்கள் நடத்­து­கின்ற அற­வழி போராட்­டங்கள் அனைத்­திலும் இரா­ணு­வத்­தி­ன­ரதும், இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­களின் கண்­கா­னிப்பும், அச்­சு­றுத்­தலும் தொடர்ந்து கொண்­டுதான் இருக்­கின்­றது. இந்த சுழல் மாறி­விட்­டது என்ற தோர­ணையை மக்­க­ளுக்கு சொல்லி விட முடி­யாது.

தடு­மாறும் தமிழ் தலை­வர்­களால் தளர்­வ­டை­கின்­றார்­களா தமிழ் மக்கள் என்­பது கேள்­வி­யாக இருக்­கத்­தே­வை­யில்லை அது விடை­யா­கவே போகலாம். ஏன் எனில் என்­னைப்­போன்ற பாதிக்­கப்­பட்ட தமி­ழர்கள் தளர்­வ­டைந்து விட்டோம் என்­ப­துதான் உண்­மை­யான செய்தி.

அண்­மையில் ஐ.நாவில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் சார்­பாக 02 வருட கால நீடிப்பை வழங்­கி­தற்கு எதி­ராக பல நாடு­க­ளு­டனும், சில மனித உரிமை அமைப்­புக்­க­ளு­டனும் கலந்­து­ரை­யாடி இருந்தோம். அப்­போது அவர்கள், அந்­நா­டுகள் கூறிய கருத்து நீங்கள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளாக இருந்­தாலும் கூட உங்­க­ளது கட்­சியின் தலைமை இரண்டு வருட கால அவ­கா­சத்தை கொடுக்­கச்­சொல்லி கூறு­கி­றார்கள். அதுவும் அவர்கள் எதிர்க்­கட்­சியில் இருக்­கி­றார்கள் மற்றும் இங்கே பேச­வல்­ல­வர்­க­ளா­கவும் இங்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளனர். இதனால் நாங்கள் என்ன செய்ய முடியும்?

போர் முடிந்த பின்னர் 2015ம் ஆண்டு வழங்­கப்­பட்ட காலப்­ப­கு­திக்குள் கூட அமெ­ரிக்க அர­சாங்­கமும் இலங்கை அர­சாங்­கமும் கொண்டு வந்த 30.1 தீர்­மா­ணத்தில் எதையும் நிறை­வேற்­ற­வில்லை. ஆனால் மீண்டும் இரண்டு வருட காலங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளது. வழங்­கப்­பட்­ட­வர்­க­ளிற்கு இது எவ்­வாறு இருக்­குமோ தெரி­ய­வில்லை? ஆனால் என்­னைப்­போன்ற பாதிக்­கப்ட்­ட­வர்­க­ளிற்கு மிகவும் சோர்­வான தளர்­வான நிலையை உரு­வாக்­கி­யுள்­ளது.

என்­னதான் அர­சியல் தீர்வு கிடைக்கும் என எண்­ணி­னாலும் கூட நாங்கள் நினைக்­கின்ற, எதிர்­பார்க்­கின்ற ஒரு நியா­ய­மான அர­சியல் தீர்வு எங்­க­ளிற்கு கிடைக்­காமல் போய்­விடும் என்ற வருத்தம் எங்­க­ளிற்கு இருக்­கின்­றது.

ஐ.நாவில் குறிப்­பிட்­டதை நிறை­வேற்­று­கின்றோம் என வாக்­கு­றுதி கொடுப்­பதும், அதே சம நேரம் இங்­கி­ருக்­கின்ற ஜனா­தி­பதி, பிர­தமர், அமைச்­சர்­களும் இங்கே போர் குற்றம் எதுவும் நடை­பெ­ற­வில்லை என பேசு­வதும் தாங்­களே குற்­றங்­களை நடாத்தி விட்டு விசா­ரித்து நீதியை வழங்­கு­கின்றோம் என சொல்­வதும் நல்ல ஆரோக்­கி­ய­மான சுழ­லாக தெரி­ய­வில்லை என்றார்.

சட்­டத்­த­ரணி சுகாஸ்

அடுத்தது என்ன என்று நாம் சிந்திக்க தொடங்கியுள்ளோம். ஆனால் எங்களுடைய போராட்டம் எப்போது முடிவுக்கு வந்ததோ அன்றே சிங்கள ஏகாதிப்பத்தியமும் சர்வதேசமும் இணைந்து அடுத்தது என்ன என்பதை தீர்மானித்து விட்டார்கள். இதற்கு எதிராக நாம் எவ்வாறு செயற்படபோகின்றோம்.

உப்புச்சப்பற்ற தீர்வு வழங்கப்படவுள்ளது. அது வழங்கப்படவுள்ளபோது எம்மவர்கள் பெறத்தான் பொகின்றார்கள். இந்த நிலையில் தமிழ் மக்களாகிய நாம் வீதிக்கு இறங்க வேண்டும். இதுவே நாம் செய்யவேண்டிய அடுத்த கட்டம்.

இலங்கையின் அரசியல் கட்டமைப்புக்கு உட்பட்டு அகிம்சை வழியில் ஜனநாயகத்தின் உச்சம் வரை நாங்கள் போராடுகின்றோம். இந்த மக்கள் போராட்டத்திற்கு தலைமைதாங்கப்போவது யார்.

ஆகவே சரியான தலைமையை இனம் காணுவோம். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். தமிழ்தேசியக்கூட்டமைப்பின் துரோகத்தனத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு புதிய அரசியலமைப்பை எதிர்ப்பதற்கு கூட நாம் தயாராக இருக்கவேண்டும். தாயகம், சுயநிர்ணயம், தேசியம் இல்லாத எந்த தீர்வையும் ஏற்பதற்கு நாம் தயாராக கூடாது.   

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-24#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:



‘சம்பந்தன் செல்லும் பாதையில் கண்களை மூடிக்கொண்டு செல்வோம்’
 

article_1492958873-sitthrthan.jpg

தெரிந்தது தான்...

தாங்கள் செய்து வந்த காரியங்கள்  தற்பொழுது 

எந்தவித  பிரச்சினையுமில்லாமல்

தடங்கலில்லாமல்

ஐனநாயகம் என்ற போர்வையோடு  நடக்கின்றன

உங்களுக்கு கசக்குமா??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.