Jump to content

இளமை என்னும் பூங்காற்று


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

" உயர்தர பரீட்சை எடுத்தவுடன் ண்பர்களுடன் ஊர் சுற்றி  திறியும் பொழுது , இப்ப இருப்பது போல் கையடக்க தொலைபேசி ஒன்றுமில்லைதானே ஆனபடியால் நாலுக்கும் நாலரை மணிக்குமிடையில் எல்லோரும் பாடசாலை முன்றலில் ஒன்றுகூடுவோம் ,குறைந்தது ஐந்து சைக்கிளில் நண்பர்களுடன் ஊர் உலாத்தலுக்கு வெளிக்கிடுவோம் முதலில் போவது மருதடிக்கு .சைக்கிளை எம் மீது சாய்த்துக்கொண்டு மருதடியானை வணங்குவோம் உள் சென்று தரிசிப்பதை தவிர்த்து கொள்வோம் ,வேறு  தரிசனங்கள் செய்வதற்காக.,.சந்தனம்,விபூதி மறக்காமல் பூசிகொள்வோம் காரணம் வீட்டை போகும் பொழுது அம்மா கேட்டால் பள்ளிகூடத்தில விளையாடிவிட்டு, கோவிலுக்கு  போயிற்று வாறோம் என்று சொல்லி நல்ல பிள்ளைகள் என்று பெயர் எடுப்பதற்காக  அந்த திருவிளையாடலை செய்வோம்..

நாலு திசையும் தரிசனம் செல்வோம் .சில நாட்களில் இரண்டு திசைகள் தான் சாத்தியப்படும் தரிசிக்க வேண்டிய ஆட்கள் அதிகமாக இருப்பதால்.தரிசிக்க வேண்டிய ஆட்களின் இயற்பெயர்களை சொல்லி தரிசிக்க செல்வதில்லை பட்ட பெயர்களை சொல்லி தான் செல்வது வழக்கம்.இயற்பெயர் சொல்லாமைக்கு முக்கிய காரணம் காலாச்சார காவலர்களின் இருட்டடிக்கு ஆளாக வேண்டும் என்ற பயம். முடி கட்டையாக வெட்டியிருந்தால் "கிப்பி",முடியை அவிட்டு விட்டிருந்தால் "சடைச்சி",முடி  சுருளாக இருந்தால் "சுருளி",ஆள் வெள்ளையாக்விருந்தால் "கோதுமை", முகத்தில் புள்ளியிருந்தால் "புள்ளி", கட்டையாகவும் கொஞ்சம் மொத்தமாகவும் இருந்தால்" வாத்து "அல்லது "தாரா" , நாங்கள் கிண்டல் பண்ண அவர்கள் முறைத்து பார்த்தால் "காளி", எதிர்த்து கதைத்தால் "வாயாடி"அல்லது "கறிக்காரி"இப்படி அழகாக பட்டங்களை சூட்டி..  கெளரவித்து... மகிழ்வது எங்களது வழக்கம்.

அப்படி ஊர் சுற்றிதிருந்தவர்கள் அநேகர் சொந்தநாட்டிலேயே பட்டங்கள் பெற்று புலம் பெயர்ந்து விட்டார்கள் .இன்னும் சிலர் புலர் பெயர்ந்த பின்பு பட்டங்கள பெற்றார்கள்...சிலர் பட்டங்கள் பெறாமலே வாழ்க்கையை கொண்டு போகிறார்கள். இப்பொழுது அவ‌ர்களில்  அநேகர் ஐம்பது வயதை தாண்டிவிட்டார்கள்.

வட்ஸப்பில்...குறுந்தகவல் வந்துள்ளது என கைத்தொலைபேசி மின்னிமின்னி அறிவித்தது. செய்தியை படித்தான்.

"மீட் அட் த ரெஸ்டொரன்ட்  அட் சிக்ஸ்"

 லண்டனிலிருந்து வந்திருக்கும் நண்பனை சந்திப்பது என்று ஏற்கனவே முடிசெய்திருந்தார்கள் ஆனால் இடம் தெரிவு செய்வில்லை தற்பொழுது தெரிவு செய்துவிட்டு குகன் குறுந்தகவல் அனுப்பியிருக்கிறான். சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு குறுந்தகவல் வந்தது.ரெஸ்டொரன்டில் கார் பார்க் வசதி குறைவாக இருக்கும் தன்னையும் வந்து அழைத்து செல்லுமாறு கேட்டிருந்தான் குகன்.

காரை பார்க் பண்ணிவிட்டு லண்டன் நண்பனை ஒடி போய்கட்டிபிடித்து நீண்ட நாட்களின் பின்பு சந்தித்தது மகழ்ச்சி என்று ரஜனி ஸ்டைலில் அன்பை தெரிவித்தேன்.

"இத்தாலியன்,இந்தியன் ,தாய்,சைணிஸ் எந்த ரெஸ்ரோர‌ன்ட்டிற்கு போகப்போறீயள்"

"மலேசியனுக்கு புக் பண்ணிபோட்டேன் அதை கான்சல் பண்ணுவோமா".

எல்லோருமாக‌ மலேசியனுக்கு போவதாக முடிவெடுத்தோம்.

 மலேசியன் பணிப்பெண் வரவேற்றாள்.

 "எத்தனை பேர்"

"ஐந்து பேர் "

மேசையை காட்டியவள் மெணுப்புத்தகத்தையும் தந்து சென்றாள்.

கலர் கலராக படங்கள் ஒவ்வோரு சாப்பாட்டுக்கும் ஓவ்வோரு பெயர்கள்,சாப்பாட்டை தெரிவு செய்வதே ஒரு குழப்பமாக இருந்தது.

 

ஆல் இன் ஆல் கந்தர்.

 கந்தையா கடையில் கந்தர் அரைக்கை பெனியனுடன் சார்த்தை மடிச்சு கட்டிக்கொண்டு டி மாஸ்டர்,கசியர்,சேவர் மூன்று வேலையும் பாரத்துகொள்வார் ஆல் இன் ஆல் கந்தர். அவரின்ட கடைக்குள் போனால் மூன்று வடை இரண்டு போன்டா ஒவ்வொரு தடவையும் இதை தான் கொண்டு வந்து வைப்பார்.பத்து பேர் போனாலும் அதே அளவுதான் ஐந்து பேர் போனாலும் அதுதான் அவரின் கணக்கு. அண்ணே டீ என்று மேசையிலிருந்து கத்துவோம் ஐந்து பேர் போனால் மூன்று பேருக்கு போட்டுமேலதிகமாக‌ இரண்டு கிளாஸும் கொண்டுவந்து வைப்பார். அவருக்கு தெரியும் எங்களது பொருளாதார நிலமை.

IMG_1462.jpg

படம் காப்புரிமை ஜீவன் சிவா

கடைக்கு முன்னால் கண்ணாடி அலுமாரியுண்டு அதில் இடியப்பம்,புட்டு,இரண்டுவிதமான வடை உழுந்து வடை ,கடலை வடை  ,போன்டா,சூசியம் இதுதான் அவரின் ஒவ்வொரு நாளைய மெணு.இவற்றுடன் சிகரட்டும் சுருட்டும் கல்லாவிற்கு பக்கத்தில் வைத்திருப்பார். பழைய செய்திதாளை வெட்டி கத்தையாக கட்டி தொங்கவிட்டிருப்பார்.அதுதான் செவியட்.

 கடைக்குள்ளிருந்து சிகரட்டும் தேனீரும் அருந்தும் ஐயா மாரை பார்த்தவுடன் நண்பர்களுக்கும் அந்த எண்ணம் வந்து ,தம் அடிக்க சுத்தந்திரம் கிடைக்கவில்லையே என்று புறு புறுத்தபடி ஒதுக்குப்புறம் தேடுவார்கள்...ஆரம்பகாலங்களில் திருட்டு தம் அடிக்க கல்லுண்டை வெளிவரை சென்றிருக்கிறோம்.சிகரட் வாங்குவதில் எங்களுக்கு கொஞ்சம் தயக்கம் யாராவது பெரிசுகள் வீட்டாருக்கு சொல்லி போடுவார்கள் என்ற பயம். ,தம் அடிக்க வேணும் என்று ஒரு சிலருக்கு ஆசை ஆனால் பல‌ உத்தம புத்திரர்களுக்கு விருப்பமிருக்காது.தம் அடிக்கிற கோஸ்டிகள் ஒசியில் பிளேன் டி குடிச்சு போட்டு அந்த காசுக்கு சிகரட் ஒன்று இரண்டை  வாங்கி பொக்கற்றில் வைத்து கொண்டு மறைவிடம் தேடி ஒதுங்குவார்கள். உந்த சிகரட்டிலும் தராதரம் இருந்தது கண்டியளோ மிகவும் மலிவானது வோர் எசஸ்,பிறகு திரி ரோசஸ்,பிரிஸ்டல், விலை உயர்ந்தது கொல்ட்லீவ். மால்பரொ என்ற ஒரு பிராண்ட்டிருந்தது அதை கொழும்புக்கோஸ்டிகள் தான் அதிகம் பாவிப்பினம்.25 சதத்திற்கு   இரண்டு வொர் எசஸ் சிகரட் வாங்கலாம். இப்படிதான் நானும் தம் அடிச்சு பார்ப்போம் என்று ஒன்றை வாயில வைச்சு இழுத்தேன் பிரக்கடிச்சு கண்னிலிருருந்து கண்ணீர் வரத்தொடங்கி விட்டது.வாயும் ஒரு கச்சலாக இருந்தது .அதன்பின்பு சிகரட்டை கைவிட்டு கள்ளை தழுவிகொண்டேன்.

"நண்பர்களை கண்ட சந்தோசம் பழைய கந்தர் கடை என நினைத்து "அண்ணே ஒடர் ரெடி"

என்று கத்த வாய் வந்தது இருந்தும் சுதாகரித்துகொண்டேன் .

மேசைக்கு அருகிலிருந்த மணியை அடிக்க நவீன கருவியுடன் வந்தவள்

"ஒர்டெர் பிளிஸ்" என்றாள்

ஐந்து பேரும் ஐந்து விதமான உணவு வகைகளை ஒடர் கொடுத்தோம்.

prawn mee, prawn noodles

ஒரு நண்பன் சொன்னான் ஐந்து பிளேட் எடுத்து ஐந்து விதமான சாப்பாடுகளையும் எல்லொரும் பகிர்ந்து உண்போம் என்று, அவன் விருப்பபடி பகிர்ந்துண்டோம்.

 சலாட்டுக்குள்ளிருந்த தக்காளி துண்டை முள்ளுக்கரண்டியால் கூத்தி எடுத்தபடியே

"எங்களோட படிச்ச தக்காளி இப்ப எங்கயடாப்பா"

"அவள் இப்ப கனடாவில் இருக்கிறாள்,இரண்டு  மகள் மெடிசின் செய்யினம்"

"மனிசிமார் பக்கத்தில இல்லை என்ற துணிவில பழைய காய்களை பற்றி கதைக்கிறீயள் "

"மனிசிக்கு நான் எல்லா கதையும் சொல்லி போட்டன்,"

"நீ என்ன தக்காளியை காதலிச்சனீயோ"

"நான் காதலிச்சனான் அவள் காதலிக்கவில்லை இரண்டு மூன்று லவ் லெட்டர் கொடுத்தனான் அவள் வாசிக்காமல் கிழிச்சுபோட்டாள்"

"பிறகு ஏன்டா அவளின்ட சரித்திரத்தை இப்பவும் அறிஞ்சு வைச்சிருக்கிறாய்"

"I don't know....I think that's also a kind of love"

தக்காளி,முருங்கை ,வாத்து,கிப்பி,காளி எல்லோரினதும் அப்டெட் வந்து போயின.

பில் கொண்டு வந்தாள் எல்லோரும் போட்டி போட்டு கொண்டு கொடுக்க போனோம் ,எதை எடுப்பது என்பது காசாளருக்கு பெரிய தலையிடியாக இருந்திருக்கும்.கடைசியில் ஒருத்தர் வெற்றி பெற்றார்.

வெளியே சிகரட் பிடித்துக்கொண்டு இருவர் நின்றனர்.மூக்கை மற்ற பக்கம் திருப்பிகொண்டு எல்லோரும் சென்றோம்.பப்ளிகா சிகரட் பிடிக்கிறதை தடை செய்ய வேணும் எண்டு பேசிய படி நடந்து செல்லும் பொழுது பப்புக்கு வெளியே மது கிண்ணத்துடன் ஆண்கள் பெண்கள் வயது வித்தியாசமின்றி இயற்கையை ரசித்தபடி இருந்தனர்.

நாம் அதையும் தாண்டி எமது காரை நோக்கி சென்றோம்...

 

இளமை எனும் பூங்காற்று....என்ற பாடாலை விசிலடித்த படி வீட்டு கதைவை திறந்தேன்

 

"என்னப்பா 30 வயது குறைந்த மாதிரி துள்ளி கொண்டு வாறீயள்"

அந்த நாள் ஞாபகங்கள் வந்ததே வந்ததே  கண்மணி கண்மணி..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலாயன் கஃபே வடையையும் வாழை இலையையும் கண்ட உடனே பழைய ஞ<பகங்கள் வந்திட்டுதாக்கும் .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய காய் கனிகளை மறக்கால் வைத்து இருக்குறியளே  அதுவும் அந்த பட்டங்கள் சூப்பர் புத்தன்  எங்களின் பங்குக்கு நாங்கள் வைத்தது அப்பம்,  பின்னல் , வண்டு ,  இன்னும் பல இருக்கு எல்லாம் அடுத்தவன் தோட்டத்து மலராக tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

 "நான் காதலிச்சனான் அவள் காதலிக்கவில்லை இரண்டு மூன்று லவ் லெட்டர் கொடுத்தனான் அவள் வாசிக்காமல் கிழிச்சுபோட்டாள்"

உங்கை கனபேர் கவனிக்க வேண்டிய வசனம் .:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, putthan said:

இயற்பெயர் சொல்லாமைக்கு முக்கிய காரணம் காலாச்சார காவலர்களின் இருட்டடிக்கு ஆளாக வேண்டும் என்ற பயம். முடி கட்டையாக வெட்டியிருந்தால் "கிப்பி",முடியை அவிட்டு விட்டிருந்தால் "சடைச்சி",முடி  சுருளாக இருந்தால் "சுருளி",ஆள் வெள்ளையாக்விருந்தால் "கோதுமை", முகத்தில் புள்ளியிருந்தால் "புள்ளி", கட்டையாகவும் கொஞ்சம் மொத்தமாகவும் இருந்தால்" வாத்து "அல்லது "தாரா" , நாங்கள் கிண்டல் பண்ண அவர்கள் முறைத்து பார்த்தால் "காளி", எதிர்த்து கதைத்தால் "வாயாடி"அல்லது "கறிக்காரி"இப்படி அழகாக பட்டங்களை சூட்டி..  கெளரவித்து... மகிழ்வது எங்களது வழக்கம்.-----

 கந்தையா கடையில் கந்தர் அரைக்கை பெனியனுடன் சார்த்தை மடிச்சு கட்டிக்கொண்டு டி மாஸ்டர்,கசியர்,சேவர் மூன்று வேலையும் பாரத்துகொள்வார் ஆல் இன் ஆல் கந்தர். அவரின்ட கடைக்குள் போனால் மூன்று வடை இரண்டு போன்டா ஒவ்வொரு தடவையும் இதை தான் கொண்டு வந்து வைப்பார்.பத்து பேர் போனாலும் அதே அளவுதான் ஐந்து பேர் போனாலும் அதுதான் அவரின் கணக்கு. அண்ணே டீ என்று மேசையிலிருந்து கத்துவோம் ஐந்து பேர் போனால் மூன்று பேருக்கு போட்டுமேலதிகமாக‌ இரண்டு கிளாஸும் கொண்டுவந்து வைப்பார். அவருக்கு தெரியும் எங்களது பொருளாதார நிலமை.

கடைக்கு முன்னால் கண்ணாடி அலுமாரியுண்டு அதில் இடியப்பம்,புட்டு,இரண்டுவிதமான வடை உழுந்து வடை ,கடலை வடை  ,போன்டா,சூசியம் இதுதான் அவரின் ஒவ்வொரு நாளைய மெணு.இவற்றுடன் சிகரட்டும் சுருட்டும் கல்லாவிற்கு பக்கத்தில் வைத்திருப்பார். பழைய செய்திதாளை வெட்டி கத்தையாக கட்டி தொங்கவிட்டிருப்பார்.அதுதான் செவியட்.----

ஊரில்... பட்டப் பெயர் வைப்பது வழமை என்றாலும், இவ்வளவு காலமும்  அதனை மறக்காமல் நினைவு வைத்துள்ளது ஆச்சரியமாக மாக உள்ளது.
ஊரில் உள்ள தேனீர் கடையை... மீண்டும் கண் முன்னே கொண்டு வந்த காட்சிகள் மிக அழகு புத்தன்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

மலாயன் கஃபே வடையையும் வாழை இலையையும் கண்ட உடனே பழைய ஞ<பகங்கள் வந்திட்டுதாக்கும் .....!  tw_blush:

அதே: அத்துடன் எனது நண்பன் லண்டனிலிருந்து வந்திருந்தார் இரண்டையும் சேர்த்து ஒரு சிறு கற்பனை

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்....ஒரு படைப்பாளியின் ஊக்கசத்து  பச்சைகளும் பாராட்டுக்களும் :10_wink:

7 hours ago, முனிவர் ஜீ said:

பழைய காய் கனிகளை மறக்கால் வைத்து இருக்குறியளே  அதுவும் அந்த பட்டங்கள் சூப்பர் புத்தன்  எங்களின் பங்குக்கு நாங்கள் வைத்தது அப்பம்,  பின்னல் , வண்டு ,  இன்னும் பல இருக்கு எல்லாம் அடுத்தவன் தோட்டத்து மலராக tw_blush:

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ...எல்லா தோட்டத்து மலரும் பூத்து குழுங்கட்டும்:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஜி.சி.இ, ஓ/எல் படிக்கும்போது மகேந்திரா மாஸ்டரின் (எலியர்)  வகுப்பு. நான் புத்தகத்துள் "காதம்பரி" என்றொரு புத்தகம் வைத்துப் படித்துக் கொண்டிருந்தேன். அவர் கண்டுட்டார். அப்படியே என் காதில பிடித்து முறுக்கி இஞ்ச வா காதம்பரி என்று இழுத்துக் கொண்டு போய் பிளாக் போட்டுக்கு முன்னால் புத்தகத்தை தலையில வைத்துக் கொண்டு நிக்க விட்டார். அன்றில் இருந்து நான் போகும் இடமெங்கும் அசரீரியாக காதம்பரி என்ற பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஒரு பயலும் கண்ணில தென்பட மாட்டான்.....!  :rolleyes:  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

நான் ஜி.சி.இ, ஓ/எல் படிக்கும்போது மகேந்திரா மாஸ்டரின் (எலியர்)  வகுப்பு. நான் புத்தகத்துள் "காதம்பரி" என்றொரு புத்தகம் வைத்துப் படித்துக் கொண்டிருந்தேன். அவர் கண்டுட்டார். அப்படியே என் காதில பிடித்து முறுக்கி இஞ்ச வா காதம்பரி என்று இழுத்துக் கொண்டு போய் பிளாக் போட்டுக்கு முன்னால் புத்தகத்தை தலையில வைத்துக் கொண்டு நிக்க விட்டார். அன்றில் இருந்து நான் போகும் இடமெங்கும் அசரீரியாக காதம்பரி என்ற பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஒரு பயலும் கண்ணில தென்பட மாட்டான்.....!  :rolleyes:  tw_blush:

இனி சுவியை நாம் காதம்பரி என்று யாழில் .................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இளமை  காலத்தை ஆசை போட்டுப் பார்ப்பதும் ஒரு வகை சுகம்.  பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய ஞாபகம் புத்தனையம் விட்டுவைக்கவில்லை... ஆமா புத்தன் உங்களுக்கு பெண்கள் பக்கம் இருந்து என்ன பட்டம் வைத்திருந்தார்கள் அதையும் எழுதினாத்தானே சுவார்சியமாக இருக்கும்.....தெரியாது என்றால் உங்களுடைய விடலைப் பருவப்புகைப்படம் ஒன்றை இங்கு இணைத்து விடுங்கள் நாங்கள் கெஸ்ப் பண்ணிக் கொள்கிறோம். :):cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

இளமைக்கால இனிமையான நினைவுகளை எடுத்துவந்து அனைவரையும் கனவுகளில் மிதக்கவைத்த புத்தனின் ஆக்கம் மிக அருமை. மீண்டும் வராத அந்த வசந்தகால நினைவுகளில் வசமாகா இதயமேது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/23/2017 at 9:01 AM, putthan said:

முடி கட்டையாக வெட்டியிருந்தால் "கிப்பி",முடியை அவிட்டு விட்டிருந்தால் "சடைச்சி",முடி  சுருளாக இருந்தால் "சுருளி",ஆள் வெள்ளையாக்விருந்தால் "கோதுமை", முகத்தில் புள்ளியிருந்தால் "புள்ளி", கட்டையாகவும் கொஞ்சம் மொத்தமாகவும் இருந்தால்" வாத்து "அல்லது "தாரா" , நாங்கள் கிண்டல் பண்ண அவர்கள் முறைத்து பார்த்தால் "காளி", எதிர்த்து கதைத்தால் "வாயாடி"அல்லது "கறிக்காரி"இப்படி அழகாக பட்டங்களை சூட்டி..  கெளரவித்து... மகிழ்வது எங்களது வழக்கம்.

புத்தன் பாடசாலை வாழ்வு என்பது ஆணோ பெண்ணோ எவராக இருந்தாலும் எந்த ஒரு காலமும் மறக்கமாட்டார்கள்.அந்த அளவுக்கு நெஞ்சிலே பதியும் அளவுக்கு ஒவ்வொருவருக்கும் பல சம்பவங்கள் நடந்திருக்கும்.

இன்னும் முக்கியமாக ஆசிரியர்களில் இருந்து மாணவர்கள் வரை பலருக்கும் பட்டப் பெயர்கள் இருக்கும்.சிலருக்கு அதுவே நிரந்தரமாகி உண்மையான பெயரைச் சொன்னால் பலருக்கு ஆளைத் தெரியாது.

சரி உங்களது பட்டப் பெயர் என்னவோ?

நான் முதன் முதல் புகைக்க தொடங்கியது பத்மா கபேயில் (யாழ் இந்து) மற்றகோன்.9ம் வகுப்பு அந்தநேரம் பிறெப் என்று சொல்வது இப்ப அந்த வகுப்பு இருக்கோ தெரியாது.இப்ப தொடங்கியது நாள் போக பிறிஸ்டலில் நிரந்தரமாகி 40 வயதில் நெஞ்சுக்குள் இரும்பு வலை வைக்கும் வரை தொடர்ந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நனவிடை தோய்தல் மத்திய வயதைத் தாண்டும்போது எல்லோருக்கும் சம்பவிக்கின்றதா??

இளமை கால நினைவுகள் பசுமையாக இருக்கும் என்பதை இப்போதைய  வாட்ஸ் குறூப்களின் சாற்றிங்களில் இருந்து நானும் கண்டுகொண்டேன். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நினைவுகள் எல்லாருக்கும் நினைவு தடுமாறும்வரை வந்துபோகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/04/2017 at 11:40 AM, குமாரசாமி said:

உங்கை கனபேர் கவனிக்க வேண்டிய வசனம் .:cool:

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

On 24/04/2017 at 1:01 PM, தமிழ் சிறி said:

ஊரில்... பட்டப் பெயர் வைப்பது வழமை என்றாலும், இவ்வளவு காலமும்  அதனை மறக்காமல் நினைவு வைத்துள்ளது ஆச்சரியமாக மாக உள்ளது.
ஊரில் உள்ள தேனீர் கடையை... மீண்டும் கண் முன்னே கொண்டு வந்த காட்சிகள் மிக அழகு புத்தன்.:)

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கு நன்றிகள் தமிழ்சிறி .அந்த தேனீர்கடையை இந்ததடவை தேடினேன் கிடைக்கவில்லை

On 25/04/2017 at 5:06 AM, நிலாமதி said:

 இளமை  காலத்தை ஆசை போட்டுப் பார்ப்பதும் ஒரு வகை சுகம்.  பகிர்வுக்கு நன்றி

இளமை காலம் ஒரு அற்புதம் ...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கு நன்றிகள் நிலாமதி

On 25/04/2017 at 7:15 AM, வல்வை சகாறா said:

பழைய ஞாபகம் புத்தனையம் விட்டுவைக்கவில்லை... ஆமா புத்தன் உங்களுக்கு பெண்கள் பக்கம் இருந்து என்ன பட்டம் வைத்திருந்தார்கள் அதையும் எழுதினாத்தானே சுவார்சியமாக இருக்கும்.....தெரியாது என்றால் உங்களுடைய விடலைப் பருவப்புகைப்படம் ஒன்றை இங்கு இணைத்து விடுங்கள் நாங்கள் கெஸ்ப் பண்ணிக் கொள்கிறோம். :):cool:

பெண்கள் எனக்கு பட்டம் வைப்பதற்கு ஏற்ற கீரோவாக இருக்கவில்லை ...ஆனால் "கோசப்பங்கள்" என்று சொல்லுவார்கள்....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கு நன்றிகள் வல்வை.....

On 25/04/2017 at 9:19 AM, Kavallur Kanmani said:

இளமைக்கால இனிமையான நினைவுகளை எடுத்துவந்து அனைவரையும் கனவுகளில் மிதக்கவைத்த புத்தனின் ஆக்கம் மிக அருமை. மீண்டும் வராத அந்த வசந்தகால நினைவுகளில் வசமாகா இதயமேது?

உண்மையிலயே இளமைக்காலம் ஒரு வசந்தகாலம் தான்...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/04/2017 at 10:56 AM, ஈழப்பிரியன் said:

 

சரி உங்களது பட்டப் பெயர் என்னவோ?

 

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கு நன்றிகள் ஈழப்பிரியன்...பாடசாலை காலத்திலும் எனது பட்டப்பெயர் புத்தன் தான்.....:10_wink:

On 26/04/2017 at 4:29 PM, கிருபன் said:

நனவிடை தோய்தல் மத்திய வயதைத் தாண்டும்போது எல்லோருக்கும் சம்பவிக்கின்றதா??

 ?

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கு நன்றிகள்.....கிருபன் ...மத்திய வயதினர் முதுமைக்கு போகமல் இருப்பதற்காக இளமையை திரும்பி பார்க்கின்றனர்.:10_wink:

12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பழைய நினைவுகள் எல்லாருக்கும் நினைவு தடுமாறும்வரை வந்துபோகும்.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கு நன்றிகள்...சுமே..உண்மை பழைய நினைவுகள் எல்லாருக்கும் நினைவு தடுமாறும்வரை வந்துபோகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

  1. மெசொபொத்தேமியா சுமேரியர்

  2. Sabesh

  3. கிருபன்

  4. தமிழினி

  5. Athavan CH

  6. தமிழ் சிறி

  7. ஈழப்பிரியன்

  8. Kavallur Kanmani

  9. வல்வை சகாறா

  10. Paanch

    பெருமாள்
  11. நவீனன்

  12. நந்தன்

  13. குமாரசாமி

  14. புங்கையூரன்

    பச்சை புள்ளிகள் வழங்கியும் கருத்து எழுதி ஊக்கபடுத்தும்,சகலருக்கும் நன்றிகள்

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்...இண்டைக்குத் தான் உங்கட கதையை ஆறுதலாக வாசித்துச் சீரணிக்கக் கூடியதாக இருந்தது!

அந்தக் காலத்தில பெரிய ..பிரளிக் காரராய் இருந்திருப்பீங்கள் போல கிடக்கு!:113_tongue:

எங்களுக்கு...விடுதிகளில் இருந்த படியால இப்படியான சுதந்திரங்கள் வலு குறைவு!

 

இருந்தாலும் நல்லூர்த் திருவிழா காலத்திலை எங்கடை விளையாட்டுக்களைக் காட்டத் தவறுவதில்லை!

இந்து மகளிர் கல்லூரி பக்கம் அவ்வளவாக வாலாட்டுவதில்லை! 

ஒரே காரணம்...சபாலிங்கத்தார் வீடு... கல்லூரிக்கு முன்னாலை இருந்தது தான்! வேற ஒரு விஷேச காரணமும் இல்லை!

 

எங்கட காலத்தில....ராசையா என்று ஒரு இஞ்சுப்பெக்ரர் இருந்ததாக நினைவு! ஆள் வட்டுக்கோட்டைப் பக்கம்!

சைக்கிளுகளுக்குக் காத்துத் திறந்து விடுகிறது....பெட்டையள் பக்கம் திருவிழாவிலை போனால்...எங்களைக் கூப்பிட்டு முழங்காலில விடுகிறது போன்ற வேலைகளைச் செய்வதில் இவருக்கு வலு சந்தோசம்!

ஆனால்...ஒரு நாள்...மோட்டர் சைக்கிளில் இருந்து..கள்ளமாய் (போலிஸ் ஸ்டேசனில் அடித்த பெற்றோலை) விக்கிற நேரம் எங்களின்ர குறுப்பிட்டை, எக்கச் சக்கமாய்ப் பிடி பட்டுப் போனார்! (தமிழன் தானே...இந்தக் கள்ளக் குணமும் இல்லாவிட்டால்..எப்படி ஸ்டேட்டஸை மெயின்ரைன் பண்ணுறதாம்)

எங்கை ...எப்பிடிப் பிடிபட்டார் என்ற கேள்விகள் கேட்கக் கூடாது!

மொத்தத்தில்...இன்னுமொரு புத்தனின் அனுபவக் கதை...!

வாழ்த்துக்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24.4.2017 at 11:15 PM, வல்வை சகாறா said:

பழைய ஞாபகம் புத்தனையம் விட்டுவைக்கவில்லை... ஆமா புத்தன் உங்களுக்கு பெண்கள் பக்கம் இருந்து என்ன பட்டம் வைத்திருந்தார்கள் அதையும் எழுதினாத்தானே சுவார்சியமாக இருக்கும்.....தெரியாது என்றால் உங்களுடைய விடலைப் பருவப்புகைப்படம் ஒன்றை இங்கு இணைத்து விடுங்கள் நாங்கள் கெஸ்ப் பண்ணிக் கொள்கிறோம். :):cool:

ஆகா.... அருமையான கேள்வி...  வல்வை சகாறா.
இந்தக் கோணத்தில், நாங்கள் சிந்திக்கவேயில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25.4.2017 at 2:56 AM, ஈழப்பிரியன் said:

நான் முதன் முதல் புகைக்க தொடங்கியது பத்மா கபேயில் (யாழ் இந்து) மற்றகோன்.9ம் வகுப்பு அந்தநேரம் பிறெப் என்று சொல்வது இப்ப அந்த வகுப்பு இருக்கோ தெரியாது.இப்ப தொடங்கியது நாள் போக பிறிஸ்டலில் நிரந்தரமாகி 40 வயதில் நெஞ்சுக்குள் இரும்பு வலை வைக்கும் வரை தொடர்ந்தேன்.

அட.... ஈழப்பிரியன், கிட்ட நெருங்கி விட்டார் போலுள்ளது.
"பத்மா கபே"  மனோகரா தியேட்டர்  சந்தியில் இருந்தது தானே.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

அட.... ஈழப்பிரியன், கிட்ட நெருங்கி விட்டார் போலுள்ளது.
"பத்மா கபே"  மனோகரா தியேட்டர்  சந்தியில் இருந்தது தானே.  

இல்லையே சிறி கல்லூரிக்கு அருகாமையில் இருந்தது.கே கே எஸ் வீதியைக் கடந்தால் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

இல்லையே சிறி கல்லூரிக்கு அருகாமையில் இருந்தது.கே கே எஸ் வீதியைக் கடந்தால் சரி.

ஓமோம்..... ஈழப் பிரியன்.  கல்லூரியின், பிரார்த்தனை மண்டபத்துக்கு, எதிரில்  இருக்கும் கடை.
இடைக்கிடை.... அங்கு,  மதிய  சாப்பாட்டு  இடைவேளையின் போது....  
சக  நண்பர்களை... "காய் வெட்டி விட்டு,"  :D:
வெள்ளை இடியப்பமும், சொதியும், சம்பலும்  சாப்பிடப் போவேன்.

கையில் பணம் புழங்கினால்...  
மனோகரா சந்தியில் உள்ள கடையில் (பெயர் நினைவு வரவில்லை), நண்பர்களுடன்... சாப்பிட்டு,  சிகரெட்  பத்துவோம். :)

இன்னுமொரு கடை... விளையாட்டு  மைதானத்தில் உள்ள, வைரவர் கோவிலுக்கு அருகில், 
கஸ்தூரியார் வீதியில், இருந்தது. அதில் விற்கும்...  (25 சதம்.)  கீரை வடை மிகவும், பெரியது ருசியானது.

பாடசாலைக்  காலங்களில், அம்மா.... எவ்வளவு மினக்கெட்டு, சமைத்து.. சமையல் செய்து தந்தாலும்,
கடை  சாப்பாடுகளையும், சாப்பிட எப்படி மனம் வந்ததோ... என்று. இப்ப... நினைக்க கவலையாக உள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:


கஸ்தூரியார் வீதியில், இருந்தது. அதில் விற்கும்...  (25 சதம்.)  கீரை வடை மிகவும், பெரியது ருசியானது.

சிறி இதே வடை 10 சதத்திற்கு வாங்கி சாப்பிட்டதாகவே ஞாபகம்.

உங்கள் கல்லூரி எதுவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி இதே வடை 10 சதத்திற்கு வாங்கி சாப்பிட்டதாகவே ஞாபகம்.

உங்கள் கல்லூரி எதுவோ?

ஈழப் பிரியன்ஸ்.... :)
எனது கல்லூரி,  "வாழிய.... யாழ் நகர், இந்துக் கல்லூரி"  தான். :18_kissing_heart: tw_heart:
நீங்கள்... பத்து சதத்துக்கு, கீரை வடையை  வாங்கியிருந்தால், எனக்கு, "சீனியர்"  ஆன ஆள். :119_busts_in_silhouette: :24_stuck_out_tongue:
அல்லது... கடைக்காரன், என்னை சின்னப் பெடியன் என்று நினைத்து... tw_warning:
கீரை வடையின் விலையை... உயர்த்தி, என்னை பேய்க் காட்டிப் போட்டார் என்று, நினைக்கின்றேன். :grin:

எதுக்கும்... இந்த வடையை பற்றி, முன்பு... புங்கையூரான்,  சுவியர் ஆகியோரிடம்   உரையாடியதாக நினைவு உள்ளது. :)
அவர்கள்... அந்த நேரம்... கீரை வடை,  என்ன விலை விற்றது என்று, விரல்  நுனியில் கணக்கு வைத்திருப்பார்கள். :grin: :D: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புங்கையூரன் said:

###### இருந்தாலும் நல்லூர்த் திருவிழா காலத்திலை எங்கடை விளையாட்டுக்களைக் காட்டத் தவறுவதில்லை!

இந்து மகளிர் கல்லூரி பக்கம் அவ்வளவாக வாலாட்டுவதில்லை! 

ஒரே காரணம்...சபாலிங்கத்தார் வீடு... கல்லூரிக்கு முன்னாலை இருந்தது தான்! வேற ஒரு விஷேச காரணமும் இல்லை!

 

எங்கட காலத்தில....ராசையா என்று ஒரு இஞ்சுப்பெக்ரர் இருந்ததாக நினைவு! ஆள் வட்டுக்கோட்டைப் பக்கம்!

சைக்கிளுகளுக்குக் காத்துத் திறந்து விடுகிறது....பெட்டையள் பக்கம் திருவிழாவிலை போனால்...எங்களைக் கூப்பிட்டு முழங்காலில விடுகிறது போன்ற வேலைகளைச் செய்வதில் இவருக்கு வலு சந்தோசம்!

ஆனால்...ஒரு நாள்...மோட்டர் சைக்கிளில் இருந்து..கள்ளமாய் (போலிஸ் ஸ்டேசனில் அடித்த பெற்றோலை) விக்கிற நேரம் எங்களின்ர குறுப்பிட்டை, எக்கச் சக்கமாய்ப் பிடி பட்டுப் போனார்! (தமிழன் தானே...இந்தக் கள்ளக் குணமும் இல்லாவிட்டால்..எப்படி ஸ்டேட்டஸை மெயின்ரைன் பண்ணுறதாம்)

எங்கை ...எப்பிடிப் பிடிபட்டார் என்ற கேள்விகள் கேட்கக் கூடாது!

மொத்தத்தில்...இன்னுமொரு புத்தனின் அனுபவக் கதை...!

வாழ்த்துக்கள்!

 

புங்கை......  :)  tw_heart:
சபாலிங்கத்தாரின் வீடு, யாழ். இந்து மகளிர் கல்லூரியின் முன்பாக,  அரசடி  வீதியில் இருந்தது.  :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.